தொடக்கம் |
|
|
827. |
பன்ன கேசனும் அடு புலிப் பாதனும் பணிய மின்னுவார் சடை மன்னவன் வெள்ளி மன்று ஆடல் சொன்னவாறு இது பசித்து அழல் சுட ஒரு பூதம் அன்ன மாமலை தொலைத்த ஆறு எடுத்து இனி அறைவாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
828. |
கன்னியர்க்கு அரசு ஆயினாள் கடிமனை புகுந்த மின் இயல் கடை மாதவர் வேதியர் ஏனோர் எந் நிலத்து உள மன்னவர் யாவர்க்கும் முறையே பொன் இயல் கலத்து அறு சுவைப் போனகம் அருத்தா. |
2 |
|
|
உரை
|
|
|
|
|
829. |
பூசு கின்றவும் உடுப்பவும் பூண்பவும் பழுக்காய் வாச மெல்லிலை ஏனவும் அம் முறை வழங்காத் தேச மன்னவர் ஏனையோர் செல்லுநர்ச் செலுத்தி ஈசன் அன்புறு கற்பினாள் இருக்கும் அவ் வேலை. |
3 |
|
|
உரை
|
|
|
|
|
830. |
மடை வளத் தொழில் புலவர் வந்து அடியிணை வணங்கி அடியரேம் அட்ட போனகம் ஆயிரத்து ஒன்றின் இடையது ஆயினும் தொலைந்திலது ஆம் கண் மேல் செய்யக் கடவது ஏது எனப் பிராட்டி தன் கணவர் முன் குறுகா. |
4 |
|
|
உரை
|
|
|
|
|
831. |
பணிந்து ஒதுங்கி நின்று அடி கண் முப்பத்து முக்கோடி கணங்கள் தம்மொடும் இங்கு எழுந்து அருள்வது கருதி இணங்கும் இன் சுவைப் போனகம் எல்லை என்று ஆக்கி உணங்கு கின்றது உண்டு எஞ்சிய எனைத்து என உரைக்கின். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
832. |
இமையக் குன்றமும் அடைகலாது இதன் புறம் கிடந்த சிமையக் குன்றுகள் ஈட்டமும் சேர்ந்து என நிமிரச் சமையக் கொட்டிய வால் அரிப் புழுக்கலும் சாதக் அமையக் கொட்டிய கறிகளின் வருக்கமும் அனைத்தே. |
6 |
|
|
உரை
|
|
|
|
|
833. |
என்ற போது இறை எம்பிரான் தேவியார் இடத்தில் ஒன்றும் அன்பினால் ஒரு விளையாடலை நினைத்தோ தன் தனிக்குடைப் பாரிடத் தலைவனது ஆற்றல் அன்றி யாவரும் அறிந்திடக் காட்டாவோ அறியேம். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
834. |
சிறிது வாள் நகை செய்து மூ வேந்தரில் சிறந்த மறுவில் மீனவன் அரும் பெறல் மகள் உனக்கு அரிதில் பெறுவது ஏது வான் தருவும் நின் பணி செயப் பெற்று இங்கு உறைவதேல் பிறர் திரு எலாம் உன்னதே அன்றோ. |
8 |
|
|
உரை
|
|
|
|
|
835. |
அளவு இலாத நின் செல்வத்தின் பெருக்கை நாம் அறிய விளைவு செய்தனை போலும் நின் விருந்து உணப் பசியால் களை அடைந்தவர் ஆகி நம் கணத்தினுள் காணேம் தளவ மூரலாய் யாம் செய்ய தக்கது ஏது என்றான். |
9 |
|
|
உரை
|
|
|
|
|
836. |
அடுக்க நின்ற குண்டோதரன் அகட்டிடை வடவை மடுக்க உன்னினான் அது வந்து வயிற்று எரி பசியாய்த் தொடுக்க ஆலம் உண்டாங்கு உடல் சோர்ந்து வேர்த்து ஆவி ஒடுக்கம் உற்று ஐய பசியினால் உயங்கினேன் என்றான். |
10 |
|
|
உரை
|
|
|
|
|
837. |
குடை எடுக்கும் இக் குறிய தாள் குறட்கு ஒருபிடி சோறு இடுமின் அப்புறம் சோறுமால் எனத் தொழுது எல்லாம் உடைய நாயகி போயினாள் குறியனும் உடனே நடை தளர்ந்து கண் புதைந்து வாய் புலர்ந்திட நடந்தான். |
11 |
|
|
உரை
|
|
|
|
|
838. |
படைக்கண் ஏவலர் இறைமகள் பணியினால் பசிநோய் தொடுத்தவன் தனைக் கொண்டு போய் சொன்றி முன் விடுத்தார் அடுத்து இருந்ததே கண்டனர் அன்ன மா மலையை எடுத்து அயின்றது அடிசில் அங்கு இருந்தது காணார். |
12 |
|
|
உரை
|
|
|
|
|
839. |
சிலம்பு நூபுரச் சீறடிச் சேடியர் சில்லோர் அலம்பு வால் வளைக் கை நெரித்து அதிசயம் அடைந்தார் புலம்பு மேகலையார் சிலர் பொருக்கு என வெருண்டார் கலம் பெய் பூண் முலையார் சிலர் கண்புதைத்து திரிந்தார். |
13 |
|
|
உரை
|
|
|
|
|
840. |
முரவை போகிய முரிவில் வான் மூரல் பால் வறையல் கருனை தீம் பயறு அடு துவையல் பல் வகைக் கறிகள் விரவு தேம்படு பால் தயிர் இழுது தேன் வெள்ளம் வரைவு இலாதன மிடாவொடு வாரி வாய் மடுத்தான். |
14 |
|
|
உரை
|
|
|
|
|
841. |
பல் பழக் குவை வேற்று உருப் பண்ணியம் கன்னல் மெல் சுவைத் தண்டு தெங்கு இவை அன்றியும் ஏவா வல்சி காய்களின் வருக்கமும் நுகர்ந்து மாறாமல் எல்லைதீர் நவ பண்டமும் எடுத்து வாய் மடுத்தான். |
15 |
|
|
உரை
|
|
|
|
|
842. |
பாரித்து உள்ள இப் பண்டமும் பரூ உக் குறும் கையால் வாரித் தன் பெரு வயிற்றிடை வைப்பவும் துடுவை பூரித்து ஆகுதி பண்ணிய தழல் எனப் பொங்கிக் கோரித்து ஒன்பது வாயிலும் பசித்தழல் கொளுத்த. |
16 |
|
|
உரை
|
|
|
|
|
843. |
அலங்கல் ஓதி கண்டு அதிசயம் அடைந்து தன் அன்பின் நலம் கொள் நாயகன் முன்பு போய் நாணம் உள் கிடப்ப இலங்கு பூம்குழல் சுவல் மிசை இறக்கி இட்டு ஒல்கி நிலங் கிளைத்து நின்றாள் நிலை கண்டனர் நிருபன். |
17 |
|
|
உரை
|
|
|
|
|
844. |
அஞ் சில் ஓதியை வினவுவான் அறிகலான் போலக் குஞ்சி ஆர் அழல் அன்ன அக் குட வயிற்றவன் உண்டு எஞ்சி உள்ளவேல் பூதங்கள் இன்னமும் விடுத்து உன் நெஞ்சு உவப்பவே அருத்துதும் என்னலும் நிமலை. |
18 |
|
|
உரை
|
|
|
|
|
845. |
ஐய இன்னும் இக் குறள் பசி அடங்கிடா வேறு வெய்ய பாரிட வீரரை விடுத்தி ஏல் எடுத்து வையம் யாவையும் வயிற்றிடை வைப்பரே அதனால் செய்ய கால ருத்திரப் பெயர் தேற்றம் ஆம் உனக்கே. |
19 |
|
|
உரை
|
|
|
|
|
846. |
சங்க வார் குழைக் குறண் மகன் தன் செயல் தானே இங்கு வந்து உரை செய்திட அறிதி என்று இறைமுன் மங்கை நாயகி குமுதவாய் மலர் பொழுது எயிற்றுத் திங்கள் வாய் முழையான் பசித் தீச்சுட வந்தான். |
20 |
|
|
உரை
|
|
|
|
|
847. |
நட்டம் ஆடிய சுந்தர நங்கை எம் பிராட்டி அட்ட போனகம் பனி வரை அனையவாய்க் கிடந்த தொட்டு வாய் மடுத்திடவும் என் சுடு பசி தணியாது இட்டு உணாதவர் வயிறு போல் காந்துவது என்றான். |
21 |
|
|
உரை
|
|
|
|
|
848. |
கையர் முப்புரத்து இட்ட தீக் கடும்பசி உருவாய்ப் பொய்யனேன் வயிற்று இடைக் குடி புகுந்ததோ என்னும் கை எறிந்திடும் அண்டங்கள் வெடி படக் கதறும் ஐய கோ எனும் உயிர்த்திடும் ஆவி சோர்ந்து அயரும். |
22 |
|
|
உரை
|
|
|
|