தொடக்கம் |
|
|
967. |
உருக்கும் திறல் உக்கிர குமரன் உதயம் இது வான் மதியும் நதிப் பெருக்கும் கரந்த சடைக் கற்றைப் பெரும் தேர்ச் செழியர் பிரான் அவற்குச் செருக்கும் செல்வ மணம் முடித்துச் செவ்வேல் வளை செண்டு அளித்து உள்ளம் தருக்கு முடி தந்து அரசு உரிமை தந்த செயலும் சாற்றுவாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
968. |
வையைக் கிழவன் தன் அருமை குமரன் தனக்கு மணம் புணர்ச்சி செய்யக் கருதும் திறம் நோக்கி அறிஞரோடும் திரண்ட அமைச்சர் மை அற்று அழியா நிலத் திருவும் மரபும் குடியும் புகழ்மையும் நம் ஐயற்கு இசையத் தக்க குலத்து அரசர் யார் என்று அளக்கின்றார். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
969. |
தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு வேந்தன் பரிதி திரு மரபின் விளங்கும் சோம சேகரன் என்று ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை இருள்வாய். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
970. |
வெள்ளைக் களிற்றின் பிடர் சுமந்த குடுமிக் கோயில் மேய இளம் பிள்ளைக் கதிர் வெண் மதி மௌலிப் பெருமான் இரவி மருமான் ஆம் வள்ளல் கரத்தான் கனவில் எழுந்து அருளி வானோர் நனவிற்கும் கள்ளத்து உருவாம் திருமேனி காட்டி இதனை விளம்புவார். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
971. |
அன்னம் இறை கொள் வயன் மதுரைச் சிவன் யாம் அரச நீ ஈன்ற பொன்னை அனையாள் தனை மதுரா புரியில் கொடுபோய் மறு புலத்து மன்னர் மகுட மணி இடற மழுங்கும் கழல் கால் சுந்தரன் ஆம் தென்னர் பெருமான் குமரனுக்குக் கொடுத்தி என்று செப்புதலும். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
972. |
உள்ளக் கமல முக கமலம் உடனே மலர இரு தடம் கண் அள்ளல் கமல மலர்ந்து தனது அம் கை கமல முகிழ்த்து எழுந்து வள்ளல் பரமன் கருணை எளி வந்த செயலை நினைந்து அதன் பின் வெள்ளத்து அழுந்தி எழுந்து இரவி வேளை முளைக்கும் வேலையினில். |
6 |
|
|
உரை
|
|
|
|
|
973. |
நித்த நியமக் கடன் நிரப்பி நிருபன் அமைச்சரோடு நான்கு பைத்த கருவிப் படையினொடு பல்வேறு இயமும் கலிப்பத்தன் பொய்த்த மருங்கு உற்று திருமகளைப் பொன் அன்னாரோடு இரதமிசை வைத்து மணம் சேர் திருவினொடு மதுரை நோக்கி வழிக் கொண்டான். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
974. |
நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே அமைச்சர் மதி மன்னர் பெருமான் தமரோடு மணவூர் நோக்கி வழி வருவார் அன்ன வேந்தன் தனைக் கண்டார் அடல் வேல் குமரன் அனையான் எம் தென்னர் பெருமான் குமரனுக்கு உன் திருவைத் தருதி என அனையான். |
8 |
|
|
உரை
|
|
|
|
|
975. |
குலனும் குடியும் கனவின் கண் கொன்றை முடியார் வந்து உரைத்த நலனும் கூறி மணம் நேர்ந்து நயப்ப அதனை நன் முதியோர் புலன் ஒன்று உழையர் தமை விடுத்துப் பொருனைத் துறைவர்க்கு உணர்த்தி வரு வலனும் அயில் வேல் மன்னனொடு மதுரை மூதுர் வந்து அணைந்தார். |
9 |
|
|
உரை
|
|
|
|
|
976. |
இரவி மருமான் மதி மருமான் எதிரெ பணியத் தழீ இமுகமன் பரவி இருக்கை செல உய்த்துப் பாண்டி வேந்தன் இருந்தான் மேல் விரவி அமைச்சர் திரு முகங்கள் வேந்தர் யார்க்கும் விடுத்து நகர் வரைவு நாள் செய்து அணி செய்ய மன்றல் முரசு அறைவித்தார். |
10 |
|
|
உரை
|
|
|
|
|
977. |
மாடம் புதுக்கிப் பூகதமும் கதலிக் காடும் மறுகு எங்கும் நீடு நிரைத்துப் பாலிகையும் நிறை பொன் குடமும் முறை நிறுத்தி ஆடு கொடியும் தோரணமும் புனைவித்து அழகுக்கு அழகு ஆகக் கூட நெருங்கு நகரை மணக் கோலம் பெருகக் கொளுத்தினார். |
11 |
|
|
உரை
|
|
|
|
|
978. |
தென்றல் நாடன் திருமகளைத் தேவர் பெருமான் மணம் புரிய மன்றல் அழகால் ஒரு நகர் ஒப்ப அதிகம் இன்றி மதுரைநகர் அன்று தானே தனக்கு ஒப்பது ஆகும் வண்ணம் அணி அமைத்தார் இன்று தானே தனக்கு அதிகம் என்னும் வண்ணம் எழில் அமைத்தார். |
12 |
|
|
உரை
|
|
|
|
|
979. |
முன்னர் மாலை முடி அணி சுந்தரத் தென்னர் ஏற்றின் திருமுகம் கண்டு தாழ்ந்து அன்ன வாசகம் உள் கொண்டு அயல் புல மன்னர் மாதவர் யாரும் வருவர் ஆல். |
13 |
|
|
உரை
|
|
|
|
|
980. |
புரவி வெள்ளமும் போர்க் கரி வெள்ளமும் வரவில் கால் வலி மள்ளரின் வெள்ளமும் விரவி ஆழிய வெள்ளமும் உள் உற இரவி தன் வழித் தோன்றல் வந்து எய்தினான். |
14 |
|
|
உரை
|
|
|
|
|
981. |
கோடு வில்லொடு மேகக் குழாங்கள் மின் நீடு வாளொடு நேர்ந்து என மார்பு தாழ்ந்து ஆடு குண்டலக் காது உடை ஆடவர் சேடன் ஈகத்துச் சேரன் வந்து ஈண்டினான். |
15 |
|
|
உரை
|
|
|
|
|
982. |
கடலும் உள்ளமும் காற்றும் பல் வண்ணமும் உடலம் கொண்டன வந்து உறு வாம் பரிப் படு கடல் உள் பரிதியில் தோன்றினான் அடு பரிப் பதி ஆகிய வேந்தனே. |
16 |
|
|
உரை
|
|
|
|
|
983. |
அலகு இலா உதயம் ஒறு மாதவர் அலகு இலார் உதித்து என்னப் பொன் ஓடை சேர் அலகு இலானை அனீகமொடு எய்தினான் அலகு இலா ஆற்றல் கயபதி அண்ணலே. |
17 |
|
|
உரை
|
|
|
|
|
984. |
தொக்க மள்ளர் அடிப்படு தூளி போய்த் திக்கு அடங்க விழுங்கித் திரைக் கடல் எக்கர் செய்ய எழுந்து இயம் கல் என நக்க வேல் கை நரபதி நண்ணினான். |
18 |
|
|
உரை
|
|
|
|
|
985. |
மீன வேலையில் கந்துகம் மேல் கொடு கூனல் வார் சிலை வஞ்சக் கொடும் சமர்க்கு ஆன வாழ்க்கை அரட்டக் கரும் படை மான வேல் குறு மன்னவர் நண்ணினார். |
19 |
|
|
உரை
|
|
|
|
|
986. |
சீனர் சோனகர் சிங்களர் கொங்கணர் மான வேல் வல மாளவர் சாளுவர் தான மா நிரைச் சாவகர் ஆதி ஆம் ஏனை நாட்டு உள மன்னரும் ஈண்டினர். |
20 |
|
|
உரை
|
|
|
|
|
987. |
நூலொடும் துவக்குஉண்டு நுடங்கு மான் தோலர் தூங்கு சுருக்கு உடைத் தானையர் கோல முஞ்சியர் கிஞ்சுகக் கோலினர் நாலு நூல் நாவினர் நண்ணினார். |
21 |
|
|
உரை
|
|
|
|
|
988. |
வட்ட நீர்க் கலக் கையினர் வார்ந்து தோள் விட்ட குண்டலக் காதினர் வேட்ட தீத் தொட்ட கோலினர் வேள்வியில் சுட்ட நீறு இட்ட நெற்றியர் இல்லொடு நண்ணினார். |
22 |
|
|
உரை
|
|
|
|
|
989. |
முண்ட நெற்றியர் வெள் நிற மூரலர் குண்டி கைக் கையர் கோவணம் வீக்கிய தண்டு கையர் கல் தானையர் மெய்யினைக் கண்டு பொய்யினைக் காய்ந்தவர் நண்ணினார். |
23 |
|
|
உரை
|
|
|
|
|
990. |
தீம் தண் பால் கடல் செம் துகிர்க் காட்டொடும் போந்த போல் மெய்யில் புண்ணியப் பூச்சினர் சேந்த வேணியர் வேதச் சிரப் பொருள் ஆய்ந்த கேள்வி அரும் தவர் எய்தினார். |
24 |
|
|
உரை
|
|
|
|
|
991. |
ஆதி சைவர் முதல் சைவர் ஐவரும் கோது இலா அகச் சைவக் குழாங்களும் பூதி மேனியர் புண்ணிய ஐந்து எழுத்து ஓது நாவினர் ஒல்லை வந்து எய்தினார். |
25 |
|
|
உரை
|
|
|
|
|
992. |
வெண் களிற்றவன் வேரி அம் தாமரைப் பெண் களிப்பு உறு மார்பன் பிரமனேடு ஒண் களிப்பு உற உம்பர் முதல் பதி நெண் கணத்தவர் யாவரும் ஈண்டினார். |
26 |
|
|
உரை
|
|
|
|
|
993. |
அணைந்து கோயில் அடைந்து அரிச் சேக்கை மேல் குணம் கடந்தவன் கோமள வல்லியோடு இணங்கி வைகும் இருக்கை கண்டு ஏத்தினார் வணங்கினார் வணங்கும் முறை வாழ்த்தினார். |
27 |
|
|
உரை
|
|
|
|
|
994. |
விரை செய் தார் முடிச் சுந்தர மீனவன் சுரர்கண் மாதவர் வேந்தர்க்குத் தொல் முறை வரிசை நல்கி இருந்தனன் மன்னவன் திரு மகன் மணம் செய் திறம் செப்புவாம். |
28 |
|
|
உரை
|
|
|
|
|
995. |
சேம சேகரன் தோகை வனப்பு எலாம் கோமகன் கண்டு உவப்ப அக் கொள்கை கண்டு ஏம மேனிய நூல் வழி யார்க்கும் அத் தேமன் கோதை உறுப்பு இயல் தேற்றுவான். |
29 |
|
|
உரை
|
|
|
|
|
996. |
பெருக நீண்டு அறவும் குறுகிடா தாகிப் பிளந்திடா கடைய வாய்த் தழைத்து கருவி வான் வண்டின் கணம் எனக் கறுத்துக் கடை குழன்றி இயல் மணம் கான்று புரை அறச் செறிந்து நெறித்து மெல் என்று புந்தி கண் கவர நெய்த்து இருண்ட மருமலர்க் குழலாள் தன் பதிக்கு இனிய மல்லல் வான் செல்வம் உண்டாகும். |
30 |
|
|
உரை
|
|
|
|
|
997. |
திண் மத வேழ மத்தகம் போலத் திரண்டு உயர் சென்னியாள் அவள் தன் உள் மகிழ் கணவன் ஆயுள் நீண்டு அகில உலக அரசு உரியன் ஆம் எட்டு ஆம் தண் மதி போன்று மயிர் நரம்பு அகன்று அசைந்து மூ விரல் இடை அகன்ற ஒண் மதி நுதல் தன் பதிக்கு நல் திருவோடு உலப்பு இல் ஆரோக்கியம் உண்டாம். |
31 |
|
|
உரை
|
|
|
|
|
998. |
கண் கடை சிவந்தான் பால் என வெளுத்து நடுவிழி கழியவும் கரிதாய் எண்கவின் அடைந்து கோமளம் ஆகி இமை கரு மயிர்த்து எனின் இனிய ஒண் கரும் புருவம் குனிசிலை ஒத்த தத்தமில் ஒத்த இரு தொளையும் பண் கொள உருண்டு துண்டம் எள் போது பதும மேல் பூத்தது போலும். |
32 |
|
|
உரை
|
|
|
|
|
999. |
வள்ளை போல் வார்ந்து தாழ்ந்து இரு செவியும் மடல் சுழி நல்லவாய் முன்னர்த் தள்ளிய காது மனோ கரம் ஆகும் தன்மையான் நன்மையே தழைக்கும் ஒள்ளிய கபோலம் வட்டமாய்த் தசைந்திட்டு உயர்ந்து கண்ணாடி மண்டலம் போல் தெள்ளிய ஊற்றம் இனியது நன்று என்று ஓதினான் திரைக் கடல் செல்வன். |
33 |
|
|
உரை
|
|
|
|
|
1000. | கொவ்வை வாய் அதரம் திரண்டு இருபுடையும் குவிந்து சேந்து இரேகை நேர் கிடந்தால் அவ் அணி இழை தன் அன்பனுக்கு என்று நண்பு உருவாகும் எண் நான்கு வல்ல வாள் எயிறும் இடை வெளி இன்றி வார்ந்து மேல் கீழ் இரண்டு ஒழுங்கும் செவ்வன் நேர்ந்து ஆவின் பால் என வெள்கித் திகழின் நன்று என்பர் நூல் தெளிந்தோர். | 34 |
|
|
உரை
|
|
|
|
|
1001. |
மெல்லிதாய்ச் சிவந்து கோமளம் ஆன நாவினாள் வேட்ட வேட்டு ஆங்கே வல்லை வந்து எய்த நுகர்ந்திடும் தசைந்து வட்டமாய் அங்குலம் இரண்டின் எல்லையது ஆகி மஞ்சுளம் ஆகி இருப்பது சிபுக நன்று என்பர் அல்லி அம் கமலம் போல் மலர்ந்து இருள் தீர்ந்து அவிர் மதி போல்வது முகமே. |
35 |
|
|
உரை
|
|
|
|
|
1002. |
திரை வளைக் கழுத்துத் தசைந்து நால் விரலின் அளவது ஆய்த் திரண்டு மூன்று இரேகை வரை படில் கொழுநன் அகில மன்ன வனாம் மார்பகம் தசைந்து மூ ஆறு விரல் அளவு அகன்று மயிர் நரம்பு அகன்று மிதந்தது ஏல் விழுமிது ஆம் வேய் தோள் புரை அறத் தசைந்து மயிர் அகன்று என்பு புலப்படா மொழிய கோமளம் ஆம். |
36 |
|
|
உரை
|
|
|
|
|
1003. |
செம் கை நீண்டு உருண்டு கணுக்கள் பெற்று அடைவே சிறுத்திடில் செல்வமோடு இன்பம் தங்கும் வள் உகிர் சேந்து உருண்டு கண் உள்ளம் கவர்வதாய்ச் சர சரப்பு அகன்றால் அங்கு அவை நல்ல அகங்கை மெல் எனச் சேந்து இடை வெளி அகன்று இடை உயர்ந்து மங்கலமாய்ச் சில் வரைகளின் நல்ல இலக்கண வரை உள மாதோ. |
37 |
|
|
உரை
|
|
|
|
|
1004. |
முத்து அணி தனங்கள் கடினம் ஆய் அசைந்து வட்டமாய் முகிழ்த்து இரு கட நேர் ஒத்து இருமாந்து ஈர்க்கு இடை அற நெருங்கி உள்ளன மெலிந்து அமர்ந்து உரோமம் பத்தி பெற்று அயலே மயிர் நரம்பு அகன்ற பண்டியாள் உண்டி வேட்டு ஆங்கே துய்த்திடும் நாபி வலம் சுழித்து ஆழ்ந்தால் தொலைவு இலாத் திருவளம் பெருகும். |
38 |
|
|
உரை
|
|
|
|
|
1005. |
இடை மயிர் நரம்பு அற்று இருபதோடு ஒரு நான்கு எழில் விரல் அளவோடு வட்ட வடிவு அதாய்ச் சிறுகி மெலிவது நிதம்ப மத்தகம் ஆமையின் புறம் போல் படிவ நேர் ஒத்தல் நன்று இரு குறங்கும் படுமயிர் என்பு அகன்று யானைத் தட உடைக் கையும் கரபமும் கதலித் தண்டு ஒத்து இருக்கின் நன்று என்ப. |
39 |
|
|
உரை
|
|
|
|
|
1006. |
அங்கம் உள் மறைந்து வட்டமாய்த் அசைவ அணி முழந்தாள் மயிர் நரம்பு தங்கிடாது அடைவே உருட்சியாய்ச் சிறுத்துச் சம வடிவாய் அழகு அடைந்த சங்கம் ஆம் சிரை என்பறத் அசைந்து ஆமை முதுகு எனத் திரண்டு உயர்ந்த அழகு மங்கலம் பொலிந்த புறவடி மடந்தை மன்னவன் பன்னி ஆம் மன்னோ. |
40 |
|
|
உரை
|
|
|
|
|
1007. |
அல்லி அம் கமலக் கால் விரல் உயர்ந்து தூயவாய் அழகவாய்க் கழுநீர் மெல் இதழ் நிரைத்தாங்கு ஒழுங்கு உறத் திரண்டு வால் உகிர் வெண் மதிப் பிளவு புல்லிய போன்று மெல்லிய ஆகிப் புகர் அறத் தசைந்தன அகத்தாள் சொல்லியது அசைவும் மென்மையும் சமமும் துகள் அறப் படைத்தன நன்று ஆல். |
41 |
|
|
உரை
|
|
|
|
|
1008. |
வண்ண மாந்தளிர் போல் சிவந்து எரி பொன்போல் வைகலும் வெயர்வை அற்று ஆகம் உண்ணம் ஆய் இருக்கின் செல்வம் உண்டாகும் ஒண் மணம் பாடலம் குவளை தண் அறா முளரி மல்லிகை நறும் தண் சண்பகம் போல்வன ஆகும் பண்ணவாம் கிளவி குயில் கிளி யாழின் படி வரும் பாக்கியம் என்னா. |
42 |
|
|
உரை
|
|
|
|
|
1009. |
கரும் குழல் கற்றை தொட்டுச் செம்மலர்க் காலின் எல்லை மருங்கு நல் கூர்ந்து கன்னி வடிவு எலாம் வாக்கின் செல்வன் ஒருங்கு நூல் உணர்வால் தெள்ளி இம்பரின் உம்பர் தேத்தும் இரங்கும் இக் குயில் அன்னாள் மெய் இலக்கணம் அரியது என்றான். |
43 |
|
|
உரை
|
|
|
|
|
1010. |
அங்கு அது கேடோர் யாரும் அகம் களி துளும்ப இப்பால் கொங்கு அலர் நறும் தார் குஞ்சி உக்கிர குமரன் போந்து மங்கல வரிசை மாண மத்த மான் சுமந்த வைகைச் சங்கு எறி துறை நீராடித் தகும் கடி வனப்புக் கொள்வான். |
44 |
|
|
உரை
|
|
|
|
|
1011. |
கட்டு அவிழ் கண்ணி வேய்ந்து மான் மதக் கலவைச் சாந்தம் மட்டனம் செய்து முத்தான் மாண் கலன் முழுதும் தாங்கி விட்டவர் கலை வான் திங்கள் வெண் கதிர்ச் செல்வன் போல் வந்து இட்ட பூம் தவிசின் மேல் கொண்டு இருந்தனன் சங்கம் ஏங்க. |
45 |
|
|
உரை
|
|
|
|
|
1012. |
அந்நிலை மண நீர் ஆதி அரும் கலப் போர்வை போர்த்த கன்னியைக் கொணர்ந்து நம்பி வல வயின் கவின வைத்தார் பன்னியொடு எழுந்து சோம சேகரன் பரனும் பங்கின் மன்னிய உமையும் ஆக மதித்து நீர்ச் சிரகம் தாங்கி. |
46 |
|
|
உரை
|
|
|
|
|
1013. |
மங்கல நீரான் நம்பி மலரடி விளக்கி வாசக் கொங்கு அலர் மாலை சூட்டிக் குளிர் மது பருக்கம் ஊட்டி நங்கை தன் கையைப் பற்றி நம்பி தன் கையில் ஏற்றிப் புங்கவர் அறிய நன்னீர் மந்திரம் புகன்று பெய்வான். |
47 |
|
|
உரை
|
|
|
|
|
1014. |
இரவி தன் மருமான் சோம சேகரன் என் பேர் திங்கள் மரபினை விளக்க வந்த சுந்தர மாறன் மைந்தன் உரவு நீர் ஞாலம் தாங்கும் உக்கிர வருமற்கு இன்று என் குரவு அலர்க் கோதை மாதைக் கொடுத்தனன் என நீர் வார்த்தான். |
48 |
|
|
உரை
|
|
|
|
|
1015. |
மைந்து உறு மடங்கல் திண் கால் மணி வட வயிர ஊசல் ஐந்துடன் பதம் செய் பஞ்சி அணையினோடு அன்னத்தூவிப் பைந்துகில் அணை ஈர் ஐந்து பவளவாய்ப் பசும் பொன் மேனி இந்திர மணிக்கண் பாவை விளக்கு நான்கு இரட்டி என்ப. |
49 |
|
|
உரை
|
|
|
|
|
1016. |
அட்டில் வாய் அடுக்கும் செம்பொன் கலங்கள் நூறு அம் பொன் ஆக்கி இட்டு இழை மணிக் களாஞ்சி ஏழு பொன் கவரி எட்டு விட்டு ஒளிர் பசும் பொன் கிண்ணப் பந்தி சூழ் விளங்க நாப்பண் நட்ட பொன் கலினோடு நகை மணிக் கலன் நூறு என்ப. |
50 |
|
|
உரை
|
|
|
|
|
1017. |
பெரு விலை ஆரப் பேழை ஆயிரம் பெற்ற நுண் தூசு அரு விலைப் பட்டு வெவ் வேறு அமைந்தன பேழை முந்நூறு உரு அமுது எழுதிச் செய்த ஓவியப் பாவை அன்னார் திருமணிக் கலனோடு ஏவல் சேடியர் எழு நூற்று ஐவர். |
51 |
|
|
உரை
|
|
|
|
|
1018. |
விளை வொடு மூன்று மூதூர் மின்னு விட்டு எறியும் செம்பொன் அளவு இருகோடி இன்ன அரும் பெறல் மகட்குச் செல்வ வளம் உற வரிசை ஆக வழங்கினான் முழங்கி வண்டு திளை மதுக் கண்ணிச் சேம சேகர மன்னன் மாதோ. |
52 |
|
|
உரை
|
|
|
|
|
1019. |
ஆர்த்தன வியங்கள் எல்லாம் அமரர் மந்தார மாரி தூர்த்தனர் வேள்விச் செம் தீ சுழித்தது வலமாய்த் துள்ளி ஆர்த்தன மடவார் நாவின் முளைத்தன வாழ்த்து மன்றல் பார்த்தனர் கண்கள் எல்லாம் பெற்றன படைத்த பேறு. |
53 |
|
|
உரை
|
|
|
|
|
1020. |
பொதி அவிழ் கடப்பந் தண் தார்ப் புயத்து இளம் காளை அன்னான் முதியவர் செந்தீ ஓம்ப இன்னியம் முழங்கக் காந்தி மதியை மங்கல நாண் பூட்டி வரி வளைச் செங்கைப் பற்றி விதி வழி ஏனை மன்றல் வினை எலாம் நிரம்பச் செய்தான். |
54 |
|
|
உரை
|
|
|
|
|
1021. |
எண் இலாத வளத்தினொடும் இரவி மருமான் மடப்பிடியை பண் நிலாவு மறை ஒழுக்கம் பயப்ப வேள்வி வினை முடித்துக் தண் நிலா வெண் கலை மதியும் தாரா கணமும் தவழ்ந்து உலவ விண் நிலாவு மணி மாட வீதி வலமாய் வரும் எல்லை. |
55 |
|
|
உரை
|
|
|
|
|
1022. |
மின் நேர் பொன் அம் தொடியினரும் மென் செம் பஞ்சி அடியினரும் பொன் நேர் மணிப்பூண் முலையினரும் புலம்பு மணிமேகலை யினரும் அன் நேர் ஓதித் தாரினரும் ஆகிக் கண்ணும் மனமும் அவன் முன்னே தூது நடப்பது என நடப்ப நடந்தார் முகிழ் முலையார். |
56 |
|
|
உரை
|
|
|
|
|
1023. |
சுருங்கும் இடையார் தன் பவனி தொழுது வருவார் தமக்கு இரங்கி மருங்குல் பாரம் கழிப்பான் போல் கலையைக் கவர்ந்தும் வரைத் தோள் மேல் ஒருங்கு பாரம் கழிப்பான் போல் வளையைக் கவர்ந்தும் உள்ளத்துள் நெருங்கு பாரம் கழிப்பான் போல் நிறையைக் கவர்ந்து நெறிச் செல்வான். |
57 |
|
|
உரை
|
|
|
|
|
1024. |
வான மதி சேர் முடி மறைத்த வழுதி மகனே இவன் என் என்றால் ஆனை எழுத்தில் சிங்க இள அடலேறு என்ன வயல் வேந்தர் செனை தழுவ வரும் பவனிக்கு ஒப்பு ஏது ஒப்புச் செப்பும் கால் யானை மகளை மணந்து வரும் இளையோன் பவனிச் செல்வமே. |
58 |
|
|
உரை
|
|
|
|
|
1025. |
இம்மை தனிலும் நன்மை தரும் ஈசன் தனையும் வாசவற்கு வெம்மை தருவன் பழிதவிர்க்க விமலன் தனையும் அம் கயல் கண் அம்மை தனையும் பணிந்து மீண்டு அரசன் கோயில் அடைந்து ஈன்றோர் தம்மை முறையால் அடிக் கமலம் தலையில் பணிந்தான் தனிக்குமரன். |
59 |
|
|
உரை
|
|
|
|
|
1026. |
ஆனாவறு சுவை அடிசில் அயில் வோர் தம்மை அயில் வித்து நானா வரிசை வரன் முறையா நல்கி விடையும் நல்கிப் பின் வான் நாடவர்க்கும் விடைகொடுத்து மதிக்கோன் ஒழுகி வைகும் நாள் தேனார் கண்ணித் திரு மகனுக்கு இதனைச் செப்பி இது செய்வான். |
60 |
1026. |
ஆனாவறு சுவை அடிசில் அயில் வோர் தம்மை அயில் வித்து நானா வரிசை வரன் முறையா நல்கி விடையும் நல்கிப் பின் வான் நாடவர்க்கும் விடைகொடுத்து மதிக்கோன் ஒழுகி வைகும் நாள் தேனார் கண்ணித் திரு மகனுக்கு இதனைச் செப்பி இது செய்வான். |
60 |
|
|
உரை
|
|
|
|
|
1027. |
மைந்த கேட்டி இந்திரனும் கடலும் உனக்கு வான் பகை ஆம் சந்த மேருத் தருக்கு அடையும் சத வேள்விக் கோன் முடி சிதற இந்த வளை கொண்டு எறி கடலில் இவ் வேல் விடுதி இச் செண்டால் அந்த மேரு தனைப் புடை என்று எடுத்தும் கொடுத்தான் அவை மூன்றும். |
61 |
|
|
உரை
|
|
|
|
|
1028. |
அன்ன மூன்று படைக் கலமும் தொழுது வாங்கி அடல் ஏறு தன்னை நேரா எதிர்நிற்கும் தனயன் தனை உக்கிர வழுதி என்ன ஆதி மறை முழங்க வியங்கள் ஏங்க முடி கவித்துத் தன்னது ஆணை அரசு உரிமை தனிச் செங் கோலும் தான் நல்கா. |
62 |
|
|
உரை
|
|
|
|
|
1029. |
சூட்சி வினையில் பொன் அனைய சுமதி தன்னைத் தொல் நூலின் மாட்சி அறிஞர் தமை நோக்கி வம்மின் இவனைக் கண் இமைபோல் காட்சி பயக்கும் கல்வியும் போல் காப்பீர் இது நும் கடன் இம் மண் ஆட்சி இவனது என்று இளைய அரி ஏறு அணையான் தனை நல்கா. |
63 |
|
|
உரை
|
|
|
|
|
1030. |
வெய்ய வேல் காளை அன்னான் தன்னையும் வேறு நோக்கி ஐய இவ்வையும் தாங்கி அளித்தன நெடு நாள் இந்த மை அறு மனத்தார் சொல்லும் வாய்மை ஆறு ஒழுகி நீயும் செய்ய கோன் முறை செய்து ஆண்டு திருவொடும் பொலிக என்றான். |
64 |
|
|
உரை
|
|
|
|
|
1031. |
பன்னரும் கணங்கள் எல்லாம் பண்டைய வடிவம் ஆகத் தன் அருள் துணையாய் வந்த தடாதகைப் பிராட்டி யோடும் பொன் நெடும் கோயில் புக்குப் பொலிந்தனன் இச்சை தன்னால் இன் அருள் படிவம் கொள்ளும் ஈறு இலா இன்ப மூர்த்தி. |
65 |
|
|
உரை
|
|
|
|
|
1032. |
பின்னர் உக்கிர பெயர் தரித்த அத் தென்னர் கோ மகன் தெய்வ நால் மறை மன்னும் நல் அறம் வளர வையகம் தன்னது ஆணையால் தாங்கி வைகினான். |
66 |
|
|
உரை
|
|
|
|