தொடக்கம் |
|
|
1033. |
வளை யொடு செண்டு வேல் மைந்தற்கு அஞ்சுரும் பனைய வேம்பு அணிந்த கோன் அளித்த வாறிதத் தளை அவிழ் தாரினான் தனையன் வேலை மேல் இளையவன் என்ன வேல் எறிந்தது ஓதுவாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
1034. |
திங்களின் உக்கிரச் செழியன் வெண் குடை எங்கணும் நிழற்ற வீற்று இருக்கும் நாள் வயில் சங்கை இல்லாத மா தரும வேள்விகள் புங்கவர் புடைதழீஇப் போற்ற ஆற்றும் நாள். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
1035. |
அரும் பரி மகம் தொண்ணூற்று ஆறு செய்துழிச் சுரும்பு அரி பெரும் படைத் தோன்ற தண் அறா விரும்பரி முரன்று சூழ் வேம்பின் அம் குழைப் பொரும் பரி வீரன் மேல் பொறாது பொங்கினான். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
1036. |
மன்னிய நாடு எலாம் வளம் சுரந்து வான் பொன்னிய நாடு போல் பொலிதலால் இந்த மின்னிய வேலினான் வேள்வி செய்வது என்று உன்னிய மனத்தன் ஓர் சூழ்ச்சி உன்னினான். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
1037. |
பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள் ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
1038. |
விளைவது தெரிகிலன் வேலை வேந்தனும் வளவயன் மதுரையை வளைந்திட்டு இம் எனக் களைவது கருதினான் பேயும் கண் படை கொள் வரு நனந்தலைக் குருட்டுக் கங்குல் வாய். |
6 |
|
|
உரை
|
|
|
|
|
1039. |
கொதித்தலைக் கரங்கள் அண்ட கூடம் எங்கும் ஊடு போய் அதிர்த்து அலைக்க ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தம் ஆய் மதித் தலத்தை எட்டி முட்டி வரும் ஓர் அஞ்சனப் பொருப்பு உதித்தல் ஒத்து மண்ணும் விண்ணும் உட்க வந்தது உத்தியே. |
7 |
|
|
உரை
|
|
|
|
|
1040. |
வங்க வேலை வெள்ளம் மாட மதுரை மீது வரு செயல் கங்குல் வாய திங்கள் மீது காரி வாய கார் உடல் வெம் கண் வாள் அரா விழுங்க வீழ்வது ஒக்கும் அலது கார் அம் கண் மூட வருவது ஒக்கும் அல்லது ஏது சொல்வதே. |
8 |
|
|
உரை
|
|
|
|
|
1041. |
வட்ட ஆமை பலகை வீசு வாளை வாள் கண் மகரமே பட்ட யானை பாய் திரைப் பரப்பு வாம் பரித்திரள் விட்ட தோணி இரதம் இன்ன விரவு தானை யொடு கடல் அட்டம் ஆக வழுதி மேல் அமர்க்கு எழுந்தது ஒக்குமே. |
9 |
|
|
உரை
|
|
|
|
|
1042. |
இன்னவாறு எழுந்த வேலை மஞ்சு உறங்கும் இஞ்சி சூழ் நல் நகர்க் குணக்கின் வந்து நணுகும் எல்லை அரை இரா மன்னவன் கனாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய் முன்னர் வந்து இருந்து அரும்பு முறுவல் தோன்ற மொழிகுவார். |
10 |
|
|
உரை
|
|
|
|
|
1043. |
வழுதி உன் தன் நகர் அழிக்க வருவது ஆழி வல்லை நீ எழுதி போதி வென்றி வேல் எறிந்து வாகை பெறுக எனத் தொழுத செம் கரத்தினான் துதிக்கும் நாவினான் எழீஇக் கழுது உறங்கும் கங்குலில் கனா உணர்ந்து காவலான். |
11 |
|
|
உரை
|
|
|
|
|
1044. |
கண் நிறைந்த அமளியின் கழிந்து வாயில் பல கடந்து உண் நிறைந்த மதி அமைச்சருடன் விரைந்து குறுகியே மண் இறந்தத என முழங்கி வரு தரங்க வாரி கண்டு எண் இறந்த அதிசயத்தன் ஆகி நிற்கும் எல்லைவாய். |
12 |
|
|
உரை
|
|
|
|
|
1045. |
கனவில் வந்த சித்த வேடர் நனவில் வந்து காவலோன் நினைவு கண்டு பொழுது தாழ நிற்பது என் கொல் அப்பனே சினவி வேலை போல வந்த தெவ்வை மான வலிகெட முனைய வேல் எறிந்து ஞால முடிவு தீர்த்தி ஆல் என. |
13 |
|
|
உரை
|
|
|
|
|
1046. |
எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை வேல் முனை மடுத்த வேலை சுஃறெனவ் அறந்தும் ஆன வலி கெட அடுத்து வேரி வாகை இன்றி அடி வணங்கும் தெவ்வரைக் கடுத்த வேல் வலான் கணைக் காலின் மட்டது ஆனதே. |
14 |
|
|
உரை
|
|
|
|
|
1047. |
சந்த வேத வேள்வியைத் தடுப்பது அன்றி உலகு எலாம் சிந்த வேறு சூழ்ச்சி செய்த தேவர் கோவின் ஏவலால் வந்த வேலை வலி அழிந்த வஞ்சர்க்கு நன்றி செய்து இந்த வேலை வலி இழப்பது என்றும் உள்ளதே கொலாம். |
15 |
|
|
உரை
|
|
|
|
|
1048. |
புண் இடை நுழைந்த வேலால் புணரியைப் புறம் கண்டோன் பால் மண் இடை நின்ற சித்தர் வான் இடை மறைந்து ஞானக் கண் இடை நிறைந்து தோன்றும் கருணையால் வடிவம் கொண்டு விண் இடை அணங்கி னோடு விடை இடை விளங்கி நின்றார். |
16 |
|
|
உரை
|
|
|
|
|
1049. |
முக்கணும் புயங்கள் நான்கும் முளை மதிக் கண்ணி வேய்ந்த செக்கர் அம் சடையும் காள கண்டமும் தெரிந்து தென்னன் பக்கமே பணிந்து எழுந்து பரந்த பேர் அன்பும் தானும் தக்க அஞ்சலி செய்து ஏத்தித் தரை மிசை நடந்து செல்வான். |
17 |
|
|
உரை
|
|
|
|
|
1050. |
துந்துபி ஐந்தும் ஆர்ப்பப் பார் இடம் தொழுது போர்ப்பத் தந்திர வேத கீதம் ததும்பி எண் திசையும் தாக்க அந்தர நாடர் ஏத்த அகல் விசும்பு ஆறது ஆக வந்து தன் கோயில் புக்கான் வரவு போக்கு இறந்த வள்ளல். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
1051. |
அஞ்சலி முகிழ்த்துச் சேவித்து அருகு உற வந்த வேந்தன் இஞ்சி சூழ் கோயில் எய்தி இறைஞ்சினன் விடை கொண்டு ஏகிப் பஞ்சின் மெல் அடியார் அட்ட மங்கலம் பரிப்ப நோக்கி மஞ்சு இவர் குடுமி மாட மாளிகை புகுந்தான் மன்னோ. |
19 |
|
|
உரை
|
|
|
|
|
1052. |
வளை எயில் மதுரை மூதூர் மறி கடல் இவற்றின் நாப்பண் விளை வயன் நகரம் எல்லாம் வெள்ளி அம்பலத்துள் ஆடும் தளை அவிழ் கொன்றை வேணித் தம்பிரான் தனக்கே சேர்த்துக் களை கணாய் உலகுக்கு எல்லாம் இருந்தனன் காவல் வேந்தன். |
20 |
|
|
உரை
|
|
|
|