தொடக்கம் |
|
|
1053. |
மின் அவிர் மணப்பூண் மார்பன் வேலையை வேலால் வென்று பொன் அவிர் வாகை வேய்ந்த புகழ் உரை செய்தேம் நாக நல் நகர் ஆளி செம் பொன் கை முடி சிதற வந்த மன்னவன் வளை கொண்டு ஓச்சி வென்றதும் வகுத்துச் சொல்வாம். |
1 |
|
|
உரை
|
|
|
|
|
1054. |
கோமகன் நிகழும் நாளில்கோள் நிலை பிழைத்துக் கொண்மூ மா மழை மறுப்பப் பைங்கூழ் வறந்து புல் தலைகள் தீந்து காமரு நாடு மூன்றும் கை அறவு எய்த மன்னர் தாம் அது தீர்வு நோக்கித் தமிழ் முனி இருக்கை சார்ந்தார். |
2 |
|
|
உரை
|
|
|
|
|
1055. |
முனிவனை அடைந்து வேந்தர் மூவரும் தங்கள் நாட்டில் பனிவரு மாரி இன்றி வறந்தமை பகர மேருக் குனி வரு சிலையார்க்கு அன்பன் கோள் நிலை குறித்து நோக்கி இனி வரு மாரி இல்லை ஆதினால் என்னில் கேண்மின். |
3 |
|
|
உரை
|
|
|
|
|
1056. |
காய் சின வெய்யோன் சேயோன் முன் செலக் கதிர்கால் வெள்ளித் தேசிகன் பின்பு சென்று நடக்கும் இச் செயலான் முந்நீர் தூசின உலகில் பன்னீராண்டு வான் சுருங்கும் என்று பேசின நூல்கள் மாரி பெய்விப் போன் சென்று கேண்மின். |
4 |
|
|
உரை
|
|
|
|
|
1057. |
என்றவன் எதிர் யாம் எவ்வாறு ஏகுது என்றார் ஐந்தும் வென்றவன் சோம வார விரதம் நீர் நோற்று வெள்ளி மன்றவன் அருளைப் பெற்று வான் வழிச் செல்மின் என்ற அக் குன்றவன் சிலையா நோன்பின் விதியினைக் கூறு கின்றான். |
5 |
|
|
உரை
|
|
|
|
|
1058. |
உத்தம வானோர் தம்முள் உத்தமன் ஆகும் ஈசன் உத்தம சத்தி மருள் உத்தமி உருத்திராணி உத்தம விரதம் தம்முள் உத்தமம் திங்கள் நோன்பு என்று உத்தம மறை நூல் ஆதி உரைக்கும் இச் சோம வாரம். |
6 |
|
|
உரை
|
|
|
|
|
1059. |
மந்தரம் காசி ஆதிப் பதிகளில் வதிந்து நோற்கத் தந்திடும் பயனில் கோடி தழைத்திடும் மதுரை தன்னில் இந்த நல் விரதம் நோற்போர் அதிகம் யாது என்னில் சோம சுந்தரன் உரிய வாரம் ஆதலால் சோம வாரம். |
7 |
|
|
உரை
|
|
|
|
|
1060. |
அங்கு அதின் அதிகப் பேறு உண்டு அருக்கனின் மதி தோய்ந்து ஒன்றித் தங்கிய திங்கள் நோன்பு தகுதியின் நோற்க வல்லார்க்கு இங்கு அதின் அதிக நீதி ஈட்டிய பொருள் கொண்டு ஆற்றும் மங்கல விரதப் பேர் ஒன்று அனந்தமாய் வளரும் அன்றே. |
8 |
|
|
உரை
|
|
|
|
|
1061. |
நலம் மலி விரதம் நோற்பத் தொடங்குநாள் நவில்வாம் தேளிற் சிலையினில் ஆதல் இன்றி இரட்டியது எரிசம் சேர்ந்து மல மதி ஒழித்து மற்றை மதியிலும் முந்தை பக்கத்து அலர் கதிர் வாரத்து அல் ஊண் அயின்றிடாது அயலில் துஞ்சா. |
9 |
|
|
உரை
|
|
|
|
|
1062. |
வை கறை எழுந்து சேல் கண் மணாளனை உள்கி அற்றைச் செய்கடன் நிறீஇக் காமாதி சிந்தை நீத்து அலர் பொன் கஞ்சப் பொய்கையை அடைந்து கையில் பவித்திரம் புனைந்து வாக்கு மெய் கருத்து ஒருப்பாடு எய்தச் சங்கற்பம் விதந்து கூறி. |
10 |
|
|
உரை
|
|
|
|
|
1063. |
கடம்பு அடி முளைத்த முக்கண் கருப்பினை நினைந்து ஞாலத்து திடம் படு தீர்த்தம் எல்லாம் ஆடிய பயனை ஈண்டுத் திடம் படத் தருதி என்னாத் திரைத் தடம் படிந்து வெண் நீறு உடம்பு அணிந்து தக்க மாலை ஒளி பெற விதியால் தாங்கி. |
11 |
|
|
உரை
|
|
|
|
|
1064. |
வெள்ளை மந்தாரம் முல்லை மல்லிகை வெடி வாய் சாதி கள் அவிழ் மயிலை ஆதி வெண்மலர் கவர்ந்து வேழப் பிள்ளையை முந்தப் பூசித்து இரந்து சங்கற்பம் பேசி உள் அணைந்து உச்சி மேல் பன்னிரு விரல் உயர்ச்சிக்கு உம்பர். |
12 |
|
|
உரை
|
|
|
|
|
1065. |
சத்திய ஞான ஆனந்த தத்துவம் தன்னை உள்கி வைத்த தன் வடிவம் கொண்டு மண் முதல் சிவம் ஈறு ஆன அத்துவ லிங்கம் தன்னை ஆசன மூர்த்தி மூல வித்தை மற்று நாலு நூலின் விதியினால் பூசை செய்க. |
13 |
|
|
உரை
|
|
|
|
|
1066. |
ஐந்து அமுது ஆவின் ஐந்து நறும் கனி ஐந்து செம்தேன் சந்தன தோயம் புட்பத் தண் புனல் மணி நீராட்டிச் சுந்தர வெண் பட்டு ஆடை கருப்புரம் சுண்ணம் சாந்தம் கந்த மல்லிகை முன் ஆன வெண் மலர்க் கண்ணி சாத்தி. |
14 |
|
|
உரை
|
|
|
|
|
1067. |
காசணி பொலம் பூண் சாத்திக் கனைகழல் ஆதி அங்க பூசனை செய்து சேல் கண் பூரண பரையை அவ்வாறு ஈசன் ஐந்து எழுத்தைப் பெண் பால் இசைய உச்சரித்துப் பூசித்து தாசறு சுரபித் தீம்பால் அட்ட இன் அமுதினோடும். |
15 |
|
|
உரை
|
|
|
|
|
1068. |
பண்ணிய வகை பானீய நிவேதனம் பண்ணி வாசம் நண்ணிய அடைக்காய் நல்கி நறு விரைத் தூபம் தீபம் எண்ணிய வகையால் கோட்டிக் கண்ணடி ஏனை மற்றும் புண்ணியன் திரு முன் காட்டி வில்வத்தால் பூசை செய்தல். |
16 |
|
|
உரை
|
|
|
|
|
1069. |
புரகரன் இச்சா ஞானக் கிரியை ஆய்ப் போந்த வில்வ மர முதல் அடைந்து மூன்று வைகல் ஊண் உறக்கம் இன்றி அரகர முழக்கம் செய்வோர் ஐம் பெரும் பாதகங்கள் விரகில் செய் கொலைகள் தீரும் ஆதலால் விசேடம் வில்வம். |
17 |
|
|
உரை
|
|
|
|
|
1070. |
மடங்கி இதழ் சுருங்கல் வாடி உலர்ந்தது மயிர் சிக்கு உண்டல் முடங்கு கால் சிலம்பிக் கூடு புழுக் கடி முதல் ஆம் குற்றம் அடங்கினும் குற்றம் இல்லை உத்தமம் ஆகும் வில்வம் தடம் கை கொண்டு ஈசன் நாமம் ஆயிரம் சாற்றிச் சாத்தல். |
18 |
|
|
உரை
|
|
|
|
|
1071. |
அடியனேன் செய்யும் குற்றம் அற்றைக்கு அன்று அனந்தம் ஆகும் கொடிய நஞ்சு அமுதாக் கொண்டாய் குற்றமும் குணம் ஆக் கொண்டு படி எழுத அரிய நங்கை பங்கனே காத்தி என்று முடி உற அடியில் வீழ்ந்து மும் முறை வலம் செய்து ஏத்தி. |
19 |
|
|
உரை
|
|
|
|
|
1072. |
வன் மனம் கரை நின்று வேண்டிய வரங்கள் வேண்ட நன் மணப் பேறு மக்கள் பெறுதல் வாக்குக் கல்வி பொன் மனக் இனிய போகம் தெவ்வரைப் புறகு காண்டல் இம்மையில் அரசு மற்று எண்ணியாங்கு எய்தும் மன்னோ. |
20 |
|
|
உரை
|
|
|
|
|
1073. |
ஆதி இவ் இலிங்கம் தீண்டல் அருகர் அல்லாத வேத வேதியர் முதலோர் இட்ட இலிங்கத்து இவ்விதியால் அர்ச்சித்து ஓதிய விரதம் நோற்க அர்ச்சனைக்கு உரியர் அல்லாச் சாதியர் பொருள் நேர்ந்து ஆதி சைவரால் பூசை செய்தல். |
21 |
|
|
உரை
|
|
|
|
|
1074. |
பொருவில் இவ் விரதம் ஐ வகைத்து உச்சிப் போதில் ஊண் இரவில் ஊண் இரண்டும் ஒருவுதல் உறங்காது இருத்தல் அர்ச்சனை நால் யாமமும் உஞற்றுதல் என்னக் கருதின் இவ் ஐந்தும் ஒன்றினுக்கு ஒன்று கழியவும் ஐகமாம் நோற்கும் வருடம் ஒன்று இரண்டு மூன்று பன்னிரண்டு வருடம் வாழ்நாள் அளவில் இவற்றுள். |
22 |
|
|
உரை
|
|
|
|
|
1075. |
உடலளவு எண்ணி நோற்பவர் முந்த உத்தியாபனம் செய்து நோற்கக் கடவர் அவ் வருடக் கட்டளைக்கு இறுதி கழிப்பதுத் தாபன விதிதான் மடல் அவிழ் மாலை மண்டபம் குண்டம் மண்டலம் வகுத்து மா பதியைப் படர் ஒளி வெள்ளி முப்பது கழஞ்சில் படிமையான் நிருமிதம் செய்து. |
23 |
|
|
உரை
|
|
|
|
|
1076. |
காலையில் ஆசான் சொல்வழி நித்தக் கடன் முடித்து உச்சி தொட்டு அந்தி மாலையின் அளவும் புராண நூல் கேட்டு மாலை தொட்டு யாமம் ஒர் நான்கும் சேல் அன கண்ணாள் பங்கனைப் பூசை செய்க அப் பூசனை முடிவின் மூல மந்திரம் நூற்று எட்டு நூற்று எட்டு முறையினால் ஆகுதி முடித்தல். |
24 |
|
|
உரை
|
|
|
|
|
1077. |
வில்லம் ஆயிரம் கொண்டு ஆயிரம் நாமம் விளம்பி நால் யாமமும் சாத்தல் நல்ல ஐந்து எழுத்தால் ஐந்து எழுத்து உருவின் நாதனுக்கு அருக்கியம் கொடுத்தல் எல்லை இல் மூல மந்திரத்தாலும் ஏனை மந்திரங்களினாலும் வில் அழல் ஓம்பிப் பூரண ஆகுதி செய்து ஈறு இலான் வேள்வியை முடித்தல். |
25 |
|
|
உரை
|
|
|
|
|
1078. |
புலர்ந்த பின் நித்த வினை முடித்து அரம்பை பொதுளும் பாசிலை பதின் மூன்றின் நலம் தரு தூ வெள்ளரிசி பெய்து இனிய நறிய காய் கறியொடு பரப்பி அலந்தர வான் பால் நிறை குடம் பதின் மூன்று அரிசி மேல் வைத்தான் அடியில் கலந்த அன்பினராய்ச் சிவாஅர்ச் சனைக்கு உரிய கடவுள் வேதியர் களை வரித்து. |
26 |
|
|
உரை
|
|
|
|
|
1079. |
காது அணி கலனும் கை அணி கலனும் கவின் பெற அளித்தனர் ஆக ஆதரம் பெருக நினைந்து அருச்சனை செய்து அரிய தக்கிணை யொடும் பாதப் போதணி காப்பு விசிறி தண் கவிகை பூந்துகில் முதல் பல உடனே மேதகு தானம் செய்து பின் குருவைக் கற்பு உடை மின் இடை யோடும். |
27 |
|
|
உரை
|
|
|
|
|
1080. |
ஆசனத்து இருத்திப் பொலந்துகில் காதுக்கு அணிகள் கைக்கு அணிகளும் அணிந்து வாச நல் மலர் இட்டு அருச்சனை செய்து மலைமகள் தலைவனை வரைந்து பூசனை செய்த படிமையோடு அம் பொன் பூதலம் பதாதிகள் பிறவும் தூசு அலர் மாலை கோட்டணி புனைந்த சுரபிமா தானமும் செய்து. |
28 |
|
|
உரை
|
|
|
|
|
1081. |
இனையவாறு உத்தாபனம் முடித்து ஆசான் ஏவலால் சிவன் அடிக்கு அன்பர் தனைய ரோடு ஒக்கலுடன் அமுது அருந்த தகுதி இவ்விரத முன் கண்ணன் அனைய தாமரை யோன் இந்திரன் முதல் வான் நாடவர் மூவறு கணத்தோர் அனைவரும் நோற்றார் மனிதரும் அனுட்டித்து அரும் பெறல் போகம் வீடு அடைந்தார். |
29 |
|
|
உரை
|
|
|
|
|
1082. |
ஈது நோற்பவர் வெம் பகை மனத்துயர் தீர்ந்து ஆயிரம் பிறவியில் இயற்றும் திது சேர் வினை தீர்ந்து எடுத்த யாக்கையினில் சிவகதி அடைவர் இவ் விரதம் ஓதினோர் கேட்டோர் மனைவியர் மக்கள் ஒக்கலோடு இனிது வாழ்ந்து உம்பர் மேதகு பதினாலு இந்திரன் பதத்தில் வீற்று இனிது இருப்பர் என்று அறவோன். |
30 |
|
|
உரை
|
|
|
|
|
1083. |
சொல்லிய நெறியால் சோம சுந்தரன் விரதம் நோற்பான் வில் இடு மணிப் பூண் வேந்தர் முனிவனை விடைகொண்டு ஏகி அல்லி அம் கனக கஞ்சத்து ஆடி அம் கயல் கண் வல்லி புல்லிய பாகன் தன்னை வழிபடீஇ போற்றி நோற்றார். |
31 |
|
|
உரை
|
|
|
|
|
1084. |
சுந்தரன் தன்னைப் பூசைத் தொழில் செய்து வரம் பெற்று ஏகி அந்தரத்து ஆறு செல்வார் அஃது அறிந்து அமரர் வேந்தன் வந்தவர் இருக்க வேறு மடங்கல் மான் தவிசு மூன்று தந்திடப் பணித்தான் இட்டார் தனது அரியணையில் தாழ. |
32 |
|
|
உரை
|
|
|
|
|
1085. |
வான் வழி வந்த மூன்று மன்னரும் பொன் நாடு எய்தி ஊன் வழி குலிச வைவேல் உம்பர் கோன் மருங்கில் புக்கார் தேன் வழி போந்தின் கண்ணிச் சேரனு ஆர்த்தார் வேந்தும் கான் வழி தாரு நாடன் காட்டிய தவிசின் வைக. |
33 |
|
|
உரை
|
|
|
|
|
1086. |
மைக் கடல் வறப்ப வென்ற வாகை வேல் செழியன் மௌலிச் செக்கர் மா மணி வில் காலத் தேவர் கோன் தவிசில் ஏறி ஒக்க வீற்று இருந்தான் ஆக உம்பர் கோன் அழுக்காறு எய்திப் பக்கமே இருந்த ஏனைப் பார்த்திவர் முகத்தைப் பாரா. |
34 |
|
|
உரை
|
|
|
|
|
1087. |
முகமன் நன்கு இயம்பி நீவிர் வந்தது என் மொழிமின் என்ன மகபதி எங்கள் நாட்டின் மழை மறுத்து அடைந்தேம் என்றார் அகம் மலர்ந்து அனையார் நாட்டின் அளவும் வான் சுரக்க நல்கி நகை மணிக் கலன் பொன் ஆடை நல்கி நீர் போமின் என்றான். |
35 |
|
|
உரை
|
|
|
|
|
1088. |
அன்னவர் அகன்ற பின்னை அமரர் கோன் கன்னி நாடன் தன் அரி அணை மேல் ஒக்கத் தருக்கினோடு இருக்கு மாறும் பின்னரும் மாரி வேண்டாப் பெருமித வீறும் நோக்கி இன்னது புலப் படாமை இனையது ஓர் வினயம் உன்னா. |
36 |
|
|
உரை
|
|
|
|
|
1089. |
பொற்பு உற வரிசை செய்வான் போல் அளவு இறந்தோர் தாங்கி வெற்பு உறழ் திணி தோள் ஆற்றல் மெலிவது ஓர் ஆரம் தன்னை அற்புற அளித்தான் வாங்கி அலர் மதுத் தார் போல் ஈசன் கற்பு உடை உமையாள் மைந்தன் கதும் என கழுத்தில் இட்டான். |
37 |
|
|
உரை
|
|
|
|
|
1090. |
கண்டனன் கடவுள் நாதன் கழியவும் இறும் பூது உள்ளம் கொண்டனன் இன்று தொட்டுக் குரை அளி துழாவு நிம்பத் தண் தழை மார்ப ஆரம் தாங்கும் பாண்டியன் என்று உன்னை மண்டலம் மதிக்க என்றான் வான நாடு உடைய மன்னன். |
38 |
|
|
உரை
|
|
|
|
|
1091. |
அன்னது சிறிதும் எண்ணாது அங்கு நின்று இழிந்து தென்னன் தன் நகர் அடைந்தான் இப்பால் சத மகன் ஆணையால் அம் மன்னவர் இருவர் நாடும் மழை வளம் பெருகப் பெய்த தென்னவன் நாடு பண்டைச் செயல் அதாய் இருந்தது அன்றே. |
39 |
|
|
உரை
|
|
|
|
|
1092. |
ஆயது ஓர் வைகல் வேட்டை ஆடுவான் அண்ணல் விண்ணந்து ஆயது ஓர் பொதியக் குன்றில் சந்தனச் சாரல் நண்ணி மேயதோர் அரிமான் ஏனம் வேங்கை எண்கு இரலை இன்ன தீயதோர் விலங்கு வேட்டம் செய்து உயிர் செகுக்கும் எல்லை. |
40 |
|
|
உரை
|
|
|
|
|
1093. |
பொன்றத்து மருவிக் குன்றில் புட்கலா வருத்தம் ஆதி மின்றத்து மேகம் நான்கும் வீழ்ந்தன மேயக் கண்டு குன்றத்தின் நெடிய திண் தோள் கொற்றவன் அவற்றைப் பற்றிக் கன்றத் திண் களிறு போலக் கடும் தளை சிக்க யாத்தான். |
41 |
|
|
உரை
|
|
|
|
|
1094. |
வேட்டத்தில் பட்ட செம்கண் வேழம்போல் கொண்டு போகிக் கோட்டத்தில் இட்டான் ஆக குன்று இறகு அரிந்த வென்றி நாட்டத்துப் படிவத்து அண்ட நாடன் மற்று அதனைக் கேட்டுக் காட்டத்துக் கனல் போல் சீறிக் கடும் சமர் குறித்துச் செல்வான். |
42 |
|
|
உரை
|
|
|
|
|
1095. |
வாங்கு நீர் வறப்ப வேலை விடுத்ததும் வலிய வாரம் தாங்கிய செருக்கும் காரைத் தளை இடு தருக்கு நோக்கி ஈங்கு ஒரு மனித யாக்கைக் இத்துணை வலியாது என்னா வீங்கியம் ஆன மூக்க மீனவன் மதுரை சூழ்ந்தான். |
43 |
|
|
உரை
|
|
|
|
|
1096. |
ஓடினர் ஒற்றர் போய்ச் செழிய ஒண் கழல் சூடினார் நகர்ப்புறம் சுரர்கள் சேனைகள் மூடின என்னலும் முனிவும் மானமும் நீடினன் அரியணை இழிந்து நீங்குவான். |
44 |
|
|
உரை
|
|
|
|
|
1097. |
பண்ணுக தேர் பரி பகடு வீரர் முன் நண்ணுக கடிது என நடத்தி யாவர் என்று எண்ணலன் மத மலை எருத்த மேல் கொடு கண்ணகன் கடி நகர்க் காப்பு நீங்கு முன். |
45 |
|
|
உரை
|
|
|
|
|
1098. |
அடுத்தனர் வானவர் ஆர்த்துப் பல் படை எடுத்தனர் வீசினர் சிலையில் எய்கணை தொடுத்தனர் இறுதி நாள் சொரியும் மாரிபோல் விடுத்தனர் மதிக்குல வீரன் சேனை மேல். |
46 |
|
|
உரை
|
|
|
|
|
1099. |
ஆர்த்தனர் மலய வெற்பு அரையன் சேனையோர் பார்த்தனர் வேறு பல் படைக்கலக் குவை தூர்த்தனர் குனிசிலை தொடுத்து வாளியால் போர்த்தனர் அமரர் மெய் புதைத்த என்பவே. |
47 |
|
|
உரை
|
|
|
|
|
1100. |
தறிந்தன தாள் சிரம் தகர்ந்த தோள் கரம் பறிந்தன குருதி நீர் கடலில் பாய்ந்தன செறிந்தன பாரிடம் சேனம் கூளிகள் முறிந்தன் வானவர் முதல்வன் சேனையே. |
48 |
|
|
உரை
|
|
|
|
|
1101. |
ஆடின குறைத்தலை அவிந்த போர்க்களம் பாடின பாரிடம் விந்தைப் பாவை தாள் சூடின கூளிகள் சோரி சோரப் பார் மூடின பிணக் குவை அண்டம் முட்டவே. |
49 |
|
|
உரை
|
|
|
|
|
1102. |
வெஞ்சின வலாரிதன் வீரச் சேனைகள் துஞ்சின கண்டு எரி சொரியும் கண்ணன் ஆய்ப் பஞ்சின் முன் எரி எனப் பதைத்து தெய்வத வஞ்சினப் படைகளான் மலைவது உன்னினான். |
50 |
|
|
உரை
|
|
|
|
|
1103. |
வெம் கதிர்ப் படை விட்டு ஆர்த்தான் விண்ணவன் அதனைத் திங்கள் பைங் கதிர்ப் படை தொட்டு ஓச்சி அவித்தனன் பார் ஆள் வேந்தன் சிங்க வெம் படை விட்டு ஆர்த்தான் தேவர் கோன் அதனைச் சிம்புட் புங்கவன் படை தொட்டு ஓச்சி அடக்கினான் புணரி வென்றோன். |
51 |
|
|
உரை
|
|
|
|
|
1104. |
தானவர் பகைவன் மோக சரம் தொடுத்து எறிந்தானாக மீனவன் அதனை ஞான வாளியால் விளித்து மாய்ந்து போனபின் மற்போர் ஆற்றிப் புக்கனர் புக்கார் தம்மில் வானவன் மண்ணினான் மேல் வச்சிரம் வீசி ஆர்த்தான். |
52 |
|
|
உரை
|
|
|
|
|
1105. |
காய்சின மடங்கல் அன்னான் கை வளை சுழற்றி வல்லே வீசினான் குலிசம் தன்னை வீழ்த்தது விடுத்தான் சென்னித் தேசினன் மகுடம் தள்ளிச் சிதைத்தது சிதைத்த லோடும் கூசினன் அஞ்சிப் போனான் குன்று இற கரிந்த வீரன். |
53 |
|
|
உரை
|
|
|
|
|
1106. |
இந்து இரண்டு அனைய கூர்அம்பல் இருள் வரை நெஞ்சு போழ்ந்த மைந்தனின் வலிய காளை வரைந்து எறி நேமி சென்னி சிந்திடாது ஆகி அம் பொன் மணி முடி சிதறச் சோம சுந்தர நாதன் பூசைத் தொழில் பயன் அளித்தது என்னா. |
54 |
|
|
உரை
|
|
|
|
|
1107. |
போரினுக்கு ஆற்றாது ஓடிப் பொன் நகர் புகுந்த வென்றித் தாரினுக்கு இசைந்த கூர் வேல் சதமகன் பின்பு நின் நாட்டு ஊரினுக்கு எல்லாம் மாரி உதவுவேன் இகள நீக்கிக் காரினைத் தருக என்னாக் கவுரியற்கு ஓலை விட்டான். |
55 |
|
|
உரை
|
|
|
|
|
1108. |
முடங்கல் கொண்டு அணைந்த தூதன் முடி கெழு வேந்தன் பாதத்து ஓடுங்கி நின்று ஓலை நீட்ட உழை உளான் ஒருவன் வாங்கி மடங்கல் ஏறு அனையான் முன்னர் வாசித்துக் காட்டக் கேட்டு விடம் கலுழ் வேலான் விண்ணோர் வேந்து உரை தேறான் ஆகி. |
56 |
|
|
உரை
|
|
|
|
|
1109. |
இட்ட வன் சிறையை நீக்கி எழிலியை விடாது மாறு பட்ட சிந்தையனே ஆகப் பாக சாதனனுக்கு என்று நட்டவன் ஒரு வேளாளன் ஆன் பிணை என்று தாழ்ந்தான் மட்டு அவிழ்ந்து ஒழுகு நிம்ப மாலிகை மார்பினானும். |
57 |
|
|
உரை
|
|
|
|
|
1110. |
இடுக்கண் வந்து உயிர்க்கு மூற்றம் எய்தினும் வாய்மை காத்து வடுக்களைந்து ஒழுகு நாலா மரபினான் உரையை ஆத்தன் எடுத்து உரை மறை போல் சூழ்ந்து சிறைக் களத்து இட்ட யாப்பு விடுத்தனன் பகடு போல மீண்டன மேகம் எல்லாம். |
58 |
|
|
உரை
|
|
|
|
|
1111. |
தேவர் கோன் ஏவலாலே திங்கள் மும் மாரி பெய்து வாவியும் குளனும் ஆறு மடுக்களும் அடுத்துக் கள்வாய்க் காவி சூழ் வயலும் செய்யும் செந் நெலும் கன்னல் காடும் பூ விரி பொழிலும் காவும் பொலிந்தது கன்னிநாடு. |
59 |
|
|
உரை
|
|
|
|