2597. காமனைப் பொடியாக் கண்ட கண் நுதல் தென் நூல் கீர
நாம நல் புலவற்கு ஈந்த நலம் இது பொலம் பூம்
                                                     கொன்றைத்
தாமனச் சங்கத்து உள்ளார் தலை தடுமாற்றம் தேற
ஊமனைக் கொண்டு பாடல் உணர்த்திய ஒழுக்கம்
                                                     சொல்வாம்.
1
உரை
   
2598. அந்தம் இல் கேள்வி ஓர் எண் அறுவரும் வேறு வேறு
செந்தமிழ் செய்து தம்மில் செருக்குறு பெருமை கூறித்
தந்தமின் மாறாய்த் தத்தந் தராதரம் அளக்க வல்ல
முந்தை நூல் மொழிந்த ஆசான் முன்னர் வந்து
                                                      எய்தினாரே.
2
உரை
   
2599. தொழுதனர் அடிகள் யாங்கள் தொடுத்த இப் பாடல் தம்
                                                                முள்
விழுமிதும் தீதும் தூக்கி வேறுபாடு அளந்து காட்டிப்
பழுதறுத்து ஐயம் தீரப் பணிக்க எனப் பணிந்தார் கேட்டு
முழுது ஒருங்கு உணர்ந்த வேத முதல்வனாம் முக்கண்
                                                                   மூர்த்தி.
3
உரை
   
2600. இருவரும் துருவ நீண்ட எரி அழல் தூணில் தோன்றும்
உரு என அறிவான் அந்த உண்மையால் உலகுக்கு
                                                       எல்லாம்
கரு என முளைத்த மூல இலிங்கத் துணின்றும் காண்டற்கு
அரிய தோர் புலவனாகித் தோன்றி ஒன்று அருளிச்
                                                      செய்வான்.
4
உரை
   
2601. இம் மா நகர் உள்ளான் ஒரு வணிகன் தனபதி என்று
அம் மா நிதிக் கிழவோன் மனை குண சாலினி அனையார்
தம் மாதவப் பொருட்டால் வெளிற்று அறிவாளரைத்
                                                       தழுவும்
பொய் மாசு அறவினன் போல அவதரித்தான் ஒரு புத்தேள்.
5
உரை
   
2602. ஓயா விறல் மதனுக்கு இணை ஒப்பான் அவன் ஊமச்
சேய் ஆம் அவன் இடை நீர் உரை செய்யுள் கவி எல்லாம்
போய் ஆடுமின் அனையானது புந்திக்கு இசைந்தால் நன்று
யாவரும் மதிக்கும் தமிழ் அதுவே என அறைந்தான்.
6
உரை
   
2603. வன் தாள் மழ விடையாய் அவன் மணி வாணிகன் ஊமன்
என்றால் அவன் கேட்டு எங்கன் இப்பாடலின் கிடக்கும்
நன்று ஆனவும் தீது ஆனவும் நயந்து ஆய்ந்து அதன்
                                                            தன்மை
குன்றா வகை அறைவான் என மன்று ஆடிய கூத்தன்.
7
உரை
   
2604. மல்லார் தடம் புய வாணிக மைந்த தனக்கு இசையக்
சொல் ஆழமும் பொருள் ஆழமும் கண்டான் முடி
                                                       துளக்காக்
கல்லார் புயம் புளகித்து உளம் தூங்குவன் கலகம்
எல்லாம் அகன்றிடும் உங்களுக்கு என்று ஆலயம்
                                                       சென்றான்.
8
உரை
   
2605. பின் பாவலர் எலாம் பெரு வணிகக் குல மணியை
அன்பால் அழைத்து ஏகித் தமது அவையத்து இடை
                                                         இருந்தா
நன் பால் மலர் நறும் சாந்து கொண்டு அருச்சித்தனார்
                                                         நயந்தே
முன்பால் இருந்து அரும் தீம் தமிழ் மொழிந்தார் அவை
                                                         கேளா.
9
உரை
   
2606. மகிழ்ந்தான் சிலர் சொல் ஆட்சியை மகிழ்ந்தான் சிலர்
                                                         பொருளை
இகழ்ந்தான் சிலர் சொல் வைப்பினை இகழ்ந்தான் சிலர்
                                                         பொருளைப்
புகழ்ந்தான் சிலர் சொல் இன்பமும் பொருள் இன்பமும்
                                                         ஒருங்கே
திகழ்ந்தான் சிலர் சொல் திண்மையும் பொருள் திண்மையும்
                                                         தேர்ந்தே.
10
உரை
   
2607. இத் தன்மையன் ஆகிக் கலை வல்லோர் தமிழ் எல்லாம்
சித்தம் கொடு தெருட்டும் சிறு வணிகன் தெருள் கீரன்
முத் தண் தமிழ் கபிலன் தமிழ் பரணன் தமிழ் மூன்றும்
அத் தன் மையன் அறியும் தொறும் அறியும் தொறும்
                                                          எல்லாம்.
11
உரை
   
2608. நுழைந்தான் பொருள் தொறும் சொல் தொறும் நுண் தீம்
                                                        சுவை உண்டே
தழைந்தான் உடல் புலன் ஐந்தினும் தனித்தான் சிரம்
                                                        பனித்தான்
குழைந்தான் விழிவிழி வேலையுள் குளித்தான் தனை
                                                        அளித்தான்
விழைந்தான் புரி தவப் பேற்றினை விளைத்தான் களி
                                                        திளைத்தான்.
12
உரை
   
2609. பல் காசொடு கடலில் படு பவளம் சுடர் தரளம்
எல்லாம் நிறுத்து அளப்பான் என இயல் வணிகக் குமரன்
சொல் ஆழமும் பொருள் ஆழமும் துலை நா எனத் தூக்க
நல்லாறு அறி புலவோர்களும் நட்டார் இகல் விட்டார்.
13
உரை
   
2610. உலகினுட் பெருகி அந்த ஒண் தமிழ் மூன்றும் பாடல்
திலகமாய்ச் சிறந்த வாய்ந்த தெய்வ நாவலரும் தங்கள்
கலகமா நவையில் தீர்ந்து காசு அறு பனுவல் ஆய்ந்து
புலம் மிகு கோட்டி செய்து பொலிந்தனர் இருந்தார்
                                                          போலும்.
14
உரை