தொடக்கம் |
|
|
3256. | சென்னி வெண் திங்கள் மிலைச்சிய சிவன் அருள் அடைந்த சம்பந்தர் துன் இரும் சமணனைக் கழுமுனை ஏற்றித் துணித்த வாறு இசைத்தனம் வணிகக் கன்னிதன் மன்றல் கரியினை மாற்றாள் காண அக் கண் நுதல் அருளால் வன்னியும் கிணறும் இலிங்கமும் ஆங்கு வந்தவாறு அடுத்தினி உரைப்பாம். | 1 |
|
|
உரை
|
|
|
|
|
3257. | பொன் மலர்க் கைதை வேலி சூழ் வேலைப் புறத்து ஒரு பட்டினத்து உள்ளான் மின் மணிக் கொடும் பூண் ஒரு குல வணிகன் வேறு வேறு ஆம் பல செல்வத் தன்மையில் சிறந்தோன் மகவு இலன் ஆகித் தன் மனக்கு இனியது ஓர் காட்சி நன் மனைக் கொடியோடு அறம் பல புரிந்தோர் நகை மதிக் கொம்பை ஈன்று எடுத்தான். | 2 |
|
|
உரை
|
|
|
|
|
3258. | அத்தன வணிகற்கு உரிய நன் மருகன் அவன் முதற் கடிமணம் முடித்தோன் முத்தமிழ் மதுரைப் பதி உளான் அவற்கே முறையினால் நோற்று நான் பயந்த வித்தக மயிலைக் கொடுப்பல் என்று அனைய இயற் குல வணிகர் கோன் தன்னோடு ஒத்த பல் கிளைஞர் யாவரும் அறிய உணர்த்தினான் சில பகல் ஒழிய. | 3 |
|
|
உரை
|
|
|
|
|
3259. | ஊழ்வினை வலியால் ஆருயிர் இழந்தான் உயிர்க்கு உடம்பு அனைய தன் கற்பின் சூழ் கதிர் மணிப் பூண் மனைவியும் இறப்பத் துணிந்தனள் அவர் இருவோர்க்கும் ஆழ் கடல் கிளைஞர் செயத் தகு கடன்கள் ஆற்றியச் செய்தியை மதுரை வாழ்தரு மருகற்கு உணர்த்துவான் ஓலை விடுத்தனர் மருமகன் வாங்கா. | 4 |
|
|
உரை
|
|
|
|
|
3260. | தன் அருள் மாமன் துஞ்சினான் கூடத் தாரமும் துஞ்சியது இப்பால் அன்னவற்கு அளவு இன்று ஆகிய தனம் உண்டு அவனனி நாண் மகவு இன்றிப் பின் ஒரு பெண்ணைப் பெற்றனன் அவளைத் தனக்கு எனப் பேசினான் அனைய கன்னியை மணந்து செல்க என முடங்கல் கழறிய பாசுரம் தெரியா. | 5 |
|
|
உரை
|
|
|
|
|
3261. | வீழ்ந்தனன் தரை மேல் புரண்டனன் உயிர்ப்பு வீங்கினன் விழிப்புனல் வெள்ளத்து ஆழ்ந்தனன் விம்முற்று அம்மவோ என்று என்று அரற்றினான் கிளைஞர் நட்பு அடைந்து வாழ்ந்தவர் தழுவத் தழீஇத் தழீஇக் கரைந்தான் மற்றவர் தேற்றிடத் தெளிந்து சூழ்ந்த வெம் துயர் நீத்து ஒரு தலை மாமன் தொல் நகர்க்கு கேகுவான் துணிந்தான். | 6 |
|
|
உரை
|
|
|
|
|
3262. | அங்கு உள கிளைஞர் சிலரொடும் கூடி அரும் கடி மதுரை நீத்து ஏகிப் பொங்கிரும் காழி சூழ் பட்டினம் குறுகிப் புகுதுவான் வரவு அறிந்து அங்குத் தங்கு தம் கிளைஞர் வினவ நேர் வாரைத் தழீஇத் தழீஇச் செலவிடுத்து ஏகிக் கொங்கு இவர் தளவத் தாரினான் மாமன் கோயில் புக்கு இருந்தனன் ஆக. | 7 |
|
|
உரை
|
|
|
|
|
3263. | நாள் சில கழிந்த பின்னர் நாய்கர் ஏறு அனையான் அன்ன வாள் புரை கண்ணியானை மதுரையில் கொடுபோய் அங்கு என் கேளிர் முன் வேட்பல் என்று கிளந்து தன் மாமன் ஈட்டு நீள் பெரும் பொருள்கள் மற்றும் கைக் கொண்டு நெறியில் செல்வான். | 8 |
|
|
உரை
|
|
|
|
|
3264. | வழிவிட வருவார் தம்மை நிறுத்திப் பின் மதுரை மூதூர்க்கு எழுதரு சுற்றத்தாரை முன் சென் மின் என்று போக்கித் தொழு பரிசனமும் தானும் தோகையும் வைகல் ஒன்றில் கழி வழி அரைமேல் பெய்த காவதம் ஆகப் போவான். | 9 |
|
|
உரை
|
|
|
|
|
3265. | வெம் கதிர் வேலை செல்லும் வேலை வந்து அணையும் முன்னம் இங்கிருந்து ஒழிகம் என்னாப் புறம் பய மூதுர் எய்தி அங்கு இறை கோயில் முன்னிக் கூவல் நீராடி அங்குத் தங்கிய வன்னி மாடே போனகம் சமைத்து உண்டு எல் வாய். | 10 |
|
|
உரை
|
|
|
|
|
3266. | மலை வைத்த சிலையான் கோயில் மருங்கு ஒரு படியின் உம்பர் தலை வைத்துத் துயிலும் எல்லை விதிவழிச் சார வந்தோர் கொலை வைத்த விடவாய் நாகம் கடித்தது கொதித்து நீண்ட விலை வைத்த கொடும் பூண்நாயகன் விடம் தலைக் கொண்டு மாய்ந்தான். | 11 |
|
|
உரை
|
|
|
|
|
3267. | அங்குள பரிசனங்கள் ஆவலித்து இரங்கிச் சூழக் கொங்கைகள் புடைத்துச் சேடிக் குற்றிடை மகளிர் ஏங்கச் சிங்க ஏறு அனையான் ஆகந் தீண்டிடாது ஒதுங்கிப் போந்த பங்கய மலர்க் கொம்பு அன்னாள் பாவை போல் புறம்பு நின்றாள். | 12 |
|
|
உரை
|
|
|
|
|
3268. | ஆளி ஏறு அன்ன அரவின் வாய்ப் பட்டதும் அவிந்ததும் மீள வேல் உண் கணார் கை குலைத்து அழுவதும் விழுவதும் கேளிர் சூழ்ந்து அயர்வதும் சோர்வதும் கண்டு இளம் கிகினாள் வாளியேறு உண்டதோர் மயிலின் வீழ்ந்து உயங்கினாள் மயங்கினாள். | 13 |
|
|
உரை
|
|
|
|
|
3269. | வடிக்கண் உள் செருகின அருகின உயிர்ப்பு அழல் வாய்ப் படும் தொடுத்த பூம் கோதைபோல் சோர்ந்தது ஆக கரம் சோர்ந்தன அடித்தளிர் சோர்ந்தன கன்னி அன்னப் பெடை அன்னவள் இடிக்கு எதிர் பட்டு வீழ்ந்தாள் எனக் கிடந்தனள் என் செய்வாள். | 14 |
|
|
உரை
|
|
|
|
|
3270. | சாயும் பூம் கொம்பரில் சூழ்ந்து இறந்தான் புறம் சார்ந்து அழூஉம் ஆய மென் மகளிர் மீண்டு அன்பனோடு எங்கை தன் ஆவியும் போயதே கொல் என மடியுறக் கொடும் கையால் புறம் தழீஇத் தூய தூ செறிந்து இளைப் பாற்றினார் சிறிது உயிர் தோற்றவே. | 15 |
|
|
உரை
|
|
|
|
|
3271. | மெய் கழிந்து இன்னுயிர் மீண்டு தன் யாக்கையின் மெல்லவே கை கலந்தாங்கு இரு காலி அங்கு உற்றன கண்களும் பொய்கை நீலம் சிறிது அவிழ்ந்து என அலர்ந்தன பூவையை மை கழி நாள் முதல் நான்கு நால் வேலியாய் வளைந்தவே. | 16 |
|
|
உரை
|
|
|
|
|
3272. | கை யெறியும் குழல் கற்றை சோரும் திரி காறுளி நெய் எனக் கண் புனல் கொங்கை முற்றத்து உக நெஞ்சுகும் பைய வாய் விடும் புறம் பார்க்கும் நாண் நெடும் தளைபடும் சிறு தெய்வம் தொட்டாள் எனத் தேம்பி விம்மாந்து ஒளிதேயுமால். | 17 |
|
|
உரை
|
|
|
|
|
3273. | வணங்கில் செல்வம் தழீஇப் பிறந்த நாள் தொட்டு தொகு வைகலும் அணங்கு எனக் கனவிலும் கண்டிலாள் அன்பன் மேல் அன்பு எனும் இணங்கு தன் உருவமாய் நிறைவரம் பிற்றென இருந்த ஒர் பெண் அணங்கு வாய் விட்டு அழுதால் எனப் புலம்பல் உற்றாள் அரோ. | 18 |
|
|
உரை
|
|
|
|
|
3274. | என் நாயகனேயோ என் இரு கண்மணி யே யோ என்னை ஈன்றான் தன் ஆவி அன்ன தனி மருகாவோ முருகாவோ தார் ஆர் முல்லை மன்னாவோ வணிகர் குல மணியே யோ விடி அரவின் வாய்ப் பட்டாயோ உன்னாக நிழலான என்னை விடுத்து எவ்வண்ணம் ஒளிப்ப தேயோ. | 19 |
|
|
உரை
|
|
|
|
|
3275. | பொன்னாட்டின் மட வாரைப் புணர் வதற்கோ நம் அளகா புரத்து வேந்தன் நன் நாட்டின் மடவாரை மணப்பதற்கோ உனைக் கடித்த நாகர் வேந்தன் தன் நாட்டின் மடவாரைத் தழுவுதற்கோ என் ஆவித் தலைவா என்னை இந் நாட்டில் இருத்தி எனை வஞ்சித்துப் போயின வாறு என்னே என்னே. | 20 |
|
|
உரை
|
|
|
|
|
3276. | தென் உலகில் புகுந்தனையோ பணிந்தனையோ மாதுலனைத் தேவியோடும் தன் இரு தோள் உற ஆரத் தழுவினனோ நானும் உடன் சார்ந்தேன் ஆகில் என்னுரிய குரவரையும் கண்ணாரக் காணேனோ எனை ஈங்கு இட்டாய் பின்னுரிய பரிசனமும் கைவிட்டாய் தனி போய் என் பெற்றாய் ஐயா. | 21 |
|
|
உரை
|
|
|
|
|
3277. | வரிசை மருமகன் அரவால் விளிந்தது நான் அறை போய மனத்தோடு இங்குப் பரிவுறலும் எனைப் பயந்தார் நோற்ற பயன் நன்றாகப் பலித்ததே யோ பெரித வரிக் கண் கலக்கம் காணாமுன் இறந்து அன்றோ பிழைத்தார் அந்தோ அரியதிலும் அரிய பயன் இது அன்றோ எவர் பெற்றார் அவர் போல் அம்மா. | 22 |
|
|
உரை
|
|
|
|
|
3278. | உன் காதல் மாமன் எனைப் பயந்த அன்றே உறவு அறிய உனக்கே பேசிப் பின் காதல் மனைவியொடும் உயிர் இழந்தான் யனும் அந்தப் பெற்றியாலே என் காதல் உயிர் போக வெற்று உடம்போ இருக்கும் உடன் இறப்பேன் என்னாத் தன் காதல் துணை இழந்த அன்றில் என விழுந்து அழுதாள் தமியள் ஆனாள். | 23 |
|
|
உரை
|
|
|
|
|
3279. | நன் நகர் உறக்கம் நீங்கி நடுக்கம் உற்று அழுங்கக் காழித் தென்னகர் ஞானச் செல்வர் சிவன் நகர் தொறும் போய்ப் பாடி அந் நகர் அடைந்தார் ஆங்கு ஓர் அணி மடத்து இருந்தார் கேட்டு ஈது என் என ஆள் விட்டு ஆய்ந்து கோயிலின் இடை வந்து எய்தி. | 24 |
|
|
உரை
|
|
|
|
|
3280. | கன்னி நீ யாரை உற்றது என் எனக் கன்னி தாழ்ந்து தன் அரு மரபும் ஈன்றார் தம்மையும் மருகற்கு என்றே உன்னினர் மன்றல் பேசியிறந்தது உயிர் அன்னானோடு இந் நெறி அடைந்து ஈங்கு உற்ற நிகழ்ச்சியும் எடுத்துச் சொன்னாள். | 25 |
|
|
உரை
|
|
|
|
|
3281. | தந்தையும் தாயும் அன்னார் தமியளாய் இரங்கும் பேதைப் பைந் தொடி ஆவி காப்பான் பாம்பு கோள் பட்டான் மாடே வந்தவன் ஆகம் எல்லாம் மருந்து உருவாகும் வண்ணம் சிந்தை செய்து அருட்கண் வைத்தார் குதித்தது தீவாய் நஞ்சம். | 26 |
|
|
உரை
|
|
|
|
|
3282. | எழுந்தனன் உறங்கினான் போல் இறந்தவன் யாரும் கண்டு தொழும் தகை ஞான வேந்தைத் தொழுதனர் துதி செய்து ஆர்வத்து அழுந்தினர் கன்னி அன்ன மனையவள் இன்பத் தீம்தேன் பொழிந்து ஒரு புறத்தே கஞ்சம் பூத்த ஓர் கொம்பின் நின்றாள். | 27 |
|
|
உரை
|
|
|
|
|
3283. | தலைவனை இறந்த போதும் தனி உயிர் பெற்ற போதும் சிலை நுதல் காதல் மாமன் செல்வியாய் இருந்தும் தீண்டா நிலைமையும் அன்பும் கற்பின் நீர்மையும் வியந்து நோக்கி மலைமகள் ஞானம் உண்டார் வணிகனை நோக்கிச் சொல்வார். | 28 |
|
|
உரை
|
|
|
|
|
3284. | வருதி நின் மரபுக்கு எல்லாம் மணிஅனாய் உன்றன் மாமன் தரு திரு அனையாள் இன்பம் சாருநாள் துன்பம் வந்து பெருகு நாள் அன்றி என்று உன் மெய் தொடப் பெருவள் ஈண்டே திருமணம் முடித்துக் கொண்டு பேக எனச் செப்பலோடும். | 29 |
|
|
உரை
|
|
|
|
|
3285. | செம் கண் ஏரு அனையான் ஐயன் திரு மொழி தலைமேல் கொண்டு பங்கயன் படைத்த சாதி நான்கையும் பாது காப்பீர் எம் குல வணிகர் இன்றிக் கரிகளும் இன்றி ஈங்கே மங்கலம் முடிக்கும் வண்ணம் யாது என வணங்கிச் சொன்னான். | 30 |
|
|
உரை
|
|
|
|
|
3286. | கன்னியை ஈன்ற ஞான்றே உனக்கு என்று உன் காதல் மாமன் உன்னிய உறவின் உள்ளார் அறிவரே உனக்கு ஈது அன்றி வன்னியும் கிணறும் இந்த இலிங்கமும் கரிகண் மைந்தா இந் நிலை வதுவை செய்தி எம் உரை கடவாது என்றார். | 31 |
|
|
உரை
|
|
|
|
|
3287. | மாசு அறு மனத்தான் காழி வள்ளலைப் பணிந்து நீரே தேசிகர் குரவர் நட்டோர் தெய்வமும் கிளையும் என்னாப் பேசிய வாறே வேள்வி பெற்றியான் இறீ இத்தான் வேட்ட பாசிழையோடு தாழ்ந்து விடை கொடு பரவிப் போனான். | 32 |
|
|
உரை
|
|
|
|
|
3288. | ஏவல் செய் ஆயத்தாரும் அடியரும் ஈண்ட ஈண்டிக் காவல் செய் மதுரை மூதூர் குறுகித் தன் காதல் மாமன் பூவையை மணந்த வண்ணம் கேட்டு அங்குப் புடைசூழ் சுற்றம் யவரும் உவப்ப இன் புற்று இருந்தனன் இளங்கோ மன்னன். | 33 |
|
|
உரை
|
|
|
|
|
3289. | தன் பெரும் தனமும் மாமன் ஈட்டிய தனமும் ஈட்டி மன் பெரு நிதிக் கோன் என்ன வாணிகம் பெருக்கி நாய்கன் இன் புறு காதலார்கள் இருவரும் ஈன்றகாதல் நன் பொருள் மகிழ்ச்சி செய்ய நலம் பெற வாழும் நாளில். | 34 |
|
|
உரை
|
|
|
|
|
3290. | மூத்தவள் சிறுவர் சால மூர்க்கராய் உள்ளார் ஏனை மாத்தளிர் இயலினாட்கு ஓர் மைந்தன் உண்டு இவனும் அன்ன தீத் தொழின் ஆக மன்ன சிறார்களும் அல்லல் செல்வம் பூத்த நீள் நியமத்தூடு போய் விளையாடல் செய்வார். | 35 |
|
|
உரை
|
|
|
|
|
3291. | முந்திய மணாட்டி மைந்தர் முகிழ் முலை இளைய பாவை மைந்தனை ஒரு நாள் சீறி அடித்தனர் வருந்தி ஈன்ற சந்தணி முலையாள் மாற்றாள் தனையரை வைதாள் ஈன்ற பைந்தொடி தானும் சீறி இளையளை பழித்து வைவாள். | 36 |
|
|
உரை
|
|
|
|
|
3292. | எந்தவூர் எந்தச் சாதி யார் மகள் யாவர் காணச் செந்தழல் சான்றா எங்கோன் கடி மணம் செய்து வந்த கொந்தவிழ் கோதை நீ என் கொழுநனுக்கு ஆசைப்பட்டு வந்தவள் ஆன காமக்கிழத்திக்கு ஏன் வாயும் வீறும். | 37 |
|
|
உரை
|
|
|
|
|
3293. | உரியவன் தீ முன்னாக உன்னை வேட்டதற்கு வேறு கரி உளதாகில் கூறிக் காட்டு எனக் கழற லோடும் எரி சுட வாடிச் சாய்ந்த இணர் மலர் கொம்பில் சாம்பித் தெரி இழை நாணம் சாய்ப்ப நின்று இது செப்புகின்றாள். | 38 |
|
|
உரை
|
|
|
|
|
3294. | அரவின் வாய்ப் பட்ட வைகல் ஆர் உயிர் அளித்த ஞானப் புரவலர் அருளால் எம் கோன் புறம் பய நாதன் வன்னித் தரு வொடு கிணறு காணச் செய்தனன் சாறு அம் மூன்று கரிகளும் உள்ள என்றாள் கற்பினாள் ஒப்பிலாதாள். | 39 |
|
|
உரை
|
|
|
|
|
3295. | மாற்று அவள் நகைத்து நன்று நின் மன்றல் வேள்விக் ஏற்றன கரியே சொன்னாய் இங்கு உமக்கு கரிகள் மூன்றும் தோற்ற மேல் அதுவும் மெய்யே என்றன தோகை யோடும் வேற்றுமை இலாத சாயல் இளையவள் விழுமம் கூரா. | 40 |
|
|
உரை
|
|
|
|
|
3296. | வெவ் உயிர்ப்பு எறிய இல் போய் மெல் விரல் நெரிக்கும் கையால் அவ் வயிறதுக்கும் வீழும் கண்புனல் வெள்ளத்து ஆழும் கொவ்வை வாய் துடிக்கு நாணம் தலைக் கொளும் கூசும் மன்னோ தெய்வமே ஆவாய் என்னும் என் செய் கேன் சிறியேன் என்னும். | 41 |
|
|
உரை
|
|
|
|
|
3297. | தாதை தாய் இறந்த அன்றே தமியளாய் இங்குப் போந்த பேதையேற்கு யார் உண்டு ஐய பேதுறும் வணிகற்கு அன்று மாதுலன் ஆகி ஞாதி வழக்கு அறுத்து உரிமை ஈந்த நாதனே ஏது இலாள் வாய் நகையினில் காத்தி என்னா. | 42 |
|
|
உரை
|
|
|
|
|
3298. | அன்று இரவு உண்டி இன்றித் துயில் இன்றி அழுங்கிப் பின் நாள் பொன் திணி கமல வாவிப் புண்ணியப் புனல் தோய்ந்து அண்டர் நின்று இழி விமானக் கோயில் நிரம் பிய அழகர் முன்னாச் சென்று இரு தாளில் வீழ்ந்து தன் குறை செப்பி வேண்டும். | 43 |
|
|
உரை
|
|
|
|
|
3299. | அன்று எனைக் கணவன் வேட்ட இடத்தினில் அதற்குச் சான்றாய் நின்ற பைந்தருவும் நீயும் கிணறும் அந்நிலையே இங்கும் இன்று வந்து ஏது இலாள் வாய் நகை துடைத்து எனைக் காவாயேல் பொன்றுவல் என்றாள் கற்பின் புகழினை நிறுத்த வந்தாள். | 44 |
|
|
உரை
|
|
|
|
|
3300. | அல்லல் உற்று அழுங்கி நின்றாள் பரிவு கண்டு அம் தண் கூடல் எல்லை இல் கருணை மூர்த்தி அருளினால் எவரும் காணத் தொல்லையின் படியே அன்னாள் சொல்லிய கரிகள் மூன்றும் ஒல்லை வந்து இறுத்த கோயில் உத்தர குணபால் எல்லை. | 45 |
|
|
உரை
|
|
|
|
|
3301. | அன்ன போது இளையாள் மூத்தாள் கொண்டுபோய் ஆலவாய் எம் முன்னவன் திருமுன் தாழ்ந்து காட்டுவாள் முகில் தோய் சென்னி வன்னி ஈது இலிங்கம் ஈது கிணறு ஈது என்று மன்றல் சான்றாய்த் துன்னிய என்றாள் கண்டாள் முடித்தலை தூக்கி நின்றாள். | 46 |
|
|
உரை
|
|
|
|
|
3302. | அவ் இடைத் தருவும் நீரும் அன்றுபோல் இன்றும் சான்றாய் இவ்விடைப் பட்ட என்ன அதிசயம் எவர்க்கும் தேறாத் தெய்வமும் எளிவந்து அங்கைக் கனி இனித் திருவின் அன்னாள் கைவ் வசப் பட்டது என்றால் கற்பினுக்கு அரிதே அம்மா. | 47 |
|
|
உரை
|
|
|
|
|
3303. | மங்கை தன் கற்பும் ஈசன் இடத்து அவள் வைத்த அன்பும் அங்கணன் அவட்குச் செய்த அருளையும் வியந்து நோக்கி மங்கல நகரார் எல்லாம் மகிழ்ச்சியுள் ஆழ்ந்தார் முல்லைத் தொங்கலான் முது மணாட்டி ஒருத்தியும் துன்பத்து ஆழ்ந்தாள். | 48 |
|
|
உரை
|
|
|
|
|
3304. | மேதகு வணிகர் மூத்த வினைக் கொடியாளைப் பொல்லாப் பாதகி இவளாம் என்று பழித்தனர் படிறு பேசிக் கோது அறு குணத்தினாளைக் குடிப் பழுது உரைத்தாய் நீ என் காதலி ஆகாய் என்று கணவனும் தள்ளி விட்டான். | 49 |
|
|
உரை
|
|
|
|
|
3305. | அந்நிலை இளையாள் கேள்வன் அடியில் வீழ்ந்து இரப்பாள் ஐய என்னது கற்பை இன்று நிறுத்தினாள் இவண் மாற்றாளன் அன்னை இலாதேற்கு அன்னை ஆயினாள் இவளும் யானும் இன் உயிர் உடல் போல் வாழ்வோம் எனத் தழீத் தம்மின் நட்டார். | 50 |
|
|
உரை
|
|
|
|
|
3306. | உடம்பினால் இரண்டே அன்றி உயிர்ப் பொருள் இரண்டு அற்று உள்ளம் மடம் படு அழுக்காறு அற்று மைந்தரும் அனையர் ஆக விடம் படு மைவாய் நாகம் விழுங்கிரை ஒத்துத் தம்மில் இடம் படு அன்புற்று இன்புற்று இருவரும் இருந்தார் மன்னோ. | 51 |
|
|
உரை
|
|
|
|
|
3307. | அருந்ததி அனையாள் கேள்வற்கு ஆயுளும் ஆனாச் செல்வம் பெருந்தன நிறைவும் சீரும் ஒழுக்கமும் பீடும் பேறு அரும்தவ நெறியும் குன்றத் தருமமும் புகழும் பல்க இருந்தனள் கமலச் செல்வி என்ன வீற்று இருந்து மன்னோ. | 52 |
|
|
உரை
|
|
|
|
|
3308. | பொன் அவிர் கமலம் பூத்த பொய்கை சூழ் ஆலவாய் எம் முன்னவன் விளையாட்டு எல்லை கண்டு யார் மொழிய வல்லார் இன்னமும் அளவின்று என்ப எம் குரு நாத சாமி சொன்னவாறு உங்கட்கு எண் எண் காதையும் சொன்னேன் அம்ம. | 53 |
|
|
உரை
|
|
|
|
|
3309. | என்று தென் மலை மேல் இருந்த மாதவத் தோன் இன் அருள் குருபரன் தனையும் அன்று அவன் திருவாய் மலர்ந்த வாசகமும் அருள் கனிந்து ஒழுக உள்ளடக்கித் தென்தமிழ் ஆலவாய்த் தனிப் பதியைச் சென்னிமேல் பன்னிரண்டு உம்பர் ஒன்ற வைத்து இமையா அம் கயல் கண்ணி உடன் உறை ஒருவனை நினைந்தான். | 54 |
|
|
உரை
|
|
|
|
|
3310. | பரவசம் அடைந்து வழி கவர்ந்து உண்ணும் பழிப் புல வேடர் போய் ஒளிப்ப இருள் வெளி கடந்து திருவருள் வழிச் சென்று எண் இலாச் சரா சரம் அனைத்தும் புரை அற நிறைந்து காட்சி காண் பான் புதைபடத் தனித்த பூரணமாய் உரை உணர்வு இறந்த உண்மை ஆனந்த உணர்வினை உணர்வற உணர்ந்தான். | 55 |
|
|
உரை
|
|
|
|