முகப்பு |
கடவுள் வாழ்த்து
|
|
|
|
|
|
6.
|
திரு வந்த தொல்லைப் புவனத்தொடு தேவர் போற்றிப்
பெரு வந்தனை செய்து அறிதற்கு அரும் பெற்றி எய்தி
அரு வந்தனையும் உருவத்தையும் அன்றி நின்றான்
ஒருவன் தனது பதம் தன்னை உளத்துள் வைப்பாம். |
6
|
|
|
|
|
|
|
|
7.
|
ஊன் ஆகி ஊன் உள் உயிராய் உயிர் தோறும் ஆகி
வான் ஆதி ஆன பொருளாய் மதி ஆகி வெய்யோன்
தான் ஆகி ஆண் பெண் உருவாகிச் சராசரங்கள்
ஆனான் சிவன் மற்று அவன் நீள் கழற்கு அன்பு
செய்வாம். |
7
|
|
|
|
|
|
|
|
|
வேறு
|
|
8.
|
பிறப்பதும் இறப்பதும் பெயரும் செய்கையும்
மறப்பதும் நினைப்பதும் வடிவம் யாவையும்
துறப்பதும் இன்மையும் பிறவும் சூழ் கலாச்
சிறப்புடை அரன் அடி சென்னி சேர்த்துவாம். |
8
|
|
|
|
|
|
|
|
9.
| பூ மலர் மிசை வரு புனிதன் ஆதியோர் தாம் உணர்வு அரியது ஓர் தலைமை எய்தியே மா மறை முதற்கு ஒரு வடிவம் ஆகியோன் கா மரு செய்ய பூம் கழல்கள் போற்றுவாம். |
9
|
|
|
|
|
|
|
|
10.
| பங்கயன் முகுந்தன் ஆம் பரம் என்று உன்னியே தங்களில் இருவரும் சமர் செய்து உற்று உழி அங்கு அவர் வெருவர அங்கியாய் எழும் புங்கவன் மலர் அடி போற்றி செய்குவாம். |
10
|
|
|
|
|
|
|
|
11.
| காண்பவன் முதலிய திறமும் காட்டுவான் மாண்பு உடை யோனுமாய் வலிகொள் வான் தொடர் பூண்பதின் றாய் நயம் புணர்க்கும் புங்கவன் சேண் பொலி திரு நடச் செயலை ஏத்துவாம். |
11
|
|
|
|
|
|
|
|
|
சிவசத்தி |
|
12.
|
செறிதரும் உயிர் தொறும் திகழ்ந்து மன்னிய
மறு அறும் அரன் இடம் மரபின் மேவியே
அறுவகை நெறிகளும் பிறவும் ஆக்கிய
இறைவி தன் மலர் அடி இறைஞ்சி ஏத்துவாம். |
12
|
|
|
|
|
|
|
|
|
விநாயகக்
கடவுள் |
|
13.
|
மண் உலகத்தினில் பிறவி மாசு அற
எண்ணிய பொருள் எலாம் எளிதின் முற்று உறக்
கண்ணுதல் உடையது ஓர் களிற்று மா முகப்
பண்ணவன் மலர் அடி பணிந்து போற்றுவாம். |
13
|
|
|
|
|
|
|
|
|
வைரவக்கடவுள் |
|
14.
|
பரமனை மதித்திடாப் பங்கய ஆசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டம் முன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம். |
14
|
|
|
|
|
|
|
|
15.
| வெம் சினப் பரி அழன் மீது போர்த்திடும் அஞ்சனப் புகை என வாலமாம் எனச் செம்சுடர்ப் படிவ மேல் செறித்த மா மணிக் கஞ்சுகக் கடவுள் பொன் கழல்கள் ஏத்துவாம். |
15
|
|
|
|
|
|
|
|
|
|
|
16.
|
அடைந்து அவி உண்டு இடும் அமரர் யாவரும்
முடிந்திட வெருவியே முனிவர் வேதியர்
உடைந்திட மா மகம் ஒடியத் தக்கனைத்
தடிந்திடும் சேவகன் சரணம் போற்றுவாம். |
16
|
|
|
|
|
|
|
|
|
|
|
17.
|
இருப்பர் அங்கு உறைத்திடும் எஃகம் வேல் உடைப்
பொருப்பர் அங்கு உணர்வு உறப் புதல்வி தன்மிசை
இருப்பர் அங்கு அமர் இடை விளங்கக் காட்டிய
திருப்பரம் குன்று அமர் சேயைப் போற்றுவாம். |
17
|
|
|
|
|
|
|
|
18.
| சூர் அலை வாயிடைத் தொலைத்து மார்பு கீண்டு ஈரலை வாய் இடும் எஃகம் ஏந்தியே வேர் அலைவாய் தரு வெள்ளி வெற்பு ஒரீஇச் சீர் அலைவாய் வரு சேயைப் போற்றுவாம். |
18
|
|
|
|
|
|
|
|
19.
| காவினன் குடில் உறு காமர் பொன் நகர் மேவினன் குடிவர் விளியச் சூர் முதல் பூவினன் குடிலை அம் பொருட்கு மால் உற ஆவினன் குடி வரும் அமலர் போற்றுவாம். |
19
|
|
|
|
|
|
|
|
20.
| நீரகத்தே தனை நினையும் அன்பினோர் பேர் அகத்து அலமரும் பிறவி நீத்திடும் தாரகத்து உருவமாம் தலைமை எய்திய ஏரகத்து அறுமுகன் அடிகள் ஏத்துவாம். |
20
|
|
|
|
|
|
|
|
21.
| ஒன்றும் தொறு ஆடலை ஒருவி ஆவிமெய் துன்று தொறு ஆடலை தொடங்கி ஐவகை மன்று தொறு ஆடிய வள்ளல் காமுறக் குன்று தொறு ஆடிய குமரன் போற்றுவாம். |
21
|
|
|
|
|
|
|
|
22.
| எழ முதிரைப் புனத்து இறைவி முன்பு தன் கிழ முதிர் இள நலம் கிடைப்ப முன்னவன் மழ முதிர் களிறு என வருதல் வேண்டிய பழ முதிர் சோலை அம் பகவன் போற்றுவாம். |
22
|
|
|
|
|
|
|
|
23.
| ஈறு சேர் பொழுதினும் இறுதி இன்றியே மாறு இலாது இருந்திடும் வளம் கொள் காஞ்சியில் கூறு சீர் புனை தரு குமரக் கோட்டம் வாழ் ஆறு மா முகப் பிரான் அடிகள் போற்றுவாம். |
23
|
|
|
|
|
|
|
|
|
திருநந்திதேவர்
|
|
24.
|
ஐ இரு புராண நூல் அலமற்கு ஓதியும்
செய்ய பன் மறைகளும் தெரிந்து மாயை யான்
மெய் அறு சூள் புகல் வியாதன் ஈட்டிய
கை அடு நந்திதன் கழல்கள் போற்றுவாம். |
24
|
|
|
|
|
|
|
|
|
திருஞான
சம்பந்த மூர்த்தி சுவாமிகள் |
|
25.
|
பண்டை வல் வினையினால் பாய் உடுத்து உழல்
குண்டரை வென்று முன் கூடல் வைகியே
வெண் திரு நீற்று ஒளி விளங்கச் செய்திடும்
தண் தமிழ் விரகன் மெய்த்தாள்கள் போற்றுவாம். |
25
|
|
|
|
|
|
|
|
|
திருநாவுக்கரசு
சுவாமிகள்
|
|
26.
|
பொய் உரை நூல் சில புகலும் தீ யமண்
கையர்கள் பிணித்து முன் கடல் அகத்து இடு
வெய்ய கல் தோணியாய் மிதப்ப மேல் படு
துய்ய சொல் அரசர் தாள் தொழுது போற்றுவாம். |
26
|
|
|
|
|
|
|
|
|
சுந்தரமூர்த்தி
சுவாமிகள் |
|
27.
|
வறந்திடு பொய்கை முன் நிரம்ப மற்று அவண்
உறைந்திடும் முதலை வந்து உதிப்ப வன்னதால்
இறந்திடும் மகன் வளர்ந்து எய்தப் பாடல் ஒன்று
அறைந்திடும் சுந்தரன் அடிகள் போற்றுவாம். |
27
|
|
|
|
|
|
|
|
|
மாணிக்க
வாசக சுவாமிகள் |
|
28.
|
கந்தம் ஒடு உயிர் படும் கண பங்கம் எனச்
சிந்தை கொள் சாக்கியர் தியங்க மூகராய்
முந்து ஒரு மூகையை மொழிவித்து எந்தைபால்
வந்திடும் அடிகளை வணக்கம் செய்குவாம். |
28
|
|
|
|
|
|
|
|
|
திருத்
தொண்டர்கள்
|
|
29.
|
அண்டரும் நான்முகத்து அயனும் யாவரும்
கண்டிட அரியது ஓர் காட்சிக் கண்ணவாய்
எண் தகு சிவன் அடி எய்தி வாழ் திருத்
தொண்டர் தம் பதமலர் தொழுது போற்றுவாம். |
29
|
|
|
|
|
|
|
|
|
சரசுவதி |
|
30.
|
தா வறும் உலகு எலாம் தந்த நான் முகத்
தேவு தன் துணைவியாய்ச் செறிந்த பல்லுயிர்
நாவு தொறும் இருந்திடும் நலம் கொள் வாணிதன்
பூ அடி முடி மிசை புனைந்து போற்றுவாம். |
30
|
|
|
|
|
|
|