முகப்பு |
திருவவதாரப் படலம்
|
|
|
851.
|
பற்
பகல் இனையவாற்றால் படர்தலும் பின்னோர் வைகல்
முற்படும் அயன்மால் வேள்வி முதலவன் திசை காப்பாளர்
சொற் படு முனிவர் வானோர் யாவரும் தொல்லை மேரு
வெற்பினில் குழுமிச் சூரால் மிக மெலிந்து இரங்கிச் சொல்வார்.
|
1 |
|
|
|
|
|
|
|
852.
|
உலகினை அவுணர்க்கு ஈந்தே யோகிபோல் வைகி
நம்பால்
மெலிவினைப் படுத்தி யாம் போய் வேண்டலும் இரக்கம் எய்தி
மலை மகள் தன்னை வேட்டான் மைந்தனைத் தந்து நம்மைத்
தலை அளி புரியான் வாளா இருப்பது என் தாணு வானோன்.
|
2 |
|
|
|
|
|
|
|
853.
|
இவறலும் மிகலும் இன்றி யார்க்கும் ஓர் பெற்றித்தாகி
அவர் அவர் வினைகள் நாடி அதற்படு பொருளை
நல்கும்
சிவனை யாம் வெறுத்தல் குற்றம் சிறந்த நோன்பு இயற்றிடாதே
தவறு செய்தனம் என்று எம்மை நோவதே தக்கது
என்றார். |
3 |
|
|
|
|
|
|
|
854.
|
ஆயினும் அவன் தாள் போற்றி அடையின் நன்கு அனைத்தும்
ஆகும்
தீயன அகலும் ஈது திண்ணம் ஆம் அதனால் இன்னும்
காய் கதிர் மதி சூழ் கின்ற கயிலை அம்கிரியின் முக்கண்
நாயகற்கு இதனைக் கூற நாம் எலாம் போதும் என்றார். |
4 |
|
|
|
|
|
|
|
855.
|
போதர இசைந்த காலைப் பொன் அலர் கமலப் புத்தேள்
மேதகு பரமன் செய்கை வினவியே ஏகல் வேண்டும்
தூதுவன் ஒருவன் தன்னைத் தூண்டி முன் அறிதும்
என்றே
ஊதை அம் கடவுள் தன்னை நோக்கி ஈது உரைக்கல் உற்றான்.
|
5 |
|
|
|
|
|
|
|
856.
|
வடவரை அதனில் மூன்று மாண் குவடு எறிந்து வௌவி
உடல் சின வரவம் உட்க உததியில் உய்த்த மைந்த
படர்மதி மிலைச்சும் சென்னிப் பண்ணவன் செயலை வெள்ளிக்
கடிவரை நகரத்து எய்திக் கண்டனை மீடி என்றான். |
6 |
|
|
|
|
|
|
|
857.
| பல் இதழ் வனச மேலோன் இனையன பகர நோன்றாள் வில்லுடை மதன வேளை விழித்து அடு கடவுள் முன்னம் செல்லுவது அரிது செல்லில் தீமையே பயக்கும் என்பால் ஒல்லுவது அன்றிச் செய்கை உள்ளமும் வெருவும் என்றான். |
7 |
|
|
|
|
|
|
|
858.
|
கூற்று இது நிகழ்ந்த வேலைக் கோகனதத்து மேலோன்
காற்றினுக்கு அரசை நோக்கிக் கம்பலைக் கொள்ளேல் யாண்டும்
ஊற்றமொடு உலவல் செய்யும் ஒருவனை நீயே அன்றி
வீற்றொரு தேவர் உண்டோ மேல் இது புரிதற் பாலோர். |
8 |
|
|
|
|
|
|
|
859.
| உற்றுழி உதவி செய்வோர் உலப்புறாது எவையும் ஈவோர் அற்றமில் தவத்தாறு உற்றோர் அமர்புரி வீரர் ஆவோர் மற்றொரு பொருளும் வெஃகார் வருத்தமும் ஓரார் ஆவி இற்றிட வரினும் எண்ணார் இனிதென மகிழ்வர் அன்றே. |
9 |
|
|
|
|
|
|
|
860.
|
ஆதலின் எங்கட் கெல்லாம் ஆற்றிடும் உதவிக்காகப்
போதியால் ஐய என்று புகழ்ச்சியால் இனைய பல்வேறு
ஏதிடு பொருண்மை கூற இசைந்தனன் எழுந்து தீயின்
காதலன் விடை கொண்டு ஏகிக் கயிலை மால் வரையில் சென்றான்.
|
10 |
|
|
|
|
|
|
|
861.
|
குன்றதன் புடையில் வீழும் குரை புனல் ஆற்றின் ஆடி
மன்றல் அம் காமர் காவின் மலர் மணம் அளாவி
வாரித்து
என்றியாய் அசைந்து மெல்லச் சினகரம் புகுதும் எல்லை
நின்ற தோர் நந்தி காணூ உரப்பினன் நெடிது சீறி. |
11 |
|
|
|
|
|
|
|
862.
|
பொன் பிரம்பு ஒன்று பற்றிப் பொலன் முதல் கடையைப் போற்றி
நிற்புறும் ஆணை வள்ளல் நெடும் சினத் துரப்ப லோடும்
கல் பொழி எழிலி கான்ற கனை ஒலி கேட்ட பாம்பின்
முற்படர் கின்ற காலோன் மொய்ம்பிலன் வெருவி வீழ்ந்தான்.
|
12 |
|
|
|
|
|
|
|
863.
| ஒல் என வீழ்வுறும் உயிர்ப்பின் காவலன் எல்லையில் அச்சமொடு இரங்கியே எழீ இத் தொல்லையின் உருக்கொடு தோன்றி நந்திதன் மல்லல் அம் கழல்களை வணங்கிக் கூறுவான். |
13 |
|
|
|
|
|
|
|
864.
| மால் அயன் மகபதி வான் உளோர் எலாம் ஆல் அமர் கடவுளை அடைதல் முன்னி நீ காலை அது அறிந்தனை கடிது கெல்கென மேல் உரை செய்தனர் வினையினேன் உடன். |
14 |
|
|
|
|
|
|
|
865.
| கறுத்திடும் மிடறு உடைக் கடவுள் ஆடலைக் குறிக்கரிது அஞ்சுவல் குறுக என்றியான் மறுத்தனன் அனையர்தம் வருத்தம் கூறியே ஒறுத்தெனை விடுத்தனர் உடைய வன்மையால். |
15 |
|
|
|
|
|
|
|
866.
| ஆதலின் அடியனேன் அஞ்சி அஞ்சியே மேதகு தென்றியாய் மெல்ல வந்தனன் ஓதிட நினைந்திலன் உனக்கு மற்று இது பேதைமை உணர்வினேன் பிழை பொறுத்தி நீ. |
16 |
|
|
|
|
|
|
|
867.
| தானவர் தொழ வரு தகையில் சூரனால் மானமது ஒருவியே வருத்துற்று ஓய்ந்தனன் ஆனது ஒன்று உணர்கிலேன் அறிவு மாழ்கினேன் ஏனைய தேவரும் இனைய நீரரே. |
17 |
|
|
|
|
|
|
|
868.
| அறை தரு கணத்து அருளாதி ஆகிய இறைவ நின் முனிவினுக்கு இலக்கு உற்றார் இலை சிறிய என் பொருட்டினால் சீற்றம் கோடியோ பொறை புரிந்து அருள் எனப் போற்றி வேண்டினான். |
18 |
|
|
|
|
|
|
|
869.
| ஆண்டகை நந்தி எம் அடிகள் அவ்வழி மூண்டு எழு தன் பெரு முனிவு தீர்ந்தியாம் ஈண்டு நின் உயிர் தனை ஈதும் நிற்கலை மீண்டனை போகென விடை தந்து ஏவினான். |
19 |
|
|
|
|
|
|
|
870.
|
சீரிய
நந்தி அம் தேவன் ஏவலும்
மாருதன் அவன் அடி வணங்கி வல்லையின் நேர் அறு கயிலையின் நீங்கி நீடுபொன் மேருவில் விண்ணவர் குழுவை மேவினான். |
20 |
|
|
|
|
|
|
|
871.
| மேவரு காலினான் விரிஞ்சன் மாயவன் பூவடி வந்தனை புரிந்து நந்திதன் காவலின் வன்மையும் நிகழ்ந்த காரியம் யாவதும் முறைபட இயம்பினான் அரோ. |
21 |
|
|
|
|
|
|
|
872.
| காற்று உரை வினவியே கமலக் கண்ணனும் நால்திசை முகத்தனும் நாகர் செம்மலும் சாற்றரும் துன்பினர் தம்மில் ஓர்ந்திடாத் தேற்ற மொடு இனையன செப்பல் மேயினார். |
22 |
|
|
|
|
|
|
|
873.
| எந்தை தன் செய்கை தேர்ந்து ஏகு நீ என வெந் திறல் மருத்தினை விடுத்தும் ஆங்கு அவன் நந்தி தன் ஆணையால் நடுக்கம் உற்று இவண் வந்தனன் அச்சுறு மனத்தன் ஆகியே. |
23 |
|
|
|
|
|
|
|
874.
| மன்னிய கயிலை மால் வரையின் யாமெலாம் இன் இனி யேகியே ஈசன் தன் முனம் உன்னரும் காலம் மொடு உற்ற நம் குறை பன்னுதல் துணிபு எனப் பலரும் கூறினர். |
24 |
|
|
|
|
|
|
|
875.
| இவ்வகை அவர் எலாம் இசைந்து செம் பொனின் மெய் வரை நீங்கியே வெள்ளி வெற்பினில் தெய்வதக் கோயின் முன் சென்று நந்தியை அவ்விடை தொழுது இவை அறைதல் மேயினார். |
25 |
|
|
|
|
|
|
|
876.
| நந்தி அம் தேவுகேள் நங்கள் பால் துன்பெலாம் சிந்தை செய்திடுதி அத் தேவ தேவற்கு யாம் வந்தவாறு ஓதியே வல்லை நீ எமை அவன் முந்துறக் காட்டு எனா முகமனோடு உரை செய்தார். |
26 |
|
|
|
|
|
|
|
877.
| மற்று இவாறு உரை செயும் வானவத் தொகையினை நிற்றிரால் என்று அவண் நிறுவியே உறையுள்போய்ச் கற்றைவார் சடைமுடிக் கண்ணுதல் கடவுள் தன் பொற்தடந் தாள்களைத் தொழுதனன் புகலுவான். |
27 |
|
|
|
|
|
|
|
878.
| அண்ணலே உனது பொன் அடிகளைக் காணிய விண் உளோர் யாவரும் வேந்தன் மால் அயனொடு நண்ணினார் என்றலும் நந்தியைத் தெரிகுறீஇத் தண்ணிலா வேணியான் தருதி என்று அருள் செய்தான். |
28 |
|
|
|
|
|
|
|
879.
| அருள் புரிந்து இடுதலும் ஆதி அம் பண்ணவன் திருமலர்த் தாள்களைச் சென்னியில் சூடியே விரைவுடன் மீண்டு உறா வேதன் மால் ஆதி ஆம் சுரர் எலாம் வம் எனத் தூயவன் கூவினான். |
29 |
|
|
|
|
|
|
|
880.
| கூவியே அருடலுங் கொண்டல் பேர் ஒலியினால் தா விலா மகிழ் உறும் சாதகத் தன்மை ஆய்ப் பூவின் நாயகன் முதல் புகலும் வானவர் எலாம் தேவ தேவன் முனம் செல்லுதல் மேயினார். |
30 |
|
|
|
|
|
|
|
881.
|
அம்மையோர்
பாங்கு உற அரி அணைக் கண் உறும்
எம்மை ஆள் இறைவன் முன் எய்தியே ஆங்கு அவன் செம்மை சேர் தாள்களைச் சென்னியால் தாழ்ந்து எழீஇப் பொய்ம்மைதீர் அன்பினால் இனையவா போற்றுவார். |
31 |
|
|
|
|
|
|
|
882.
|
நோக்கினும் நுழை கிலை நுவலு கின்றது ஓர்
வாக்கினும் அமைகிலை மதிப்ப ஒண்கிலை நீக்கரும் நிலைமையின் நிற்றி எந்தை நீ ஆக்கிய மாயம் ஈது அறிகிலோம் அரோ. |
32 |
|
|
|
|
|
|
|
883.
| இருமையும் ஒருமையும் இரண்டும் ஒன்றிய ஒருமையும் அன்று என உலகம் யாவையும் பெருமையின் இயற்றிய பெரும நின் செயல் அருமறை ஆனவும் அறிதற் பாலவோ. |
33 |
|
|
|
|
|
|
|
884.
| உருவொடு தொழில் பெயர் ஒன்றும் இன்றியே பரவிய நீ அவை பரித்து நிற்பது விரவிய உயிர்க் கெலாம் வீடு தந்திடும் கருணை யதே அலால் கருமம் ஆவதே. |
34 |
|
|
|
|
|
|
|
885.
| அவ்வுயிர் யாவும் நின் அருள் இலா வழிச் செய்வினை புரிகில சிறிதும் ஆதலால் வெவ்விய நயப்பொடு வெறுப்பிலாத நீ எவ்வகையோ உலகு இயற்றும் தன்மையே. |
35 |
|
|
|
|
|
|
|
886.
|
முன்னதின் முன் என மொழிதுமே எனில்
பின்னதின் பின்னுமாப் பேச நிற்றியால் அன்னவையே எனில் ஒழிந்தது அல்லையோ என் என நினையாம் ஏத்துகின்றதே. |
36 |
|
|
|
|
|
|
|
887.
| புல்லிய புரம் பொடித்ததுவும் காமனை ஒல் என எரித்தும் உனக்குச் சீர்த்தியோ எல்லையில் விதி முதல் எனைத்தும் ஈண்டு நின் நல்லருள் ஆணையே நடாத்தும் என்கையால். |
37 |
|
|
|
|
|
|
|
888.
| எங்களை முன்னரே இயல்பின் ஈந்தனை எங்களை இவ்வரசு இயற்று வித்தனை எங்களொடு ஒருவன் என்று இருத்தி நின் செயல் எங்களின் அறிவரிது என்று போற்றினார். |
38 |
|
|
|
|
|
|
|
889.
|
அவ்வகை அமரர் எல்லாம் அன்பு செய்து ஏத்தும்
எல்லை
மைவரு மிடற்றுப் புத்தேள் மற்றவர் வதன நோக்கி
நொவ்வுறல் எய்திச் சிந்தை நுணங்கினீர் நுங்கட்கு
இன்னே
எவ்வரம் எனினும் ஈதும் வேண்டியது இசைத்திர்
என்றான். |
39 |
|
|
|
|
|
|
|
890.
|
என்றலும் அமரர் சொல்வார் யாம் எலாம் இந்நாள் காறும்
வன்திறல் அவுணர் தம்மால் வருந்தினம் அதனை நீங்கி
நன்றி கொள் தொல்லை ஆக்கம் நண்ணுவான் ஆக நின்பால்
ஒன்று ஒரு வரம் வேண்டு உற்றாம் அதன் இயல்பு உரைத்தும்
அன்றே. |
40 |
|
|
|
|
|
|
|
891.
|
மும்மையின் உயிர்கள் பெற்ற முகிழ்முலைக் கன்னி
ஆகும்
அம்மையை மணந்த தன்மை ஆங்கு அவள் இடமா
ஈங்கு
ஓர்
செம்மலை அளித்தற்கன்றே தீவினைக் கடற்பட்டு உள்ள
எம்மை ஆளுவதற்கு ஏதுக் காட்டிய இயற்கை அல்லால். |
41 |
|
|
|
|
|
|
|
892.
|
ஆதியும்
நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி வேதமும் கடந்து நின்ற விமல ஓர் குமரன் தன்னை நீ தரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார். |
42 |
|
|
|
|
|
|
|
893.
|
வந்திக்கு மலரோன் ஆதி வானவர் உரைத்தல் கேளாப்
புந்திக்குள் இடர் செய்யற்க புதல்வனைத் தருதும் என்னா
அந்திக்கு நிகர் மெய் அண்ணல் அருள் புரிந்து அறிஞர் ஆயோர்
சிந்திக்கும் தனது தொல்லைத் திருமுகம் ஆறும் கொண்டான்.
|
43 |
|
|
|
|
|
|
|
894.
|
நிற்புறும் அமரர் யாரும் நெஞ்சுதுண் என்ன நீடும்
அற்புத நீரர் ஆகி அருள் முறை உன்னிப் போற்றச்
சிற்பரன் தான் கொண்டு உள்ள திருமுகம் ஆறு தன்னில்
பொற்புறு நுதல் கண்டோறும் புலிங்கம் ஒன்று ஒன்று தந்தான்.
|
44 |
|
|
|
|
|
|
|
895.
|
ஆவது ஓர் காலை ஈசன் அறுமுக நுதல்கண் மாட்டே
மூவிரு பொறிகள் தோன்றி முளரியான் முதலா உள்ளோர்
ஏவரும் அணுகல் செல்லா எல்லை நீர் வெம்மைத்து
ஆகிப்
பூவுலக அண்டம் முற்றும் பொள்ளெனப் பராய வன்றே. |
45 |
|
|
|
|
|
|
|
896.
|
மாதண்டம் குலவு நேமி வால்வளை வயிர வொள்வாள்
கோதண்டம் பரித்தோன் வேதாக் குறித்து உணர் அரிய சோதி
வேதண்டம் பரவிற்று என்ன மேதினி சூழ்ந்து விண்
போய்
மூதண்டம் காறும் சென்ற முதல்வன் கண் நுதலில்
செந்தீ. |
46 |
|
|
|
|
|
|
|
897.
| மங்கையோர் பாங்கு உடை வள்ளல் ஏந்திய செங் கனல் ஊழியில் செறிவது ஆம் என அங்கு அவன் விழி பொழி அனலம் யாவையும் எங்கு உள உலகமும் ஈண்டல் உற்றவே. |
47 |
|
|
|
|
|
|
|
898.
| ஆங்கனம் தழல் எழ அகிலம் முற்றும் ஆய் ஓங்கிய கால்களும் உலை உற்று ஓய்ந்தன வாங்கிய திரைக்கடல் வறந்தது ஆயிடைத் தீங்கனல் வடவையும் செருக்கு நீங்கிற்றால். |
48 |
|
|
|
|
|
|
|
899.
| பக்கன பாரகம் பதலை முற்றுற நெக்கன பணிகள் மெய் நெளித்து நீங்கிய திக்கயம் அரற்றியே தியக்கம் உற்றன தொக்கன உயிர்த்தொகை துளக்கம் உற்றவே. |
49 |
|
|
|
|
|
|
|
900.
| காரணம் இல்லவன் கண்ணில் கான்றதீப் பேர் அருள் புரிந்திடப் பிறந்த பான்மையால் ஓர் உயிர் தன்னையும் ஒழிவு செய்தில ஆரையும் எவற்றையும் அச்சம் செய்தவே. |
50 |
|
|
|
|
|
|
|
901.
| அன்னதன் வெம்மை கண்டு அமலன் பாங்கு உறை கன்னியும் வியர்த்தனள் கலங்கியே யெழீஇப் பொன்னடி நூபுரம் புலம்பித் தாக்குறத் தன்னது ஓர் உறையுளைச் சார ஓடினாள். |
51 |
|
|
|
|
|
|
|
902.
| முன்டகன் ஆதியா முன்னர் நின்று உள அண்டர்கள் யாரும் அவ் அழல் கண்டு அஞ்சியே விண்டனர் தலைத் தலை வெருவி ஓடினார் பண்டு எழு விடத்தினால் பட்ட பான்மை போல். |
52 |
|
|
|
|
|
|
|
903.
|
தீங்கனல்
அடர்தலும் செம் பொன் கோயிலின்
யாங்கணும் ஆகியே ரிந்த பண்ணவர் வீங்கிய உயிர்ப்பொடு மீண்டும் எந்தை தன் பாங்கரில் வந்தனர் பரியும் நெஞ்சினார். |
53 |
|
|
|
|
|
|
|
904.
| வலைத் தலை மான் என வன்னி சூழ்ந்துழித் தலைத் தலை இரிந்து உளோர் தம்மின் மீள்குறா நலத்தகு கண்ணுதல் நாதற் சேர்ந்தனர் கலத்தலை அகன்றிடாக் காகம் போலவே. |
54 |
|
|
|
|
|
|
|
905.
| தோற்றிய நுதல்விழிச் சுடரின் சூழ்வினுக்கு ஆற்றலர் ஆகியே அடைந்த வானவர் நால் தடம் புயம் உடை ஞான நாயகர் போற்றி செய்து இனையன புகல்வது ஆயினார். |
55 |
|
|
|
|
|
|
|
906.
| வெம் திறல் அவுணரை வீட்டுதற்கு ஒரு மைந்தனை அருள்க என வந்து வேண்டினேம் அந்தம் இல் அழலை நீ அருடல் செய்தனை எந்தையே எங்ஙனம் யாங்கள் உய்வதே. |
56 |
|
|
|
|
|
|
|
907.
| பங்கு உறை உமையவள் பாணியின் வரு கங்கை எவ்வுலகமும் கலந்ததாம் என இங்கு நின்நுதல் விழி இருந்து நீங்கிய பொங்கு அழல் எங்கணும் பொள் என்று ஈண்டிய. |
57 |
|
|
|
|
|
|
|
908.
| கற்றை அம் சுடர்பொழி கனல் களின் தொகை சுற்றி எவ்வுலகமும் துவன்றல் உற்றவால் மற்றொரு கணத்தவை மாற்றிடாய் எனின் முற்று உயிர்த் தொகையையும் முடிவு செய்யும் ஆல். |
58 |
|
|
|
|
|
|
|
909.
| விஞ்சிய பேரழல் வெம்மை ஆற்றலா தம் சினம் இரிந்த யாம் ஐய நின் இரு செம் சரண் அடைந்தனம் தெரியின் நீ அலால் தஞ்சம் உளது கொல் எம்மைத் தாங்கவே. |
59 |
|
|
|
|
|
|
|
910.
| மலக்குறு மனத்தினேம் வருத்த முற்றவும் உலக்குற நீக்கு நீ ஒல்லை எம்மிடை அலக்கண இயற்றுதி யாயின் அன்னதை விலக்குறு நீரினார் வேறி யாவரே. |
60 |
|
|
|
|
|
|
|
911.
| நிறைமுடிப் பணிமிசை நிலனும் வானமும் இறை முடிக் கின்ற இவ் எரியை நீக்கியே பிறை முடிக் கொண்டிடு பெரும எம்முடைக் குறை முடித்து அருள் எனக் கூறி வேண்டினார். |
61 |
|
|
|
|
|
|
|
912.
| அஞ்சலின் அவர் புகழ் அண்ணல் ஆதியோர் அஞ்சலி செய்து இவை அறைந்து வேண்டலும் அஞலில் அம் சடை அணிந்த நாயகன் அஞ்சலிர் என்று கை அமைத்துக் கூறினான். |
62 |
|
|
|
|
|
|
|
913.
| பொன் மலை வில்லினான் புதிதின் வந்திடு தன் முகம் ஐந்தையும் கரந்து தாவில் சீர் நன் முகம் ஒன்றொடு நண்ணி அத்துணைத் தொன்மையின் இயற்கையாய்த் தோன்றி வைகினான். |
63 |
|
|
|
|
|
|
|
914.
|
தன்
அருள் நிலைமையால் சண்முகத்து இடை
நல்நுதல் விழிகளின் நல்கு தீப்பொறி இந் நில வரைப்பு வான் ஈண்டல் உற்றவை முன் உற வரும் வகை முதல்வன் முன்னினான். |
64 |
|
|
|
|
|
|
|
915.
| அந்தியம் பெருநிறத்து அமலன் அவ்வகை சிந்தை கொண்டு இடுவழிச் செறிந்த பேர் அழகன் முந்தையின் வெம் பொறிமூ இரண்டவாய் வந்து முன் குறுகலும் மகிழ்ந்து நோக்கினான். |
65 |
|
|
|
|
|
|
|
916.
| ஆதகு காலையில் அமரர் தங்களுள் ஓதகு செயல் இலா உலவைத் தேவையும் மூதகு தீயையும் முகத்தையும் நோக்கு உறா மேதகு கருணையால் விமலன் கூறுவான். |
66 |
|
|
|
|
|
|
|
917.
| நீங்கள் இச்சுடர்களை நெறியில் தாங்கியே வீங்கு நீர்க் கங்கையில் விடுத்திர் அன்னவை ஆங்கு அவள் சரவணம் அமர உய்க்குமால் ஈங்கு இது நும் பணி என்று இயம்பினான். |
67 |
|
|
|
|
|
|
|
918.
| கூற்று உயிர் உண்ட தாள் குழகன் இவ்வகை சாற்றியது உணர்தலும் தாழ்ந்து மும்முறை போற்றினர் நடுங்கினர் புலம்பு நெஞ்சினர் காற்றொடு கனல் இவை கழறல் மேயினார். |
68 |
|
|
|
|
|
|
|
919.
| ஒரு நொடி அளவையின் உலகம் யாவுமாய்ப் பெருகிய இத்தழல் பெரும நின்னுடைத் திருவருள் நிலைமையால் சிறுகிற்று ஆதலால் அரிது அரிது அடியரேம் ஆற்றல் ஆகுமோ. |
69 |
|
|
|
|
|
|
|
920.
| ஈற்றினை உலகினுக்கு இழைக்கு நின்கணே தோற்றிய கனலினைச் சுமத்தற்கு ஓர் கணம் ஆற்றலை உடையரோ அவனி கேள்வனும் நால் திசை முகம் உடை நளினத் தேவுமே. |
70 |
|
|
|
|
|
|
|
921.
| பண்டு எழு விடத்தினில் பரந்த தீச்சுடர் கண்டலும் நின்றில் அம் கவல் உற்று ஓடினம் அண்டவும் வெருவுதும் அவற்றை யாந்தலைக் கொண்டனம் ஏகுதல் கூடல் பாலதோ. |
71 |
|
|
|
|
|
|
|
922.
| அப்பெரும் கனலினை அடைதற்கு உன்னினும் வெப்பு உறும் எமது உளம் வியர்க்கும் யாக்கையும் எப்பரிசு ஏந்துவம் யாங்கள் என்றலும் துப்பு உறழ் படர் சடைப் பகவன் சொல்லுவான். |
72 |
|
|
|
|
|
|
|
923.
| ஒன்று ஒரு நொடியினின் உலகம் முற்றும் ஆய்த் துன்றிய இச்சுடர் சுமந்து கங்கையில் சென்றிட நுங்கள் பால் திண்மை எய்துக என்றலும் நன்று என இசைந்து போற்றினார். |
73 |
|
|
|
|
|
|
|
924.
| மற்று அது தெரிதலும் மால் அயன் முதல் சொற்றிடும் அமரர்கள் துளக்கம் நீங்கு உறா இற்றது கொல் எமது இன்னல் இன்றெனா உற்றனர் உவகையை உடலம் விம்மினார். |
74 |
|
|
|
|
|
|
|
925.
|
ஆங்ஙனம்
அவர் தமை ஆதி நோக்கி இத்
தீங் கனல் சரவணம் செறிந்து ஒர் செம்மலாய் ஓங்குபு சூர் கிளைக்கு ஒழிவு செய்யும் ஆல் ஈங்கு இனி யாவரும் ஏகுவீர் என்றான். |
75 |
|
|
|
|
|
|
|
926.
| இறையவன் இனையன இயம்ப உய்ந்தனம் குறையிலம் இனி எனக் கூறி கஞ்சம் மேல் உறைபவன் ஆதி ஆம் உம்பர் அன்னவன் அறை கழல் அடி தொழுது அங்கண் நீங்கினார். |
76 |
|
|
|
|
|
|
|
927.
| முன் உற மாருதன் முதல்வன் தாள் களை வன்னி அம் தேவொடு வணங்கியே எழீஇ அன்னவன் அருளினால் சுடர்கள் ஆறையும் சென்னியின் மேல் கொடு சேறல் மேயினான். |
77 |
|
|
|
|
|
|
|
928.
| அரன் உறு கடி நகர் அதனைத் தீர்ந்து ஒராய் எரி கெழு சுடர் முடி ஏந்தி மாருதன் வருதலும் அயன்முதல் வான் உளோர் எலாம் கருதரு மகிழ்வொடு கண்டு கூறுவார். |
78 |
|
|
|
|
|
|
|
929.
| செம்தழல் மேனியன் தீயின் வண்ணமாத் தந்தனன் குமரனைத் தனாது கண்ணினால் உய்ந்திடயாம் எலாம் உலகின் முன்னரே வந்திடும் வீரனாம் மதலை மானவே. |
79 |
|
|
|
|
|
|
|
930.
| தொன் னிலை ஆம் பெறச் சூரன் பாடு உற இன்னமும் சில் பகல் இருத்தலால் அரன் தன் னிகர் திருமகன் சரவணத்து இடை மன்னுபு குழவியாய் வளர நல்கினான். |
80 |
|
|
|
|
|
|
|
931.
| போற்றலர் புரம் அடு புனித நாயகன் ஆற்றிடு செய்கைகள் அருளின் நீர்மையால் ஏற்றது ஓர் சான்று இவண் எரியைத் தந்ததும் சாற்ற அரும் கருணையில் தலைமை ஆனதே. |
81 |
|
|
|
|
|
|
|
932.
| என்று இவை பற்பல இயம்பி இன்னினிப் பொன்றினர் அவுணர்கள் புலம்பு நம்குறை நன்று இவண் முடிந்தது நாமும் அத்தடம் சென்றிடு வாம் எனச் செப்பினார் அரோ. |
82 |
|
|
|
|
|
|
|
933.
| உருப்பம் அதாகிய ஒளிறு தீம் சுடர் தரிப்பது ஓர் மருத்துவன் தம்முன் சென்றிடத் திருப்பயில் மான் முதல் தேவர் வெள்ளி அம் பருப்பதம் ஒருவியே படர்தல் மேயினார். |
83 |
|
|
|
|
|
|
|
934.
| இறத்தலும் கன்னல் ஒன்று எரியின் தீம் சுடர் பொறுத்திடல் அரிது எனப் புலம்பிக் காலினோன் மறுத்தவிர் பிறை முடி வரதன் ஆணையால் திறல் படு வன்னிதன் சென்னி சேர்த்தினான். |
84 |
|
|
|
|
|
|
|
935.
| சேர்த்தலும் ஒரு பதம் தீயின் பண்ணவன் வேர்த்துடல் புழுங்குற மெலிவில் தாங்கியே பேர்த்து ஒரு பதம் இடப் பெறாது வல்லைபோய் ஆர்த்திடு கங்கையின் அகத்து உய்த்தனான் அரோ. |
85 |
|
|
|
|
|
|
|
936.
|
கூர்சுடர்ப்
பண்ணவன் கொடுவந்து உய்த்திடும்
ஆர்சுடர்த் தொகுதி வந்தடைய மூ எயில் ஊர் சுடச் சிவந்த கண் ஒருவன் துப்பு உறழ் வார் சடைக் கரந்து என வறந்த கங்கை நீர். |
86 |
|
|
|
|
|
|
|
937.
| அரன் அருள் முறையினை அறிந்து கங்கை தன் சிரமிசை யேந்தியே சென்று ஒர் கன்னலில் சரவணம் எனும் தடம் தன்னில் சேர்த்தனள் மரை இதழ் ஆயிடை மல்கு உற்றால் என. |
87 |
|
|
|
|
|
|
|
938.
| ஆ வயின் காறும் வந்து அரி அயன் முதல் தேவர்கள் உவகையால் தெரிந்து சூழ்ந்தனர் மேவர அணியதாம் விளைவு நாடியே காவல் கொள் நிரப்பு உடைக் காதலோர் என. |
88 |
|
|
|
|
|
|
|
939.
| ஆரணன் விண்ணகம் அச்சுதன் புவி வாரணன் முதலிய மாதிரத்து உளோர் ஏரண அமரர்கள் எண் திக்கு ஆகியே சீரணி சரவணம் சேர்ந்து போற்றினர். |
89 |
|
|
|
|
|
|
|
940.
|
கங்கையும் ஒல்கப் புக்க கடும் கனல் கடவுள் சோதி
அங்கு இரு மூன்று முன்னர் அம்மை வாழ் இமையச்
சாரல்
தங்கிய கமலம் பூத்த சரவணம் புகலும் முக்கண்
புங்கவன் அருளால் தொன்மை போன்றது வறத்தல்
இன்றி. |
90 |
|
|
|
|
|
|
|
941.
|
விண் இடை இழிந்த காலின் மேவரு கனலில் தோன்றும்
வண்ண ஒண் கமலம் செய்ய முளரியை மாறது ஆகத்
தண் அளியோடு நல்கித் தரித்தெனச் சரவணப் பேர்க்
கண் அகன் பொய்கை ஈசன் கட்டழல் மிசைக்கொண்டு அன்றே.
|
91 |
|
|
|
|
|
|
|
942.
|
அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய்
ஒன்றாய்ப்
பிரம மாய் நின்ற சோதிப் பிழம்பது ஓர் மேனியாகக்
கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம்
உய்ய. |
92 |
|
|
|
|
|
|
|
943.
|
தோன்றல் வந்திடலும் விண் பால் துந்துபி கறங்கல் உற்ற
ஆன்ற தொல் மறைகள் எல்லாம் ஆர்த்தன அயனும் மாலும்
வான் திகழ் மகத்தின் தேவும் முனிவரும் மலர்கள் தூவி
ஏன்று எமை அருளுக என்றே ஏத்து இசை எடுத்துச் சூழ்ந்தார்.
|
93 |
|
|
|
|
|
|
|
944.
|
ஏவர் தம்பாலும் இன்றி எல்லை தீர் அமலற்கு உள்ள
மூவிரு குணனும் சேய்க்கு முகங்களாய் வந்தது என்னப்
பூ இயல் சரவணத்தண் பொய்கையில் வைகும் ஐயன்
ஆவிகள் அருளும் ஆற்றால் அறுமுகம் கொண்டான் அன்றே.
|
94 |
|
|
|
|
|
|
|
945.
|
மல்லல் அம் புவனத்து உள்ள மன் உயிர்க் கணங்கட்கு எல்லாம்
ஒல்லையின் மகிழ்ச்சி எய்தி உவகையின் குறிப்பு
உண்டான
தொல்லையில் அவணன் ஆகும் சூரனே முதலா உள்ள
எல்லவர் தமக்கும் மாயும் இரும் குறிப்பு உற்ற அந்நாள். |
95 |
|
|
|
|
|
|
|
946.
|
மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்க ஒணாமல்
நிறைவுடன் யாண்டும் ஆகி நின்றிடும் நிமல மூர்த்தி
அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின்
வெறி கமழ் கமலப் போதின் வீற்று இருந்து
அருளினானே. |
96 |
|
|
|
|
|
|
|
947.
|
பாங்குறு
தருச் சூழ் காலாப் பஃறழைச் சினை மென் கொம்பர்
நீங்கறப் புடை போய் வானின் நிரந்தரன பந்தர் ஆகத்
தூங்கிய பழனும் காயும் துணர்களும் அகத்து உள்
உன்ன
ஆங்கு அதன் நடுவண் பொய்கை அணி நிழல்
அமர்ந்தான் ஐயன். |
97 |
|
|
|
|
|
|
|
948.
|
முடிபொறாது அசையும் நாகர் முதிய கால் பலகை வையம்
தொடர் கரை மரனே வானம் தூங்குபன் னாணம் தெண்ணீர்த்
தடமலர் பாயல் ஆகச் சரவண மஞ்ச மீதில்
அடை தரு மைந்தன் மென்கால் அசைப்ப வீற்று
இருந்தான் அன்றே. |
98 |
|
|
|
|
|
|
|
949.
|
எண் பெரு நாகர் சேடன் ஏந்து எழில் அரிமான் ஆகத்
தண் பொலி புனல் பூம் பொய்கை தவிசு உருவாக நாள் கோள்
விண் படர் விதானம் ஆக வேலை அம்தலைவன் காலை
ஒண் பகல் ஆடி காட்ட உமைமகன் அம் கண் உற்றான். |
99 |
|
|
|
|
|
|
|
950.
|
தரணியின் நடுவண் வைகும் சரவணப் பொய்கை தன்னில்
விரை செறி கமலப் போதில் வீற்று இருந்து அருளும் செவ்வேள்
பெருவடிவு அமைந்த மாயன் பிறங்கிய மனத்தில் தண்என்
எரிசுடர் விளக்கத்து உச்சி இருந்திடும் ஈசன் போன்றான். |
100 |
|
|
|
|
|
|
|
951.
|
பெருந்தரை நடுவண் ஆகிப் பிறங்கிய சரவணத்தில்
இரும் தனிக் கமலம் ஒன்றில் குமர வேள் இருந்த
பான்மை
திருந்து நல் அண்டப் புத்தேள் சிந்தை ஆம் புண்டரீக
புரம் தனில் விரும்பித் தாதை வைகிய இயற்கை போலும். |
101 |
|
|
|
|
|
|
|
952.
|
பாசிலை பரவித் துள்ளி படுவன உடுவைப் பாக
வீசுசை வலம் காராக வேறு சூழ் கமலம் எல்லாம்
மாசறு பகலோர் ஆக அவற்றிடை மலர்ந்த கஞ்சம்
தேசுடை இரவி ஆகச் சிவன் எனச் சேய் அங்கு
உற்றான். |
102 |
|
|
|
|
|
|
|
953.
|
மால் அயன் எழிலி மேலோன் வானவர் ஏனோர் யாரும்
பாலுற மரனும் மாவும் பறவையும் பிறவும் சூழ
ஏலுறு குமரன் கஞ்சத்து இருந்தது பரமன் ஆதிக்
காலையின் உயிர்கள் நல்கிக் கமலம் மேல் இருத்தல் போலும்.
|
103 |
|
|
|
|
|
|
|
954.
|
சலம் கிளர் தரங்கத் தெய்வச் சரவணக் கமலப் போதில்
நலம் கிளர் குமரன் சேர்தல் நான்முகற் சிறை மேல் வீட்டிப்
புலம் கிளர் உயிர்கள் நல்கப் பொருந்து நல் பகலின் முன்னர்
இலங்கு எழில் பதுமப் பீடத்து ஏறிய இயற்கை போலும். |
104 |
|
|
|
|
|
|
|
955.
|
முண்டகம் ஒன்றில் வைகும் முருகனைச் சுற்றிச் செம்
கேழ்
வண்டு உளர் கமலக் காடு வான் புனல் தடத்தின் நிற்றல்
அண்டர்கள் முதல்வ ஓர் பால் அன்றி எம் எல்லாம்
பீடம்
கொண்டு அருள் முறையின் என்று நோற்றிடும் கொள்கைத்து
அன்றே. |
105 |
|
|
|
|
|
|
|
956.
|
அணங்கு செய் தோற்றத்துப்பின் அவிர் சுடர்க் குமரற்
சூழ
மணம் கிளர் கமலக் காடு மலர்ந்தன அவனைச்
சேர்வான்
தணம் கெழு புனலில் புக்குப் தபனன் மேல் நாட்டம் சேர்த்தி
நுணங்கிடை மடவார் பல்லோர் நோற்று அவண் நிற்றல் போலும்.
|
106 |
|
|
|
|
|
|
|
957.
|
ஒண் நகை உயிர்க்கும் சங்கம் ஒரு சில கமலம் வைகத்
தண் உறு நறவைப் பல் தாள் தாமரை பரித்துச் சூழ்தல்
அண்ணலம் பொய்கை தன் சேர் அறுமுகப் பிள்ளை துய்ப்ப
எண்ணெயும் சங்கும் சூழ இட்டது போலும் அன்றே. |
107 |
|
|
|
|
|
|
|
958.
|
ஆரமும்
வசனத் தோடும் அணி மகரந்தச் சேறும்
வேரி அம் பூம்தண் தேனும் முறை முறை வீசிக் கையால்
சேரவே கொண்டு மேலோன் திருவடி திளைப்ப உய்த்தல்
வாரி அம் தடாகம் அன்பால் வழிபடும் வண்ணம்
போலும். |
108 |
|
|
|
|
|
|
|
959.
|
பங்கயச் செம்மல் போது பதன் அழிந்து அவிழ்ந்து
பாங்கர்
அங்கு உள இலை மேல் வீழ அவை புறத்து அசையும் நீர்மை
சங்கரன் குமரற் சூழச் சரவணம் பசும் பூம் தட்டில்
துங்க நல் விளக்கம் ஆட்டி திரைக் கையால் சுலவல் போலும்.
|
109 |
|
|
|
|
|
|
|
960.
|
காசு உறழ் பதுமப் போது களாசியது ஆக மீச்செல்
பாசடை கவிகை ஆகப் பலநனை விளக்கம் ஆக
வீசிகள் கவரி ஆக மிழற்று புள் இயமது ஆக
மாசு அறு பொய்கை சேய்க்கு வளம் பட ஒழுகிற்று அன்றே.
|
110 |
|
|
|
|
|
|
|
961.
|
அழல் நிவந்து அன்ன கஞ்சத்து அகல் தடத் திசைகள் நாப்பண்
உழி படராது சூழ் போந்து உலவுவ தானை நீரால்
விழுமிய குமரன் பொய்கை வெளி உறாது அமரர் இட்ட
எழினிகள் புடையே மென்கால் எறிதலின் இரட்டல் போலும்.
|
111 |
|
|
|
|
|
|
|
962.
| கொன் படை சேவல் ஆகும் எகினம் ஓர் கோடி ஈசன் தன் பெரும் குமரற் சூழத் தடத்தினில் மிழற்றல் எந்தை பொன் பிறழ் பதுமன் செய்கை புரியு நாள் ஊர்தி யாவல் என் புடை இருத்தி என்றே தமித்தமி இரத்தல் போலும். |
112 |
|
|
|
|
|
|
|
963.
|
வளம் செறி இனைய பாலால் வான் சரவணம் ஆம் பொய்கைத்
தளம் செறி பதுமம் ஒன்றில் சராசரம் யாவும் காப்பான்
உளம் செறி கருணை எய்தி ஒப்பு இலாக் குமர மூர்த்தி
இளம் சிறு மதலை போல இனிது வீற்று இருந்தான் மன்னோ.
|
113 |
|
|
|
|
|
|
|
964.
|
தீர்த்திகைக் கங்கை தன்னில் திகழ் சரவணத்தில் வந்த
மூர்த்திகைக் குழவியே போல் முதல் புரி ஆடல் நோக்கி
ஆர்த்திகை உறாத உள்ளத்து அரிமுதல் அமரர் யாரும்
கார்த்திகைத் தெரிவை மாரை விளித்து இவை கழறல் உற்றார்.
|
114 |
|
|
|
|
|
|
|
965.
|
சாற்ற அரும் சரவணத்தில் சண்முகத்து ஒருவனாகி
வீற்று இருந்து அருளுகின்ற விமலன் ஓர் குழவி போலத்
தோற்றினன் அவனுக்கு உங்கள் துணை முலை அமுதம் ஊட்டிப்
போற்றுதிர் நாளும் என்ன நன்று எனப் புகன்று வந்தார். |
115 |
|
|
|
|
|
|
|
966.
|
மறு அறும் ஆரல் ஆகும் மாதர் மூஇருவர் தாமும்
நிறை தரு சரவணத்தின் நிமலனை அடைந்து போற்ற
உறுநர்கள் தமக்கு வேண்டிற்று உதவுவோன் ஆதலாலே
அறுமுக ஒருவன் வேறாய் அறுசிறார் உருவம்
கொண்டான். |
116 |
|
|
|
|
|
|
|
967.
|
ஆறு உரு ஆதலோடும் அறுவரும் மகிழ்ந்து வேறு
வேறு தாம் எடுத்துத் தம் தம் வியத்தகு துணை மென் கொங்கை
ஊறு பால் அமுதம் அன்னோற்கு உதவலும் முறுவல் செய்து
மாறு இலா அருளால் ஆற்ற வருந்தினன் போல
உண்டான். |
117 |
|
|
|
|
|
|
|
968.
|
உண்டபின் அறுவர் ஆகும் ஒரு பெருமுதல்வன்
தன்னைத்
தண் தழை பொதுளும் நீபத் தண்ணிழல் பொய்கை
தன்னில்
வண்டு அயில் உறாத கஞ்ச மாமலர்ப் பள்ளி சேர்த்திக்
கண் துயில் செய்வித்து ஏத்தக் கருணையால் இனைய செய்வான்.
|
118 |
|
|
|
|
|
|
|
969.
|
துயில
ஓர் உருவம் துஞ்சித் துண் என எழுந்து மென் சொல்
பயில ஓர் உருவம் ஆய் தன் பயோதரம் பவள வாய் வைத்து
அயில ஓர் உருவம் நக்கு ஆங்கு அமர ஓர் உருவம் ஆடல்
இயல ஓர் உருவம் வாளா இரங்க ஓர் உருவம் செய்தான். |
119 |
|
|
|
|
|
|
|
970.
| ஓர் உருத் தவழ மெல்ல ஓர் உருத் தளர்ந்து செல்ல ஓர் உரு நிற்றல் செல்லாது ஒய்யென எழுந்து வீழ ஓர் உரு இருக்கப் பொய்கை ஓர் உரு உழக்கிச் சூழ ஓர் உருத் தாய் கண் வைக ஒருவனே புரிதல் உற்றான். |
120 |
|
|
|
|
|
|
|
971.
|
ஆட ஓர் உருவம் செம் கை அறைய ஓர் உருவம் நின்று
பாட ஓர் உருவம் நாடிப் பார்க்க ஓர் உருவம் ஆங்கண்
ஓட ஓர் உருவம் ஓர் பால் ஒளிக்கவோர் உருவம்
யாண்டும்
தேட ஓர் உருவம் ஆகச் சிவன் மகன் புரிதல் உற்றான். |
121 |
|
|
|
|
|
|
|
972.
|
இத்திறம் இரு மூன்று ஆன யாக்கையும் கணம் அது ஒன்றில்
பத்து நூறு ஆய பேதப் படும் வகை பரமாய் நின்ற
உத்தம குமரன் தான் எவ் உயிர் தொறும் ஆடலே போல்
வித்தக விளையாட்டு இன்ன மாயையால் விரைந்து செய்தான்.
|
122 |
|
|
|
|
|
|
|
973.
|
சிற்பரன் ஆகி வந்த செய்ய வேள் ஆடல் தன்மை
பல பல திறமும் நாடிப் பங்கயத்து அயனும் மாலும்
சொல் படு மகத்தின் தேவும் முனிவரும் சுரரும் யாரும்
அற்புத மகிழ்ச்சி கொண்டு ஆங்கு இன்னவாறு அறைதல் உற்றார்.
|
123 |
|
|
|
|
|
|
|
974.
|
சேய் இவன் ஒருவனே பல் சிறார் உருக் கொண்டு
நம்முன்
ஏ எனும் அளவை தன்னில் எண் இல் பேதத்தன் ஆகும்
ஆயினிக் குமரன் ஆடல் அறி வரிது எமக்கும் எல்லா
மாயமும் இயற்ற வல்லன் வரம்பு இலா அறிவன் மாதோ. |
124 |
|
|
|
|
|
|
|
975.
|
கைப் பயில் குழவி போலக் காட்டிய கடவுள் செய்யும்
இப்பெரு மாயை போல யாவரும் புரிதல் தேற்றார்
செப்பி என் வேறி யாமும் செய்தது ஒன்று இல்லை அன்னான்
ஒப்பு அறு பரனே ஆம் என்று உரை செய்து தொழுது நின்றார்.
|
125 |
|
|
|
|
|
|
|
976.
|
அழல் எனும் மீன வர்க்கத்து அறு வரும் குமரன் ஆடல்
முழுவது நோக்கி நோக்கி முதிரும் அற்புத நீர் எய்திக்
குழவிகள் என்றே உள்ளம் கோடல் விட்டு அகலாது
அஞ்சி
வழி படு கடவுளோரில் போற்றினர் மனம் கொள்
அன்பால். |
126 |
|
|
|
|
|
|
|
977.
|
அம்புயம் உறழும் செம் கேழ் அறுமுகம் படைத்த கோல
நம்பிதன் வரவு தன்னை நவின்றனம் இனிமேல் அம்கண்
எம் பெரு முதல்வி தன் பால் இலக்கத்து ஒன் பதின்மர்செவ்வேள்
தம்பியர் ஆகி வந்த தன்மையை விளம்பல் உற்றாம். |
127 |
|
|
|
|
|
|