அயனைச் சிறைபுரி படலம்
 
1205.
மேடம் ஊர்தி ஆக உய்த்து விண்ணும் மண்ணும்                                    முருகவேள்
ஆடல் செய்து உலாவி வெள்ளி அசலம் மீதில்
                                   அமர்தரும்
நீடு நாளில் ஒரு பகல் கண் நெறி கொள் வேதன்
                                   முதலினோர்
நாடி ஈசன் அடி வணங்க அவ் வரைக்கண்
                                   நண்ணினார்.
1
   
1206.
எனாதியான் எனும் செருக்கு இகந்து தன் உணர்ந்து                                      உளார்
மனாதி கொண்ட செய்கை தாங்கி மரபின் முத்தி
                                     வழிதரும்
அனாதி ஈசன் அடி வணங்கி அருள் அடைந்து
                                     மற்றவன்
தனாது மன்றம் நீங்கி வாயில் சாருகின்ற வேலையில்.
2
   
1207.
ஒன்பதோடி லக்கம் ஆன அனிகவீரர் உள் மகிழ்ந்து
அன்பினோடு சூழ்ந்து போற்ற அமலன் அம்பொனால்
                                       ஆய
முன்பு நீடு கோபுரத்துள் முழுமணித் தலத்தின்மேல்
இன்பொடு ஆடி வைகினான் இராறு தோள்
                                படைத்துளான்.
3
   
1208.
அங் கண் வைகும் முருகன் நம்பன் அடி வணங்கி                                    வந்திடும்
புங்கவர்க்குள் ஆதி ஆய போதினானை நோக்குறா
இங்கு நம்முன் வருதியால் எனா விளிப்ப ஏகியே
பங்கய ஆசனத்தினோன் பணிந்திடாது தொழுதலும்.
4
   
1209.
ஆதி தேவன் அருளும் மைந்தன் அவன் உள்ளத்தை                                     நோக்கியே
போதனே இருக்க எனாப் புகன்று இருத்தி வைகலும்
ஏது நீ புரிந்திடும் இயற்கை யென்ன நான்முகன்
நாதன் ஆணையால் அனைத்தும் நான் படைப்பன்
                                    என்றனன்.
5
   
1210.
முருக வேள் அது கேட்டலும் முறுவல் செய்து அருளித்
தரணி வான் உயிர் முழுவதும் தருதியே என்னில்
சுருதி யாவையும் போகுமோ மொழிக எனத் தொல்சீர்ப்
பிரமன் என்பவன் இத்திறம் பேசுதல் உற்றான்.
6
   
1211.
ஐய கேள் எனை ஆதி காலம் தனில் அளித்த
மை உலாவரு களத்தினன் அளப்பு இலா மறைகள்
செய்ய ஆகமம் பல பல புரிந்து அதில் சில யான்
உய்யுமாறு அருள் செய்தனன் அவை உணர்ந்து
                                உடையேன்.
7
   
1212.
என்று நான்முகன் இசைத்தலும் அவற்றினுள் இருக்காம்
ஒன்று நீ விளம்புதி என முருகவேள் உரைப்ப
நன்று எனா மறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான்
நின்றது ஓர் தனி மொழியை முன் ஓதினன் நெறியால்.
8
   
1213.
தாமரைத்தலை இருந்தவன் குடிலை முன் சாற்றி
மா மறைத்தலை எடுத்தனன் பகர்தலும் வரம்பில்
காமர் பெற்றுடைக் குமரவேள் நிற்றி முன் கழறும்
ஓம் எனப்படும் மொழிப் பொருள் இயம்புக என்று
                                 உரைத்தான்.
9
   
1214.
முகத்தில் ஒன்றதா அவ் எழுத்து உடையதோர் முருகன்
நகைத்து முன் எழுத்தினுக்கு உரை பொருள் என நவில
மிகைத்த கண்களை விழித்தனன் வெள்கினன் விக்கித்
திகைத்து இருந்தனன் கண்டிலன் அப்பொருள் திறனே.
10
   
1215.
ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாசமாய் எலா எழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன் இடை முடிபவர்க்கு எம்பிரான் கழறும்
மாசு இல் தாரகப் பிரமமாம் அதன் பயன் ஆய்ந்தான்.
11
   
1216.
தெருளது ஆகிய குடிலையைச் செப்புதல் அன்றிப்
பொருள் அறிந்திலன் என்செய்வான் கண் நுதல் புனிதன்
அருளினால் அது முன்னரே பெற்றிலன் அதனால்
மருளுகின்றனன் யார் அதன் பொருளினை வகுப்பார்.
12
   
1217.
தூ மறைகள் எலாம் ஆதியும் அந்தமும் சொல்லும்
ஓம் எனப்படும் ஓர் எழுத்து உண்மையை உணரான்
மா மலர்ப் பெரும் கடவுளும் மயங்கினான் என்றால்
நாம் இனிச் சில அறிந்தனம் என்பது நகையே.
13
   
1218.
எட்ட ஒணாத் தவக் குடிலையில் பயன் இனைத்து என்றே
கட்டு உரைத்திலன் மயங்கலும் இதன் பொருள் கருதாய்
சிட்டி செய்வது இத் தன்மைய தோ எனாச் செவ்வேள்
குட்டினான் அயன் நான்குமா முடிகளும் குலுங்க.
14
   
1219.
மறை புரிந்திடும் சிவனருண் மதலை மா மலர் மேல்
உறை புரிந்தவன் வீழ்தரப் பதத்தினால் உதைத்து
நிறை புரிந்திடு பரிசனரைக் கொடே நிகளச்
சிறை புரிந்திடு வித்தனன் கந்தமாம் சிலம்பில்.
15
   
1220.
அல்லி மா மலர்ப் பண்ணவன் தனை அரும் சிறையில்
வல்லி பூட்டுவித்து யாவையும் புரிதர வல்லோன்
எல்லை தீர் தரு கந்தமால் வரைதனில் ஏகிப்
பல் உயிர்த் தொகை படைப்பது நினைந்தனன் பரிவால்.
16
   
1221.
ஒரு கரம் தனில் கண்டிகை வடம் பரித்து ஒருதன்
கர தலம் தனில் குண்டிகை தரித்து இருகரங்கள்
வரத மோடு அபயம்தர பரம் பொருள் மகனோர்
திரு முகம் கொடு சதுர் முகன் போல் விதிசெய்தான்.
17
   
1222.
உயிரினுக்கு உயிராகியே பரம் சுடர் ஒளியாய்
வியன் மறைத் தொகைக்கு ஈறதாய் விதி முதல்
                                 உரைக்கும்
செயலினுக்கு எலாம் ஆதியாய் வைகிய செவ்வேள்
அயன் எனப் படைக்கின்றதும் அற்புதம் ஆமோ.
18
   
1223.
தண் என் அம்பயத் தவிசினோன் சிறை புகத் தானே
எண் இலா உயிர்த் தொகை அளித்து அறுமுகன்
                                  இருந்தான்
அண்ணலம் திசை முகனொடு வந்து சூழ் அமரர்
உள் நடுங்கியே தொழுது தம் பதங்களில் உற்றார்.
19