அசுரர் தோற்று படலம்
 
1922.
கந்தார் மொய்ம்பில் காசிபன் என்போன் கடிது அம்கண்
வந்தாள் செய்கை காணுதலோடு மகிழ்வு எய்தி
அந்தா உய்ந்தேன் யான் என மின்கண்டு அலர்கின்ற
கொந்தார் கண்டல் போல் நகையொடும் குலவு உற்றான்.
1
   
1923.
ஆடா நின்றான் குப்புறல் உற்றான் அவள் தன்மேல்
பாடா நின்றான் யாக்கைப் பொடிப்பில் படர் போர்வை
மூடா நின்றான் அன்னதொர் மாயை முன் சென்றான்
வீடா நின்ற தன் உயிர் காக்கும் விதி கொண்டான்.
2
   
1924.
என்னே செய வேண்டிற்று அவை எல்லாம் இசைவாலே
முன்னே புரிகிற்பேன் இவண் முனி கின்றதை ஒருவி
நன் நேயமொடு எனை ஆளுதிர் நனி வல்லையில்
                                   என்னாப்
பொன் நேர் அடி மிசை தாழ்தலும் அவள் இன்னது
                                   புகல்வாள்.
3
   
1925.
வெரு உற்றிடல் இவண் நின்ற என் வியன் மெய்யினுக்கு
                                      இயையும்
திருமிக்கு உறு தகவு ஆகிய திறன் மேனியும் மேல்
                                        கொள்
உரு ஒப்பதொர் வடிவும் உடன் உடனெய்திடு வாயேல்
மரு உற்றிடு கின்றேன் என மயில் சொற்றனள் அன்றே.
4
   
1926.
ஏம் உற்றிடு முனிவர்க்கு இறை இது கேட்டலும் முன்னம்
காமக்கடல் படிகின்றவன் களிசேர் தரும் உவகை
நாமக் கடல் இடை ஆழ்ந்தனன் நன்றால் இஃது என்றான்
சேமத் திரு நிதி பெற்றிடும் இரவோன் எனத் திகழ்வான்.
5
   
1927.
அற்றே மொழி தரு தன்மையில் ஆர்வத்தொடு தமியேன்
குற்றேவல் செய்கிற்பேன் இளம் கொடியோர் இடை
                                      என்னாச்
சொற்றே தவ முயல் வன்மையில் துகடீர் தரும் அனிலப்
பொற்றேர் அவர்க்கு இலது என்பதொர் புத்தேள் உருக்
                                   கொண்டான்.
6
   
1928.
அன்றாதய தொரு உரு எய்திய அறிவன் தனை வியவா
நன்றால் உனது இயல்பாம் என நகையாக் கரம் பற்றாக்
குன்று ஆகிய முலையாள் அவற் கொடு போந்தனள்
                                     அங்கண்
பொன் தாழ் கிரி என ஓங்கும் ஓர் பொலன் மண்டபம்
                                    புகுந்தான்.
7
   
1929.
கற்பனை இன்றியே கடிதின் முன் உறும்
அற்புத மண்டபத்து ஆணையால் வரும்
பொற்புறு சேக்கையில் பொருந்தினார் அரோ
எற்படு கங்குலின் முதல் யாமத்தில்.
8
   
1930.
சூர் உறு வெம் பசி தொலைப்ப வைகலும்
ஆரஞர் எய்தினோன் அரிதின் வந்திடு
பேர் அமுது உண்குறு பெற்றி போல அக்
காரிகை தனை முனி கடிதில் புல்லினான்.
9
   
1931.
புல்லலும் எதிர் தழீஇப் புகரில் காசிபன்
தொல்லையில் உணர்வொடு தொலைவில் செய்தவம்
வல்லை இல் வாங்குறு மரபில் அன்னவன்
மெல் இதழ் அமிர் தினை மிசைதல் மேயினாள்.
10
   
1932.
பின் உற மாயவள் பெரிதும் காமுறும்
அன்னவன் புணர்தர அறிவது ஒன்றையும்
தொல் நெறி அளித் தெனத் தொண்டை சே இதழ்
முன் உறும் அமிர்தினை முனிக்கு நல்கினாள்.
11
   
1933.
உள் தெளிவு இன்றியே உலப்பின்று ஓடிய
மட்டறு காமம் ஆம் வாரி உற்றுளான்
அட்டு ஒளிர் பொன் அனாள் அல்குலாம் சுழிப்
பட்டனன் இன்பமாம் பரவை நண்ணுவான்.
12
   
1934.
தோமறு முனிவரன் சுரதத்து ஆற்றினால்
காமரு மதன நூல் கருத்தில் சிந்தியாத்
தே மொழி மயிலொடு செறிந்து போகம் ஆர்
பூமியினோர் எனப் புணர்தல் மேயினான்.
13
   
1935.
செம் மயில் அன்ன இத் தெரிவை தன் இடை
எம்மையும் இல்லதோர் இன்பம் இங்ஙனம்
மெய்ம்மையின் நல்கிய விதியினார்க்கு யான்
அம்ம செய்கின்றதோர் அளவு உண்டோ என்றான்.
14
   
1936.
ஆறறி முனிவரன் அநங்க நூல் முறை
வீறொடு புணர்தலும் வெய்ய மாயவள்
கீறினள் நகத்தினால் கீண்ட பால் தொறும்
ஊறிய காம நீர் ஓழுகிற்று என்பவே.
15
   
1937.
உணர்வு உடை முனிவரன் உயர்ந்த விஞ்சையர்
மண முறை இது என மாயை தன்னொடு
புணர் தொழில் புரிந்தனன் போக முற்றினான்
துணை அறும் இன்பு எனும் கடலில் தோய்ந்துளான்.
16
   
1938.
அந்த வேலையில் முகுந்தனும் அம்புயத் தவனும்
இந்திராதியர் யாவரும் முனிவரர் எவரும்
தம் தம் உள்ளம் மேல் நடுக்குற மாயவள் தன்பால்
வந்து தோன்றினன் சூரபன்மா எனும் வலியோன்.
17
   
1939.
துயக்கம் இல்லதோர் சூரன் வந்திடுதலும் தொல்லை
முயக்க வேலையில் இருவர் பால் முறை முறை இழிந்த
வியர்ப்பில் வந்தனர் முப்பதினாயிர வெள்ளம்
வயக்கடும் திறல் தானவர் யாரினும் வலியோர்.
18
   
1940.
அன்னர் தம்மையும் முதலவன் தன்னையும் அம்கண்
நின்மினீர் என நிறுவியே ஆயிடை நீங்கி
மின்னு நூலணி முனியொடு மாயவள் வேறோர்
பொன்னின் மாமணி மண்டபம் அதனிடைப் புகுந்தாள்.
19
   
1941.
மானை நேர்பவள் ஆயிடைத் தொல் உரு மாற்றி
மேன சூர் அரிப்பிணா உருக் கொள்ளலும் விரைவில்
தானும் ஓர் திறல் மடங்கலே ஏறாம் எனச் சமைந்தான்
மோனமாய் முனம் அருந்தவம் இயற்றிய முதல்வன்.
20
   
1942.
மங்கையோடு அவன் மடங்கலாய் மகிழ்வுடன் புணரக்
கங்குல் வாய் இரண்டாகிய யாமமேல் கடிதே
அங்கை ஓர் இரண்டாயிரம் ஆயிர முகமாய்ச்
சிங்க மாமுகன் தோன்றினன் திடுக்கிடத் திசைகள்.
21
   
1943.
இத்திறத்து இவர் இருவரும் புணர்வுழி யாக்கை
மெத்தி வீழ்தரும் வியர்ப்பினில் விறல் அரி முகராய்ப்
பத்து நால்வகை ஆயிர வெள்ளம் ஆம் படைஞர்
கொத்தினோடு வந்து உதித்தனர் கூற்று உயிர் குடிப்பார்.
22
   
1944.
மற்றும் அத்தொகை யோரையும் மாமகன் தனையும்
நிற்றிர் ஈண்டு என மாயவள் வீற்று ஒரு நிலயம்
தெற்று எனப் புகுந்து ஓர் பிடி உருக்கொடு சேரக்
கொற்ற மால் களிற்று உருவினை முனிவனும்
                              கொண்டான்.
23
   
1945.
பேரு மும்மத மால் களிற்று உருக்கொடு பிடிமேல்
சேரு கின்று உழி மூன்று எனச் செல்லும் யாமத்தில்
ஈர் இரண்டு வாள் எயிற்றுடன் யானை மா முகத்துத்
தாரகா சுரன் தோன்றினன் அவுணர்கள் தழைப்ப.
24
   
1946.
ஏலும் அங்கு அவர் மெய்ப்படு வியர்ப்பினும் இபத்தின்
கோலம் ஆனவர் தோன்றினர் அவர் குழுக் குணிக்கின்
நாலு பத்தின் மேல் ஆயிர வெள்ளமா நவின்றார்
மூல நாடியே இப் பரிசு உணர்த்திய முனிவர்.
25
   
1947.
ஆண்டு தாரகன் தன்னையும் அவுணர்கள் தமையும்
ஈண்டு நிற்றிர் என்று ஓர் மணி மண்டபத்து இறுத்து
மாண்ட யாமமேல் தகர்ப்பிணா உருக்கொள மாயை
பூண்ட அன்பினான் செச்சையின் உருக்கொடு
                                புணர்ந்தான்.
26
   
1948.
புணர்ந்த காலையில் அசமுகி தோன்றினள் புவியோர்க்குக்
அணங்கு செய் தகர் முகவராய் அங்கு அவர் வியர்ப்பில்
கணம் கொள் முப்பதினாயிர வெள்ளமாம் கணிதத்து
இணங்கு தானவர் உதித்தனர் இமையவர் கலங்க.
27
   
1949.
மீள மற்றவர் தம்மையும் நிறுவி வேறு உள்ள
சூளி கைப்பெரு மண்டபம் தொறும் தொறும் ஏகி
யாளி வல்லியம் புரவி மான் ஒரி எண் கேனம்
கூளி ஆதியாம் விலங்கினது உரு எலாம் கொண்டார்.
28
   
1950.
இறுதி இல்லதோர் விலங்கினது உருவு கொண்டு இரவின்
புறம் அது ஆகிய புலரி சேர் வைகறைப் பொழுதின்
முறையின் மாயையும் முனிவனும் ஆகியே முயங்கி
அறுபது ஆயிர வெள்ளமாம் அவுணரை அளித்தார்.
29
   
1951.
மிகுதி கொண்டிடும் இரண்டு நூறு ஆயிர வெள்ளம்
தகுவர் தம்மையும் சூரனே முதலினோர் தமையும்
புகலும் ஓர் இராப் பொழுதினில் அளித்தது அற்புதமோ
அகிலமும் வல மாயவட்கு இச்செயல் அரிதோ.
30
   
1953.
அல் எனும் பொழுது இறத்தலும் மாயவள் அரிவைத்
தொல்லை நல் உருக் கோடலும் முனியும் அத்துணையே
வல்லை தன் உரு முன்னையில் கொண்டனன் மற்று அவ்
வெல்லை தன்னிடை உதயவாய் அணுகினான் இரவி.
32
   
1953.
அல் எனும் பொழுது இறத்தலும் மாயவள் அரிவைத்
தொல்லை நல் உருக் கோடலும் முனியும் அத்துணையே
வல்லை தன் உரு முன்னையில் கொண்டனன் மற்று அவ்
வெல்லை தன்னிடை உதயவாய் அணுகினான் இரவி.
32
   
1954.
நிட்டைக்கு ஏற்றிடும் முனிவனை மாயவள் நிசியில்
விட்டுப் போந்திலள் அற்புதம் என் விளைந்ததுவோ
கிட்டிக் காண்பன் என்று உதயமாம் கிரிப் புறத்து அணுகி
எட்டிப் பார்த்தனன் என்னவே உதித்தனன் இரவி.
33
   
1955.
எல்லை வந்திடுதலும் ஈன்ற மாயவள்
செல் உறும் அப்புவி செறிந்து சேணினும்
சொல்லிய திசையினும் துவன்றி ஆர்த்திடும்
ஒல் எனும் சனத்தினை உவந்து நோக்கினாள்.
34
   
1956.
விண் உறு தானவர் வெள்ளம் யாவையும்
கண்டனன் எந்தை தன் கருமம் இச்செயல்
கொண்டிலம் மாயையில் கூடிற்று ஈதெனா
அண்டரும் அற்புதம் அடை குற்றான் முனி.
35
   
1957.
பற்பகல் அரும் தவம் பயின்ற தூயனும்
பொற்புறு மாயையும் புதல்வர் தம் தொகை
அற்புத மோடு கண்டு அன்பின் நீர ராய்
நிற்புழித் தெரிந்தனன் நேரில் சூரனே.
36
   
1958.
இருமுது குரவரும் ஈண்டு உற்றார் அவர்
திருவடி வணங்கி யாம் செய் திறத்தினை
மரபொடு வினவுதும் வம்மின் நீர் எனா
அரிமுகன் தாரகன் அறியக் கூறினான்.
37
   
1959.
அறை கழல் இளையவர் அதனைத் தேர் உறீஇ
உறுதி இதாம் என உரைத்துப் பின் வரத்து
உறுமல் கொண்டு இருந்ததன் தொல் பதாதியை
நிறுவினன் அவ்விடை நின்று நீங்கினான்.
38