முகப்பு |
எதிர் கொள் படலம் படலம்
|
|
|
2709.
|
திண் திறன் மாயையின் செம்மல் இத்திறம்
அண்டர் தம் துறக்க மேல் அடைந்த காலையில் பண்டு இமையோர்களால் படரும் தானவர் கண்டனர் மகிழ்ந்தனர் களிப்பின் மூழ்கினார். |
1 |
|
|
|
|
|
|
|
2710.
| ஆயவன் வருவதை அவுணர் தம்பெரு நாயகற்கு ஒற்றர் போய் நவில அன்னவன் தூய நல் அமுதினைக் கிடைத்துத் துண் என மேயினன் ஆம் எனக்களிப்பின் மேயினான். |
2 |
|
|
|
|
|
|
|
2711.
| தானை அம் படையொடு தகுவர் கோமகன் ஆன வெம் சூர் பெறும் அளப்பில் ஆக்கமும் கூனல் அம் பிறை தவழ் குடுமிச் செம்சடை வானவன் கருணையும் மனம் கொண்டு ஏகினான். |
3 |
|
|
|
|
|
|
|
2712.
| அன்னவன் புகர்தனை அடைந்து நம் குல மன்னனை உற்றிட வல்லை செல்லுவன் முன் உற ஏகி எம் முறையும் செய்கையும் பன்னுதி என்று முன் படர்வது ஆக்கினான். |
4 |
|
|
|
|
|
|
|
2713.
| அன்னதோர் காலையில் அவுணர் தேசிகன் முன் உற மானமேல் முடுகி ஏகலும் தன் உறு கிளைஞரும் தானும் ஆங்கு அவன் பின் உற மன்னவன் பெயர்ந்து போயினான். |
5 |
|
|
|
|
|
|
|
2714.
| மாசு அறு பேர் ஒளி மான மீமிசைத் தேசிகன் விரைவொடு செல்லும் எல்லையில் காசிபன் அருள் மகன் கண்டு சேண் இடை ஈசனை எதிர்ந்து என எதிர் கொண்டு ஏகினான். |
6 |
|
|
|
|
|
|
|
2715.
| அஞ்சலி செய்தனன் அவுணன் அத்துணை நெஞ்சு அகம் மகிழ்வொடு நின்று தேசிகன் விஞ்சுக திருவொடு விசயம் தான் எனா எஞ்சலில் ஆசிகள் எடுத்துக் கூறினான். |
7 |
|
|
|
|
|
|
|
2716.
| ஆயது காலையில் அனையன் பாங்கரின் மேயின அரிமுகன் வேழ மாமுகத்து தீயவன் இருவரும் தேர் ஒடு ஏகியே தூயது ஓர் புகர் அடி தொழுது போற்றினார். |
8 |
|
|
|
|
|
|
|
2717.
| ஏத்திடும் அவர் தமக்கு இயலு ஆற்றினால் மீத்தகும் ஆசிகள் விளம்பி வேந்தனைப் பார்த்தனன் உனக்கு யாம் படுத்து கின்றது ஓர் வார்த்தை உண்டு அன்னது வகுத்தும் கேட்டி நீ. |
9 |
|
|
|
|
|
|
|
2718.
| பங்கம் இல் காசிபன் பன்னி ஆகிய நுங்கையைப் பயந்துளான் நுனித்த கேள்வியான் சங்கை அற்று இருந்த தானவரைத் தாங்கினான் எங்களுக்கு ஓர் துணை என்னும் தன்மையான். |
10 |
|
|
|
|
|
|
|
2719.
| ஈண்டையில் வாசவன் எதிர்ந்து பற்பகல் மூண்டிடு வெம்சமர் முற்றி வீரத்தைப் பூண்டனன் ஆதலில் புழுங்கி மாரி நாள் மாண்டிடு கதிர் என மாழ்கி வைகினான். |
11 |
|
|
|
|
|
|
|
2720.
| அத்தகு மேலையோன் அவனி மீமிசை வித்திடு நாறு செய் விளைவு காண் உறா எய்த்திடு நிரப்பினன் என்ன நின்னையே நித்தலும் நோக்கினான் சிறுமை நீங்கவே. |
12 |
|
|
|
|
|
|
|
2721.
| தவம் கொடு முந்து நீ தழலை வேட்டதும் சிவன் புரி வரங்களும் செப்பக் கேட்டனன் உவந்தனன் ஆகுலம் ஒழித்து வைகினான் நிவந்தன ஆங்கு அவன் நெடிய தோள்களே. |
13 |
|
|
|
|
|
|
|
2722.
| பற்றலர் புரம் அடு பரமன் ஈந்திடப் பெற்றது ஓர் வரத்தொடு பெயர்ந்தி யாரையும் வெற்றி கொண்டு இவண் வரும் மேன்மை கேட்புறா மற்று உனை அடைந்திட வருகின்றான் எனா. |
14 |
|
|
|
|
|
|
|
2723.
| வன்திறல் அவுணர் கோன் வருதல் காட்டியே புன் தொழில் படுத்திய புகர் உரைத்தலும் துன்றிய கனை கழல் சூரன் என்பவன் நின்றனன் உவகையால் நிறைந்த நெஞ்சினான். |
15 |
|
|
|
|
|
|
|
2724.
| ஆர்ந்த தொல் கிளையொடும் அவுணர் காவலன் சேர்ந்தனன் சூரனைச் செம்கையால் தொழாப் பேர்ந்திடும் ஆவியைப் பிரிந்தது ஓர் உடல் சார்ந்திடுகின்றது ஓர் தன்மை என்னவே. |
16 |
|
|
|
|
|
|
|
2725.
| ஆய் இடை வெய்ய சூர் அவுணர் கோவினை நீ இனிது இருத்தி கொல் என்ன நீயுளை தீயன அடையுமோ சிறுமை எய்துமோ மேய நும் குல முறை விளங்கத் தோன்றினாய். |
17 |
|
|
|
|
|
|
|
2726.
| என்று இவை நய மொழி இயம்பியே புடை சென்றன மாயையின் செய்யன் காதலன் துன்றிய தகுவர் தம் அனிகம் சூழ்தர வென்றியோடு அவனி மேல் விரைவின் மீளவே. |
18 |
|
|
|
|
|
|
|
2727.
|
மண் உலகத்தில் வெம் சூர் வந்தனன் எனும் சொல் கேளா
அண்ணல் அம் கமலத்தேவும் அமரர் கோமானும் ஏனை
விண்ணவராய் உள்ளோரும் வியத்தகு முனிவர் யாரும்
துண் என வந்து மாயோன் துயில் கொளும் கடலில்
புக்கார். |
19 |
|
|
|
|
|
|
|
2728.
|
கொய் துழாய் அலங்கல் மோலிக் குழகனைக் குறுகி நின்று
கை தொழுது இறைஞ்சித் தாங்கள் கனை கழல் சூரன்
தன்னால்
எய்திடு சிறுமை எல்லாம் இயம்பினர் இனிமேல் யாங்கள்
செய்திடுகின்றது என்கொல் செப்புதி பெரும என்றார். |
20 |
|
|
|
|
|
|
|
2729.
|
அன்று அவர் உரைத்த மாற்றம் அச்சுதக் கடவுள் கேளாப்
புன் தொழில் தக்கன் வேள்வி புகுந்திடும் தீமை தன்னால்
இன்று இது பொருந்திற்று அம்மா யார் இது விலக்கல்
பாலார்
ஒன்று இனிச் செய்யும் தன்மை கேண்மின் என்று ஓதல்
உற்றான். |
21 |
|
|
|
|
|
|
|
2730.
|
பண்டு எயில் மூன்றும் அட்ட பராபரன் வரம் பெற்று
உள்ளான்
அண்டம் எங்கும் எவையும் வென்றோன் ஆதலால்
நம்மால் வென்றி
கொண்டிடு திறத்தான் அல்லன் கொடிய அச்சூரன்
தன்னைக்
கண்டு சென்றிடுதும் ஈதே காரியம் போலும் என்றான். |
22 |
|
|
|
|
|
|
|
2731.
|
செம் கமலத்தோன் ஆதி தேவரும் முனிவர் யாரும்
இங்கு இது கருமம் என்றே இசைந்தனர் ஆகி நிற்ப
அங்கு அவரோடு மாயோன் அரவணைப் பள்ளி நீங்கித்
துங்கம் அது உடைய தொல் சீர்ச் சூரனைக் காண
வந்தான். |
23 |
|
|
|
|
|
|
|
2732.
|
மருத்துழாய் மவுலி ஆதி வானவர் முனிவர் யாரும்
திருத்தகு சூரன் நேரே சென்று நின்று ஆசி கூறி
அருத்தியது ஆகப் போற்ற அவர்களுள் பதினோர் கோடி
உருத்திரர் தொகுதி ஆனோர் ஒருங்கு உடன் நிற்பக்
கண்டான். |
24 |
|
|
|
|
|
|
|
2733.
|
கண்டிடும் அவுணர் தங்கள் காவலன் இமையா முக்கண்
அண்டர் தம் பெருமான் என்ன அமைந்த தொல் வடிவம்
உள்ளார்
எண்டரு தொகையின் மிக்கார் ஈங்கு இவர் யாவர்
என்னத்
தண் துளவு அலங்கல் மோலிப் பண்ணவன் சாற்றல்
உற்றான். |
25 |
|
|
|
|
|
|