பட்டாபிடேகப் படலம்
 
2774.
மற்று அவ் வீர மகேந்திரம் நண்ணியே
உற்று நாடி அவ் வும்பர் தம் கம்மியன்
கற்ற விஞ்சை வியந்து களிப்பு உறீஇக்
கொற்ற நீடு தன் கோயிலை நண்ணினான்.
1
   
2775.
நண்ணுகின்று உழி நான்முகன் ஆதியாம்
விண் உளோர்கள் வியன் முடி சூட்டுதும்
அண்ணலுக்கு என்று அவற்றிற்கு வேண்டிய
எண் இல் பல் பொருள் யாவும் உய்த்தார் அரோ.
2
   
2776.
கோவில் நண்ணிய கொற்றவன் மற்றொரு
தாவில் பீடிகைதன் மிசை வைகியே
மாவுலாவிய மால் கடல் தெண் புனல்
தேவர் ஆட்டச் சிறப்புடன் ஆடினான்.
3
   
2777.
ஆடி அம் பொனின் ஆடை உடீஇ மலர்
சூடி ஒண் கலன் தூயன பூண்டு பின்
பீடு சேர்தரு பின்னவர் பால் வர
நீடு காதல் நிருதர் புகழ்வே.
4
   
2778.
நிகர் இலா நிருதர்க்கு இறை தொழப்
புகரு மாமுனிவோரும் புகழ்ந்திட
மிக நடுங்கிய விண்ணவர் போற்றி
மகபதிக்கு மனம்தளர்வு எய்தவே.
5
   
2779.
வந்து சீய மணித் தவிசு ஏறினன்
அந்த எல்லையில் அச்சுதற்கு ஆம் எனும்
இந்திரத் திரு மா முடி ஏந்தியே
சுந்தரத் தொடு நான்முகன் சூட்டினான்.
6
   
2780.
கண்டு தானவர் காசிபன் காதலன்
புண்ட ரீகப் பொலன் கழல் தாழ்ந்து எழா
அண்ட ஒணா மகிழ்வால் அடும் தேறலை
உண்டு உளாரின் உளம் களிப்பு எய்தினார்.
7
   
2781.
அன்ன வேலை அமரர் முனிவர்கள்
பொன்னவா நறும் போது கரம் கொடே
மன்னர் மன்னன் மணி முடியின் மிசை
முன்னி வாழ்த்தி முறை முறை வீசினார்.
8
   
2782.
பாங்கு உறு தவிசின் பாலில் துணைவர் பங்கயன் மால்
                                      தம்மை
ஈங்கு இனிது இருத்திர் என்ன இருந்தனர் ஏவலாலே
ஓங்கிய மகவான் கொண்டான் களாசி ஒண் நிதியின்
                                   கோமான்
தாங்கினன் அடைப்பை மற்றச் சமீரணர் கவரி
                                 கொண்டார்.
9
   
2783.
நிருதர் தம் குருசில் ஆன நெடும் தகை உடைவாள்
                                  கொண்டான்
பரிதியும் மதியும் அம்கண் பனிக்குடை நிழற்றி நின்றார்
வருணனும் மகாரும் ஆல வட்டம் வீசினர் யாழ் வல்ல
கருடர் கந்தருவர் சித்தர் கானம் அங்கு இசையா நின்றார்.
10
   
2784.
முத்தலை அயில் வேல் ஏந்தி முறை நெறி ஆற்றும் கூற்று
மெய்த் தழல் கடவுள் தானும் வேத்திரம் ஏந்தி யாண்டும்
எத்திறத்தவரும் நீங்க எரி விழித்து இடியின் ஆர்த்துப்
பத்தியின் நிறுவிச் சூரன் பல்புகழ் பரவி நின்றார்.
11
   
2785.
குரைகழல் நிருதி என்போன் கோடிக மதுகைக்
                              கொண்டான்
இருமை சேர் குரவர் தாமும் எல்லை தீர் முனிவர்
                                   யாரும்
திரை கெழு கங்கைத் தூநீர் செம் பொனம் கலசம்
                                 சேர்த்துத்
துருவையின் மறையால் வாங்கித் துவலை தூர்த்து
                            ஆசி சொற்றார்.
12
   
2786.
அரம்பை மேனகையே மிக்க உருப்பசி ஆதி ஆகி
வரம்பு அறும் அமரர் மாதர் வரன் முறை விதியின் நாடி
நரம்பு இயல் சுருதி பாடல் இயத்தொடு படிந்து நண்ணித்
திரம் பயில் நடனம் மூன்றும் செவ்விதில் புரியல் உற்றார்.
13
   
2787.
இத்திறம் அமரர் யாரும் ஏனையர் தாமும் ஈண்டித்
தத் தமது உரிமை தன்னைத் தவா நெறி தலைக்
                            கொண்டு ஆற்ற
மைத்தகு சூரபன்மன் மடங்கல் அம் தவிசின் மீதே
மெய்த் திரு நிகழ மன்னிப் பின் இவை விளம்பல்
                                  உற்றான்.
14