அரசு செய் படலம்
 
2788.
களித்திடு ஞிமிறும் வண்டும் கலந்திட நறவம் பொங்கித்
துளித்திடு துழாய் மால் தன்னைச் சூரன் ஆம் அவுணன்
                                         பாரா
அளித்தவன் தன் மூதாதை ஆயினை அதனால் நின்னை
விளித்திடும் எல்லை தோறும் விரைந்து இவண் மேவுக
                                      என்றான்.
1
   
2789.
செம் கமலத்தின் மேவும் திசை முகத்து ஒருவன்
                                தன்னைத்
துங்கமோடு அரசு செய்யும் சூரனாம் வீரன் பாரா
இங்கு நின் மைந்தரோடும் என்னிடம் தன்னில் ஏகி
அங்கம் ஐ வகையும் நாளும் அறைந்தனை போதி
                                  என்றான்.
2
   
2790.
அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி
                                  நம் ஊர்ப்
புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல்
நிறுத்திய சிகரி ஊடு நெறிக்கொடு புக்கு வான்போய்
எறித்தனை திரிதி நாளும் இளம் கதிர் நடாத்தி என்றான்.
3
   
2791.
அறை கழல் சூரபன்மன் அவிர் மதி தன்னை நோக்கிப்
பிறை என வளருமாறும் பின் முறை சுருங்கு மாறும்
மறைவொடு திரியுமாறும் மற்றினி விடுத்து நாளும்
நிறைவொடு கதிரோன் போல் இந் நீள் நகர் வருதி
                                   என்றான்.
4
   
2792.
பொன் கழல் முதல்வன் தன்னைப் புரவலன் விரைவின்
                                       நோக்கி
இங்கு நம் மூதூர் உள்ளோர் யாவரே எனினும் உன்னின்
அங்கு அவர் தம்பால் எய்தி அவர் பணி யாவும் ஆற்றிச்
செம் கமலம் போல் யாவர் தீண்டினும் குளிர்தி என்றான்.
5
   
2793.
சுடர் முடி அவுணர் செம்மல் தொல் பெரும் கூற்றை
                                   நோக்கிப்
படி முழுது உயிரை நாளும் படுப்பது போல நம் தம்
கட மத கரியை மாவைக் கணிப்பு இலா அவுணர் தம்மை
அடுவது கனவும் உன்னாது அஞ்சியே திரிதி என்றான்.
6
   
2794.
அண்டரும் உலவை யானை அவுணர் மாத் தலைவன்
                                       பாரா
எண்டரும் நம் மூதூரில் யாவரும் புனைந்து நீத்த
தண் துளி நறவ மாலை தயங்கு பூண் கலிங்கம் சாந்தம்
நுண் துகளாடு சுண்ணம் மாற்றுதி நொய்தின் என்றான்.
7
   
2795.
காவலன் வருணன் தன்னைக் கண் உறீஇ நம் மூதூரில்
நாவி வெண் பளிதம் சாந்தம் நரந்தமோடு அளாவித்
                                    தீம்பால்
ஆவியின் வெளிய நொய்ய அரும் பனி நீரில் கூட்டித்
தூவுதி இடங்கள் தோறும் காற்று அது துடைக்க என்றான்.
8
   
2796.
வாசவன் தன்னை நோக்கி மால் கெழு திருவின்
                                    மேலோன்
தேசு உறு துறக்கம் வைகும் தேவர்தம் குழுவினோடும்
ஆசை அம் கிழவரோடும் அரும் தவரோடும் போந்து
பேசிய பணிகள் ஆற்றித் திரிமதி பிழையேல் என்றான்.
9
   
2797.
இந்நெறி சூரபன் மன் யாவர்க்கும் வீற்று வீற்றாத்
தன் உறு பணியின் நிற்பான் சாற்றலும் அனையர் அஞ்சி
அன்னது செய்தும் என்றே அனையவாறு ஒழுக
                                     அன்னான்
மன்னினன் அரசில் பின்றை மணம் செய உன்னினான்
                                         ஆல்.
10
   
2798.
மதி முகத் திருவே போல்வாள் வானவர் புனைவன் தந்த
பதும கோமளை என்று ஓதும் பாவையைப் புகரோன்
                                         நாடிச்
சதுர் முகன் முதல் ஆம் தேவர் தானவர் பிறரும் போற்ற
விதி முறை வதுவை செய்து விழைவொடு மேவி உற்றான்.
11
   
2799.
அன்னதன் பின்னர் வானோர் அசுரர் கந்தருவர் சித்தர்
கின்னரர் இயக்கர் நாகர் கிம்புருடர் ஆதி ஆனோர்
கன்னியர் அளப்பு இலாரைக் கடி மணம் செய்து கூடித்
துன்னுபன் மலர்த்தேன் உண்ணும் சுரும்பு என இன்பம்
                                    துய்த்தான்.
12
   
2800.
அரிமுகத்து அவுணர் வேந்தற்கு அந்தகன் மகளாய்
                                     உள்ள
திருமிகு விபுதை தன்னைச் சீர்மணம் செய்து நல்கி
நிருதி தன் புதல்வியான நேர் இழை சவுரி தன்னைக்
கரி முக இளவல் சேரக் கடிமணம் புரிவித்திட்டான்.
13
   
2801.
இவ்வகை மணம் செய் பின்றை இரு துணைவரையும்
                                      நோக்கி
மெய்வளம் பெற நுங்கட்கு விதித்திடும் மூதூர் ஏகி
அவ்விரு கோடி வெள்ளம் அனிகமோடு இருத்திர்
                                    என்னாத்
தெவ்வடு சூரன் அன்னோர் செல்லுமாறு ஏவினான் ஆல்.
14
   
2802.
ஏவியே தனது தானைக்கு இறைவரில் பலரை நோக்கி
நீவிர்கள் இரண்டு கோடி நீத்தம் ஆம் அனிகத் தோடு
தீவுகள் தோறும் ஆழி இடம் தொறும் செய்த மூதூர்
மேவுதிர் விரைவின் என்னா அனையரை விடுத்தான்
                                     மன்னோ.
15
   
2803.
மாறு இலாத் திசைகள் எட்டும் வான் உலகு ஏழும்
                                  இப்பால்
கூறு பாதலங்கள் யாவும் ஒழிந்த வுங் குறுகியே தன்
ஈறு இலா ஆணை போற்ற எல்லை இல் அவுணர் தம்மை
ஆறு எனும் கோடி வெள்ளத்து அனிகமோடு ஏகச்
                                     செய்தான்.
16
   
2804.
விட்டிடு காலை தானே விண்ணுமண் ணுலகும் திக்கோர்
எட்டொடு பிலன் ஓர் ஏழும் ஏனைய வரைப்பும் ஆகிக்
கிட்டின செறிந்து மொய்த்த கேடில் சீர் அவுணர் தானை
மட்டகல் வானம் பூத்த உடுக்களின் மலிந்த அன்றே.
17
   
2805.
எங்கணும் தனது தானை இடையறா தீண்டலோடும்
துங்க வெம் சூரபன்மன் தான் உறை தொல் மூதூரில்
அங்கண் ஓர் இலக்கம் வெள்ளத்து அவுணர் தம்
                              தானை தன்னை
மங்கல இருக்கை தோறும் மரபுளி இருத்தி மன்னோ.
18
   
2806.
கரி பரி யாளி எண்கு கடுவயப் புலியே ஏனம்
அரி மரை முகத்து வீரர் அவுணர் தம் தலைவர் ஆனோர்
இருவகை நான்மை யோர்க்கும் எண் திசை நகரும் ஈந்து
வருபடை அயுதத்தோடும் மகேந்திரம் காக்கச் செய்தான்.
19
   
2807.
ஞாயில்கள் செறிந்த நொச்சி நாற்பெரும் தகைமைத்து
                                       ஆன
வாயில்கள் தோறும் நாப்பண் வளநகர் இஞ்சி தோறும்
கோயிலின் இருக்கை தோறும் குணிப்பு இலா வீரர்
                                      தம்மை
நீயிர்கள் காமின் என்னா நிலைப்பட நிறுவி இட்டான்.
20
   
2808.
துர்க்குணன் தரும கோபன் துன்முகன் சங்க பாலன்
வக்கிர பாலன் தீய மகிடனே முதலோர் தம்மைத்
தொக்க மந்திரி களாகத் துணைக் கொடே சூரபன்மன்
மிக்க வானவர்கள் போற்ற வீற்று இருந்து அரசு
                                    செய்தான்.
21