புதல்வரைப் பெறுபடலம்
 
2834.
அப்பொழுது அவுணர் கோமான் ஆற்றிய தவத்தின்
                                      சீரால்
பதும கோமளை என்று ஓதும் பாவைதன் உதரம்
                                    போந்து
புது மதிக் குழவியே போல் பொற்பொடு பொலிந்து
                                    முன்னம்
மதலை அங்கு ஒருவன் வந்தான் மறலிக்கு மறலி
                                  போல்வான்.
1
   
2835.
வந்தது ஓர் மதலை தன்னை மன்னவர் மன்னன் காணூஉ
அந்தம் இல் மகிழ்ச்சி பொங்க அவுணர்தம் கிளைஞர்க்கு
                                       எல்லாம்
நந்திய வெறுக்கை தன்னை நலத்தக வீசல் உற்றான்
இந்திரன் முதலினோரும் யாவரும் இடுக்கண் எய்த.
2
   
2836.
வீசிய பின்றை வானோர் மெல்லியர் அவுணர் மாதர்
ஆசிகள் புகன்று போற்றி அன்னது ஓர் மைந்தன்
                                தன்னைக்
காசொடு வயிர முத்தம் கதிர் பொலம் தொட்டில்
                                சேர்த்தார்
மாசு அகல் மதியமே போல் பைப் பைய வளர்தல்
                                  உற்றான்.
3
   
2837.
கட்டழகு உடைய மைந்தன் கம்பலம் கொண்ட
                                   செம்பொன்
தொட்டிலில் துயிலும் எல்லை ஒரு பகல் சுடரின் என்று
                                         ஊழ்
விட்டது ஓர் நூழை தன்னால் மேவியே அனையன்
                                    மெய்யில்
பட்டது அங்கு அதனை நாடிப் பரிதியைச் சுளித்துப்
                                    பார்த்தான்.
4
   
2838.
பார்த்திடுகின்ற மைந்தன் பன்மணித் தொட்டில் நின்றும்
சீர்த்து எழுந்து அண்டம் பாய்ந்து செம் கதிர்ச்
                             செல்வன் பற்றிக்
கார்த்திடு புயங்கம் கவ்வும் படித்து எனக் கரத்தில்
                                   கொண்டு
பேர்த்தும் ஓர் இறையில் வந்தான் தவத்தினும் பெரிது
                              ஒன்று உண்டோ.
5
   
2839.
தான் உறை இருக்கை தன்னில் தகுவர் கோன் தனயன்
                                        சாரா
ஆனது ஓர் செம் பொன் தொட்டில் அணிமணிக்
                                 காலின் ஊடே
பானுவை வலிதில் கட்டிப் பண்டுபோல் துயின்றான்
                                     அங்கண்
வானவர் அதனை நோக்கி மனம் வெரீஇ மறுக்கம்
                                      உற்றார்.
6
   
2840.
பரிதி விண் சேறல் இன்றிப் பிழைத்தலும் பார் தந்து
                                 உள்ளோன்
கருதி இந்திரனே ஏனைக் கடவுளர் யாரும் சூழ
நிருதர் கோன் தன்பால் வந்து நீடு இருள் பகைவன்
                                   தன்னைத்
தருதி நின் மைந்தன் செய்த தனிச்சிறை நீக்கி என்றான்.
7
   
2841.
மறை புரிந்த நான் முகன் இவை புகறலும் வானத்து
இறை புரிந்திடும் இரவியை என்மகன் இன்னே
சிறை புரிந்ததை உணர்கிலேன் அவனது செய்யக்
குறை புரிந்தது என் பகர்தி என்று உரைத்தனன்
                               கொடியோன்.
8
   
2842.
சொற்ற வாசகம் கேட்டலும் ஆர் உயிர்த் தொன்மை
முற்று நாடிய நான்முகன் நின்மகன் முகமேல்
அற்றம் இல் சுடர் ஆதபம் தீண்டியது அதனால்
பற்றி வெய்யவன் சிறை புரிந்தான் எனப் பகர்ந்தான்.
9
   
2843.
மகவு தன் செயல் கேட்டலும் சூரபன்மா வாம்
தகுவர் கோன் மிக மகிழ்ந்து நீர் என் மகன் சார்ந்து
மிகவும் நன்மொழி கூறியே ஆங்கு அவன் விடுப்பப்
பகலவன் கொடு போதிரால் ஈண்டு எனப் பகர்ந்தான்.
10
   
2844.
கேட்ட நான்முகன் நன்று என விடை கொண்டு
                              கிளர்பொன்
நாட்டின் மேனகை முதலினோர் பாடலின் நலத்தால்
ஆட்டு பொன்மணித் தொட்டிலின் மிசை உறும்
                                  அண்ணல்
மாட்டு மேவி நின்று அளவையில் ஆசிகள் வகுத்தான்.
11
   
2845.
அன்பின் மைந்தனைப் புகழ்ந்து முன் நிற்றலும்
                                அனையான்
என் பெறும் பரிசு உமக்கு என இன்னது ஓர் இரவி
துன்புறும் சிறை அகற்றுதி என்றலும் தொல்லோய்
உன் பெரும் படை தருதியேல் விடுவன் என்று
                                உரைத்தான்.
12
   
2846.
உரைத்த மைந்தனுக்கு அயன் தனது அகன் படை உதவ
நிரைத்த செம் கதிர்ச் செல்வனை விடுத்தனன் நிருதன்
விரைத்த பங்கயக் கிழவனும் புதல்வனை வியந்து
பரித்தியால் என உதவினன் மோக வெம் படையே.
13
   
2847.
படை அளித்தலும் பகலொடு பங்கயத் தவற்கு
விடை அளித்தனன் தாதை அத் தன்மையை வினவி
நடை அளித்தனன் புதல்வனுக்கு அன்னது ஓர் நன்னாள்
இடை அளித்தனன் பானு கோபன் எனும் இயற்பேர்.
14
   
2848.
பானு கோபன் என்று ஒரு பெயர் பெற்ற அப்பாலன்
மானை நேர் விழி மங்கையர் மதன் என மயங்க
ஆன பேர் உருவு எய்தியே அம்புயத் திருவின்
கோன் ஒடே பொருதவன் தனைப் பெரும் திறல்
                                 கொண்டான்.
15
   
2849.
பரிதியின் பகையாம் இவன் பெற்றபின் பரிவால்
நிருதர் காவலன் அங்கிமா முகத்தனை நிறம் சேர்
இரணியன் தனை வச்சிர வாகுவை எழில் ஆர்
மரு உலாம் குழல் பதும கோமளை தர மகிழ்ந்தான்.
16
   
2850.
மைத்த கூர் விழி ஏனைய தேவியர் மகிழ்வால்
உய்த்து நல்கிடச் சூரனாம் வெய்யவன் ஒருங்கே
பத்து நூறு உள மும்மை சேர் பாலரைப் பயந்தான்
இத்திறத்தவர் தம்முடன் அங்கண் வீற்று இருந்தான்.
17
   
2851.
சீற்றம் உற்றிடும் சிங்க முகன்கணே
தோற்றினான் அதி சூரன் என்ற ஓர் மகன்
வீற்று நூற்றவர் மேவினர் அன்னவர்
ஆற்றல் யாவர் அறைந்திட வல்லரே.
18
   
2852.
அந்த நாளில் அவன் தன் இளவல் ஆம்
தந்தி மா முகத்து தாரகன் தன்னிடை
முந்து செய் தவ மொய்ம்பின் ஒர் மாமகன்
வந்து தோன்றினன் வான் கதிர்ப் பிள்ளை போல்.
19
   
2853.
ஆம் இவன் அசுரேந்திரன் என்ற அவற்கு
ஏமம் ஆன குரவன் இசைப்ப அந்
நாமம் எய்தி நலம் பெறு காளையாய்க்
காமன் என்னக் கவின்றனன் யாக்கையே.
20
   
2854.
ஓத அரும் கலை யாவும் உணர்கினும்
ஏத மாவது ஓர் விஞ்சை இயற்றிடான்
பாதகம் புரியான் பழி பூண்கிலான்
நீதி அன்றி எவையும் நினைகிலான்.
21
   
2855.
வீறு கொண்டு இகல் வீரம் புகன்று எதிர்
மாறு கொண்டவர் உண்டு எனின் மற்று அவர்
ஈறு கொண்டிட ஏற்று உர மேல் படை
ஊறு கொண்டிட உன்னும் தகைமையான்.
22
   
2856.
சிகரம் எண் இல சேட்படு கள்ளிதான்
அகரும் நல்கி அமர்ந்து என அன்னது ஓர்
மகனை நல்கி வளம் கெழு மாயமா
நகர வாழ்க்கையின் நண்ணினன் தாரகன்.
23