முகப்பு |
இந்திரன் கரந்து உறைபடலம்
|
|
|
2888.
|
இப்படி அவுணர்கள் இனையர் ஏனையோர்
செப்பரு முனிவரைத் தேவர் தங்களை ஒப்பு அறு நரர் தமை ஒறுப்ப மாயை தன் வைப்புறு காதலன் அரசின் மன்னினான். |
1 |
|
|
|
|
|
|
|
2889.
| ஆயிரத்து எட்டு எனும் அண்டம் யாவையும் சேயுயர் இந்திர ஞாலத் தேர் மிசை ஏய் எனும் அளவையில் ஏகி வைகலும் நாயக முறையினை நடாத்தி நண்ணினான். |
2 |
|
|
|
|
|
|
|
2890.
| ஒரு பகல் பாதலத்து ஊடு வைகிடும் ஒரு பகல் மாதிரம் உலவிச் சேர்தரும் ஒரு பகல் விண் பதம் தோறும் உற்றிடும் ஒரு பகல் அயன் பதத்து உன்னி மன்னுமே. |
3 |
|
|
|
|
|
|
|
2891.
| தண் நறும் துளவினான் தனது தொல்பதம் நண்ணிடும் ஒரு பகல் நாளும் இவ்வகை எண் அரும் உலகு தோறும் ஏகி மாலையில் துண் என மீள்வன் ஆல் சூர பன்மனே. |
4 |
|
|
|
|
|
|
|
2892.
| அவ்வகையால் அரசு ஆற்றும் எல்லையில் எவ்வம் இல் சூர் முதல் இந்திரன் எனும் தெவ்வினை வன்சிறை செய்து தேவியை வவ்விய உன்னினன் வருவது ஓர்கிலான். |
5 |
|
|
|
|
|
|
|
2893.
| உன்னிய தீயவன் ஒரு தானையின் மன்னனை விளித்து நீ வாசவன் தனை இன்னதோர் பொழுதினில் எய்திப் பற்றி என் முன்னுற விடுக என முன்னம் ஏவியே. |
6 |
|
|
|
|
|
|
|
2894.
| நீடிய தன் பெரு நிலயம் காப்பவர் கோடு உறு நிசிசரர் குலத்துள் தோன்றினார் கேடகம் வாள் அயில் கெழுவு கையினார் பாடவ மடந்தையர் பவங்கள் போன்று உளார். |
7 |
|
|
|
|
|
|
|
2895.
| ஒன்பது கோடியர் தம்மை ஒல்லையில் அன்புடன் விளித்து நீர் அமரர் தம் இறை இன்பு உறு தேவியைப் பற்றி ஈம் என வன்பொடு போக்கினன் மன்னர் மன்னனே. |
8 |
|
|
|
|
|
|
|
2896.
| போக்கலும் அவர் எலாம் பொன்னின் நாட்டின் மேல் ஊக்கம் அது அகியே உருத்துச் சேறலும் நோக்கிய தூதுவர் நொய்தில் போகியே மாக்கிளர் இந்திரன் மருங்கு நண்ணினார். |
9 |
|
|
|
|
|
|
|
2897.
| வந்தனர் அவுணரும் வயம் கொள் மாதரும் அந்தம் இல் படையொடும் அடல் செய் நீரர் போல் சிந்தனை ஆவதோ தெரிந்திலோம் என இந்திரன் வினவுற இசைத்து நிற்கவே. |
10 |
|
|
|
|
|
|
|
2898.
| பொம் என அவர் தமைப் போக்கித் தீயினும் வெம்மை கொள் நெஞ்சினார் வினைய முன்னியே அம் மனை மனைவியோடு அகன்று மாயையான் இம் என இப்புவி தன்னில் ஏகினான். |
11 |
|
|
|
|
|
|
|
2899.
| ஏகிய எல்லையின் இகல் வெம் சூர் விடப் போகிய மாதரும் பொருவில் வீரரும் நாகர் தம் இறை அமர் நகரை நண்ணினார் ஆகர முதலிய இடம் தொறும் ஆய்குவார். |
12 |
|
|
|
|
|
|
|
2900.
| வினை வயின் சென்றிடும் வீரர் யாவரும் துனை மகத்து இறைவனைத் துருவி காண்கிலர் மனைவியைக் காண்கிலர் மாதர் யாவரும் நினைவு அயர்த்து உள்ளுறு கவலை நீடினார். |
13 |
|
|
|
|
|
|
|
2901.
| நாயகன் இவ்விடை நம்மைக் கூவியே ஏயின செயலினை ஈறு செய்கிலம் போயினன் சசியொடும் புலவர் கோன் எனா ஆயவன் நகர் எலாம் ஆய் உற்றார் அரோ. |
14 |
|
|
|
|
|
|
|
2902.
| சுற்றினர் நகர் எலாம் துருவித் தேவரைப் பற்றினர் விலங்கலின் பகைவன் காட்டு என எற்றினர் புலோமசை யாண்டையாள் எனக் குற்றினர் வாய்தொறும் குருதி பாயவே. |
15 |
|
|
|
|
|
|
|
2903.
| விண்ணவர் யாவரும் வேந்தும் தேவியும் நண்ணியது உணர்கிலம் நாங்கள் எங்களைத் துண் என வருத்தலிர் துயர்கின்றோம் எனாத் தண் அளி வரு நெறி தளர்ந்து சாற்றவே. |
16 |
|
|
|
|
|
|
|
2904.
| விட்டனர் தேவரை விண்ணை நீங்கினர் முட்டினர் மகேந்திர முதிய மாநகர் கிட்டினர் வேந்தனைக் கிளர்ந்து வான் இடைப் பட்டது புகன்றனர் பழி கொள் நெஞ்சினார். |
17 |
|
|
|
|
|
|
|
2905.
| போயினர் இருவரும் புறத்தர் ஆய் என ஆயவர் மொழியவே அவுணர் மன்னவன் தீ என வெகுண்டனன் தேட ஓணாதது ஓர் தூய் மணி இழந்திடும் அரவின் துன்பு உளான். |
18 |
|
|
|
|
|
|
|
2906.
|
ஒற்றரில் பலர் தமை ஒல்லை கூவியே
பொன் தொடி அணங்கொடு பொன்னின் நாட்டவர் கொற்றவன் இருந்துழிக் குறுகி நாடியே சொற்றிடுவீர் எனச் சூரன் தூண்டினான். |
19 |
|
|
|
|
|
|
|
2907.
| தோடு அவிழ் தெரியலான் தூண்ட ஒற்றர்கள் ஓடினர் வீற்று வீற்று உலகம் எங்கணும் தேடினர் காண்கிலர் திரிகுற்றார் இனி நீடிய பொன் நகர் நிகழ்ச்சி கூறுகேன். |
20 |
|
|
|
|
|
|
|
2908.
|
செல் எனும் ஊர்தி அண்ணல் தேவியும் தானும் நீங்கச்
சொல் அரும் ககனம் பூத்த சோமனும் உடுவும் போன
எல்லியம் பொழுது போன்றே யாதும் ஓர் சிறப்பும்
இன்றாய்ப்
புல் எனல் ஆயது அன்றே பொருவில் பொன் நகரம்
எல்லாம். |
21 |
|
|
|
|
|
|
|
2909.
|
அழிந்தன வளங்கள் எல்லாம் ஆகுலம் மயங்கிற்று இன்பம்
ஒழிந்தது வானோர் உள்ளம் ஒடுங்கியது உலகம் எங்கும்
எழுந்தது புலம்பல் ஓதை யாவர் தம் கண்ணும் தெண்ணீர்
பொழிந்தது சுவர்க்கம் ஆவி போனவர் போன்றது
அன்றே. |
22 |
|
|
|
|
|
|
|
2910.
|
இன்னனம் நிகழும் முன்னர் இந்திரன் இளவல் ஆகி
மன்னிய உபேந்திரன் தான் வானவர் உலகை நீங்கி முன்னை வைகுண்டம் புக்கான் முனிவரர் கலிக்கா வஞ்சிக் கன்னிகை நோற்று மேவும் காஞ்சியை அடைந்த வாபோல். |
23 |
|
|
|
|
|
|
|
2911.
|
சேண் பதம் தன்னை நீங்கும் சிறயதோர் தந்தை
தன்னைக்
காண்பது கருதிப் போந்து கடவுளர்க் கிறைவன்
மைந்தன்
தூண் புரை கின்ற செம் பொன் தோள் உடைச்
சயந்தன் என்போன்
மாண் பொடு சிறிது வைகல் வைகுண்டத்து
இருந்தான் அன்றே. |
24 |
|
|
|
|
|
|
|
2912.
|
இருந்திடு சயந்தன் என்போன் இந்திரன் இறைவி யோடும்
கரந்துடன் போந்த வாறும் காமரு துறக்கம் தன்னில்
விரைந்து வந்து அவுணர் தேடி மீண்டிட
விண்ணுளோர்கள்
அரந்தையோடு உற்ற வாறும் அங்ஙனம் தேர்ந்தான்
அம்மா.
|
25 |
|
|
|
|
|
|
|
2913.
|
தந்தை தன் மெலிவு காணில் தம் குடித் தலைமை
எல்லாம்
மைந்தர்கள் பரித்துக் கோடல் வழக்கம் தாம் அறனும்
அஃதே
எந்தையும் இல்லை யான் போய் என் நகர் காப்பன்
என்னாப்
புந்தியில் உன்னி மைந்தன் பொன் நகர் தன்னில்
வந்தான்.
|
26 |
|
|
|
|
|
|
|
2914.
|
பொன் நகர் புக்க மைந்தன் புலம்பு உறு சுரரைக் கண்டு
தன் உயிர் போலும் தந்தை தாய் தனைக் காணான் ஆகி இன்னல் அம் கடலின் மூழ்கி ஏக்கமோடு இரக்கம் மிக்குப் பின் ஒரு செயலும் இன்றிப் பித்தரே போல உற்றான். |
27 |
|
|
|
|
|
|
|
2915.
|
உற்றிடும் எல்லை தன்னில் உம்பர் கோன் மதலை உள்ளம்
தெற்று எனத் தெளிப்ப உன்னி நாரதன் என்னும் சீர் சால் நல் தவ முனிவன் செல்ல நடுக்கமோடு எழுந்து தாழ்ந்து மற்று ஒரு தவிசு நல்கி இருத்தியே மருங்கு நின்றான். |
28 |
|
|
|
|
|
|
|
2916.
|
நின்றிடு சயந்தன் சொல்வான் நித்தலும் வருத்தம் செய்யும்
வன் திறல் சூரற்கு அஞ்சி மற்று எனைப்பயந்த மேலோர்
சென்றனர் சென்ற எல்லை தெரிந்திலேன் எமக்குத் தீமை
என்று இனி அகலும் கொல்லோ எம்பிரான் இயம்புக
என்றான். |
29 |
|
|
|
|
|
|
|
2917.
|
தருக்கினை இழந்து நின்ற சயந்தன் இத்தன்மை கூறப்
பொருக்கு என முனிவன் ஓர்ந்து பொங்கு பேர்
அருளால் நோக்கித்
திருக்கிளர்கின்றது ஆங்கு ஓர் செழுமணித் தவிசின்
மீதில்
இருக்க என இருத்திப் பின்னர் இன்னன இசைக்கல்
உற்றான். |
30 |
|
|
|
|
|
|
|
2918.
|
தீங்கு வந்து அடையு மாறும் நன்மை தான் சேரு மாறும்
தாங்கள் செய் வினையினாலே தத் தமக்கு ஆய அல்லால் ஆங்கு அவை பிறரால் வாரா அமுதநஞ்சு இரண்டினுக்கும் ஓங்கிய சுவையின் பேதம் உதவினார் சிலரும் உண்டோ. |
31 |
|
|
|
|
|
|
|
2919.
|
இன்பம் அது அடைந்த காலை இனிது என மகிழ்ச்சி
எய்தார்
துன்பம் அது உற்ற போதும் துண் எனத் துளங்கிச்
சோரார்
இன்பமும் துன்பம் தானும் இவ் உடற்கு இயைந்த
என்றே
முன்பு உறு தொடர்பை ஓர்வார் முழுவதும் உணர்ந்த
நீரார்.
|
32 |
|
|
|
|
|
|
|
2920.
|
வறியவர் செல்வர் ஆவர் செல்வர் பின் வறியர் ஆவர்
சிறியவர் உயர்ந்தோர் ஆவர் உயர்ந்து உளோர் சிறியர்
ஆவர்
முறை முறை நிகழும் ஈது முன்னை ஊழ் வினையே
கண்டாய்
எறிகதிர் வழங்கும் ஞாலத்து இயற்கையும் இனையது
அன்றே. |
33 |
|
|
|
|
|
|
|
2921.
|
ஆக்கமும் வறுமை தானும் அல்லலும் மகிழ்வும் எல்லாம்
நீக்கம் இல் உயிர் கட்கு என்றும் நிலை எனக்
கொள்ளல் பாற்றோ
மேக்குயர் கடவுள் திங்கள் வெண் நிலாக் கதிரின் கற்றை
போக்கொடு வரவு நாளும் முறை முறை பொருந்திற்று
அன்றே. |
34 |
|
|
|
|
|
|
|
2922.
| ஆதலின் உமது தாழ்வும் அவுணர்தம் உயர்வும் நில்லா ஈது மெய் என்று கோடி இந்நகர் தணந்து போன தாதையும் பயந்த தாயும் தம் உருக் கரந்து போந்து மேதினி வரைப்பின் ஊடு மேவினர் போலும் அன்றே. |
35 |
|
|
|
|
|
|
|
2923.
|
மைந்த நீ தோற்று முன்னம் வானவர்க்கு அலக்கண்
செய்த
தந்தியின் முகம் கொண்டு உற்ற தானவன் துஞ்சும்
வண்ணம்
அந்த நாள் உனது தந்தை முயன்றனன் அதனைப் போல
இந்த வெம் சூரன் மாயம் இன்னமும் முயல்வன் கண்டாய். |
36 |
|
|
|
|
|
|
|
2924.
|
என்று இவை பலவும் கூறி இன் இனி வெம் சூர் தானும்
பொன்றிடும் உமது துன்பும் பொள் என அகன்று போகும் நன்று இது துணிதி என்றே நாரத முனிவன் தேற்றிச் சென்றனன் சயந்தன் அங்கண் இருந்தனன் தெட்பம் எய்தி. |
37 |
|
|
|
|
|
|
|
2925.
|
வருந்திய அமரர் தம்மை மனப்படத் தேற்றி நாளும்
திருந்தலன் பணித்த ஏவல் செய்திடத் தூண்டி வான்மேல்
இருந்தனன் சயந்தன் என்போன் இருநிலத்து இடை
முன் போன
புரந்தரன் செய்த தன்மை யான் இனிப் புகலுகின்றேன். |
38 |
|
|
|
|
|
|
|
2926.
|
மெய்த்தரு நீழல் வைகும் வெறுக்கையை வெறுத்துப்
பாரில்
சித்திர மனைவியோடும் தெக்கிண தேயம் புக்குப்
பத்துடன் இரண்டு நாமம் படைத்த தொல் காழி நண்ணி
இத்தலம் இனிதே என்னா இருந்தனன் இமையோர்
கோமான். |
39 |
|
|
|
|
|
|
|
2927.
|
அந்த நல் இருக்கை தன்னில் அயர் உயிர்த்து
இறைவியோடும்
இந்திரன் இருந்த பின்னர் என்று நாம் இறைவற்
போற்றிப்
புந்தி கொள் மகிழ்வால் பூசை புரிதும் என்று உன்னி
ஆண்டு
ஓர்
நந்தன வனத்தை வைப்பான் நாடியே இனைய செய்வான். |
40 |
|
|
|
|
|
|
|
2928.
|
சந்தம் அகில் பலவும் தேமாச் சரளமே திலகம் தேக்குக்
கொந்து அவிழ் அசோகு புன்கு குரவொடு நாளி கேரம் நந்திய கதலி கன்னல் நாகு இளம் பூகம் வன்னி முந்து உயர் காஞ்சி வேங்கை முதலிய வேலி கோலி. |
41 |
|
|
|
|
|
|
|
2929.
|
சாதியே கோங்கு நாகம் சண்பகம் இதழி ஞாழல்
பாதிரி வழையே குந்தம் பாரிசாதம் செருந்தி
போதுறு நரந்தம் வில்வம் பொலிகர வீரம் செச்சை
கோது அறு மயிலை மௌவல் கொழுந்து செவ்வந்தி
முல்லை.
|
42 |
|
|
|
|
|
|
|
2930.
|
இவை முதல் ஆகி உள்ள தருக்களும் புதலும் எல்லாம்
நவை அறம் தெரிந்து வைத்து ஓர் நந்தன வனத்தைச்
செய்ய
அவை மிக மலர்ந்த அம்மா அம்மலர் கொண்டு நாளும்
சிவன் அடி அருச்சித்து அங்கண் தேவியோடு இறைவன்
உற்றான். |
43 |
|
|
|
|
|
|
|
2931.
|
உற்றிடும் எல்லை தன்னில் உலகினில் அவுணர்க்கு
எல்லாம்
கொற்றவன் விடுத்த ஒற்றர் குவலயம் துருவிச் செல்ல
அற்றது தெரிந்து வல்லே அமரர்கோன் துணைவி யோடு
மற்று அவண் வேணுவாகி மறைந்து நோற்று இருந்தான்
மாதோ. |
44 |
|
|
|
|
|
|
|
2932.
|
வேணுவின் உருப்போல் நின்று மொலிவொடு நோற்று
நாளும்
தாணுவை வழிபட்டு அங்கண் சதமகன் சாரும் நாளில்
காணிலர் ஒற்றர் போனார் கருமுகில் அவுணர் தங்கள்
ஆணையில் பெய்யாது ஆக அவ்வனம் வாடிற்று அன்றே. |
45 |
|
|
|
|
|
|
|
2933.
|
நீடிய காமர் பூங்கா நெருப்பு உறு தன்மைத்து என்ன
வாடின நீர் இன்றாகி மற்றது மகத்தின் கோமான்
நாடினன் கவன்று தொல் நாள் நான் முகத்தவனும் மாலும்
தேட அரும் பரனை உன்னி இரங்கினன் செயல் வேறு
இல்லான். |
46 |
|
|
|
|
|
|
|
2934.
|
திருந்தலர் புரம் மூன்று அட்ட சேவகன் பரவலோடும்
பொருந்து அலர் பூங்கா வாடிப் போயின எனினும்
பொன்றா
இரும் தலம் இதனில் ஆறு ஒன்று எய்தும் ஆல்
மகவான் இன்னே
வரும் தலை என்று ஓர் மாற்றம் வானிடை எழுந்தது
அன்றே.
|
47 |
|
|
|
|
|
|
|
2935.
|
எழுவது ஓர் செம் சொல் கேளா எம்பிரான் அருள்
ஈது என்னாத்
தொழுதனன் போற்றி மேனி துண் எனப் பொடிப்பச்
சிந்தை
முழுவதும் மகிழ்ச்சி பொங்க மொய்ம்பொடே
இருந்தான் அங்கண்
அழகிய நதி ஒன்று உற்ற வரன் முறை அறையல்
உற்றேன். |
48 |
|
|
|
|
|
|