விந்தகிரிப் படலம்
 
2936.
அந்தப் பொழுதத்து அளி கொண்டு உடையோர்
சிந்தைக்கு எளிதாம் சிவன் மெய் அருளான்
முந்து உற்று உணர் நாரத மா முனிவன்
விந்தக் கிரி முன் உற மேவினன் ஆல்.
1
   
2937.
மேவிப் பல ஆசி விளம்புதலும்
தேவப் படிவம் கொள் சிலம்பு தொழா
ஆ அற்புதம் வந்தது எம் அண்ணல் என
ஏவப்படும் பான்மை இசைத் திடுவான்.
2
   
2938.
மேருத் தனி வெற்பு விதிக் கரியோன்
மூரிச் சிலை ஆகிய மொய்ம்பு அதனால்
தாரித்து உலகு ஈன்றவள் தன் மரபால்
பேர் அன்பொடு வந்து பிறக்கையினால்.
3
   
2939.
குன்றுக்கு இறையாய் உறு கொள்கையினால்
என்றைத் தொட விண்ணில் எழுந்து உறலால்
இன்றிப் புவி யாவையும் நித்தன் அடும்
அன்றைப் பகல் காறும் அளித்திடலால்.
4
   
2940.
ஓர் ஆயிரம் ஆம் முடி உள்ளது அதனால்
காரார் களன் மேய கவின் கயிலை
சாரா ஒரு சார் உறு தன்மையினால்
சூரான் அவனால் தொலைவில் அதனால்.
5
   
2941.
தாழும் கதிரும் தகு மேல் நெறியில்
வாழும் சசியும் மலிதாரகையும்
ஏழ் என்றிடும் கோளும் யாவர்களும்
சூழும் படி நின்றிடும் தொன்மையினால்.
6
   
2942.
கொன்னே இமையோர் குடி கொண்டு அதனால்
பொன் நேர் கொடு உயர்ந்து பொருந்துதலால்
பல் நேமிகள் சூழ் வரு பான்மையினால்
தன் நேர் இலை என்று தருக்கியதே.
7
   
2943.
பரந்தும் பர் நிமிர்ந்திடும் பைம் பொன் வரை
பெரும் தன்மை மதித்திடும் பெற்றியை நீ
தெரிந்திலை கொல் அன்ன செயற்கை எலாம்
விரைந்து உன்னொடு செப்பிய மேவினனே.
8
   
2944.
என்றான் முனிவோன் இது கேட்டிடலும்
ஒன்று ஆகியதே உருவாய் எதிரும்
வன் தாழ் கிரிமா மறம் உற்று உயிரா
நன்றால் இஃது என்று நகைத்து அறையும்.
9
   
2945.
இல்லாய் உள தொல் இறுமாப்பு அகலப்
பல்லார் இகழப் பகரும் விதியான்
அல்லார் எனவே நனி நாணம் உறா
வில்லாகி வளைந்தது மேன்மை அதோ.
10
   
2946.
பொன் ஆர் இமவான் புரி நோன்பு அதனால்
அன்னான் இடை வந்து அமர் உற்றனள் ஆல்
மன்னாகும் அவன் மகள் ஆயினளோ
எந்நாளும் யாரையும் ஈன்று அருள்வாள்.
11
   
2947.
பாங்கு உற்றிடும் பாரினை ஆற்றுவன் என்று
ஓங்கு உற்றனன் எவ்வுலகும் பரியா
ஆங்கு உற்றனவோ பல அன்னவையும்
தாங்கு உற்றது கண் நுதல் சத்தி அதே.
12
   
2948.
வில் சூழ் கதிரோன் முதல் விண்ணவர்கள்
தன் சூழ்ந்தனர் அல்லது சந்ததமும்
எல் சூழ்ந்து இலரோ எழுதீ உளவாம்
கல் சூழ்ந்து இலரோ கடல் சூழ்ந்து இலரோ.
13
   
2949.
பன்னில் குவடும் பல உண்டு எனவே
உன் உற்றிடுமோ உயர் கள்ளிகளின்
சென்னித் தொகையைத் தெரிசிக்கின் அயன்
தன் ஒத்து இலனோ தலை நான்கு உளவே.
14
   
2950.
கடிது ஆகிய சூர் இது கல் எனவே
அடராமல் விடுத்தனன் அன்று அதனை
நெடிதே அது உன்னிலன் நீள் பரிதிப்
படையானினும் ஆற்றல் படைத்துளனோ.
15
   
2951.
தண் உற்றிடும் பொன்மை தயங்கு உருவம்
நண் உற்றனம் என்று உளம் நாடினனோ
எண் உற்றவன் நல் உணர்வு எய்திலன் ஆன்
மண்ணில் புனை பாவை வனப்பு அதுவே.
16
   
2952.
தன் கண் உறு வானவர் தாம் பலரும்
என் கண் அமராமல் இகழ்ந்தனரோ
நன் கண் நுதல் நாயகனார் கயிலை
இன் கண் அருகு உற்றிலது எக்கிரியே.
17
   
2953.
திருவைத் தவர்கண் துயில் செம் கண் அரா
மருவித் தனை முந்து மறைத்திடு நாள்
விரைவில் படர் ஊதை வெகுண்டு பறித்து
ஒரு முத்தலை கொண்டது உணர்ந்திலனோ.
18
   
2954.
கிளர்ப்பு உற்றிடும் சிம்புள் ஒர் கேசரி முன்
அளப்பற்று இடு தன் உரு அண்டம் எல்லாம்
வளர்ப்பு உற்றிடும் ஞான்று ஒர் மணிப் பரல் போல்
குளப்பு உற்றனன் ஈது குறித்திலனோ.
19
   
2955.
வரபத்திரை கேள் வன் மறம் புரியும்
சரபத்து உரு உற்றுழி தாழ் சிறையின்
விரவிப் படர் ஊதையின் மின் மினி போல்
திரிகு உற்றனன் அன்னது தேற்றிலனோ.
20
   
2956.
அறி உற்றிடும் பாரதம் ஆன எலாம்
குறி உற்றிடும் தோல் முகர் குஞ்சரன் மேல்
எறி உற்ற மருப்பினில் ஏடு எனலாய்ப்
பொறி உற்றிடும் என்பது பொய்த்திடுமோ.
21
   
2957.
தான் ஓர் வரை அல்லது தாரணி உண்
கோனோ அலன் அல்லது கோ கதை
வானோன் அலன் வாசவன் அல்லன் அவன்
ஏனோ தனைமேல் என எண்ணியதே.
22
   
2958.
என்னா வட வெற்பை இழித்து உரையா
அந் நாகம் வியக்கும் அகந்தையினை
நல் நாரத நீக்குவன் நாடுக எனா
முன்னா உருநீத்தது மொய் வரையே.
23
   
2959.
எண் தரு முகுந்தர் கோடி எல்லையின் மாயை யாக்கை
கொண்டனர் திரண்டு நீண்டு குலாய் நிமிர்
                            கொள்கைத்து என்ன
விண் தொடர் விந்தம் ஆங்கு ஓர் விஞ்சையால்
                          அகன்று சேண் போய்ப்
புண்டரி கத்தன் மேய புரத்துணை நிமிர்ந்தது அன்றே.
24
   
2960.
உருக்கிளர் விந்தம் என்னும் உருகெழு பிறங்கல் மேல்
                                      போய்ப்
பரக்கம் அது ஆகி அம் பொன் பனிவரை காறும்
                                       ஆன்று
நெருக்கியது அனைய பான்மை நிலம் முழுதும் அளந்த
                                     மேலோன்
திருக்கிளர் பொன்னந் தூசு புனைந்து எனத் திகழ்ந்தது
                                      அம்மா.
25
   
2961.
விந்தம் இந் நெறியால் ஆன்று மேக்கு உறக் கிளர்ந்து
                                       போகி
அந்தர நெறியை மாற்ற அலரி வெண்திங்கள் சேயோன்
புந்தி பொன் புகரே காரி புயங்க நாள் பிறரும் நோக்கிச்
சிந்தையில் துணுக்கம் எய்தி இனையன செப்பல் உற்றார்.
26
   
2962.
தானவர் செயலோ என்பார் தருமம் இல் அரக்க
                               வெய்யோன்
ஆனவர் செயலோ என்பார் அல்ல வேல் அயன்மால்
                                     என்னும்
வானவர் செயலோ என்பார் மாயம் மீது ஆகும் என்பார்
மேல் நிமிர் பிறங்கல் இன்றி வெள்ளிடை இலை கொல்
                                      என்பார்.
27
   
2963.
என் இது என்று போதத்து எம்பிரான் அருளால் நாட
அன்னது தெரித லோடும் ஆம் இது விந்த மேருத்
தன்னுடன் இகல் ஒன்று உண்டாய் தராதல வரைப்பில்
                                      வானில்
சென்னெறி விலக்கிற்று என்று சிந்தனை செய்து தேர்வார்.
28
   
2964.
செம்பொன் மால் வரையின் பாங்கில் சிவன் அடி
                           உன்னி நோற்றே
அம்புராசியை முன் உண்டோன் அமர்ந்தனன் அவன்
                               ஈண்டு உற்றால்
உம்பர் போய் நின்ற விந்தம் ஒடுங்கும் என்று யாரும்
                                     ஓர்ந்து
கும்பமா முனியை உன்னி இனையன கூறல் உற்றார்.
29