முகப்பு |
இந்திரன் அருச்சனைப் படலம்
|
|
|
3137.
|
கொடி உருக் கொண்டு முன்னம் குண்டிகை இருந்த
பிள்ளை
படி மிசை அதனைத் தள்ளப் படர்ந்த காவிரியின்
தன்மை
விடல் அரும் தளையின் நீக்கி வியன் நெறிப்
படுத்தலோடும்
அடிகளின் அருளால் செல்லும் ஆர் உயிர் போன்றது
அன்றே. |
1 |
|
|
|
|
|
|
|
3138.
|
பண்டு ஒரு தந்தி ஆனோன் படர் சிறைப் புள்ளாய்த்
தள்ளக்
குண்டிகை இருந்த நீத்தம் குவலயம் படர்ந்த பான்மை
எண்டருந் தடையால் வல்லோன் இரும் கடத்து இட்ட
பாந்தள்
மண்டலத்து ஒருவன் நீப்ப வழிக் கொளல் போன்றது
அன்றே. |
2 |
|
|
|
|
|
|
|
3139.
|
ஏதத்தின் ஒழுக்கு நீக்கும் இறைவன் நூல் ஒழுக்கும்
தொல்லை
வேதத்தின் ஒழுக்கும் நோற்று வீட்டினை அடையும்
நீரார்
போதத்தின் ஒழுக்கும் எம் கோன் புரிதரு கருணை
என்னும்
ஓதத்தின் ஒழுக்கும் என்னக் காவிரி ஓடிற்று அன்றே. |
3 |
|
|
|
|
|
|
|
3140.
|
தள் அரும் பரவை ஏழும் தரணியைச் சூழ்ந்து நின்ற
உள் உறு தொடர்பு நாடி யாவையும் ஒருங்கு நண்ணிப்
பொள் எனப் புகுந்தது என்னப் புவி எலாம் பரவி
ஆர்த்துத்
தெள்ளிதில் கலங்கி நீத்தம் தெளிகிலாது ஒழுகிற்றாம்
ஆல். |
4 |
|
|
|
|
|
|
|
3141.
|
தெண் திரைப் புணரி எல்லாம் தினைத் துணையாக வாரி
உண்டருள் முனிவன் தீர்த்தம் ஒன்றினை வேண்டும்
எல்லை
அண்டர்தம் பெருமான் நல்க அன்னவன் கரத்தில் ஏந்தும்
குண்டிகைப் புனற்கு நேராக் கூறுதற்கு உவமை உண்டோ. |
5 |
|
|
|
|
|
|
|
3142.
|
தொல்லையில் குறியோன் வந்தான் துய்க்குமோ
இன்னும் என்னா
வல்லையில் தழைகள் பற்றி வாரிதி கூவிப் பாரின்
எல்லையில் படர்ந்தது என்ன இலை செறி பொதும்பர்
ஈட்டம்
ஒல்லையில் பரித்து மேல் கொண்டு ஓடியது ஒலிகொள்
நீத்தம். |
6 |
|
|
|
|
|
|
|
3143.
|
சந்தமும் அகிலும் சங்கும் தரளமும் கவரி தானும்
சிந்துரத்து எயிறும் பொன்னும் மணிகளும் திரை மேல்
கொண்டு
வந்து இழி நதியின் தன்மை வருணன் இப் பொருள்கள்
எல்லாம்
இந்திரன் தன்பால் ஓச்ச ஏகுதல் போன்ற மாதோ. |
7 |
|
|
|
|
|
|
|
3144.
|
வரை எனும் தடம் பொன் தேரும் மதகரித் தொகையும்
மாந்தர்
நிரைகளும் தரங்க மாவும் நெறிக் கொடு மகவான்
தன்பால்
விரைவொடு சேறல் சூரன் விண்ணவர்க்கு அரசன் மீது
பொரவிடு தானை வெள்ளம் போவன போன்றது அன்றே. |
8 |
|
|
|
|
|
|
|
3145.
|
ஆவது ஓர் இனைய வாற்றால் அலையினால் அகல்
வான் முட்டிக்
காவதம் பலவாய் ஆன்று காசினி அளந்து கீழ்பால்
போவது ஓர் பொன்னி நீத்தம் புரந்தரன் இருந்து
நோற்கும்
தாவறு வனத்தில் போதார் தண்டலை புகுந்தது அன்றே. |
9 |
|
|
|
|
|
|
|
3146.
|
ஓடு நீர் நீத்தப் பொன்னி ஒல்லையில் காமர் காவில்
பீடு உற வருதலோடும் பேதுறு மகவான் காணா
ஆடினான் நகைத்தான் எம் கோன் அருச்சனை
முடிந்தது என்று
பாடினான் முதல்வன் தாளைப் பரவினான் படர்ச்சி
தீர்ந்தான். |
10 |
|
|
|
|
|
|
|
3147.
|
சீரினை அகற்றி நீங்காத் திருவினை மாற்றித் தொல்பேர்
ஊரினைக் கவர்ந்து தன் ஓர் உயிருக்கும் இறுதி நாடும்
சூரனை வென்றால் என்னத் தொலைவு இலா மதர்ப்பு
மிக்கான்
ஆரவன் உளத்தில் கொண்ட உவகையை அறைதற்
பாலார்.
|
11 |
|
|
|
|
|
|
|
3148.
|
பாடு உறு பொன்னி நீத்தம் பாய்தலும் மகவானே போல்
வாடு உறுகின்ற தண்கா வல்லையில் கிளர்ச்சி எய்தி
ஆடுறு பசி நோய் உற்றோர் அரும் பெறல் அமிர்தம்
வந்து
கூடுற நுகர்ந்தால் என்ன குளிர்ப்பொடு தளிர்த்தது
அன்றே. |
12 |
|
|
|
|
|
|
|
3149.
|
வான் நிறைகின்ற கொண்மூ வார் துளி தலைஇய பின்றைக்
கான் நிறை மரனும் பூடும் வல்லியும் கவின்றால் என்ன மேல் நிறை அடைகள் மல்கி விரிதரு சினையும் போதும் தான் நிறை கின்றது அம்மா சதமகன் வளர்த்த பூங்கா. |
13 |
|
|
|
|
|
|
|
3150.
|
வானிலம் அளவிட வளர்ந்த புன்னைகள்
ஆனவை முழுவதும் அரும்புகின்றன தூ நகை நிலத்தில் அத் தொடையல் மெய்யுடை நீல் நிற மாயவன் நிலைஇயது ஒக்கும் ஆல். |
14 |
|
|
|
|
|
|
|
3151.
| தண் உறு பாசடை தயங்கு புன்னைகள் கண் உறு வியன் சினை கவினப் பூத்தன எண் உறு தாரகை ஈண்டி மொய்த்திட விண் உறு முகில் இனம் விளங்கிற்று என்னவே. |
15 |
|
|
|
|
|
|
|
3152.
| பண்படும் அளி இனம் பயில் உறாதன சண்பக அணிமரம் தயங்கிப் பூத்தன எண்படு தபனியத்து இயன்ற போதினை விண் படு தருக்கொடு மேவல் போன்றவே. |
16 |
|
|
|
|
|
|
|
3153.
| புயல் படலம் தொடும் புது மென் பாடலம் வியல் பட மலர்ந்த பூ விழுமென் வண்டினம் அயல் பட ஊதுவான் வயந்தக் கம்மியன் செயல் படு மணிச்சிறு சின்னம் போலும் ஆல். |
17 |
|
|
|
|
|
|
|
3154.
| விண் தொடர் மதி கதிர் மிளிரும் தாரகை கண்டிட வைகலும் கணிப்பில் கண்ணடி மண்டல நிரைத்து மண் மாது வைத்து எனக் கொண்டலை அளவிய கோங்கு பூத்தவே. |
18 |
|
|
|
|
|
|
|
3155.
| மா மலர்க் கொன்றையும் மணி மென் பூவையும் தாம் இருபுடை உறத் தளிர்த்த செய்யமா ஏமுறு மால் அயன் இடையில் வந்து எழு தோமறு பரம் சுடர்த் தோற்றம் போன்றவே. |
19 |
|
|
|
|
|
|
|
3156.
| ஆதவன் மீது போய் அசையும் தாழைகள் மேதகு பாளைகள் மிசை தந்து உற்றன பூதலம் அணங்கினார் புனைய நீட்டிய கோது அறு நித்திலக் கோவை போன்றவே. |
20 |
|
|
|
|
|
|
|
3157.
|
வச்சிர மேனிய வரை கொள் காட்சிய
பச்சிளம் பூகம் வெண்பாளை கான்றன நச்சுறு சோலையா நங்கைக்கு எண் இலார் எச்சம் இல் சாமரை இரட்ட ஏந்தல் போல். |
21 |
|
|
|
|
|
|
|
3158.
| மேல் திகழ் செம்கர வீரம் ஆனவை ஆற்றவும் சினை தொறும் அரும்பு கின்றன நால் தடம் புயம் உடை நாதற்கு இந்திரன் ஏற்றிய மணிச் சுடர் என்னல் ஆயதே. |
22 |
|
|
|
|
|
|
|
3159.
| அல் இடை அன்றியே அலர்ந்த மாலதி வல்லிகள் தரு வெனும் மகிழ்நர் தங்களைப் புல்லுவ பகலினும் பொருந்துமோ எனா முல்லைகள் மலர்ந்தன முறுவல் செய்வபோல். |
23 |
|
|
|
|
|
|
|
3160.
| ஆசறு வாவியில் அலர்ந்த காவிகள் பாசடை இடை இடை பரவு கின்றன தேசு உறு தரு நிழல் திருவில் துஞ்சிய வாசவன் விழிகளின் மல்கு கின்றவே. |
24 |
|
|
|
|
|
|
|
3161.
| தொல்லையின் முறைநெறி ஒருவித்து ஓயமேல் வல்லையில் அங்கிகள் வந்து உற்று ஆல் என அல்லியும் சேயன அரத்த ஆம்பலும் புல்லிய கிடங்கினில் பொலிந்து பூத்தவே. |
25 |
|
|
|
|
|
|
|
3162.
| பாய் இரும் புனல் கயம் பரந்த பாசடை ஆயின இடை இடை அவிழ்ந்த பங்கயச் சேய் அலர் வண்டினம் திளைப்பச் சேர்வன காயெரி புகையொடு கானம் புக்கபோல். |
26 |
|
|
|
|
|
|
|
3163.
| எண்ணும் இத் தருக்களும் கொடியும் ஏனவும் கண் உற மலர்வதும் அரும்பும் காட்சியும் வண்ணம் அது எற்று எனின் மாலைச் செக்கரும் விண் உறும் உடுக்களும் விரவிற்று ஒக்கும் ஆல். |
27 |
|
|
|
|
|
|
|
3164.
| இந்திரன் மகிழ்வுற இனைய பான்மையால் நந்தன வனம் எலாம் நன்று பூத்தலும் அந்த நன் மலர் கொடே ஆதிக்கு அன்பினால் முந்துறு பூசனை முயல முன்னினான். |
28 |
|
|
|
|
|
|
|
3165.
| விடியல் வைகறை தனின் மேவி வண்டுதேன் புடை உறு முன்னரே புரை இலாதது ஓர் கடி மலர் கொய்தனன் கொணர்ந்து கண் நுதல் அடிகளில் விதி முறை அருச்சித்தான் அரோ. |
29 |
|
|
|
|
|
|
|
3166.
| அப்பெரு நாண்முதல் ஆதி அண்ணலை இப்படி அருச்சனை இயற்றி வைகலும் ஒப்பற நோற்றரோ உம்பர் கோமகன் வைப்பு உறு சண்பக வனத்தின் வைகினான். |
30 |
|
|
|
|
|
|