முகப்பு |
அசமுகி சோகப் படலம்
|
|
|
3387.
|
அறைபடு கழலினான் அவுண மாதர் கை
எறிதலும் குருதி நீர் எழுந்த தன்மையால் திறல் கெழு வெய்ய சூர் திருவைச் சுட்டிடும் குறை படு ஞெகிழியின் கோலம் போலுமே. |
1 |
|
|
|
|
|
|
|
3388.
| திரைந்து எழு குடிஞை போல் குருதி சென்றிடக் கரம் துமி படுதலும் கவன்று வீழ்ந்தனள் வருந்தினள் அரற்றினள் மறி முகத்தினாள் விரிந்திடு கனல் உடை வேலை போன்று உளாள். |
2 |
|
|
|
|
|
|
|
3389.
| மருண்டனள் பதைத்தனள் மறித்த கையினள் வெருண்டனள் நிலன் உற வியன் கை எற்றினள் உருண்டனள் வெரி நுடன் உரமும் தேய் உறப் புரண்டனள் செக்கரில் புயலில் தோன்றுவாள். |
3 |
|
|
|
|
|
|
|
3390.
| புரந்தரன் தேவியைப் பொம் எனப் பிடித் துரந்தரு வாயிலில் இட்டு உண்பன் ஈண்டு எனா விரைந்து எழும் சென்றிடும் மீளும் வீழ்ந்திடும் இருந்திடும் சாய்ந்திடும் இரங்கும் சோருமே. |
4 |
|
|
|
|
|
|
|
3391.
| கடித்திடும் இதழினைக் கறை கண் மீச்செலக் குடித்திடும் உமிழ்ந்திடும் குவலயத்து இரீஇத் துடித்திடும் பெயர்ந்திடும் துளக்கும் சென்னியை இடித்து எனக் கறித்திடும் எயிற்றின் மாலையே. |
5 |
|
|
|
|
|
|
|
3392.
| திகைத்திடும் நன்று நம் செய்கை ஈது எனா நகைத்திடும் அங்குலி நாசியில் தொடும் புகைத்து என உயிர்த்திடும் புவியைத் தாள்களால் உகைத்திடும் புகை அழல் உமிழும் வாயினால். |
6 |
|
|
|
|
|
|
|
3393.
| உம் என உரப்பிடும் உருமுக் கான்று என விம் எனச் சினத்திடும் எரி விழித்திடும் தெம் முனைப் படை அடும் சேனை வீரனை விம்மிதப் படும் உடல் வியர்க்கும் வெள்குமே. |
7 |
|
|
|
|
|
|
|
3394.
| அற்றிடு கரத்தினை அறாத கையினால் தெற்றென எடுத்திடும் தெரிந்து நோக்கிடும் ஒற்றிடும் விழிகளில் உகுக்கும் சோரி நீர் இற்று எவர் பட்டனர் என்னின் என்னுமே. |
8 |
|
|
|
|
|
|
|
3395.
| வீவதே இனி எனும் வினையினேன் தனக்கு ஆவதோ இஃது எனும் ஐயகோ எனும் ஏவரும் புகழ் தரு எங்கள் அண்ணர் பால் போவது எவ்வாறு எனப் புலம்பு கொள்ளுமே. |
9 |
|
|
|
|
|
|
|
3396.
| காசினி தனில் வரும் கணவர் கை தொடக் கூசுவரே எனும் குறிய பங்கு எனப் பேசுவரே எனும் பிறரும் வான் உளோர் ஏசுவரே எனும் என் செய்கேன் எனும். |
10 |
|
|
|
|
|
|
|
3397.
| தேவர்கள் அனைவரும் சிந்தித்து என்கரம் போவது புணர்த்தனர் பொன்றுவேன் இனி ஆவதன் முன்னரே அவரை அட்டு உல கேவையும் முடிப்பன் என்று எண்ணி சீறுமே. |
11 |
|
|
|
|
|
|
|
3398.
| பார் உயிர் முழுவதும் படுத்திடு ஓ எனும் ஆர் அழல் வடவையை அவித்திடோ எனும் பேர் உறு மருத்தினைப் பிடித்திடோ எனும் மேருவை அலைத்தனன் வீட்டு கோ எனும். |
12 |
|
|
|
|
|
|
|
3399.
|
பீள் உறும் எழிலிகள் பிறவும் பற்றியே
மீள அரிது எனும் வகை மிசைந்திடோ எனும் நாளினை முழுவதும் நாள் உடன் வரும் கோளினை முழுவதும் கொறித்திடோ எனும். |
13 |
|
|
|
|
|
|
|
3400.
| சீர்த்தகை இழந்து யான் தெருமந்து உற்றது பார் திகழும் கொல் இப் பரிதி வானவன் ஆர்த்திடும் தேர் ஒடும் அவனைப் பற்றியே ஈர்த்தனன் வருவதற்கு எழுந்திடோ எனும். |
14 |
|
|
|
|
|
|
|
3401.
| கண்டது ஓர் பரிதியைக் கறித்துச் சூழ்ச்சி செய் அண்டர்கள் யாரையும் அடிசில் ஆகவே உண்டு எழு கடலை உறிஞ்சிக் கை புறத் தெண் திரை தனில் கழீஇத் திரும்புகோ எனும். |
15 |
|
|
|
|
|
|
|
3402.
| செம் நலம் நீடிய தென்னம் காய் இடைத் துன்னிய தீம் பயன் சுவைத்திட்டால் எனப் பின் உறு மதியினைப் பிடித்துக் கவ்வி மெய் இன் அமிர்தினை நுகர்ந்து எறிகெனோ எனும். |
16 |
|
|
|
|
|
|
|
3403.
| இந்திரன் களிற்றினை ஏனைத் தந்தியைச் செம் துவர்க் காய் எனச் சேர வாய்க்கொளா ஐந்தரு இலைகளா அவற்றுள் வெண்மலர் வெம் துகளாக் கொடு மிசைக எனோ எனும். |
17 |
|
|
|
|
|
|
|
3404.
| தாக்குகோ பணிகளைத் தலை கிழக்கு உற நீக்குகோ பிலம் படு நிலயத் தோரையும் தூக்குகோ புவனியைச் சுழற்றி மேல் கீழ் ஆக்குகோ மால் என அருந்து கோ எனும். |
18 |
|
|
|
|
|
|
|
3405.
|
ஆரும் அச்சு உற இனையன அசமுகி வெய்யாள்
சூரன் தங்கை மால் உளத்தினள் இறப்பது துணிவாள் பேர் இடும்பையள் தொலை உறா மானமே பிடித்தாள் வீரவன்மையள் ஆதலின் உரைத்தனள் வெகுண்டாள். |
19 |
|
|
|
|
|
|
|
3406.
| வெகுளும் எல்லையில் கண்டனள் துன்முகி வெய்ய தகுவர் தம் குலத்து உதித்தனள் ஆயினும் தகவின் புகுதி சால்பு உணர் புந்தியள் ஆதலில் பொருக்கு என்று இகுளை முந்துற வந்தனள் இனையன இசைத்தாள். |
20 |
|
|
|
|
|
|
|
3407.
| வையம் என் செய்யும் வானகம் என் செயும் மற்றைச் செய்ய வானவர் என் செய்வர் வரைகள் என் செய்யும் ஐய மால் கடல் பிறவும் என் செய்திடும் அவனால் கை இழந்திடின் உலகெலாம் முடிப்பது கடனோ. |
21 |
|
|
|
|
|
|
|
3408.
| பாரும் வானமும் திசைகளும் பல் உயிர்த்தொகையும் சேரவே முடித்திடுவதை நினைந்தனை செய்யின் ஆரும் நின்றனை என் செய்வர் அவை எலாம் உடைய சூரனே உனை முனிந்திடும் அவன் வளம் தொலையும். |
22 |
|
|
|
|
|
|
|
3409.
| ஆதலான் மனத்து ஒன்று நீ எண்ணலை அவுணர் நாதன் ஆகிய வெய்ய சூர் முன்னுற நாம் போய் ஈது எலாம் சொலின் இமையவர் கிளை எலாம் முடிக்கும் போதலே துணிவு என்றனள் பின்னரும் புகல்வாள். |
23 |
|
|
|
|
|
|
|
3410.
|
ஞானம் இல் சிறு விதி நடாத்தும் வேள்வியில்
வானவர் தங்களின் மடந்தை மார்களில் தானவர் தங்களில் தத்தம் மெய்களில் ஊனம் இல்லோரையாம் உரைக்க வல்லமோ. |
24 |
|
|
|
|
|
|
|
3411.
| நினைவருங் கண் நுதல் நிமலற்கே அலால் அனையனை அடைதரும் அறிஞர்க்கே அலால் எனைவகை யோர்க்கும் எவ் உயிர்க்கும் ஏற்பது ஓர் வினைபடும் இழிதுயர் விட்டு நீங்குமோ. |
25 |
|
|
|
|
|
|
|
3412.
| ஆகையின் மங்கை நீ அரற்றல் வெள்கியே சோகமும் கொள்ளலை துயரும் இன்பமும் மோகமும் உயிர்க்கு எலாம் முறையில் கூடும் ஆல் ஏகுதும் எழுக என இயம்பித் தேற்றினாள். |
26 |
|
|
|
|
|
|
|
3413.
|
மொழிந்து துன்முகி தெளித்தலும் நன்று எனா உன்னா
எழுந்து துண் என அசமுகி என்பவள் இலதாய்க் கழிந்த துன்பொடு நின்றது ஓர் சசியினைக் காணூஉ அழிந்த மானம் வெம் தீச் சுட இனையன அறைவாள். |
27 |
|
|
|
|
|
|
|
3414.
| துப்பு உறுத்திய அண்டங்கள் யாவினும் சூரன் வைப்பு உறுத்திய திகிரியும் ஆணையும் வழங்கும் இப்புறத்தினில் ஒளிப்பினும் இது அன்றி அண்டத்து அப்புறத்தினில் ஒளிப்பினும் பிழைப்பு உமக்கு அரிதே. |
28 |
|
|
|
|
|
|
|
3415.
| மறைதல் உற்றிடும் இந்திரன் தன்னை இவ் வனத்தின் உறைதல் உற்றிடும் உன்தனை ஒழிந்த வானவரை இறைதனில் பற்றி ஈர்த்துப் போய் என்னகர் தன்னில் சிறைப் படுத்துவன் திண்ணம் எம் கோமகன் செயலால். |
29 |
|
|
|
|
|
|
|
3416.
|
உங்கள் தம்மை யான் சிறைப் படுத்தேன் எனின் உலகம்
எங்கு மாள்கின்ற சூரபன்மா எனும் இறைவன்
தங்கை அன்றியான் எனது உரம்தனில் எழுந்தனவும்
கொங்கை அன்றியான் பேடியே குறிக்கோள்
என்று அகன்றான். |
30 |
|
|
|
|
|
|