அமரர் சிறை புகு படலம்
 
3572.
எழிலிகள் மொய்த்ததன் இருக்கை போகிய
மழவுறு சூர்மகன் மாறு இலாத பேர்
அழகினை மெய் கொள அணிந்து தொல் படை
விழுமிய கொண்டனன் மிலைச்சித் தும்பையே.
1
   
3573.
இருவகைப் பத்து நூறு இவுளி பூண்டிடும்
ஒரு தனித் தேர்தனை ஒல்லை ஊர்ந்து ராய்த்
திரு முதல் கடைதனில் செல்லும் எல்லையில்
விரைவினில் சுற்றின அனிக வெள்ளமே.
2
   
3574.
நிரைத்து எழு தானவர் நீத்தம் ஆயிரம்
பரித் தொகை அன்னதே பாதி தேர் கரி
உரைத்த அத்தானையோடு ஒல்லை ஏகினான்
திருத்தகும் இரவியைச் சிறையில் வீட்டினான்.
3
   
3575.
கிளர்ந்தன தூளிகள் கெழீஇய வீரர் தோள்
வளர்ந்தன அவர் அணி மாலையில் படீஇ
உளர்ந்தன வண்டினம் உம்பர் தம்மனம்
தளர்ந்தன நெளிந்தனன் தரிக்கும் சேடனே.
4
   
3576.
பொள் என ஆண்டு எழு பூழி பாரினும்
தள்ளரும் விசும்பினும் நிரந்த தானவர்
எள் உறும் அமரர் தம் இருக்கை நாடிய
உள்ளொடு பவத்துகள் ஒருங்கு சென்ற போல்.
5
   
3577.
ஏறிய பூழி நாப்பண் ஈண்டிய இவுளி வாயில்
வீறு கொள் களிற்றுக் கையின் விலாழியும் கரிக்க போலத்
தூறிய கடமும் ஒன்றாய் ஒழுகு தன் மழை சூழ் குன்றின்
ஆறுகள் இழிந்து வையத்து அடைவது போலும் அன்றே.
6
   
3578.
பால்நிற முதல ஆய பல்வகை வண்ணத்து உள்ள
கான் நிமிர் துவசக் காடும் கவிகையின் கானும் மொய்த்த
சேனமும் கழுகும் ஏனைச் சிறை கெழுபுள்ளும் வெம்போர்
ஊனுகர் பொருட்டுத் தாமும் உம்பர் உற்று இடுவதே                                    போல்.
7
   
3579.
மண் உறு துகளின் மாலை மகேந்திர மூதூர் முற்றும்
துண் என மறைத்தலோடும் துளங்கியே சூரற்கு அஞ்சி
விண் இடை மதிபல் கோடி மேவல் போல் வெளியே                                     செய்ய
தண் நிழல் கவிகை ஈட்டம் தலைத்தலை ஈண்டிற்று                                     அன்றே.
8
   
3580.
முறை இது நிகழ மைந்தன் முதிய மா நகரம் நீங்கி
அறை கடல் அகழி தாவி அவனியின் எல்லை ஏகிச்
சிறை வரு துன் முகத்துத் தெரிவையை நோக்கி நுங்கை
எறி சுடர் வாளால் இற்றது எவ்விடை இயம்புக என்றான்.
9
   
3581.
என்னலும் குமர கேண்மோ எம்கரம் துணித்து ஓர் வீரன்
மன்னினன் சசியும் உற்றாள் மதுமலர்ப் பொதும்பர் ஒன்றில்
அன்னதும் இஃதே என்று ஓர் அணிவிரல் சுட்டிக் காட்டப்
பன்னிரு பெயர்ச் சீகாழிப் பழுமரக் காவில் சேர்ந்தான்.
10
   
3582.
தேசு உறும் இரவி தன்னைச் செயிர்த்திடு சிறுவன்                                   தானைத்
தூசி முன் சென்று காவைத் தொலைத்து வெள்ளிடைய                                   தாக்க
வாசவன் மனையைக் கூர்வாள் வயவனை நாடிக் காணான்
காசினி யாண்டும் தேர்ந்து காமர் பொன் உலகில்                                   போனான்.
11
   
3583.
அந்நிலை அவுணர்கள் அனிகம் யாவையும்
முன் உற ஏகியே மொய்ப்ப ஆங்கு அவர்
மெய்ந் நிறை மணி வெயில் விரிந்து சூழ்தலால்
பொன்னகர் வேறு ஒர் பொன் நகரம் போன்றதே.
12
   
3584.
எழுந்திடு முனிவினர் இமைக்கும் வெவ் அழல்
வழிந்திடு கண்ணினர் மடித்த வாயினர்
கழிந்திடு திறலினர் ககன வாணர்கள்
அழிந்திடு ஆர்ப்பினர் அவுணர் எய்தினார்.
13
   
3585.
மண்டலமே முதல் வகுத்த வான் கதி
கொண்டிடும் கந்துகக் குழுவின் மாலைகள்
விண் தொடர் செலவினில் விரவு பூழியால்
அண்டமும் புவி என வையம் ஆக்கிய.
14
   
3586.
இலகிய பொன் நகர் எல்லை எங்கணும்
அலை தரு மத நதி ஆக்கி ஆய் இடை
நிலவிய கங்கை மா நீத்தம் யாவும் உண்டு
உலவுதல் உற்றன ஒருத்தல் யானையே.
15
   
3587.
வெம்கரி சொரி மதம் விரும்பும் வண்டினம்
கொங்கு இவர் தரு மலர்க் கூந்தல் வாசத்தால்
அங்கு உள மாதர் மேல் அணுகி வையக
மங்கையர் கொல் என மால் செய்கின்றவே.
16
   
3588.
அற்றம் இல் வலியரைச் சிறியர் ஆயினோர்
பற்றிடின் மேல் நெறிப் பாலர் ஆவரால்
வெற்றி கொள் அவுணர் கோன் வேழத்தின் குழாம்
சுற்றிய பறவையும் துறக்கம் புக்கவே.
17
   
3589.
மன்னவன் ஓடினன் மைந்தனே உளன்
முன் உறு பகையினை முடித்தும் யாம் எனா
இந் நிலவரை எலாம் ஏகிச் சூழ்ந்த போல்
பொன்னகர் வளைந்தன பொலம் பொன் தேர்களே.
18
   
3590.
விடர் நெறி ஒழுகிய வெய்யர் மேலை ஓர்
இடம் உறு மகளிரை எய்திப் பற்றல் போல்
கடி கமழ் தருவினைக் கலந்து சுற்றிய
கொடியினை ஈர்த்தன கொடியின் கானமே.
19
   
3591.
செந்தோடு அவிழும் தாரான் இச் செய்கை நிகழச் சேண்                                      புகலும்
அந்தோ என்று பதை பதையா அலமந்து ஏங்கி அறிவு                                     அழிந்து
வந்தோன் பானுப் பகைவன் எனா மகவான் செம்மல் ஒடு                                      வானோர்
நொந்து ஓடினர் போய் உரைத்திடலும் அனையோன்                             இனைய நுவல் கின்றான்.
20
   
3592.
எந்தை ஆகும் குரவன் இலை இமையோர் குழுவில் பலர்                                 இல்லை
தந்தை எம்மோ இங்கு இல்லை தமியேன் நும் மோடு                                 இருந்தேனால்
அந்த அசுரன் சென்றமையும் அல்லல் புரியும் திறம்                                 போலும்
முந்தை விதியை அறிவேனோ என்னோ இன்று                                 முடிந்திடுமே.
21
   
3593.
பாடு இன்று ஓங்கு திரு நீங்கப் பயந்தோர் கரக்கப் பழி                                  வேலை
வீடு இன்றி ஆகத் தமர் பரிய வெம் சூர் முதல்வன்                                  பணிபோற்றி
ஈடு இன்று ஆயும் இப்பகல் காறும் இந்த நகரத்து                                  இருந்தேனால்
கேடு இன்று ஆகும் என் செய்கேன் கிளத்தீர் புரைதீர்                                  உளத்தீரே.
22
   
3594.
தாயும் பயந்த தொல்லோனும் தமராகு உற்ற அமரர்களும்
பாயும் கடல் சூழ் நில வரைப்பில் கரந்தார் அதனைப் பல்                         அவுணர்
ஆயும் படியே திரிந்தனர் ஆல் அற்றாம் எல்லை                         அளியேமும்
போய் எங்கு உறைவோம் நமை எல்லாம் போற்றும்                         படிக்கோர் புகல் உண்டோ.
23
   
3595.
போவது இல்லை யாண்டும் இனிப் புலம்பும் ஆறும்                               இல்லை அதின்
ஆவது இல்லை வருவது எல்லாம் அடையும் அன்றி                               அகலுவதோ
ஈவது இல்லை அவர்க்கு வெரிந் இறைஞ்சிப் புகழ்வது                               இலை எதிர்ந்து
சாவது அல்லால் உய்ந்திடுதல் இரண்டே உறுதி                               தமியேற்கே.
24
   
3596.
அஞ்சேன் மன்னோ அவர்க்கு இனியான் ஆவி                    பொருளாக் கொள்ளாதார்
நஞ்சே பொருவும் தீங்கு உறினும் நடுக்கம் செய்யார்                    இடர்ப்படியார்
தம் சேவகத்தின் நெறி பிழையார் அஃதே போலத்                    தானவர் கோன்
வெம் சேனைகள் ஏற்று எதிர் செல்வேன் வெல்வேன்                    பலரைக் கொல்வேன்.
25
   
3597.
செரு வீரமுடன் அவர்ப் பொருவான் செல்வன் நீரும்                                 எற்போற்றி
வருவீர் வம்மின் வல்லாதீர் வல்லை இன்னே வழிக்                                 கொண்மின்
ஒருவீர் அன்றி எல்லீரும் உள்ளத்து அஞ்சி ஒருவி அழி
தருவீர் ஏனும் நன்று இறையும் தளரேன் துணிந்த                                 தமியேனே.
26
   
3598.
என்று சயந்தன் மொழிந்திடலும் இமையோர் கேளா இடர்                                        உழவா
உன்றன் உள்ளம் ஈதாயின் எமக்கு வேறு ஓர் உணர்வு                                        உண்டோ
வென்றி அவுணர் பணிபுரிந்து வீடா விழுமம் துய்ப்பதினும்
பொன்றி விடுதல் இனிதம்மா எழுதி கடிதே போர்க்கு                                        என்றார்.
27
   
3599.
சயந்தன் அதுகேட்டு அமரர் தம் குழுவை நோக்கித்
துயர்ந்த நும் சிந்தனை துணிந்தது கொல் என்னா
வியந்து கனகத் தவிசின் மேவுதல் விடாத் தன்
கயந்தனை நினைப்ப அது உணர்ந்தது கருத்தில்.
28
   
3600.
கல் கெழு நுதல் சிறிய கண் சுளகு கன்னம்
மல்கிய கறைப்பத மருப்பு இணை இரட்டை
மெல்கிய புழைக் கரம் வெளிற்று உடலின் வேழம்
பில்கிய மதத்தொடு பெயர்ந்துளதை அன்றே.
29
   
3601.
இந்திர குமாரனை இறைஞ்சி எதிராகி
வந்திட அதன் பிடரில் வல்லை தனில் ஏறி
உந்தினன் நடாத்தி அயல் உம்பர் புறம் மொய்ப்பப்
புந்தி கெழு ஓவின் ஒடு பொள் என அகன்றான்.
30
   
3602.
போகிதரு காளை பசும் பொன் புயல் நிறத்தான்
ஆகம் வெளிறு ஆகும் அயிராவதம் மிசைக் கண்
வாகு பெற மேவுவது மன்னு நெடுமால் பால்
சீகர அளக்கர் இடை செவ்விது இருந்து அன்ன.
31
   
3603.
பாங்கர் உறு வானவர்கள் பல் படையும் ஏந்தி
வீங்கு துயர் கொண்டு அகல வேறு ஒர் இடை காணார்
நீங்கல் வசை என்பது நினைந்து துணிவாகி
ஆங்கு அவனொடு ஏகினர்கள் அச்சம் இலரே போல்.
32
   
3604.
பெருந்தவள மெய்க்கரி பிளிற்று ஒலியும் உள்ளத்து
அரந்தை உறு வானவர் தம் ஆர்ப்பு ஒலியும் ஆற்றப்
பரந்த பகுவாய் முரசு பண் ஒலியும் ஒன்றாய்
வரும் தவறு எனக் ககனம் வாய்விடுதல் போலும்.
33
   
3605.
ஊழி வரு கால் அனைய உம்பர் படை செல்லப்
பூழி நிமிர்ந்து ஏகின பொலத்து உயர் நிலத்த
வாழி கொள் சுவர்க்கம் எரி வவ்வு நமை என்னாக்
கேழில் உயர் மேல் நிலை கிளர்ந்து எழுதல் போலும்.
34
   
3606.
முறை இது நிகழ்ந்திட முரட் களிறு மேலான்
வறியமக வான் மதலை மா நகரம் நீங்கி
எறி கதிர் அருக்கனை இரும் சிறையில் வீட்டும்
சிறுவன் அனிகத்தின் எதிர் சென்று புகலோடும்.
35
   
3607.
வன் புறு தயித்தியர் வரும் சுரரை நோக்கி
முன் பகலின் எல்லையும் முறைப் பணி புரிந்தார்
தற்பம் உடன் நின்று சமர் உன்னி வருவாரோ
அற்புதம் இது அற்புதம் இது என்று அறையல் உற்றார்.
36
   
3608.
கிட்டினர்கள் வானவர் கிடைத்த தமர் என்னா
முட்டினர் தெழித்து அவுணர் முன் பின் இருபாலார்
ஒட்டினர் முனிந்து அயில்கள் உய்த்தனர் கைவாளால்
வெட்டினர் குனித்து வில் வடிக்கணை விடுத்தார்.
37
   
3609.
எழுப்படை விடுத்தனர் எடுத்த கதை விட்டார்
மழுப்படை எறிந்தனர் வயிர்க் குலிசம் உய்த்தார்
நிழல் பரவும் முத்தலை நெடும் படைகள் தொட்டார்
சுழற்றினர் உருட்டினர் சுடர்ப் பரிதி நேமி.
38
   
3610.
மாரி என இப்படை வழங்கி இமையோரும்
சீர் அவுணர் ஆயினரும் சேர்ந்து பொரும் எல்லைச்
சோரியது தோன்றியது தூய விரும்பும் எற்றும்
பாரிய உலகத்து இடை பரந்து எழு கனல் போல்.
39
   
3611.
அங்கம் எழு செம்குருதி ஆற்றின் நிமிர்ந்து ஓடி
எங்கணும் நிரந்தன இமைப்பிலவர் வைகும்
துங்கமிகும் உம்பர் இடை சூர் மதலை சீற்ற
வெம் கனல் எழுந்து முன் மிசைந்திடுவதே போல்.
40
   
3612.
நீடு இரு திறத்தரும் நெடும் படைகள் ஏந்தி
ஆடல் புரி காலை அழிந்து ஆற்றல் இலர் ஆகி
ஓடினர்கள் வானவர்கள் ஒல்லை தொடர்ந்தே பின்
கூடினர்கள் வெவ் அவுணர் குற்றினர்கள் பற்றி.
41
   
3613.
சேண் கொடு முரிந்து படர் தேவர் குழு வோரை
ஏண் கொடு வரும் தகுவர் யாத்தனர் புயங்கள்
நாண்கொடு திரும்பினர் நலம் கொள் கலை மானை
மாண் கொடு வரித் தொகுதி வவ்வி அகன்று என்ன.
42
   
3614.
இடுக்கண் உறு தேவர் தமை ஈர்த்தனர் கொடு ஏகி
மிடல் கதிர் அருக்கனை வெகுண்டு அவன் முன் உய்ப்பக்
கடக் கரிய வன்மையொடு காவல் கொளும் என்றான்
தடக் களிறு மேல் வரு சயந்தன் இவை கண்டான்.
43
   
3615.
கண்டான் வெகுண்டான் புகை ஆர் அழல் கல் என்                                      மேகம்
உண்டான் எனவே உமிழ்ந்தான் ஒரு தன் சிலைக் கைக்
கொண்டான் குணத்தின் இசை காட்டினன் கோட்டி நேர்                                      போய்
அண்டார் வெருவக் கணை மாரிகள் ஆர்ப்பொடு                                      உய்த்தான்.
44
   
3616.
பொழியும் பொழுதத்து அவுணப் படை போந்த வீரர்
மொழியும் மனமும் நனி தாழ்த்திட முன்னர் ஏகி
ஒழியும் கடை நாள் அரன் வெற்பை உறாது சூழ் போஞ்
சுழியும் கடல் போல் அவன் ஊர் கரி சுற்றி ஆர்த்தார்.
45
   
3617.
சயந்தன் மிசையும் பொலம் கிம்புரித் தந்த வெள்ளைக்
கயந்தன் மிசையும் சிலை வாங்கிக் கணைகள் கோடி
பயந்தந்திடத் தூர்த்தனர் சோமனைப் பன்னகங்கள்
வயந்தன் தன்னொடு போய் முயலோடு மறைக்கும்                                   மாபோல்.
46
   
3618.
கல் என்று அரற்றும் கழல் வீரர் கனைந்து சுற்றிச்
செல் என்று விட்ட கணை யாவையும் சிந்தி வல்லே
மல் ஒன்று மொய்ம்பில் சயந்தன் சர மாரி தூண்டி
வில்லும் மனையோர் தனுவும் புவி வீட்டினன் ஆல்.
47
   
3619.
வீட்டிக் கணைகள் அவுணப் படை மீது தூர்த்து
மோட்டுக் களிற்றின் தொகை தன்னை முகம்கொள்                                   பாய்மா
வீட்டத்தினைத் தேர்களை வீரர் இனத்தை எல்லாம்
வாட்டிப் பின் வெள்ளம் ஒரு நூற்றினை மாய்வு செய்தான்.
48
   
3620.
வாலில் புடைக்கும் புழைக்கை கொடு வாரி எற்றும்
காலில் படுக்கும் மருப்பால் அடும் கந்தரம் போல்
ஓல் இட்டு உயிர் உண்டிடும் ஆங்கு அவன் ஊர்ந்த                                       வேழம்
சீலக் கதிரைச் சிறை இட்டவன் சேனை தன்னை.
49
   
3621.
நூறாய்ப் புகுதானவர் வெள்ளம் நொடிப்பின் மாய
வீறாய்ப் படையும் பல பூண்களும் மீனம் ஆக
ஆறாய்க் குருதி பெயர்ந்தே அகல் வான நீத்தம்
மாறாய்ப் பொருது மிசை ஓடி வளைந்து கொண்ட.
50
   
3622.
காய் கொல் இப மேல் சயந்தன் அடுகாலை தன்னில்
பேய் கொல் உனைத் தீண்டின மேல் வரும் பெற்றி ஓராய்
தீ கொல் பறவை புரைவாய் எமர் சேனை தன்னை
நீ கொல் அடுதி என வந்தனன் நீல கேசன்.
51
   
3623.
எண்ணத்து அவரை அலைக்கின்ற இருண்ட கேசன்
தண்ணத்து அவரை நிகர்கின்ற சயந்தன் முன் போய்
விண்ணத்து அவரை முகில் தாங்கு உறும் வேடம் என்ன
வண்ணத்து அவரைக் குனித்து அம்பு எனும் மாரி                                  தூர்த்தான்.
52
   
3624.
தூர்த்தான் அது கால் சயந்தன் எதிர் தூண்டி வாளி
தீர்த்தான் சரமாரியை அன்றியும் சின்னம் ஆக்கி
ஆர்த்தான் கவசம் அவன் இட்டதை அம்பு நூறால்
வேர்த்தான் உயிர்த்தான் இருள் குஞ்சியன் மேகம்                                   ஒப்பான்.
53
   
3625.
பாசம் பிணித்த அரணம் பரிவு எய்த நீல
கேசன் விடுத்து ஓர் பிறை அம்பினைக் கேடு இல்                                  விண்ணோர்
ஈசன் சிறுவன் சிலை நாணை இறுத்தி சைத்தான்
காசொன்று அரவம் துணியப் பகை கௌவு மாபோல்.
54
   
3626.
சின்னம் படலும் பெரு நாண் சிலை வீழ விட்டுத்
தன்னம் தனியாம் சயந்தன் சமர் செய்வதற்கு
முன்னம் பயிற்றும் ஒரு மாயையை முன்னி ஆற்றித்
துன்னம் தருபல் உருவம் கொடு தோன்றி உற்றான்.
55
   
3627.
ஒன்றே எனும் கரிமேல் வரும் ஒருவன் பல உருவாய்ச்
சென்றே திறம் பலவால் அடச் செறி பேர் இருட் குடுமிக்
குன்றே புரை அவுணர்க்கு இறை குறிப்பால் இது மாயம்
என்றே நினைந்து அவை மாற்றிட யாதும் செயல்                                        இல்லான்.
56
   
3628.
மலைவு உற்று எதிர் நின்று ஆர்த்திட வாய் அற்றனன்                                       மயங்கித்
தொலை உற்றனன் இருள் குஞ்சியன் சூரன்மகன் அனிகம்
மலை உற்றன விரிகின்றன அலமந்தன வெருவி
உலை உற்றன இறுதிப் பகல் ஒழி உற்றிடும் உயிர் போல்.
57
   
3629.
சோமா சுரன் மாயாபலி சுரகேசரி பதுமன்
மா மாருத பலி தண்டகன் வாமன் மதி வருணன்
தீ மாகதன் முதல் ஆகிய சேனைப் பெரும் தலைவர்
ஆ மாயம் இது என வந்தனர் அவ் விஞ்சையை உணரார்.
58
   
3630.
தாம் கற்றிடும் மாயப் பெரும் தனி விஞ்சை கண் முன்னி
ஆங்கு உற்றிடும் மரபால் பொரு தன்னான் புரி மாயம்
நீங்கற்கு அருநிலை ஆதலும் நெஞ்சம் தடுமாறி
ஏங்கு உற்றனர் என் செய்குதும் யாம் என்று நினைந்தார்.
59
   
3631.
அந் நேர் உறு காலம் தனில் ஆகின்றதும் தலைவர்
தன் ஏவலின் மெலி உற்றதும் சயந்தன் பெரும் திறலும்
கொன்னே தன தனிகக்கடல் குறைகின்றதும் கண்டான்
முன்னே இரவியை ஓர் பகல் சிறை வீட்டிய முதல்வன்.
60
   
3632.
அந்தரம் தனில் இரவியைச் செயிர்த்திடும் அவுணன்
இந்திரன் மகன் மயைகொல் இது என எண்ணா
முந்தை நாள் புகர் உதவிய மூலமா ஞான
மந்திரம் தனை உளம் தனில் விதிமுறை மதித்தான்.
61
   
3633.
மதித்து வெம் சுடர்ப் பகையினன் சேறலும் மாயை
விதித்த பல் உருப் போயின தமியனாய் விடலை
கதக் களிற்றின் மேல் தோன்றினன் ஆயிரம் கதிரோன்
உதித்த காலையில் கலையிலாக் குறைமதி ஒப்ப.
62
   
3634.
ஆன காலையில் இது புகர் விஞ்சை என்று அறிந்து
மானமும் சினமும் சுடச் சயந்தன் உள் மறுகித்
தான வேழம் மேல் இருந்துழி தேரொடும் சார்ந்து
பானு கோபனாம் பெயரினன் இனையன பகர்வான்.
63
   
3635.
வருதி இந்திரன் மதலை நின் மாயையும் வலியும்
கருதியான் வருமுன்னரே போயின கண்டாய்
பரிதி போலவே நின்னையும் இரும் சிறைப் படுப்பன்
பொருதி வல்லையேல் என்றனன் சூர் தரு புதல்வன்.
64
   
3636.
வல்லர் ஆயினோர் வெல்வதும் மற்று அஃது இல்லோர்
அல்லர் ஆகியே தோற்பதும் இல்லையால் அரனே
தொல்லை ஊழ் முறை புணர்த்திடும் நின்னை நீ துதிக்கச்
செல்லுமோ என உரைத்தனன் சயந்தன் ஆம் திறலோன்.
65
   
3637.
தேற்றமோடு இவை புகறலும் இரவியைச் செயிர்த்தோன்
ஆற்றல் இல்லவர் மொழி திறம் புகன்றனை அன்றே
ஏற்ற வீரரும் இத்திறம் உரைப்பரோ என்னாக்
கூற்றமே என இருந்ததோர் தன் சிலை குனித்தான்.
66
   
3638.
சிலை வணக்கிய காலையில் சயந்தனும் சினத்து
மலை வணக்கு தன் புயம் கொடே ஒரு சிலை                                   வளைத்தான்
அலை வணக்கரும் ஞமலி எம் அடிகளை அடைந்தோர்
தலை வணக்கியே தத்தமில் இருவர் தாழ்வது போல்.
67
   
3639.
பாற்றிரும் சிறைக் கணை பல பரிதி அம் பகைஞன்
ஊற்றமோடு வான் புயல் எனச் சொரிதலும் ஒருத்தன்
மேல் திகழ்ந்திடு சயந்தனும் அனையன விசிகங்
காற்று எனும் படி தூண்டியே விலக்கினன் கடிதின்.
68
   
3640.
அன்னவன் விடும் சரம் எலாம் சூர்மகன் அறுத்துத்
துன்னு பல்கணை தூண்டினன் அவன் அவை                                 தொலைத்தான்
இன்ன தன்மையின் இருவரும் பொருதனர் இருளும்
மின்னும் ஆகவே முறை முறை மலைந்திடும் விதிபோல்.
69
   
3641.
இனைய வாறு அமர் புரி இரவி அம் பகைஞன்
வினைய நீரினால் சொரிந்திடு பகழியை விலக்கித்
துனைய இந்திரன் மதலை ஆயிரம் கணை தூண்டி
அனையன் ஏந்திய சிலைப் பெரு நாணினை அறுத்தான்.
70
   
3642.
அறுத்த காலையில் ஞாயிறு வெகுண்டு உளோன் அழலில்
செறுத்து வேறு ஒரு சிலை வளைஇ கணை மழை சிதறி
மறுத்தும் ஆங்கு அவன் விடும் சரம் சிந்தி மற்று அவன்                                           மெய்
உறுத்தினான் என்ப ஓர் ஆயிரம் சிலீ முகம் உய்த்து.
71
   
3643.
உய்த்த காலையில் சயந்தனும் ஓர் ஆயிரம் கணைதூய்ப்
பத்தியோடு அவன் தேர் கெழு பாய் பரிபடுத்து
மெத்து பல்சரம் தானை மேல் வீசினன் விளிவோர்
வைத்த மா நிதி யாவர்க்கும் வழங்கு மாறு என்ன.
72
   
3644.
வாய்ந்ததோர் தனது இரதம் ஈறு ஆக மற்றுஒருதேர்
பாய்ந்து வெய்து உயிர்த்து அழல் என வெகுண்டு பல்                                       கறித்துச்
சேந்த மெல் இதழ் அதுக்கி வான் உரும் எனத் தெழியா
ஏந்துவார் சிலை குனித்தனன் எறிகதிர்ப் பகைஞன்.
73
   
3645.
கூனல் வெம் சிலை குனித்து நூறு ஆயிரம் கோடி
சோனை வெம் கணை தூண்டி வில் தூணியைத் துணித்துத்
தான வெம் கரி தன்னுடன் முழுவதும் சயந்தன்
மேனி முற்றவும் அழுத்தினன் பகலினை வெகுண்டோன்.
74
   
3646.
வெய்யவன் சிறை இட்டவன் விட்ட கோல்
சையம் ஒத்த சயந்தன் மெய்ம் மூழ்கலும்
மையல் உற்றனன் மற்றொரு வெம் சமர்
செய்வதற்குத் தெளிதல் இன்று ஆயினான்.
75
   
3647.
நீண்ட வாளிகள் ஆன நிறத்து இடை
ஆண்ட காலை அரிமகன் தந்தி மேல்
வீண்டு விம்மி உணர்ச்சியும் விட்டனன்
மாண்டிலான் அமுதம் கொண்ட வன்மையால்.
76
   
3648.
நண்ணு பாசடை நாப்பண் இடம் தொறும்
தண் என் மா மலர்த் தாமரை பூத்து என
விண்ணவர்க்கு இறை மா மகன் மெய் இடைத்
துண் எனப் படு சோரி பொலிந்ததே.
77
   
3649.
கற்ற வாசவன் காளை தன் சீற்றம் நாம்
முற்ற ஓத முடியும் கொல் தன் உணர்வு
அற்ற போதும் அவன் சினக் கண் அழல்
வற்ற வித்த மெய் வார் குருதிப் புனல்.
78
   
3650.
சயந்தன் அவ்வழி தன் உணர்வு இன்றியே
அயர்ந்த போதத்து அனையவன் ஊர்தி ஆம்
கயந்தன் நக்கு இறை கண்டு கலங்கியே
துயர்ந்து நின்று சுளித்து எதிர் புக்கதே.
79
   
3651.
காய்ந்த தொன்மைக் கதிரை முனிந்திடும்
ஏந்தல் ஊர்தரும் எந்திரத் தேர்மிசைப்
பாய்ந்த காலைப் பரித் தொகை பாகுடன்
வீய்ந்து போன தெழித்தது வேழமே.
80
   
3652.
பாண்டில் சேர் தரு பண்ணமை செய்ய தேர்
மாண்ட காலையில் வல்லையில் கீழ் உறத்
தாண்டி வெள்ளை அம் தந்தியைச் சீறினான்
மூண்டு பானுவை முன் சிறை செய்துளான்.
81
   
3653.
மற்று அவன் தன் மணி அணி மார்பிடைச்
செற்ற மால் கரி சென்று முன் தாக்கலும்
பொற்றையின் கண் புழைத்திடும் சூசியின்
இற்றவால் அதன் ஈர் இரு தந்தமும்.
82
   
3654.
தந்தம் நான்கும் சட சட ஆர்ப் பொடு
சிந்தல் உற்றன சீர்கெழு சூர்மகன்
உந்து தொண்டலம் பற்றி மற்று ஓர் கையால்
தந்தி வேந்தன் கவுளி இடைத் தாக்கினான்.
83
   
3655.
காழ்ந்த நெஞ்சினன் கரம் கொடு தாக்கலும் கயமா
ஆழ்ந்த தெண்திரைப் பாற்கடல் உடைந்து என அரற்றி
வீழ்ந்து அயர்ந்தது சயந்தனும் அறிந்தனன் விரைவில்
சூழ்ந்த தொல் உணர்வு எய்தலும் அவன் இவை சொல்லும்.
84
   
3656.
மாயை போயது தனித்தனம் குறைந்தது வன்மை
தீயர் பற்றுவர் அழியும் இந் நகர் எனச் சிறிது
நீ இரங்கலை இனி மனனே விதி நெறி காண்
ஆயின் இங்கு இவை என்றனன் சயந்தனாம் அறிஞன்.
85
   
3657.
நுனித்து நாடியே இத்திறம் நுவன்று நூல் துணிபு
மனத்தில் வைத்திடும் இந்திரன் கான் முளை மயங்கித்
தனித்த நீர்மையும் களிற்றொடு வீழ்ந்ததும் தளர்வும்
அனைத்தும் நோக்கியே தானவத் தலைவர்கள் ஆர்த்தார்.
86
   
3658.
ஆர்த்த தானவத் தலைவர்கள் சயந்தனை அயலே
போர்த்ததாம் எனச் சுற்றினர் பற்றினர் புவிமேல்
கூர்த்த வால் எயிற்று அரவினம் யாவையும் குழீஇப்                                      போய்ச்
சீர்த்த எல்லையில் இரவியைக் கரந்திடும் திறம் போல்.
87
   
3659.
தடித்த மொய்ம்புடைச் சயந்தனைத் தானவத் தலைவர்
பிடித்த காலையில் கைதவன் கைதவன் பெரிதும்
அடித்திடுங்கள் குற்றிடுங்கள் இங்கு இவன் உயிரதனைக்
குடித்திடுங்கள் என்றார் எலா அவுணரும் குழுமி.
88
   
3660.
மன்னர் மன்னவன் திருமகன் அவ்வழி மற்றோர்
பொன் நெடும் பெரும் தேர் மிசைப் பொள் என ஏகிப்
பன்னரும் புகழ் படைத்திடு சயந்தனைப் பற்றித்
துன்னி நின்றிடும் அவுணருக்கு ஒருமொழி சொல்வான்.
89
   
3661.
வரிவில் வாங்கியே யான் விடும் சரம்பட மயங்கிப்
பெரிது மெய்தளர் உற்றனன் பேசவுங் கில்லான்
கருதலான் என இவன் தனை வருத்தலிர் கடிதே
சுரர் குழாத்தொடு புரிமினோ சிறை எனச் சொற்றான்.
90
   
3662.
கொற்றவன்மொழி வினவியே மந்தரக் குன்றைச்
சுற்று பாந்தள் போல் இந்திரன் திருமகன் துணைத்தோள்
இற்ற கொல் என நாணினால் யாத்தனர் இமையோர்
உற்று நின்றதோர் குழுவினுள் ஒருங்கு உற உய்த்தார்.
91
   
3663.
தொழில் இது புரிந்த காலைச் சூர்மகன் தனது மாடே
தழிய காவலரை நோக்கிச் சயந்தனும் இவரும் அல்லால்
ஒழிய நின்றோரை எல்லாம் ஒல்லையில் தருதிர் பின்னர்
அழிய இம் மூதூர் செந்தீ அரசனுக்கு அளித்திர் என்றான்.
92
   
3664.
என்றலும் இறைஞ்சி அன்னோர் எழில் உடைத் துறக்கம்                                     யாண்டும்
சென்றனர் நாடி ஏனைத் தேவரை மகளீர் தம்மை
ஒன்று ஒருவரையும் வீடாது உடன் உறப் பற்றி நாணால்
பொன்திரள் தடம் தோள் யாத்துப் புரவலன் முன்னர்                                     உய்த்தார்.
93
   
3665.
உய்த்த பின் பதுமச் செல்வி உறைதரும் உறையுள் போலச்
சித்திரம் கெழுவு பொன் அம் திரு நகர் எல்லை எங்கும்
புத்தழல் கொளுவலோடும் பொள் எனப் பொடி பட்டன்றே
முத்திற வரைப்பும் எம்கோன் முறுவலான் முடிந்த                                     வாபோல்.
94
   
3666.
ஊழியின் அன்றி என்றும் ஒழி உறாத் துறக்க மூதூர்
பூழியது ஆனது அன்றே புரந்தரன் வறியன் போனான்
வீழ்உறு சிறையின் உற்றார் மிக்கவர் என்றால் யாரும்
வாழிய செல்வம் தன்னை நிலையென மதிக்க லாமோ.
95
   
3667.
அளிபடல் இன்றி என்றும் அலர் தரு நிழற்றும் மூதூர்
வெளிபடு சுடலை போலாய் வேற்று உருக் கோடலோடும்
களிபடு பானுகோபன் கண்டனன் அவுணர் தம்மில்
ஒளிபடு காவலோரை நோக்கி ஈது உரைக்கல் உற்றான்.
96
   
3668.
தாது உலாம் தெரியல் ஆகச் சயந்தனை அவனோடு உற்ற
ஏதிலார் தம்மைப் பின்னோர் யாரையும் கொடுமுன் நீவிர்
போதிரால் என்ன அற்றே போயினர் உவணை நீங்கி
ஆதவன் பகைஞன் மீளா அனிகமோடு அவனி வந்தான்.
97
   
3669.
மாநிலம் மதிக்கும் வீர மகேந்திர புரத்துப் புக்குக்
கோனகர் முன்னம் ஏகிக் கொடிஞ்சிமான் தேரின் நீங்கிச்
சேனையை நிறுவி வானச் சிறையினைக் கொண்டு சென்று
தானவர் மன்னன் முன் போய்த் தாள் முறை வணக்கம்                                      செய்தான்.
98
   
3670.
தண் துளி நறவ மாலைத் தாதை தாள் வணங்கி எந்தாய்
கண்டிலன் சசியை வானோர் காவலன் தனையும் காணேன்
அண்டரைச் சயந்தன் தன்னை யாரையும் கொண்டு                                    சென்றேன்
விண்தொடர் துறக்கம் முற்றும் வெம் கனல் கொளுவி                                    என்றான்.
99
   
3671.
என்றலும் மகிழ்ந்து சூரன் இளம் சிறு குமரன் புல்லித்
தன் திருமுன்னர் இட்ட சயந்தனை முதலியோரைக்
கன்றினன் உருத்து வாள்கைக் காவலர் சிலரை நோக்கித்
துன்றிய இனையர் அங்கம் யாவையும் துணித்திர் என்றான்.
100
   
3672.
இரலை மான் தொகுதி தன் மேல் இரும் சிறை வீடு பெற்ற
உருகெழு புலிபாய்ந்து ஒப்ப ஒப்புஇலா அரசன் சொல்லால்
விரைவுடன் அவுணர் பல்லோர் விண்ணவர் தம்பால்                                      மேவித்
துருவையின் முகத்தில் காணத் துண் எனத் துணிக்கல்                                      உற்றார்.
101
   
3673.
கரத்தினைத் தாளைத் தோளைக் கன்ன மூலத்தைக் கல்                                     என்று
அரற்று உரு கண்டம் தன்னை அணிகெழு துண்டம்                                     தன்னைச்
சிரத்தினைத் துணிப்ப அன்னோர் சிறியரோ செய்த                                     நோன்பின்
உரத்தினில் அவைகள் எல்லாம் உடன் உடன் பொருந்தல்                                     உற்ற.
102
   
3674.
செல்லரு நெறிக்கண் நின்ற சேண் உளார் தம்மையாரும்
கொல்லரி திறையும் அங்கம் குறைத்தலும் அரிதாம்                             என்றால்
சொல்ல அரிது இனையர் வன்மை தொலைந்தது எம்                             வரத்தால் என்னா
வல்லரி புரை வெம் சூரன் மதித்து மற்று அதனைக்                             கண்டான்.
103
   
3675.
கண்டனன் முனிந்து இன்னோரை காலம் ஒன்றானும் வீடா
எண் தரு நிரயம் போலும் இரும் சிறை இடுதிர் என்றே
திண் திறல் அசுரர் கேட்பச் செப்பலும் சயந்தன் தன்னை
அண்டரைப் பிடர் தொட்டு உந்தி ஆங்ஙனம் கொண்டு                                        போனார்.
104
   
3676.
போயினர் சிறையின் எல்லை போற்றினர் தம்மை நோக்கி
ஏயினன் நம்கோன் இன்னோர் யாரையும் காவல்                                    கொண்மின்
நீயிர்கள் என்னா ஒற்றர் நீங்கினர் நின்றோர் தம்மை
ஆயவர் வல்லி பூட்டி அரும் சிறைக் களத்தில் உய்த்தார்.
105
   
3677.
மன்னவன் அதற்குப் பின்னர் மைந்தனை அன்பால்                                     நோக்கி
நின் நகரத்தில் போதி நீ என அனையன் போனான்
அன்னதோர் சூரபன்மன் அவை யொரீஇ உறையுள்                                     புக்கான்
இன்னல் அம் கடலில் உற்றார் இரும் சிறைப் பட்ட                                     வானோர்.
106
   
3678.
காடு போந்தனன் இந்திரன் பொன் நகர் கரிந்து
பாடு சேர்ந்தது சயந்தனும் சிறை இடைப்பட்டான்
நாடில் விண்பதச் செய்கை யீது எம்பிரான் நல்கும்
வீடு அதே அலால் துன்பறும் ஆக்கம் வேறு உண்டோ.
107
   
3679.
பட அரவு அனையது ஓர் பரும அல்குலார்
இடுகிய நுண் இடை எழில் அணங்கினோர்
கொடுமை செய் அவுணர் ஊர் குறுகி வேடர்பால்
பிடி உறு மஞ்சையில் பெரிதும் அஞ்சினார்.
108
   
3680.
சூரன் வாழ் பெருநகர் துன்னிக் காப்பொடு
சீர் இலா ஏவல்கள் செய்து மேவினார்
கூரும் வாய் வெம் குரீஇக் குடம்பை உய்த்திடப்
பேர் உறாது இலகுமின் மினியின் பெற்றி போல்.
109
   
3681.
வாடிய மகபதி மதலை வான் உளோர்
ஆடு உறு துயர்க் கடல் அழுந்திச் சூரர் கோன்
வீடரும் சிறை இடை மேவினார் அவர்
பாடு உறு திறத்தை யார் பகரற் பாலினோர்.
110
   
3682.
இன்னல் அம் கடலினும் எடுத்து வீடு தந்து
அன்னவர் பெரும் சிறை அகற்றும் வன்மையார்
பின் எவர் உண்டு உயிர் பெற்றுக் காத்திடும்
முன்னவர் தமக்கு எலாம் முதல்வ நீ அலால்.
111
   
3683.
வியந் தரு கதிரை முன் வெகுண்டுளான் ஒடு
சயந்தன் விண் உலகின் இடைச் சமர் செய்து எய்த்துழி
வயம் தரு கோடு கண் மாய்ந்து தந்தி வீழ்ந்து
அயர்ந்தது புவி இடை அணுகிற்று அத்துணை.
112
   
3684.
வாலிய ஒளி கெழு வனத்தில் ஏகியே
மூலம் அது ஆகிய முக்கண் மூர்த்தியை
மேல் உள தாணுவின் மேவச் செய்து பின்
சீலமொடு அருச்சனை செய்து வைகிற்றே.
113
   
3685
அறிவு உள மால் கரி அமலன் தந்திர
முறையது நாடியே முதிரும் அன்பினால்
மறை உற வழிபடீஇ வைகும் எல்லையில்
குறைபடு நாற்பெறும் கோடும் வந்தவே.
114
   
3686.
பார்ப்பதி மருங்கு உறு பகவன் ஆணையால்
மால் பெரும் களிற்று இடை வல்லை முன்பு போல்
நால் பெரும் தந்தமும் நண்ண நோக்கியே
ஏற்பரும் மகிழ்ச்சியோடு இருந்தது அவ்விடை.
115
   
3687.
ஆயதோர் அமைதியின் கண் அணங்கொடு மேரு                                      வெற்பில்
போயின அமரர் கோமான் பொன் நகர் சூரன் மைந்தன்
காய் எரி கொளுவி அங்கண் கடவுளர் குழுவினோரைச்
சேயொடு பற்றி ஏகிச் சிறை செய்த தன்மை தேர்ந்தான்.
116
   
3688.
தேர்ந்தனன் தளர்ந்து மேருச் சிலம்பினின் மகவான்                                     பல்நாள்
வார்ந்திடு கங்கை வேணி வள்ளலை உன்னி நோற்பச்
சார்ந்து நிற்கு என்னை வேண்டும் சாற்று என முதல்வன்                                     நீதி
போந்த சூர் கிளையைச் செற்று எம் பேதுறவு அகற்றுக                                     என்றான்.
117
   
3689.
என்றலும் எந்தை சொல்வான் யாம் உமை தன்னை மேவி
ஒன்று ஒரு குமரன் தன்னை உதவுவம் அவனே போந்து
வென்றி கொள் சூரன் ஆதி அவுணரை விரைவில் செற்று
மன்ற நும் உரிமை ஈவன் வருந்தல் என்று உரைத்துப்                                     போனான்.
118
   
3690.
சாதலும் தொலைவும் இல்லாத் தானவர்க்கு இறைவன்                                     ஏனோர்
ஏது இலர் தம்மால் வீடான் என்று தன் உளத்தில்                                     எண்ணிச்
சோதி கொள் பரமம் ஆகித் தோன்றிடு முதல்வன் நீயே
ஆதலின் விமல மூர்த்தி அவரை மேல் அடுதி என்றான்.
119
   
3691.
அவ்வுரை மகவான் தேறி அரி அயனோடு சூழ்ந்து
மைவரு களத்தோன் தன்பால் மதனனை உய்ப்ப                                   அன்னோன்
மெய் விழி எரியின் மாய்ந்து வெறும் துகள் படலும் தேவர்
எவ் எவரும் போய் வேண்ட இரங்கியே கருணை                                   செய்தான்.
120
   
3692.
அரி அயன் மகவான் தேவர் அரும் கணத்தலைவர்                                      யாரும்
பரவுற இமய வெற்பில் படர்ந்து பின் உமையை வேட்டுப்
பிரிவு அரும் கயிலை நண்ணிப் பின் எமது இரக்கம்                                      நாடிக்
கருணையால் எந்தை நின்னை நெற்றி அம் கண்ணால்                                      தந்தான்.
121
   
3693.
எந்தை நீ வந்த பின்றை இந்திரன் அயன் மால் தேவர்
அந்தம் இல் முனிவர் ஏனோர் அனைவர்க்கும் அகன்ற                                         ஆவி
வந்தது போன்றது அம்மா வலிய வெம் சூரர் செற்றுத்
தம் தமது அரசுபெற்ற தன்மையர் போல உற்றார்.
122
   
3694.
ஆழ் தரு முந்நீர் நேமி அகன்கடல் அழுவம் புக்கு
வீழ் தருவோர்கள் தம்பால் வியன் கலம் ஒன்று சேர
ஊழ் தரு தொடர்பால் பற்றி உய்ந்து எனத் துன்பவேலைக்
கீழ் தருவோர்கள் நின்னால் கிளர்ந்து மேல் எழுதல்                                       உற்றார்.
123
   
3695.
புரந்தரன் முதலா உள்ள புங்கவர் எம்மனோர்கள்
அரந்தையை அகற்ற உன்னி ஐய நீ போந்த பின்னும்
தெரிந்திடு துணிபில் சேர்ந்தும் தெம்முனைச் சூரற்கு                                      அஞ்சிக்
கரந்தனர் இருந்தார் காணில் கடும் சிறைப் பிணிப்பன்                                      என்னா.
124
   
3696.
எம்பிரான் நின்னை முக்கண் எந்தையை வணங்க நேரில்
தம் பெரும் வடிவம் காணச் சாருவர் ஒழிந்த காலை
உம்பர் கோன் முதலோர் தத்தம் உருக் கரந்து உழல்வர்                                   வான்மேல்
வெம் பணி சிலைகண் மாறாம் வெய்யவர் நிலைமையே                                   போல்.
125
   
3697.
மறைந்திடு பாங்கர் இன்ன வாசவன் முதலோர் யாரும்
அறம் தவிர் சூரபன்மன் அடுபடைத் தலைவர்க் காணில்
பறைந்திட மார்பம் உள்ளம் பனித்திட வியர்ப்ப யாக்கை
இறந்தனர் ஆகிப் பின்னர் இன் உயிர் பெறுவர் அன்றே.
126
   
3698.
வினைப்பவம் உழந்த விண்ணோர் வெம் தொழில்                             அவுணர் கோனை
நினைப்பினும் அவசம் ஆவர் நெடும் துயில் பெறாத நீரால்
மனப்படு கனவு நீத்தார் மற்று அது வருமேல் அங்கண்
உனப்படு சூரர் காணின் உயிரையும் இழப்பர் அம்மா.
127
   
3699.
பொன் நகர் இறுதி செய்து புதல்வனை அமரரோடு
துன் அரும் சிறையுள் சேர்த்தித் துயர்ப் பெரும் கடலுள்                                       வீட்டி
மன்னிய வெறுக்கை வவ்வி மனையொடு கரப்பச் செய்தும்
இன்னமும் அவுணர் கோமான் இந்திரற்கு கலக்கண்                                       சூழும்.
128
   
3700.
ஒப்பரும் வெறுக்கை தன்னால் ஓங்கிய விறலால் சீரான்
மெய்ப்படு மிடலால் யார்க்கும் மேன்மையால் அழியா                                       ஆற்றால்
இப்பகல் வானோர்க்கு எல்லாம் இடர்புரி கொடுமை நீரால்
அப் பெரும் சூரற்கு என்றும் ஆரும் நேர் அன்று மாதோ.
129
   
3701.
ஏயது ஓர் அண்டம் ஒன்றின் இழைத்தன இவ்வாறு ஏனை
ஆயிரத்து ஓர் ஏழ் அண்டத்தவன் செயல் அறிதல்                                     தேற்றாம்
தூயது ஓர் பரத்தின் மேலாம் சோதியாய் எம்மைக்                                     காப்பான்
மேயின ஒரு நீ அன்றி வேறு யார் தெரிதல் பாலார்.
130
   
3702.
தொடந்திடு சீர் பெற்று உள்ள சூரனது ஆணை என்னில்
கடந்திடல் புரியார் மாலும் கமல மேல் அயனும் வானோர்
அடங்கலும் முனிவர் யாரும் ஆயிர இருநால் அண்டத்து
ஒடுங்கிய உயிரும் அன்னோன் பெருமை யார் உரைக்கல்                                         பாலார்.
131
   
3703.
முடிவில் இவ் வளம் பெற்று உள்ள முரண் கெழு                                  சூரபன்மன்
கெடுகிலன் அன்று மேலோன் கிளத்திய வரத்தின் சீரால்
படி அறும் அமல மேனிப் பரஞ்சுடர் குமர நீயே
அடுவதை அன்றிப் பின்னர் அவனையார் முடிக்கல்                                  பாலார்.
132
   
3704.
ஐந்து இயல் அங்கம் சூரற் கயன் புகன்று உழல்வான்                                     நாளும்
இந்திரை கேள்வன் போர் செய்து எஞ்சினன் எவர்க்கும்                                     மேலாய்
முந்திய சிவன் அன்னோற்கு முதல்வரம் அளித்தான்                                     பின்னர்
வந்து அடல் புரியான் நீயே மற்று அவன் கோறல்                                     வேண்டும்.
133
   
3705.
ஆவது ஓர் சூரன் தன்னை அவன் துணைவோரை                                     மைந்தர்
ஏவர்கள் தமையும் அட்டே எழில் பெறு சயந்தனோடும்
தேவர் தம் சிறையை நீக்கித் திசைமுகன் மகவான் ஆதித்
காவலர் பதங்கள் நல்கிக் காத்து அருள் எம்மை என்றான்.
134
   
3706.
இவ்வகை முகம் ஆறு உள்ள எம்பிரான் உளத்திற்கு ஏற்ப
உயர் உறும் அன்பால் பொன்னோன் உரைப்ப முன்                              அறிந்தது ஒன்றை
மெய்வரு தொடர்பால் ஈன்றோர் விழைவினான் மழலை                              ஓவாச்
செவ்வியல் மகார் வாய்க் கேட்கும் திறன் என வினவிச்                              சொல்வான்.
135
   
3707.
புன் தொழில் அவுணர் தன்மை புறத்தவர் செய்கை யாவும்
ஒன்று இடை விடாது முற்றும் உள்ளவாறு உரைத்தாய்                                      நம்முன்
அன்றிது பனுவற்கு எல்லாம் நாதனை ஒரு நீ அன்றோ
வென்று அவன் புறத்தை நீவி இனிது அருள் புரிந்தான்                                      எம்கோன்.
136
   
3708.
அறிவின் உள் அறிவாய் வைகும் அறுமுக அமல வெம்                             சூர்
இறு செயல் நினைக்கில் ஆகும் ஈண்டை ஓர் ஆடல்                             உன்னிக்
குறுகினை அது போல் அன்னோன் கொள்கையும்                             தேர்ந்தாய் நிற்கு ஓர்
சிறியனேன் உரைத்தேன் என்னும் தீப்பிழை பொறுத்தி                             என்றான்.
137
   
3709.
பொறுத்தி என் குற்றம் என்று பொன்னடித் துணையைப்                                  பொன்னோன்
மறத்தல் இல் அன்பில் பூண்டு வணங்கினன் தொழுது                                  போற்ற
வெறித் தரு கதிர் வேல் அண்ணல் எம் உரை கொண்டு                                  சொற்றாய்
உறத் தகும் பிழையில் யாதும் உன்னலை இருத்தி                                  என்றான்.
138
   
3710.
பொன் எனும் பெயரினான் பொருவில் கந்தவேள்
இன் அருள் நிலைமை பெற்று இருந்த பின்னரே
தன் அயல் நிற்புறு சதமகத்தனை
அந் நிலை நோக்கியே அன்பில் கூறுவான்.
139
   
3711.
ஈண்டு இது கேள் மனத்து ஏதும் எண்ணலை
மூண்டிடும் சூர் குலம் முடிய வான் உளோர்
மீண்டிட இரும் சிறை விண் பதத்தை நீ
ஆண்டிட நல்குதும் ஐயுறேல் என்றான்.
140
   
3712.
இகபரம் உதவுவான் இதனைச் சாற்றலும்
மகபதி பரிவொடு வணங்கி வானவத்
தொகையொடு போற்றியே துன்பு எலாம் ஒரீஇப்
புகல் அரும் மகிழ்ச்சி உள்பொருந்தல் மேயினான்.
141