இலங்கை வீழ் படலம்
 
3802.
மலங்கொடு சுறவு தூங்கும் மறி கடல் மீது மேரு
விலங்கல் சென்றிட்டது என்ன விண் இடம் தன்னின் நீங்கி
அலங்கல் அம் திண் தோள் வள்ளல் அவுணர்தம்                                 இருக்கை ஆகும்
இலங்கை அம் குவடு மூன்றில் இடைப்படு சிகரம்                                  பாய்ந்தான்.
1
   
3803.
நெடுவரை தன்னை வேலோன் ஈறு செய்திட்ட அண்ணல்
விட வரு தமியோன் தொல்லை இலங்கையின் மீது பாய
அடல் அதி வீரன் ஏனை அவுணர்கள் கலங்கி ஏங்கி
இடி உறு புயங்கம் என்ன யாரும் மெய் பனித்து வீழ்ந்தார்.
2
   
3804.
வைப்பு உறு மகேந்திர வடாது புலம் ஆகி
இப்புறம் இருந்திடும் இலங்கை தனில் எந்தல்
குப்புறுதலும் குலை குலைந்து அவுணரோடும்
உப்பு உறு கடல் படிதல் கண்டு உவகை ஊற்றான்.
3
   
3805.
தந்திமுக மாமதலை தன் அடி வணங்கா
தந்தர விண்ணோர்க் கடல் அலைத்திடலும் அன்னோன்
சிந்தை முனி வெய்த விடை சேர்த்த கயிறோடு
மந்தர நெடும் கிரி மறிந்தபடி மானும்.
4
   
3806.
ஆடல் கெழு மொய்ம்பினன் அடித்தலம் அது ஊன்ற
மூடுதிரை வேலை இடை மூழ்கிய இலங்கை
கூடு மகவு அண்ணல் குலிசம் தொடர நேமி
ஊடு புகல் உற்றிடும் மை நாக வரை ஓக்கும்.
5
   
3807.
மா மறைகள் தம்மை முனம் வஞ்சனை புரிந்தே
சோமுகன் மறைந்த திரை தூங்கு கடல் ஊடே
ஏமம் உறு பேர் உரு எடுத்தது ஒரு மாண் சேல்
போம் என வாழ்ந்தது பொலம் கெழும் இலங்கை.
6
   
3808.
தொல்லை தனில் ஓர் விதி துயின்ற கடை நாளின்
எல்லையது இகந்து கடல் ஏழும் எழ அங்கண்
ஒல்லை பிலம் முற்ற புவி உய்ப்ப ஒரு கேழல்
செல்லுவதின் ஆழ்ந்தது திரைக் கடல் இலங்கை.
7
   
3809.
சிந்துவின் அகன் கரை ஒர் திண் கிரி அழுந்த
அந்தம் இல் இலங்கையும் அழுந்தி இடும் தன்மை
முந்து ஒரு மடக் கொடி விருப்பின் முனி மூழ்க
இந்திரனும் நேமியின் இடைப் புகுதல் போலும்.
8
   
3810.
உலம் கொள் புய வீரன் அடி ஊன்றுதலும் முன்னோர்
விலங்கல் பணி தன் உலகம் மேவியது கேளா
அலங்கல் பெறு வாகை அவன் ஆற்றல் அது தாங்கி
இலங்கை அது காண்பல் என ஏகியது போலும்.
9
   
3811.
இலங்கை இது பான்மையின் இரும் கடலுள் மூழ்கக்
குலங்களொடு வைகிய கொடும் தகுவர் யாரும்
கலங்கினர் அழுங்கினர் கவன்றனர் துவன்றி
மலங்கினர் புலம்பினர் மருண்டனர் வெருண்டார்.
10
   
3812.
அற்றம் உறு தானவர்கள் ஆழ அனையோரைச்
சுற்றிய அளப்பு இல சுறா உழுவை மீனம்
பற்றிய வளைந்தன பலப்பல திரண்டே
செற்றிய திமிங்கில திமிங்கில கிலங்கள்.
11
   
3813.
கையதனை ஈர்ப்ப சில கால்கள் சில ஈர்ப்ப
வெய்ய தலை ஈர்ப்ப சில மிக்க உயர் தோள்கள்
மொய்யுடை மார்பு அதனை ஈர்ப்ப சில மொய்த்தே
சையம் உறழ் யாக்கை உள தானவரை மீனம்.
12
   
3814.
அத்தனொடி யாயை மனை அன்பின் முதிர் சேயைக்
கொத்தின் ஒடு கொண்டு சிலர் கூவி எழுகின்றார்
எய்த்தனர்கள் செய்வது என் இரும் படையும் விட்டுத்
தத்தம் உயிர் கொண்டு சிலர் தாமும் எழல் உற்றார்.
13
   
3815.
உற்ற சில தானவரை ஒய்யென அளாவித்
திற்றி விழை வான் நனி திரண்டனர்கள் எல்லாம்
பற்றுழி தனித்தனி பறித்தது பொருட்டால்
பொற்றை புரை மீன்கள் பெரும் போர் வினை புரிந்த.
14
   
3816.
தானவர்கள் ஓர் சிலவர் தம் உணல் குறித்தே
வான் நிமிரும் ஓதை என வந்து தமை எற்றப்
பூ நுனைய வாள் சுரிகை போர் அயில்கள் கொண்டே
மீனம் ஒடு வெம் சினம் விளைத்து அமர் புரிந்தார்.
15
   
3817.
சீர்த்தி கொள் இலங்கை கடல் சென்றிடலும் அங்கண்
ஆர்த்தி பெறு மங்கையர்கள் அங்கை அவைபற்றி
ஈர்த்த பிறர் இல் உற இசைந்து கரம் பற்றும்
தூர்த்தரை நிகர்த்தன சுறா மகர மீனம்.
16
   
3818.
மீன் ஒரு கை பற்றி இட வேறு ஒரு கரத்தைத்
தானவர் வலித்து தடக்கை கொடு இசிப்ப
மான் அனைய கண்ணியர் வருந்திடுதல் ஓர் ஐந்து
ஆன புலன் ஈர்ப்ப உள் அழுங்குவது போலும்.
17
   
3819.
திண் திறல் வலம்படு திருக்கை சுற மீனம்
மண்டிய திமிங்கிலம் வரும் தகுவர் சூழல்
கண்டு மிசை எற்றிடுதலும் கடிது வாளால்
துண்டம் உறவே அவை துணித்து எழுநர் சில்லோர்.
18
   
3820.
கட்டழல் விழிச் சுறவு கார் அவுணர் தம்மை
அட்டு உணல் குறித்து வர அன்னவர்கள் நீவித்
தொட்டனர் பிடித்து அகடு தூரும் வகை பேழ்வாய்
இட்டனர் மிசைந்தனர் எழுந்தனர்கள் சில்லோர்.
19
   
3821.
ஏற்ற புனல் ஊடு தெரிவு இன்றி எமர் என்றே
வேற்று ஒரு மடந்தையர் வியன் கையது பற்றிப்
போற்றி எழ அங்கவர் புறத்தவர் களாக
மாற்றினர் இசைந்து சிலர் வாழ்க்கை மனம் வைத்தார்.
20
   
3822.
இல் இவர் எனப் பிறரை ஏந்தி எழ அன்னோர்
புல்லு தனி அன்பர் புடை போக ஒரு சில்லோர்
அல்லல் உறுவார் தமை அடைந்த தொரு கன்னி
மெல்ல அயல் போந்துழி மெலிந்து உழலுவார் போல்.
21
   
3823.
தீமை புரி மால் களிறு திண் புரவி யாவும்
ஏமரு சுறாத் தொகுதி ஈர்த்து விரைந்து ஏகித்
தோ மறு பிணா மகரம் துய்ப்ப உதவுற்ற
காமர் கெழு பெண் மயல் கடக்க எளிதன்றே.
22
   
3824.
மாற்று அறு சுறாச் சில மடப்பிடிகை பற்றி
ஏற்ற பெண் வழிச் செல எதிர்ந்து அதனை நோக்கி
வேற்று ஒர் பெடை ஆயது என வேர் உறுகை கையர்க்கு
ஆற்றும் உபகார இயல் பாகியதை அன்றே.
23
   
3825.
சிந்துவதன் மீதில் எழு சில் அவுணர் ஆயோர்
கந்தன் முருகேசன் விடு காளை செயல் காணா
நம் தமையும் நின்றிடின் நலிந்திடுவன் யாங்கள்
உய்ந்திடுதும் என்று கடிதோடி அயல் போனார்.
24
   
3826.
பீடு செறி தம் கணவரைப் பிரிகிலாமே
கூடும் வழி ஆழ்ந்த சில கோல் தொடி மின்னார்கள்
ஆடை புனல் ஊடு புக அல்குல் தம் கையால்
மூடி எழுவார் முலை முகத்தின் முகம் வைத்தே.
25
   
3827.
சேண் தொடர் இலங்கை கடல் சென்று உழிய தன்பால்
ஆண்ட சில மாதர்கள் அரத்த உடை கொண்டார்
மீண்டு எழலும் நீர் பட வெளிப்படுவது அல்குல்
காண்டகைய செம்மதி களங்கம் அடைந்து என்ன.
26
   
3828.
கார் அவுணர் மாதர் சிலர் காமர் கடல் வீழ்வார்
நீரம் எழவே உடை நெகிழ்ந்து ஒருவி யேக
மூரல் முகம் அல் உருவு முற்று உற மறைத்தே
தேரை என ஒண் புனல் செறிந்து திரி உற்றார்.
27
   
3829.
ஆசு உறும் அரைத் துகில் அன்றிட எழுந்தே
தேசு உறு மடந்தையரில் ஓர் சிலவர் சேண் போய்
மாசு உறு புயல் குழுவை வல்லை கரம் பற்றித்
தூசின் இயல்பால் நடுவு சுற்றி உலவு உற்றார்.
28