முகப்பு |
நகர் புகு படலம்
|
|
|
3950.
|
அண்டம் யாவையும் எழுவகை உயிர்த்தொகை அனைத்தும்
பிண்டம் ஆம் பொருள் முழுவதும் நல்கி எம் பெருமான்
பண்டு பாரித்த திறம் என மகேந்திரப் பதியின்
மண்டு தொல் வளம் நோக்கியே இன்னன மதிப்பான். |
1 |
|
|
|
|
|
|
|
3951.
| எந்தை முன்னரே சூரபன்மா வினுக்கு ஈந்த முந்தும் அண்டங்கள் அலமரும் உவரிகள் முழுதும் வந்து மொய்த்தன போலும் ஆல் வரைபுரை காட்சிக் கந்து பற்றியே ஆர்த்திடும் எல்லை தீர் கரிகள். |
2 |
|
|
|
|
|
|
|
3952.
| இயலும் ஐம் பெரும் நிறத்தின் அண்டங்களின் இருந்த புயல் இனம் பல ஓர் வழித் தொக்கன பொருவ மயில் இரும் சரம் முயலொடு யூக மற் றொழிலைப் பயில் பரித் தொகை அளப்பில வயின் தொறும் பரவும். |
3 |
|
|
|
|
|
|
|
3953.
| அண்டம் ஆயிரத்து எட்டினுள் மேதகும் அடல் மாத் தண்டமால் கரி ஆயின தம் பெரும் தேர்கள் எண்டரும் பொருள் யாவும் ஈண்டு இருந்தன இவற்றைக் கண்டு தேர்ந்தனர் அல்லரோ அகிலமும் கண்டோர். |
4 |
|
|
|
|
|
|
|
3954.
|
இணை இல் இவ்விடைத் தானையின் வெள்ளம் ஓர் இலக்கம்
நணுகும் என்றனன் அந்தணன் நாற் பெரும் படையும்
கணிதம் இல்லன இருந்தன வெள்ளி கண் இலன் போல்
உணர்வு இலன் கொலாம் கனகனும் கேட்ட சொல் உரைத்தான்.
|
5 |
|
|
|
|
|
|
|
3955.
| உரையின் மிக்க சூர் பெற்ற அண்டம் தொறும் உளவாம் வரையின் மிக்கதேர் கடல்களின் மிக்க கை மாக்கள் திரையின் மிக்கவாம் பரித் தொகை ஆயிடைச் செறிந்த பரவை நுண் மணல் தன்னினும் மிக்கன பதாதி. |
6 |
|
|
|
|
|
|
|
3956.
|
மண் கொள் ஆயிரத்து எட்டு எனும் அண்டத்தின் வளமும்
எண் கொள் எண்பதினாயிரம் யோசனை எல்லைக்
கண் கொள் பான்மையில் ஈண்டிய அற்புதம் கறை தோய்
புண் கொள் வேல் உடைச் சூர் தவத்து அடங்கிய போலாம்.
|
7 |
|
|
|
|
|
|
|
3957.
|
உரைசெய் ஆயிரத்து எட்டு எனும் அண்டத்தின் உளவாம்
கரை இல் சீர் எலாம் தொகுத்தனன் ஈண்டு அவை கண்டாம்
தருமம் மெய்யொளி கண்டிலம் அவற்றையும் தந்து
சுரர்கள் தம்முடன் சிறையில் இட்டான் கொலோ சூரன். |
8 |
|
|
|
|
|
|
|
3958.
| அரண்டு அரும் கழல் சூரன் வாழ் மகேந்திரம் அதனில் திரண்ட பல்லியத் துழனி ஏழ் கடலினும் தெழிப்ப முரண்டிறத்து அவை இயம்புவார் அளவையார் மொழிவார் இரண்டு பத்து நூறு யோசனை உண்டவர் இடங்கள். |
9 |
|
|
|
|
|
|
|
3959.
| கரிகள் சேவகம் ஒருபதினாயிரம் கடும் தேர் விரியும் நீள் இடை ஒரு பதினாயிரம் விசயப் பரியின் எல்லை ஓர் இருபதினாயிரம் பையத்து உருவின் இன்னமும் உண்டுகொல் யோசனைத் தொகையே. |
10 |
|
|
|
|
|
|
|
3960.
| இவுளி வாயினும் மால் கரிக் கரத்தினும் இழிந்து திவளும் நீர்மை சால் விலாழியும் தானமும் செறிந்து குவளை உண்கணார் நீத்த சாந்து அணிமலர் கொண்டே உவள கந்தரும் அகழி சென்று அகன் கடல் உறும் ஆல். |
11 |
|
|
|
|
|
|
|
3961.
|
வளமை மேதகும் இப் பெரு மகேந்திரம் வகுத்தன்
முளரி அண்ணல் இங்கு ஒருவனான் முடிந்திட வற்றோ
ஒளிறு வாள் படை அவுணர் கோனுடைய அண்டத்தின்
அளவின் நான்முகர் யாரும் வந்து இழைத்தனர் ஆம் ஆல்.
|
12 |
|
|
|
|
|
|
|
3962.
| புரந்தரன் தனது உலகமும் ஒழிந்த புத்தேளிர் இருந்த வானமும் எண் திசை நகரமும் யாவும் வருந்தி இந் நகர் சமைத்திட முன்னரே வண்கை திருந்தவே கொலாம் படைத்தனர் திசை முகத்தலைவர். |
13 |
|
|
|
|
|
|
|
3963.
| பொன் புலப்படு துறக்கம் வான் மாதிரம் புவிகீழ் துன்பில் போகமார் உலகு என்பர் தொடு கடல் பெருமை முன்பு காண் கலர் கோட்டகம் புகழ்தரு முறை போல் இன்பம் யாவையும் உள நகர் ஈது போல் இயாதோ. |
14 |
|
|
|
|
|
|
|
3964.
|
கறை படைத்ததாள் கரிபரி அவுணர் தேர்க் கணங்கள்
அறை படைத்து இவண் ஈண்டிய அண்டங்கள் அனைத்தும்
முறை கடல் தொகை முழுவதும் சூர் கொணர்ந்து ஒருங்கே
சிறை படுத்திய போலும் வேறு ஒன்று இலை செப்ப. |
15 |
|
|
|
|
|
|
|
3965.
| ஐய பூழியும் ஆரகில் ஆவியும் ஆற்ற நொய்ய வாகிய அணுக்களும் நுழை வரிது என்னில் செய்ய இந் நகர் ஆவணம் எங்கணும் செறிந்த வெய்ய தேர்கரி அவுணர் தம் பெருமையார் விரிப்பார். |
16 |
|
|
|
|
|
|
|
3966.
| அள்ளல் வேலை சூழ் மகேந்திர புரிக்கு இணையாகத் தெள்ளிதா ஒரு நகரம் இன்று உளது எனச் செப்ப எள்ளல் இன்றிய அண்டம் ஓர் ஆயிரத்து எட்டின் உள்ள சீர் எலாம் ஈது போல் ஒரு புரத்து உளதோ. |
17 |
|
|
|
|
|
|
|
3967.
| கழிந்த சீர்த்தி கொள் இந் நகர் தன் இடைக் கஞல வழிந்து தொல் உரு மாழையின் மணி நிழலாகி இழிந்துளான் பெறு திரு எனப் பயன் பெறாது எவர்க்கும் ஒழிந்த வேலைகள் தம் புகழ் கொள்வது இவ் வுவரி. |
18 |
|
|
|
|
|
|
|
3968.
|
ஏற்கும் நேமி சூழ் மகேந்திர வெறுக்கை இவ்வுலகோர்
ஆர்க்கும் ஓர் பயன் பெற்றிலது உயிர்ப்பலி அருந்தும்
கார்க்குழாம் புரை அலகை சூழ் காளி மந்திரத்தில்
சீர்க் கொள் கற்பகம் பிறர்க்கு உதவாத அமர் செயல்போல்.
|
19 |
|
|
|
|
|
|
|
3969.
| மறக் கொடும் தொழில் இரவி அம் பகை அழல் மடுப்பத் துறக்கம் ஆண்டது பட்டிமை ஆகும் அத் தொல்லூர் சிறக்கும் இந்நகர் நோக்கியே தன் நலம் தேய்ந்து பொறுக்க அரும்பெரு நாண்சுடக் கரிந்தது போலாம். |
20 |
|
|
|
|
|
|
|
3970.
|
துங்க
மிக்க சூர் படைத்திடும் அண்டமாத் தொகையுள்
செங்கதிரத் தொகை ஆங்கு அவன் பணியினால் சென்று பொங்கு தண் சுடர் நடாத்தி நின்றென்ன இப்புரியில் எங்கும் உற்றன செழுமணிச் சிகரம் எண் இலவே. |
21 |
|
|
|
|
|
|
|
3971.
| மாண் நிலைப்படும் எழுவகை உலகின் வைப்பு என்ன வேண் நிலைப் பெரும் சிகரிகள் செறிந்தன யாண்டும் கோள் நிலைக் கதிர் உடுப்பிறர் பதங்களில் குழுமி நீண் நிலைத்தலம் பல உள மாடங்கள் நிரந்த. |
22 |
|
|
|
|
|
|
|
3972.
| நூறு யோசனை சேண் படு நீட்சியும் நுவலும் ஆறு யோசனைப் பரவையும் பெற்ற ஆவணங்கள் ஏறு தேர் பரி களிறு தானவர் படை ஈண்டிச் சேறல் ஆயிடை அருமையால் விசும்பினும் செல்லும். |
23 |
|
|
|
|
|
|
|
3973.
| அடல் மிகுத்திடு தானவர் அகல் இரு விசும்பில் கடிதினில் செல மத்திமை காட்டு மாறு ஒப்ப நெடு முகில் கணம் தழுவு சூளிகை மிசை நிறுவும் கொடிகள் எற்றிடப் போவன இரவி கொய் உளைமா. |
24 |
|
|
|
|
|
|
|
3974.
| மேல் உலாவிய படிக மாளிகை சில மின்னார் மாலை தாழ் குழற்கு இடும் அகில் ஆவியான் மறைவ சீலம் நீங்கிய அவுணர் தம் சீர்த்திகள் அனைத்தும் மேலவே அவர் பவத்தினுள் ஒடுங்குமாறு என்ன. |
25 |
|
|
|
|
|
|
|
3975.
| அணிகுலாய கோ மேதகம் மரகதம் ஆரம் துணியும் நீலம் வச்சிரம் வயிடூரியம் துப்பு நணிய பங்கயம் புருடராகம் எனும் நவமா மணிகளால் செய்து மிளிர்வன வரம்பு இல் பொன் மாடம். |
26 |
|
|
|
|
|
|
|
3976.
| இயல் படைத்த வெண் படிகத்தின் இயன்ற மாளிகை மேல் புயல் படைத்திடு களிமயில் வந்திடப் புடையே கயல் படைத்த கண்ணியர் புரி அகில் புகை கலப்ப முயல் படைத்திடு மதியினைச் சூழ் தரு முகில் போல். |
27 |
|
|
|
|
|
|
|
3977.
| வளன் இயன்றிடு செம்மணிப் பளிங்கு மாளிகை மேல் ஒளிறு பொன் தலத்து அரிவையர் வடிமிசைந்து உறுதல் வெளிய சேயன பங்கயப் பொகுட்டின் மீமிசையே அளி இனங்கள் தேன் மாந்தியே வைகும் மாறு அனைய. |
28 |
|
|
|
|
|
|
|
3978.
| துய்ய வால் அரி புனற்கு இறை மண்ணியே தொகுப்பச் செய்ய தீயவன் ஊன்களொடு அவை பதம் செய்ய மையன் மாதரோடு அவுணர்கள் அரம்பையர் வழங்க நெய் அளாவு உண்டி உண்குவர் மறுசிகை நீக்கி. |
29 |
|
|
|
|
|
|
|
3979.
| துப்பு உறுத்தன குஞ்சி அம் காளையர் தொகையும் செப்பு உறுத்து சீறடி மினார் பண்ணையும் செறிந்து மெய்ப் புறத்து இயல் காட்சியும் கலவியும் வெறுப்பும் எப்புறத்தினும் நிகழ்வன மதன் உலகு இதுவே. |
30 |
|
|
|
|
|
|
|
3980.
| பூணும் ஆரமும் கலாபமும் இழைகளும் பொன் செய் நாணும் ஒற்றரால் பரத்தையர் பால் பட நல்கிப் பேணி மற்றவர் விலக்கின நயந்தன பிறவும் மாணு மைந்தர்கள் தேறுவான் ஆறுபார்த்து அயர்வார். |
31 |
|
|
|
|
|
|
|
3981.
|
துன்று
தானவர் தெரியலின் மாதர் பூம் தொடையின்
மன்றல் மாளிகைச் சோலையின் இலஞ்சியின் மலரில் குன்றமால் கரித்து அண்டத்தில் யாழ் முரல் குழுவில் சென்று சென்றன துணர்வு போல் அளிகளும் திரியும். |
32 |
|
|
|
|
|
|
|
3982.
| மாறு இலாத சூர் ஆணையால் வந்திடும் வசந்தன் ஊறு தெண்கடல் அளவியே தண்டலை உலவி வீறு மாளிகை நூழையின் இடம் தொறும் மெல்லத் தேறல் வாய் மடுத்தோர் என அசைந்து சென்றிடும் ஆல். |
33 |
|
|
|
|
|
|
|
3983.
| மாடம் மீது அமர் மடந்தையர் தம் உரு வனப்புக் கூடவே புனைந்து அணி நிழல் காண்பது குறித்துப் பாடு சேர் கரம் நீட்டியே பகலவன் பற்றி ஆடி நீர்மையின் நோக்கியே அந்தரத்து எறிவார். |
34 |
|
|
|
|
|
|
|
3984.
| வன்ன மாட மேல் ஆடவர் பரந்து அமை மகளிர் உன்னி ஊடியே பங்கி ஈர்த்து அடிகளால் உதைப்பப் பொன்னின் நாண் அறத் தமது கை எழிலி உள் போக்கி மின்னு வாங்கியே ஆர்த்தனர் குஞ்சியை வீக்கி. |
35 |
|
|
|
|
|
|
|
3985.
| முழங்கு வான் நதி தோய்ந்த சின் மாளிகை முகட்டின் அழுங்கல் என்பதை உணர்கிலா மாதரார் அகல்வான் வழங்கு கோளுடன் உருமினைப் பற்றி அம்மனையும் கழங்குமாய் எறிந்து ஆடுவர் அலமரக் கண்கள். |
36 |
|
|
|
|
|
|
|
3986.
|
ஈண்டை மாளிகை மங்கையர் தம் சிறார் இரங்க
ஆண்டு மற்று அவர் ஆடுவான் பற்றி ஆதவன் தேர்
பூண்ட மான் தொகை கொடுத்தலும் ஆங்கு அவன் போந்து
வேண்டி நின்றிட வாங்கியே உதவுவார் மெல்ல. |
37 |
|
|
|
|
|
|
|
3987.
| நீடு மாளிகை மிசை வரு மாதர் கை நீட்டி ஈடு சால் உரும் ஏறுடன் மின் பிடித்து இசைத்தே ஆடு கிங்கிணி மாலை ஆம் மைந்தருக்கு அணியா ஓடு கொண்டலைச் சிறு துகிலாப் புனைந்து உகப்பார். |
38 |
|
|
|
|
|
|
|
3988.
|
பொங்கு மா மணி மேல் தலத்து இரவி போந் திடலும்
இங்கு இது ஓர் கனி எனச் சிறார் அவன் தனை எட்டி
அங்கை பற்றியே கறித்து அழல் உறைப்ப விட்டு அழுங்கக்
கங்கை வாரி நீர் ஊட்டுவார் கண்ட நற்றாயர். |
39 |
|
|
|
|
|
|
|
3989.
| கண்டு வந்தனை வரும் புகழ் தம் சிறார் கலுழ விண்டு வந்தனை செய்து எனத் தாழ்ந்த மேல் நிலத்தில் வண்டு வந்தனைப் படுகதிர்க் கைம்மலர் வலிந்து கொண்டு வந்தனை மார் இரங்கா வகை கொடுப்பார். |
40 |
|
|
|
|
|
|
|
3990.
| அஞ்சில் ஓதியர் மாளிகை மிசைச் சிலர் அகல்வான் விஞ்சு தேவரை விளித்தலும் மெய்யுறன் மறுப்ப வஞ்சர் வஞ்சர் என்று அரற்றி அவ்வானவர் இசைய நம் சிறாருடன் ஆடுதும் என்பர் நண்ணினர்க்கு. |
41 |
|
|
|
|
|
|
|
3991.
| பொருளில் மாளிகைப் படிற்றியர் புணவர் என்று உன்னி வரவும் அஞ்சுவர் வராமையும் அஞ்சுவர் மடவார் கரவின் மேவுதல் அவுணர்கள் காண்பர் கொல் என்றும் வெருவுகின்றனர் என் செய்வார் விண் நெறிப் படர்வார். |
42 |
|
|
|
|
|
|
|
3992.
|
மேல்
நிலம் தனின் மங்கையர் சிறார் விடாது இரங்க
ஊனம் இல் கதிர் தேர்வர அவரை ஆண்டு உய்த்து வானகம் தனில் சில்லிடை யேகி நம் மகவைப் பானுவந்து நீ தருக என விடுக்குநர் பலரால். |
43 |
|
|
|
|
|
|
|
3993.
| கலதி ஆகிய அவுணர் தம் மாதர் கால் வருடிச் சிலதியார் என வணங்கினோர் ஏவல் செய் கிற்பார் சலதியார் தரும் உலகமேல் தெரி குறில் தவமே அலதி யாவுள வேண்டி ஆங்கு உதவ நின்றனவே. |
44 |
|
|
|
|
|
|
|
3994.
| ஐந்து ஆகிய தருக்களும் மணியும் நல் ஆவும் நந்தும் அம்புய நிதியமும் பிறவும் இந் நகரின் மைந்தர் மாதர்கள் இருந்துழி இருந்துழி வந்து சிந்தை தன்னிடை வேண்டி ஆங்கு உதவியே திரியும். |
45 |
|
|
|
|
|
|
|
3995.
| மீது போகிய மாளிகைக் காப்பினுள் மேவும் மாதர் வான் நெறிச் செல்லுவோர் சிலர் தமை வலித்தே காதலால் பிடித்து ஒரு சிலர் முறை முறை கலந்து போதிரால் என விடுப்பர் பின் அசமுகி போல்வார். |
46 |
|
|
|
|
|
|
|
3996.
|
மேதாவி கொண்ட கதிர் வெய்யவனை வெம்சூர்
சேய்தான் வலிந்து சிறை செய்திடலின் முன்ன
மேதாம் இனம் கொல் என எண்ணி அவன் என்று ஊழ்
வாதாய் அனங்கள் தொறும் வந்து புகல் இன்றே. |
47
|
|
|
|
|
|
|
|
3997.
| தேசு உற்ற மாடம் உறை சீப்ப வரு காலோன் வாசப் புனல் கலவை வார்புணரி கொண்கன் வீசப் புலர்த்தியிட விண் படரும் வெய்யோன் ஆசுற்ற தானவர் அமர்ந்து இவண் இருந்தார். |
48 |
|
|
|
|
|
|
|
3998.
| பால் கொண்ட தெண் கடல் மிசைப் பதுமை தன்னை மால் கொண்டு கண்துயிலும் வண்ணம் இது என்ன மேல் கொண்ட நுண் பளித மேனிலம் அதன் கண் சூல் கொண்ட கார் எழிலி மின்னின் ஒடு துஞ்சும். |
49 |
|
|
|
|
|
|
|
3999.
|
குழலின் ஓதையும் எழால்களின் ஓதையும் குறிக்கும்
வழுவில் கோட்டொடு காகள ஓதையும் மற்றை முழவின் ஓதையும் பாடுநர் ஓதையும் முடிவில் விழவின் ஓதையும் தெண் திரை ஓதையின் மிகுமால். |
50 |
|
|
|
|
|
|
|
4000.
| மதன் இழுக்கு உறு மைந்தரும் மாதரும் வனமா மதன் இழுக்கிய வீதியில் வீசும் வண் கலவை பதன் இழுக்கு உறச் சேதம் ஆகும் மீன் பலவும் பதன் இழுக்கியவாம் தினம் புனைந் தெறி பணிகள். |
51 |
|
|
|
|
|
|
|
4001.
|
அளப்பில்
வேட்கை அங்கு ஒருவர் கண் வைத்து மற்று
அதனை
வெளிப் படுக்கிலர் மெலிதலும் குறிகளே விளம்ப
ஒளிப்பது என் உளம் பகர் என ஆற்றலா துடைந்து
கிளிப் பெடைக்கு இருந்து ஒருசில மடந்தையர் கிளப்பார். |
52 |
|
|
|
|
|
|
|
4002.
|
குருளை மான் பிணித்து இளம் சிறார் ஊர்ந்திடும் கொடித்தேர்
உருளை ஒண் பொனை மணித்தலம் கவர்ந்து கொண்டு உறுவ
வெருளின் மாக்களை வெறுப்பது என் முனிவரும் விழைவார்
பொருளின் ஆசையை நீங்கினர் யாவரே புவியில். |
53 |
|
|
|
|
|
|
|
4003.
|
விழைவு
மாற்றிய தவத்தினரேனும் இவ் வெறுக்கை
மொழியினோரினும் அவுணராகத் தவம் முயல்வார் ஒழியும் ஏனையர் செய்கையை உரைப்பது என் உலகில் கழி பெரும் பகல் நோற்றவரே இது காண்பார். |
54 |
|
4003.
|
விழைவு
மாற்றிய தவத்தினரேனும் இவ் வெறுக்கை
மொழியினோரினும் அவுணராகத் தவம் முயல்வார் ஒழியும் ஏனையர் செய்கையை உரைப்பது என் உலகில் கழி பெரும் பகல் நோற்றவரே இது காண்பார். |
54 |
|