முகப்பு |
வீரவாகு சயந்தனைத் தேற்று படலம்
|
|
|
4158.
|
இத்திறம் அமரரோடு இந்திரன் மகன்
அத்தலை இருத்தலும் அனையர் யாவரும் மொய்த்திடு சிறை அகம் முன் கண்டான் அரோ வித்தக அறிவனாம் வீர வாகுவே. |
1 |
|
|
|
|
|
|
|
4159.
|
மா கண்டம் ஒன்பான் புகழும் திறல் வாகு அங்கண்
ஆ கண்டலன் மைந்தனை விண்ணவர் ஆயினாரைக்
காய் கண்டகராம் அவுணத் தொகை காத்தல் கண்டான்
பேய் கண்ட செல்வம் தனைக் காத்திடும் பெற்றியே போல்.
|
2 |
|
|
|
|
|
|
|
4160.
|
கண் ஓடல் இன்றித் துயர் வேலியில் காவல் கொண்ட
எண்ணோர் எனைக் கண்டிலராய் உணர்வு இன்றி மாழ்க
விண்ணோர்கள் காணத் தமியேன் செல வேண்டும் என்றான்
மண் ஓர் அடியால் அளக்கும் தனி மாயன் ஒப்பான். |
3 |
|
|
|
|
|
|
|
4161.
|
ஓம் காரமூலப் பொருளாய் உயிர் தோறும் என்றும்
நீங்காது அமரும் குமரேசனை நெஞ்சில் உன்னி யாங்கு ஆகுவதோர் அவன் மந்திரம் அன்பின் ஓதிக் தீங்காம் அவுணர் செறி காப்பகம் சென்று புக்கான். |
4 |
|
|
|
|
|
|
|
4162.
| தாமம் தரும் மொய்ம்புடை வீரன் சயந்தன் விண்ணோர் ஏமம் தருவன் சிறைச் சூழலுள் ஏகலோடும் தூமம் திகழ் மெய்யுடைக் காவலர் துப்பு நீங்கி மா மந்திரம் ஆம் வலைப்பட்டு மயங்கல் உற்றார். |
5 |
|
|
|
|
|
|
|
4163.
| எண் தானவரில் புடை காப்பவர் யாரும் மையல் கொண்டார் குயிற்றப் படும் ஓவியக் கொள்கை மேவத் தண்டார் அயில் வேல் படை நாயகன் தானை வேந்தைக் கண்டார் சயந்தனொடு தேவர் கருதல் உற்றார். |
6 |
|
|
|
|
|
|
|
4164.
|
ஏமாந்து அவுணர் சிறுகாலையின் இன்னல் செய்ய
நா மாண்டனர் போல் அவசத்தின் அணுகும் எல்லை
மா மாண்படைய அருள் செய்த நம் வள்ளல் தூதன்
ஆமாம் இவன் என்று அகம் கொண்டனர் ஆர்வம் உற்றார்.
|
7 |
|
|
|
|
|
|
|
4165.
|
அன்னார் அமரும் களம் சென்று அயில் ஏந்து நம்பி
நன் நாயகமாம் திரு நாமம் நவின்றுப் போற்றிப்
பொன் நாடு இறை கூர் திருநீங்கிய புங்கவன் தன்
முன்னா அணுகி இருந்தான் அடல் மொய்ம்பின் மேலோன்.
|
8 |
|
|
|
|
|
|
|
4166.
| செறிகின்ற ஞானத் தனி நாயகச் செம்மல் நாமம் எறிகின்ற வேலை அமுதில் செவி ஏக லோடும் மறிகின்ற துன்பின் சயந்தன் மகிழ்வு எய்தி முன்னர் அறிகின்றிலன் போல் தொழுது இன்ன அறைதல் உற்றான். |
9 |
|
|
|
|
|
|
|
4167.
| தாவம் பிணித்தது எனும் குஞ்சித் தகுவர் ஆனோர் பாவம் தலை சூழ்வது போல் எமைப் பாடு காப்ப மா வெம் படரில் இருந்தேம் கண் மருங்கின் ஐய நீ வந்தது என்னை இனிது இங்கு நிகழ்த்துக என்றான். |
10 |
|
|
|
|
|
|
|
4168.
|
முறை உணர் கேள்வி வீரன் மொழிகுவான் முதல்வன் தந்த
அறுமுக ஐயன் தன் பின் அடுத்து உளேன் அவன் தூது ஆனேன்
விறல் கெழு நந்தி பாலேன் வீரவாகு என்பேர் நுங்கள்
சிறை விடும் பொருட்டுச் சூர்முன் செப்புவான் வந்தேன் என்றான்.
|
11 |
|
|
|
|
|
|
|
4169.
|
என்னலும் அமரரோடும் இந்திரன் குமரன் கேளாச்
சென்னியின் அமிர்து உள் ஊறல் செய்தவத்து அயின்ற மேலோர்
அன்ன தன் பின்னர் நேமி அமிர்தமும் பெற்று உண்டு ஆங்கு
முன்னுறு மகிழ்ச்சி மேலும் முடி விலா மகிழ்ச்சி வைத்தான். |
12 |
|
|
|
|
|
|
|
4170.
|
அந்தர முதல்வன் மைந்தன் அறைகுவான் ஐய துன்பூர்
புந்தியேங் குறைவின் ஆதல் பொருட்டினால் போந்தாய் அற்றால்
இந்தவன் சிறையும் நீங்கிற்று இடர் எலாம் அகன்றி யாங்கள்
உய்ந்தனம் பவங்கள் தீரும் ஊதியம் படைத்தும் என்றான். |
13 |
|
|
|
|
|
|
|
4171.
|
பூண்தகு தடந்தோள் வீரன் புகலுவான் சூர்மேல் ஒற்றா
ஈண்டு எனை விடுத்த வேல் கை எம்பிரான் வலிதே நும்மை
ஆண்டிடுகின்றான் முன்னர் ஆக்கமும் பெறுதிர் பின்னும்
வேண்டியது எய்து கின்றீர் என்றனன் மேலும் சொல்வான். |
14 |
|
|
|
|
|
|
|
4172.
|
உலம் எலாம் கடந்த தோளீர் உன்னுதிர் உன்னி ஆங்கு
நலம் எலாம் வழிபட்டோர்க்கு நல்கிய குமரன் தன்னால்
தலம் எலாம் படைத்த தொல்லைச் சதுர்முகன் முதலாம்
வானோர்
குலம் எலாம் உய்ந்தது என்றால் உமக்கு ஒரு குறை உண்டாமோ.
|
15 |
|
|
|
|
|
|
|
4173.
|
தேவர்கள் தேவன் வேண்டச் சிறைவிடுத்து அயனைக் காத்த
மூவிரு முகத்து வள்ளல் முழுது அருள் செய்தான் நும்பால்
பாவமும் பழியும் தீங்கும் பையுளும் பிறவும் எல்லாம்
போவது பொருளோ தோற்றப் புணரியும் பிழைத்தீர் அன்றே.
|
16 |
|
|
|
|
|
|
|
4174.
|
சீர் செய்த கமலத் தோனைச் சிறை செய்து விசும்பினோடும்
பார் செய்த உயிர்கள் செய்த பரஞ்சுடர் நும்மை எல்லாம்
சூர் செய்த சிறையின் நீக்கத் தொடர்ந்திவண் உற்றான் என்றால்
நீர் செய்த தவத்தை யாரே செய்தனர் நெடிது காலம். |
17 |
|
|
|
|
|
|
|
4175.
|
சங்கையில் பவங்கள் ஆற்றும் தானவர் செறிந்த மூதூர்
இங்கு இதன் அறிஞர் செல்லார் எம்பிரான் அருளினால் யான்
அங்கணம் படர்வோர் என்ன அகம் மெலிந்து உற்றேன் ஈண்டே
உங்களை எதிர்தலாலே உலப்பிலா உவகை பூத்தேன். |
18 |
|
|
|
|
|
|
|
4176.
|
என்றலும் மகிழ்ச்சி எய்தி இந்திரன் மதலை யாங்கள்
வன் தளைப் படுமுன் போனார் மற்று எமைப் பயந்தோர் அன்னோர்
அன்று தொட்டு இன்று காறும் ஆற்றிய செயலும் அற்றால்
ஒன்றிய பயனும் யாவும் உரைமதி பெரியோய் என்றான். |
19 |
|
|
|
|
|
|
|
4177.
|
வீரன் அங்கு அதனைக் கேளா விண்ணவர் கோமான் தொல்
நாள்
ஆரணங்குடனே காழி அடைந்ததே எழுவாயாகச்
சீர் அலை வாயில் அந் நாள் சென்றிடு காறும் உள்ள
காரிய நிகழ்ச்சி எல்லாம் கடிதினில் கழறினான் ஏ. |
20 |
|
|
|
|
|
|
|
4178.
|
மேதகு தடந்தோள் வீரன் விண்ணவர் கோமான் தொல் நாள்
ஓதலும் சயந்தன் கேளா உரை செய்வான் அன்னை தன்னைத்
தாதையை அடிகள் தன்னைச் சண்முகத் தனிவேல் செம் கை
ஆதியை எதிர்ந்தால் ஒத்தேன் ஐய நின் மொழி கேட்டு என்றான்.
|
21 |
|
|
|
|
|
|
|
4179.
|
இறைதரும்
அமரர் தம்மோடு இந்திரன் புதல்வன் தன்னை
அறிவரில் அறிவன் கண் உற்று அறுமுகம் படைத்த அண்ணல்
மறை இடை வதிந்த நுங்கள் வன்சிறை மாற்றும் வைகல்
சிறிது இவண் இருத்திர் என்று பின்னரும் செப்புகின்றான். |
22 |
|
|
|
|
|
|
|
4180.
| தன் நிகர் இன்றி மேலாய்த் தன் பரம் ஒளியாய் ஆரும் உன்னரும் பரமாய் நின்ற ஒருவனே முகங்கள் ஆறும் பன்னிரு புயமும் கொண்டு பாலகன் போன்று கந்தன் என்னும் ஓர் பெயரும் எய்தி யாவரும் காண வந்தான். |
23 |
|
|
|
|
|
|
|
4181.
|
பங்கய முகங்கள் ஆறும் பன்னிரு புயமும் கொண்டே
எங்கள் தம் பெருமான் போந்த ஏது மற்று என்னை என்னில்
செங்கண் மால் உந்தி பூத்தோன் சிறுமையும் மகவான் துன்பும்
உங்கள் தம் சிறையும் நீக்கி உலகெலாம் அளிப்பக் கண்டாய்.
|
24 |
|
|
|
|
|
|
|
4182.
| சிறு விதி வேள்வி நண்ணித் தீயவி நுகர்ந்த பாவம் முறைதனில் வீரன் செற்று முற்றவும் முடிந்தது இல்லை குறை சில இருந்த ஆற்றால் கூடியது உமக்கு இத்துன்பம் அறுமுகப் பெருமான் அன்றி யார் இது நீக்கற் பாலார். |
25 |
|
|
|
|
|
|
|
4183.
|
தாள் கொண்ட கமலம் அன்ன கண் முகத்து எந்தை வேலால்
காட் கொண்ட கிரியினோடு தாரகர் கடந்த பூசல்
தோள் கொண்ட மதுகை சான்ற சூர் முதல் களைய முன்னம்
நாள் கொண்ட தன்மை அன்றோ நறை கொண்ட அலங்கல்
தோளாய். |
26 |
|
|
|
|
|
|
Try error :java.sql.SQLException: Closed Resultset: next