முகப்பு |
சதமுகன் வதைப் படலம்
|
|
|
4352.
|
ஒண்ணில எயிற்றினர் ஒர் ஆயிரரை அட்டே
எண் இலன் அவைக்களம் இகந்து படர் காலைக் கண்ணின் அழல் காலும் வகை கண்டு புடையாக நண்ணு சத மா முகனை நோக்கி நவில்கின்றான். |
1 |
|
|
|
|
|
|
|
4353.
| ஆறுமுகன் ஆளை இவன் ஆயிரரை இங்ஙன் கோறல் புரிந்தான் எனது கொற்றம் முழுது எள்ளி வேறல் உடையோர்கள் என மேன்மை பல செப்பிச் சேறல் புரிவான் தவிசும் உம்பர் இடை செல்ல. |
2 |
|
|
|
|
|
|
|
4354.
| ஒட்டிய நம் வீரரை ஒறுத்து அகல் வனேனும் விட்டது ஒரு தூதனொடு வெம் சமர் இயற்றி அட்டல் பழி ஆகும் அவன் ஆற்றலை அடக்கிக் கட்டி விரைவால் வருக எனக் கழற லோடும். |
3 |
|
|
|
|
|
|
|
4355.
|
சூர் குலம் முகில் பொருவு சூரன் அடி தாழா
ஏற்கும் விடை பெற்று இசைவின் ஏகுதல் புரிந்தான் நாற் கடலும் மேவினும் நதுப் பரிய ஊழிக் கால் கனலின் ஓதை தொடர் காட்சியது மான. |
4 |
|
|
|
|
|
|
|
4356.
| ஏகு சதமா முகன் இலக்கம் அற வீரர் பாகம் வர எண்ணில் படை பாணி மிசை பற்றி வேகமொடு சென்ற தனி வேலன் விடு வீர வாகுவினை எய்தி ஒரு மாற்றம் அறைகின்றான். |
5 |
|
|
|
|
|
|
|
4357.
| காவல் பல நீங்கி வரு கள்வ உலகு உள்ளோர் ஏவரும் வியப்ப வரும் எங்கள் இறை முன்னம் மேவினை இகழ்ந்து சில வீரர் உயிர் வௌவிப் போவது எவன் நில் உனது போர் வலி அழிப்பேன். |
6 |
|
|
|
|
|
|
|
4358.
| பட்டிமை உருக்கள் கொடு பாறல் அரிதாசை எட்டு உள பரப்பு அதனுள் ஆண்டு அகல்வை யேனும் விட்டிடுவனோ என விளம்பி வெரிந் எய்திக் கிட்டுதலும் வீரன் இது கேட்டனன் எதிர்ந்தான். |
7 |
|
|
|
|
|
|
|
4359.
|
கொற்ற வேல் உடை அண்ணல் தன் மொழியினைக் கொண்டிலன்
இகழ்ந்து என்னைப்
பற்ற ஆயிரர் தங்களை விடுத்தலும் படுத்தனன் பெயர்
காலை
மற்றும் ஈது ஒரு வயவனை உய்த்தனன் மன்னவன் இவன் ஆவி
செற்று மா நகரம் தனை அழித்தனன் செல்லுவன் இனி
என்றான். |
8 |
|
|