முகப்பு |
வரவு கேள்விப் படலம்
|
|
|
4927.
|
ஏக நாயகனாம் ஐயன் இவ்விடை இருந்த எல்லை
நாகர் மேல் அளிவைத் துள்ள நாரதன் அவற்றை நாடி
மாக நீள் புரிசை சூழ்ந்த மகேந்திர புரத்தில் சென்று
போகம் ஆர் உலகின் மேலாம் புரவலன் கோயில் புக்கான்.
|
1 |
|
|
|
|
|
|
|
4928.
|
புக்கனன் அவுணர் உய்ப்பப் பொருவிலா இகல் வெம் சூரன்
மிக்கு உயர் திருவினோடும் வீற்று இருந்திடுதல் காணூஉ
இக்கென இனைய தீயோன் இறப்ப என்று உன்னி வாயால்
தக்கது ஓர் ஆசி கூறிச் சார்ந்தனன் தவத்தின் மேலோன். |
2 |
|
|
|
|
|
|
|
4929.
|
அங்கைகள் மலர நின்றே ஆசி செய்தானை நோக்கி
எங்கு உளை இங்கு வந்தது என்னை நீ யாரை என்ன
மங்கை ஓர் பங்கன் மேவும் வட பெரும் கயிலை வாழ்வேன்
நும் குலம் தலைமை ஆக வைகலும் நோற்றல் செய்வேன். |
3 |
|
|
|
|
|
|
|
4930.
|
கை தவம் புகலேன் வெய்ய காமமே முதல நீத்துச்
செய்தவம் பலவும் உள்ளேன் தேவருக்கு இடுக்கண் செய்வேன்
மை தவிர் புகரினோடும் மருவு நண்பு உடையேன் நின்பால்
எய்தி ஒன்று உரைக்க வந்தேன் நாரதன் எனும் பேர் உள்ளேன்.
|
4 |
|
|
|
|
|
|
|
4931.
|
சிந்து வான் மதி தோய் வேணிச் செல்வன் நின் அடுவதாக்
கந்தனாம் முருகன் தன்னைக் காமர் கண் அழலால் நல்க வந்த மா மதலை தன்பால் ஐய உன் பணியது ஆற்றும் இந்திராதியர்கள் ஏகி இறைஞ்சியே ஏத்தி உற்றார். |
5 |
|
|
|
|
|
|
|
4932.
|
உற்று உளார் தமக்கு நின்னால் உறுதுயர் குமரன் கேட்பச்
சொற்றலும் அஞ்சல் என்று தொல் சிவன் அருள் மேல் கொண்டு
கொற்ற வெம் பூத வீரர் குழாத் தொடும் புவியின் ஏகி
மற்று உனது இளவல் தன்னை வரையொடும் வேலால் செற்றான்.
|
6 |
|
|
|
|
|
|
|
4933.
|
ஆண்டு அது புரிந்த பின்னர் அறுமுகன் செந்தி மேவித்
தூண்டினன் நினக்கு ஓர் ஒற்றைத் துண் என அவனும் வந்து
மீண்ட பின் புகுதி நாடி வேலையைக் கடந்து தன்பால்
ஈண்டிய படையொடு அன்னான் இந் நகர் வடபால் வந்தான்.
|
7 |
|
|
|
|
|
|
|
4934.
|
ஆங்கனம் பாடி வீடு ஒன்று ஆற்றுவித்து அனிகம் யாவும்
பாங்கு உற இருந்தான் செவ்வேள் பார்த்தனன் இனைய எல்லாம்
ஈங்கு இது நிகழ்ந்த வண்ணம் என்றலும் அவுணர் கோமான்
தீம் கனல் என்னச் சீறி நகைத்து இவை செப்பல் உற்றான். |
8 |
|
|
|
|
|
|
|
4935.
|
மேல் நிமிர் கொண்டல் உயர்த்தவன் அம்புயம் மிசை வேதா
நீல் நிற மாயவன் ஊரது போல நினைந்தானோ
ஆன தொல் அண்டம் ஒர் ஆயிர கோடியும் அரசு ஆள்வேன்
மா நகர் மேல் ஒரு பாலகனாம் பொர வருவானே. |
9 |
|
|
|
|
|
|
|
4936.
|
அரியின் இனம் செறி சூழலின் அன்னவை அடல் உன்னி
கரியது கன்று உழை கலை பிறவற்றொடு கடிது ஏகில்
பொருது வயம் கொள வல்லது கொல் அதுபோல் அன்றோ
முருகனும் வெம் படையுடன் இவண் வந்திடு முறைதானே. |
10 |
|
|
|
|
|
|
|
4937.
|
வேலை கடந்து எனது ஆணை இகழ்ந்து வியன் பூதச்
சால நெடும் படை தன்னுடன் இந்நகர் சார்வான் ஆம்
காலம் இது அங்கு அவன் வீரம் அழிப்பல் கருத்து இல்லாப்
பாலகன் என்றும் விடேன் வசை என்பதும் பாரேனால். |
11 |
|
|
|
|
|
|
|
4938.
|
முன் ஒரு சூழ்ச்சியின் அசமுகி ஒண்கரம் முரிவித்தே
ஒன்னலராய் அமர் உம்பர்கள் யாவரும் உய்ந்தாரோ
என் இளையானொடும் வெற்பினை அட்டனம் என உன்னித்
தன் உயிர் போவது அறிந்திலன் இந் நகர் தனின் வந்தான்.
|
12 |
|
|
|
|
|
|
|
4939.
| ஆழிய தெண் திரை ஆழி கடைந்தவன் அலகு இல்லா வேள்வி புரிந்திடும் வாசவன் அம்புய மிசை மேயோன் வாழிய நம் பெயர் கூறினும் அஞ்சினர் மறை குற்றார் பூழி புனைந்தவர் பாலகனோ அமர் புரிவானே. |
13 |
|
|
|
|
|
|
|
4940.
|
அந்தர மேல் வரும் செம் கதிரைச் சிறை அமர் வித்த
மைந்தனை நால் படை தன்னொடு மேவி வயப் போரால்
முந்திய பூதரை ஏனைய வீரரை முடிவித்தே
கந்தனை ஒல்லையின் வெற்றி கொள்வேன் இது காண்கிற்பாய்.
|
14 |
|
|
|
|
|
|
|
4941.
|
என்ற சுரேசன் இசைத்தலும் நாரதன் இவை கேளா
நன்று இது நன்று இது தாழ்க்கலை இன் இனி நகர் சூழச்
சென்றவனைப் பொர நின் படை ஏவுதி செல்கின்றேன்
வென்றி நுமக்கு உற நோற்றிடு வான் என விண் போனான்.
|
15 |
|
|
|
|
|
|
|
4942.
|
நாரதன் இனைய கூறி நகையொடு போதலோடும்
சூர் அருள் ஆற்றல் மிக்கோன் துண் என அயலின் நின்ற கோரன் உற்கோரன் என்னும் ஒற்றரைக் குறித்து நோக்கி வாரிதி இறைவன் பற்றி வல்லையில் கொணர்திர் என்றான். |
16 |
|
|
|
|
|
|
|
4943.
|
என்றலும் அனையர் ஓடி எறிகடற்கு அரசைக் கூவி
வன் திறலோடு பற்றி வல்லை முன் கொணர்ந்தே உய்ப்பக்
கன்றிய மனத்தன் ஆகிக் கைதொழுது அவலம் கூர்ந்து
நின்றனன் அவனை நோக்கி நெருப்பு எழ விழித்துச் சொல்வான்.
|
17 |
|
|
|
|
|
|
|
4944.
|
பவ்வ நீர் அரச கேண்மோ பங்கயத்து அவனும் மாலும்
செவ்விதின் உணரா வண்ணம் ஒளித்தவன் சிறுவன் தன்னை
வெவ் வலி கடந்த பூத வெள்ளத்தை நமது மாறா
இவ்விடை விடுத்தது என்னை என்னலும் இசைக்கல் உற்றான்.
|
18 |
|
|
|
|
|
|
|
4945.
|
மண் படு புவனம் போற்றும் மன்னகேள் புயங்கம் மீது
கண் படு முகுந்தன் வேதாக் கடவுளர் தலைவனோடும்
எண் படு துணைவர் ஆனோர் யாவரும் புடையில் சூழ
விண்படு நெறியில் சென்றான் வீரவேல் தடக்கை அண்ணல்.
|
19 |
|
|
|
|
|
|
|
4946.
|
மடல் கெழு நீபத் தண் தார் வள்ளல் வான் நெறியில்
போத
மிடல் கெழு பூதர் என்பால் மேவினர் சென்றார் அன்னார்
அடிகளின் பரட்டின் காறும் அமைந்திலன் அவரை யானே
தடை செய வல்லேன் போலும் தக்கதே இது மற்று அன்றே.
|
20 |
|
|
|
|
|
|
|
4947.
|
ஊழியும் உலையாப் பூதர் ஒல்லெனச் செல்லத் தாளில்
பூழியால் அளறு பட்டு ஆங்கு இடையறப் புலம்பல் உற்றேன்
ஆழியன் என்னும் பேரும் அற்றனன் வசையே பெற்றேன்
ஏழையேன் செய்வது என் கொல் எதிர் உண்டோ வலியர்க்கு
அம்மா. |
21 |
|
|
|
|
|
|
|
4948.
|
தெள்ளிதில்
தமிழ் தேர் காட்சித் திரு முனி கரத்தில் வாரி
உள்ளுறக் கொண்டதே போல் ஒல்லையின் மிவைர் போலாம்
கொள்ளையில் செறி பூதர்க்குள் ஒருவர் ஓர் குடங்கை தன்னின்
அள்ளுதற்கு ஆற்ற கில்லேன் ஆதலின் உய்ந்தேன் அன்றே.
|
22 |
|
|
|
|
|
|
|
4949.
|
உடல் சின வசனி தன்னை ஒண் பணி விலக்க வற்றோ
கடு முரண் அரிமான் ஏற்றைச் களிறு எதிர் விலக்கிற்று உண்டோ
மிடல் கெழு விதியைப் புந்தி விலக்குமோ அஃதே அன்றோ
அடல் மிகு பூதர் தம்மை அளியனேன் தடுப்பது என்றான். |
23 |
|
|
|
|
|
|
|
4950.
|
இற்று எலாம் அளக்கர் கோமான் இசைத்து மெய் துளக்கம் எய்தி
நிற்றலும் நெடு வேல் அண்ணல் நீள் நகர் நணிய தன்மை
ஒற்றரில் சிலவர் காணா ஓடினர் ஒல்லை சென்று
கொற்றவன் பணிந்து நின்றே இவை இவை கூறல் உற்றார். |
24 |
|
|
|
|
|
|
|
4951.
|
அரா அணை அண்ணல் வேதா அரி முதல் அமரர் சூழ
விரா உறும் இலக்கத்து ஒன்பான் வெலற்கு அரும் வீரர் போற்ற
இராயிரம் பூத வெள்ளம் ஈண்டிட எறி நீர்ச் சென்னிப்
பரா பரன் மைந்தன் நம்தம் பதி வடதிசையில் போந்தான். |
25 |
|
|
|
|
|
|
|
4952.
|
வட திசை அதனில் போந்து வானவர் புனைவல் கொண்டே
படி புகழ் தகைமைத்து ஆன பாசறை புரிவித்து ஆங்கே
புடைதனின் அனிகம் ஆன பூத வெவ் வீரர் மேவ
நடுவண் ஓர் நகரம் தன்னின் நண்ணி வீற்று இருந்தான் அன்றே.
|
26 |
|
|
|
|
|
|
|
4953.
|
கண்டனம் இதனை இன்னே கடவது புரிதி என்னாத்
திண் திறல் வெய்ய தூதர் செப்பலும் அதனைக் கேளா
அண்டமும் புவனம் யாவும் அலமர அழலில் சீறிப்
புண் திகழ்ந்த அனைய கண்ணான் இவை இவை புகலல் உற்றான்.
|
27 |
|
|
|
|
|
|