முகப்பு |
இரண்டாம் நாள் சூரபன்மன் யுத்தப் படலம்
|
|
|
5347.
|
கங்குல் போந்திடுதலும் கண பணப் பன்னகம்
நுங்கு உறாது அகலவே நோற்று மால் ஏந்திடும் சங்கமாய் மதிசெலச் சக்கர படையெனத் துங்கமோடு எழுதல் போல் தோன்றினன் பரிதியே. |
1 |
|
|
|
|
|
|
|
5348.
|
இரவி செல்லும் முன் அவுணர் கோன் துயில் ஒரீஇ எழுந்து
மரபினில் புரி நாள் கடன் முடித்து மன்று எய்தித்
திரு மணிப் பெரும் தவிசிடை இருந்து தன் சிறுவன்
நெருநல் உற்றிடும் வசையினை உளத்து இடை நினைந்தான்.
|
2 |
|
|
|
|
|
|
|
5349.
|
நினைதல் உற்றுழி உளத்து இடைப் பெரும் சினம் நீட
இனி அமர் தொழிற்கு யாரையும் விடுக்கிலன் யானே
அனிகமோடு போய் மாற்றலர் வன்மையை அழித்துப்
புனைவன் வாகை என்று உன்னினான் அழிவு இலா புகழோன்.
|
3 |
|
|
|
|
|
|
|
5350.
|
செம் கண் வாள் எயிற்று அவுணன் இத் தன்மையைத் தேற்றி
வெம் கண் ஒற்றரில் அளப்பு இலர் தங்களை விளியா
அம் கண் மாநிலம் முறை முறை சூழ்தரும் அளக்கர்
எங்கணும் செறி தானையைத் தம்மின்கள் என்றான். |
4 |
|
|
|
|
|
|
|
5351.
| என்றலும் தொழுது ஆயிர கோடியோர் யாண்டும் சென்று சென்று தம் மன்னவன் பணி முறை செப்பத் துன்று தேர் கரி பரி மிசைப் படர்ந்தனர் தொல் நாள் வென்றி கொண்ட நூறு ஆயிர வெள்ளத்தின் மிக்கோர். |
5 |
|
|
|
|
|
|
|
5352.
|
சூலமே கணிச்சி தண்டம் தோமரம் குலிசங் சாபம்
கோல வாள் பலகை வட்டம் குந்தம் வேல் நாஞ்சில் பிண்டி
பாலமே முசுண்டி சங்கம் பரிதியே எழுவே தட்டி
பீலி வல் முசலம் ஆதி பெரும் படை கொண்டு சென்றார். |
6 |
|
|
|
|
|
|
|
5353.
|
எண் தகும் இனைய வாற்றால் இலக்கம் வெள்ளத்தினோரும்
திண் திறல் மகேந்திரப் பேர்த் திரு நகர் சுற்றி ஆர்ப்ப
விண் தொடு சிகரி என்னும் மேருவின் உச்சி போகித்
கண்டனன் அவுணர் மன்னன் கடல் பெரும் தானைச் சூழல்.
|
7 |
|
|
|
|
|
|
|
5354.
|
தேக்கினன் கதிரும் செல்லாச் செல் உறழ் தானை ஈட்டம்
நோக்கினன் சிந்தை கொண்ட நோன்மைசார் துயரம்
யாவும்
நீக்கினன் வன்மை பெற்றான் நேர் அலர்ப் பொருது வென்றி
ஆக்கினன் போல நின்றான் அறத்துடன் அருளைக் கொன்றான்.
|
8 |
|
|
|
|
|
|
|
5355.
|
அழிந்திடுகின்ற காலத் தளக்கரின் ஆர்த்துச் சூழும்
கழிந்திடு தானை கண்டோன் கடிது போர்க்கு ஏக முன்னிக்
செழும் கதிர் மதியம் ஆக்கும் திரு மணிச் சிகரி நின்றும்
இழிந்தனன் தலைமை நீங்கி இழி தொழில் பயின்ற தீயோன்.
|
9 |
|
|
|
|
|
|
|
5356.
|
எடுத்தனன் சிலையும் ஏனைப் படைகளும் இமையோர் தொல்நாள்
கொடுத்திடு படைகள் யாவும் கொண்டனன் கரத்தில் கோதை
தொடுத்தனன் வெரிநில் தூணி தூக்கினன் விரல்கள் தோறும்
அடுத்த பொன் புட்டில் சேர்த்தான் அண்டங்கள் அனைத்தும்
வென்றான். |
10 |
|
|
|
|
|
|
|
5357.
|
குந்தளச் சுழியல் குஞ்சிக் கோலமா மௌலி தன்னில்
சுந்தரத் துணர் மென் தும்பை தொடுத்திடு பிணையல் சேர்த்தி
மந்தரப் பொருப்பு மேரு வரை இது என்று ஐயம் செய்யும்
இந்திரப் பெரும் தேர் ஒன்றின் ஏறினன் இரவியே போல். |
11 |
|
|
|
|
|
|
|
5358.
|
பண் உலாம் புரவிப் பந்தி பருமிதக் களிற்றின் ஈட்டம்
எண் இலாப் புரவி மான் தேர் ஏமம் ஆய்ப் பின்னர் ஏக
அண்ணல் வாள் அவுண வீரர் அமைச்சர்கள் அயலில் செல்ல
விண் உலாம் புரிசைக் கோயில் வீதிகள் கடந்து சென்றான்.
|
12 |
|
|
|
|
|
|
|
5359.
|
கோயிலின் எல்லை நீங்கிக் கோபுரம் கெழீஇய கொற்ற
வாயிலின் மருங்கு செல்ல மன்னவன் வரவு நோக்கிக்
காய் கதிர்த் தபனற் கண்ட கலிவியன் உலகம் என்ன
ஆயிர நூறு வெள்ளத்து அவுணரும் புடை சூழ்ந்து ஆர்த்தார்.
|
13 |
|
|
|
|
|
|
|
5360.
|
அன்ன காலையில் அரி முகன் சேய் அதி சூரன்
துன்னு தாரகன் சுதன் அசு ரேந்திரத் தொல்லோன் என்ன நின்றிடும் மைந்தர்கள் இருவரும் ஏகி மன்னர் மன்னனை அடைதலும் இனையன வகுப்பான். |
14 |
|
|
|
|
|
|
|
5361.
|
திரைகொள் வேலை போல் நிறை தரு கோட்டகம் சிறிதோர்
கரை இலா ஆழி உடைத்திடும் அன்னது கடுப்பப்
பொரு திறல் படை பல உள என்னினும் போற்றும்
அரசர் இல் வழி நின்றிடாது அன்னவை அழியும். |
15 |
|
|
|
|
|
|
|
5362.
| ஆதலால் இனி நீர் இரு வீரர்களும் அமரின் மேதகும் பெரும் சேனைக்கு முதல்வராய் மேவிப் போதிர் முன் உற என்றலும் நின்றிடு புதல்வர் ஈது நன்று என வணங்கியே ஏகினர் இமைப்பில். |
16 |
|
|
|
|
|
|
|
5363.
| தந்த மான் தடம் தேர் மிசை ஏறியே சமரில் கொந்து உலா மலர் வாகையை மிலைச்சிய குமரர் வந்த நால் பெரும் படையையும் அணி பெற வகுத்து முந்து தானை அம் தலைவராய் ஏகினர் முறையால். |
17 |
|
|
|
|
|
|
|
5364.
| ஆகும் எல்லையில் அங்கு அது நோக்கு உறா அடுபோர் வாகை கொண்ட நூறு ஆயிர வெள்ளத்து மறவோர் ஓகை எய்தியே அமர் புரி பறந்தலை உன்னி ஏகல் மேயினர் பணிகளும் சேடனும் இரங்க. |
18 |
|
|
|
|
|
|
|
5365.
|
கடம் திகழ் கரிதேர் பாய் மாக் கலந்திடத் தானைவீரர்
படர்ந்திடுகின்ற காலைப் பருமணி வயிரத்தேர் மேல்
அடைந்திடும் அவுணர் மன்னர் அளக்கர் இல் வடவை சுற்ற
விடம் தனி நடந்தது என்ன விண்ணவர் மருளச் சென்றான்.
|
19 |
|
|
|
|
|
|
|
5366.
|
தொண்டகம்
துடியே பம்பை தூரியம் முருடு கோடு
திண் திறல் படகம் மொந்தை திமிலையே தடாரி தக்கை
கண்டை ஆகுளியே பீலி காகளம் உடுக்கை பேழ்வாய்
கொண்டது ஓர் பதலை சங்கம் குடமுழா இயம்பிற்று அம்மா.
|
20 |
|
|
|
|
|
|
|
5367.
|
தட்டு உடை நெடும் தேர் ஆர்ப்பும் தந்தியின் ஆர்ப்பும் சேண்போய்
முட்டு உறு கொடிகள் ஆர்ப்பும் முரட் பரி ஆர்ப்பும் வீரர்
கட்டு உறு கழலின் ஆர்ப்பும் கணிப்பு இல் பல் இயத்தின் ஆர்ப்பும்
எட்டு உள திசையும் எல்லா உலகு முண்டு எழுந்த அன்றே.
|
21 |
|
|
|
|
|
|
|
5368.
|
நீல் நிற முகில் போல் மேனி அவுணர்கள் நீத்தம் செல்லக்
கான் நிறை பூழி ஈட்டம் ககனம் மேல் செல்ல முன்னம்
தான் உறு கின்ற காலைச் சசி எனத் தயங்கிப் பின்னர்
மீன் எனக் கரந்தான் மேலாம் விரிகதிர் படைத்த வெய்யோன்.
|
22 |
|
|
|
|
|
|
|
5369.
| நேசம் ஒடு என்பால் வைகும் நெறியினார் தமக்கு வீடும் ஆசு அறு பதங்கள் யாவும் வைகலும் புரிவேன் என்னை ஏசுவர் போலும் கீழ் என்று இகல் புரிந்திடுவன் என்னாத் தூசி பார் விடுத்ததே போல் துறக்கம் மேல் சென்ற பூழி. |
23 |
|
|
|
|
|
|
|
5370.
|
கன்னிறை அழித்த மொய்ம்பில் கார் கெழும் அவுண வெள்ளம்
துன் உற நடப்பச் செல்லும் தூளியின் படலைச் செய்கை
என் என உரைப்பன் அம்மா இந்திரன் என்போன் வைகும்
பொன் உலகம் தனை வல்லே பூ உலகு ஆக்கிற்று அன்றே.
|
24 |
|
|
|
|
|
|
|
5371.
|
கண் அகல் தடம் தேர் மீதும் காய் சினக் களிற்றின் மீதும்
நண்ணிய கொடிகள் வான்போய் நளிர் புனல் கங்கை நக்கி
மண் உறச் சிதறி ஆடி அலமரல் மகேந்திரத்தின்
அண்ணல் இன்று அழிவன் என்றே அழுதிறம் போலும் மாதோ.
|
25 |
|
|
|
|
|
|
|
5372.
|
திங்கள் வெண் குடையும் நீலத் திரு நிழல் கவிப்பும் செம் கேழ்ப்
பங்கய மலர்ந்தது அன்ன பருமணிக் கவிகை முற்றும்
தொங்கலின் தொகையும் வெய்யோன் தொல் கதிர் வரவும் ஆற்றி
எங்கணும் செறிவு உற்று ஊழி இருளினை விளக்கிற்று அம்மா.
|
26 |
|
|
|
|
|
|
|
5373.
|
ஆன இயல்பு எய்த அவுணப் படை களோடும்
வான் நெறி கொடே அவுணன் வையம் மிசை செல்லத் தான் அது தெரிந்து அமரர் தம் இறைவன் ஓடிக் கான் அமர் கடம்பன் அடி கை தொழுது சொல்வான். |
27 |
|
|
|
|
|
|
|
5374.
| அன்று புரி வேள்வி இடை ஆதி அருள் செய்த துன்று படை ஈட்டமொடு சூரன் எனும் வெய்யோன் இன்று பொருவான் விரைவின் ஏகினன் எதிர்ந்தே சென்றவனை வென்று எமது சீர் அருளுக என்றான். |
28 |
|
|
|
|
|
|
|
5375.
| ஆம் பரிசு கூற அவனுக்கு அருள் புரிந்தே ஏம்பல் உறு கேசரியின் ஏற்று அணையின் நீங்கிப் பாம்பின் வலி செற்று உலவு பாகு தனை நோக்கி வாம் பரி கொள் நம் இரதம் வல்லை தருக என்றான். |
29 |
|
|
|
|
|
|
|
5376.
| என்றிடலும் நன்று என எழுந்து உலவை அண்ணல் குன்று அனைய தேர் அது கொணர்ந்து முனம் உய்ப்ப வென்றி அயில் அண்ணல் அதன் மீ மிசை புகுந்தான் மன்றல் மலர் சிந்தி அயன் மாலொடு வழுத்த. |
30 |
|
|
|
|
|
|
|
5377.
|
செழும்
தருண மேதகைய தேரின் மிசை வானோர்
தொழும் தலைவன் ஆகிய அமர் தொல் முருகன் ஏறக் கொழும் தழல் முடித்து அனைய குஞ்சி கெழு பூதர் எழுந்தனர் தெழித்தனர் இரு கடலும் அஞ்ச. |
31 |
|
|
|
|
|
|
|
5378.
| நாட்டம் ஒரு மூன்று உடைய நாதன் அருள் மைந்தன் வாட்டம் அறு வெவ் அவுணர் மன்னன் வலி தன்னை வீட்டும் வகை சென்றிடுதல் விண்ணவர் உரைப்பக் கேட்ட அனிக பூதர்கள் கிளர்ந்து படர் கின்றார். |
32 |
|
|
|
|
|
|
|
5379.
| பாரிடர் களாய் அறுமுகற் பரவு கின்ற பார் இடர் நடப்ப எழு பூழி படர்ந்து இன்னோர் பார் இடர் புரிந்தனர் பரிக்கும் எனை என்னாப் பார் இடம் விண்ணோடு பகர்தற்கு எழுதல் போலும். |
33 |
|
|
|
|
|
|
|
5380.
| தக்கை யொடு உடுக்கை துடி சல்லரி தடாரி தொக்கு உடைய தண்ணுமை துவைப்பின் மிகு பேரி மெய்க் குட முழாப் படகம் வீணை குழல் ஆம்பல் கொக்கரை இயம்பினர்கள் கோடி கண நாதர். |
34 |
|
|
|
|
|
|
|
5381.
|
நாடுதவ நாரதனும் நல் உவணர் தாமும்
கேடில் இசை வல்லது ஒரு கின்னரரும் ஆகிப் பாடினர் குமாரன் அடி பன் முறை பணிந்தே ஆடினர்கள் விண்ணவரும் ஆசு இல் முனிவோரும். |
35 |
|
|
|
|
|
|
|
5382.
| சண்முகனது ஏவல் கொடு தாவில் இளையோனும் எண் மரும் இலக்கர்களும் ஈண்டிய கணத்தின் வண்மை கெழு மன்னவரும் வையம் மிசை ஆகித் திண்மை படை ஊக்கம் ஒடு சேனை இடை சென்றார். |
36 |
|
|
|
|
|
|
|
5383.
| மொய்ம் மலி படைத்தலைவர் முந்தி உறு தானை இம் முறையினால் ஒழுக ஈசன் அருள் மைந்தன் செம் மணி வீசி அமர் தேரின் இடை ஏகிப் பொம்மல் உறு தானவர்கள் போர் முனை அடைந்தான். |
37 |
|
|
|
|
|
|
|
5384.
| அடைந்த பொழுதில் புவியும் அந்தரமும் ஆகி மிடைந்து வரும் சூரன் இகம் வெய்து என வளைந்த தொடர்ந்து நுகர் தீ வலி தொலைத்தும் என முந்நீர் படர்ந்து புடை சுற்றி இடும் பான்மை அது போல. |
38 |
|
|
|
|
|
|
|
5385.
|
வளைந்திடும் காலையில் வய வெம் பூதர்கள்
கிளர்ந்தனர் தெழித்தனர் கெழுவு தானவர் தளம் தனை அடர்த்தனர் அவரும் தாக்கினார் விளைந்தது பெரும் சமர் விண்டது அண்டமே. |
39 |
|
|
|
|
|
|
|
5386.
| மாச்சினை மரங்களும் வரையும் தண்டமும் தீச் சிகைக் கழுமுளும் திகிரி நேமியும் மீச் செலும் கவண் கலும் வேலும் நாஞ்சிலும் ஓச்சினர் பூதர்கள் ஒன்னலார் கள் மேல். |
40 |
|
|
|
|
|
|
|
5387.
| மெய்ப்படும் அவுணர்கள் வெகுண்டு வில் உமிழ் அப்பொடு கணிச்சி தண்டு ஆழி நாஞ்சில் வேல் முப்புகர் இலைப் படை முசலம் முற்கரம் கப் பணம் சிதறினர் கணங்கள் தம்மிசை. |
41 |
|
|
|
|
|
|
|
5388.
|
பற்றுவர்
கரிகளை பரி இனங்களை
எற்றுவர் பார்தனில் எறிவர் மாதிரம் சுற்றுவர் விண் இடைக் கிழிப்பர் துண் என முற்று உடல் எருத்தினை முரித்துச் சிந்துவார். |
42 |
|
|
|
|
|
|
|
5389.
| இரதம் ஒர் ஆயிரம் எடுத்துச் செம் கையில் பொரு களிறு ஆயிரம் புரள மோதுவர் கரி கள் ஒர் ஆயிரம் கரம் கொண்டு எற்றியே பரிதி பதினாயிரம் பாரின் வீட்டுவார். |
43 |
|
|
|
|
|
|
|
5390.
| பாய் பரி ஆயிரத்துப் பத்துப் பாணி கொண்டு ஆயிர கோடி ஆம் அவுணர் தங்களைச் சேயிரு நிலத்து இடைச் சிதையச் சிந்துவார் காய் கனல் சொரி தரும் கடும் கண் பூதரே. |
44 |
|
|
|
|
|
|
|
5391.
| குரங்கு உளைப் புரவியர் குஞ்சரத்தினர் இரங்கு உறு தேரினர் நிலத்தின் ஏகினோர் வரம் கெழும் அவுணர்கள் வளைந்து பூதரைச் சரங்களில் பிறவினில் தடிதல் மேயினார். |
45 |
|
|
|
|
|
|
|
5392.
| மலைதனைச் சிந்துவர் மறம் கொள் பூதர் தாள் நிலைதனைச் சிந்துவர் நெடுங்கை சிந்துவர் கொலை தனைச் சிந்துவர் கொய்வர் மொய்ம்பினைத் தலை தனைச் சிந்துவர் தறு கட்டு ஆனவர். |
46 |
|
|
|
|
|
|
|
5393.
| இவ்வகை மாறு கொண்டு இகல் செய்கின்றுழித் தெவ் அடு பூதர் தம் சேனை மன்னர்கள் அவ்விடை ஏன்று நின்று அமர் இயற்றுழி வெவ் அசுரப் படை மிகவும் மாய்ந்ததே. |
47 |
|
|
|
|
|
|
|
5394.
| பொன் திகழ் படையொடு புவியும் வானும் ஆய் நின்றிடும் அவுணர்கள் நீடு தொல் பிணக் குன்று உரு ஆகியே குருதி ஆற்று இடைச் சென்றனர் அளக்கரைத் திடர தாக்குவார். |
48 |
|
|
|
|
|
|
|
5395.
| நீடிய வேல் படை நிமிலன் காண் உற வீடினம் யாம் இனி வெய்ய தோற்றம் மேல் கூடுவது இலை எனக் குனிக்கு மாறு போல் ஆடிய உடற்குறை அனந்த கோடியே. |
49 |
|
|
|
|
|
|
|
5396.
|
மானப் படை சேர் அவுணப் படையும் வயமான் தேர்ப்படையும்
ஏனைப் படையும் முடிவு உற்றிடவே இவ்வாறு இகல் செய்யும்
கூனல் சடிலப் பூதப் படையின் கொற்றம் தனை நோக்கித்
தானைத் தலைவன் அதிசூரன் எனும் தனையன் வெகுளுற்றான்.
|
50 |
|
|
|
|
|
|
|
5397.
|
தேர் ஆயிரம் ஆயிரம் அங்கு ஒரு பால் சேமத் தொடு செல்லக்
கார் ஆயிரம் உற்றன தன் படிவம் கதிர்காள் இமைசார
ஈர் ஆயிரம் ஆம் இவுளித் தொகை பூண்டு ஈர்க்கும் தேர் மீதே
ஓர் ஆயிரம் ஆம் கதிர் போல் அழலா உரன் ஓடுறுகின்றான்.
|
51 |
|
|
|
|
|
|
|
5398.
|
வார் வில் அதனை விரைவில் குனியா வடிவாளிகள் போக்கிச்
சோர் வில்லவனும் எதிர்கின்றனரைத் துணி செய்தனன் நிற்ப
ஓர் வில் ஒருவன் தனியே இவண் வந்து உறு போர் புரிகின்றான்
போர் வில் அறிவன் இவனே எனவே புகல்கின்றனர் பூதர். |
52 |
|
|
|
|
|
|
|
5399.
|
ஓதக்
கடல் போல் அலமந்து அலமந்து உலையா இகல் செய்யும்
பூதர்க்கு இறை உக்கிரன் என்று ஒருவன் புகை தீ உமிழ் கண்ணான்
மேதக்க சலந்தரனார் உடலம் வீழும் படி கீண்ட
சோதிக் கடவுள் படை உண்டு உமிழும் தொல்லோன் இகல்
வல்லோன். |
53 |
|
|
|
|
|
|
|
5400.
|
எண் தானவருக்கு இறைவன் குமரன் இகல் செய்திடு மாறு
கண்டான் முனியா விரைவில் படர்வான் காலன் திறல் கொள்ளும்
தண்டானது கொண்டவன் நேர் குறுகித் தடமார் பிடையோச்ச
விண்டான் இவன் என்று அவுணப் படையோர் வெருவா அலமந்தார்.
|
54 |
|
|
|
|
|
|
|
5401.
|
மாறு ஆகிய உக்கிரன் ஏவுதலும் வரு தண்டு அவன் மார்பில்
கூறு ஆகிய சாலிகை சிந்திடவே கொதியா வருகின்றான்
பாறு ஆடுகளத்து இடை ஈங்கு இவனைப் பலி ஊட்டுவன் என்னா
நூறு ஆயிரம் ஆசுகம் ஓர் தொடையின் நொய்தில் செலவு எய்தான்.
|
55 |
|
|
|
|
|
|
|
5402.
|
வெய்தாம் அயில் வாளிகள் உக்கிரன் மேல் விறல் சேர் அதி
சூரன்
எய்தான் அது மற்று அவன் மேல் படவே எருவைப் பெருநீத்தம்
எய்தான் முழுதும் பெருகு உற்றிடலும் விழுமத்து ஒடு செற்றம்
செய்தான் ஒருமால் வரை கொண்டு அவுணன் தேர் மேல் செல
உய்த்தான். |
56 |
|
|
|
|
|
|
|
5403.
|
அதிர் பொன் கழலான் விடு திண் கிரியால் அதி சூரன் மான்
தேர்
பிதிர் பட்டிடலும் புவிமேல் படர்தல் பிழை ஆம் என உன்னா
உதயக் கிரி போல் கனகத்து இயலும் ஒரு தேர்மிசை நீலக்
கதிர் உற்று எனவே கடிதில் பாய்ந்தான் காலன் மிடல் தீர்ப்பான்.
|
57 |
|
|
|
|
|
|
|
5404.
|
பாயும் வேலை அப் பல் மணித் தேரினை
ஏய ஆற்றல் கொண்டு ஈர்த்திடும் வாசிகள் மாயும் வண்ணம் மறம் புரி உக்கிரன் சீயமாம் எனச் சென்று உதைத்தான் அரோ. |
58 |
|
|
|
|
|
|
|
5405.
| உதைக்க வெய்யவன் ஒண் பரி பார் இடைப் பதைத்து வீழ்தலும் பையுளின் மாழ்கியே சிதைப்பன் இந்தச் சிறியனை என்று மெய் புதைப்ப நூறு பொரு சரம் தூண்டினான். |
59 |
|
|
|
|
|
|
|
5406.
| தூண்டு கின்ற சுடர்க்கணை யாவையும் ஈண்டியே தன் எதிர் உறும் பெற்றியைக் காண்டலும் கதை கைக் கொடு அவ் உக்கிரன் மீண்டிடும் படி வீசி நின்று ஆர்க்கவே. |
60 |
|
|
|
|
|
|
|
5407.
| வேறு ஒர் தேர் இடை வெய்து என எய்தியே ஊறு நீங்கிய உக்கிரற் கண் உறீஇ மாறி தெய்வத மாப் படை தொட்டு உனை ஈறு காண்பன் இறந்தனை நீ எனா. |
61 |
|
|
|
|
|
|
|
5408.
| முன்னு பூசை முதலிய யாவையும் முன்னியே நின்று ஒருங்குடன் செய்த பின் வன்னி மாப்படை வாங்கி வணங்கியே மின்னு தண் சுடர் மீக் கொள வீசினான். |
62 |
|
|
|
|
|
|
|
5409.
| ஆசை தோறும் அழல் சிந்த மாற்றலன் வீசு வெம் படை வீரத்தை நோக்கியே ஈசன் மைந்தன் இணை மலர்த் தாள்களை நேசமோடு நினைந்தனன் போற்றினான். |
63 |
|
|
|
|
|
|
|
5410.
|
எவ்
எவர்க்கும் இறைவன் ஆகியோன்
அவ் வழித் தன் அருள் செய உக்கிரன் செவ்விதில் செலும் தீச்சரம் பற்றியே கவ்வி நுங்கினன் கண் கனல் கான்றிட. |
64 |
|
|
|
|
|
|
|
5411.
| நுங்குவான் தனை நோக்கி அரிமுகன் துங்க மா மகன் தொல் புனல் மாப்படை பொங்கு சண்டப் பொருபடை ஏவலும் அங்கு அவற்றையும் பற்றி அருந்தினான். |
65 |
|
|
|
|
|
|
|
5412.
| காற்றின் வெம் படை ஏவினன் கைதவன் ஆற்றல் உக்கிரன் அன்னது நுங்கினான் தேற்று கின்றுழிச் செய்தவம் அன்றியே ஏற்றம் ஆன இரும் பொருள் ஆவதோ. |
66 |
|
|
|
|
|
|
|
5413.
| மற்றும் அவ்வதி சூரன் மலர் அயன் ஒற்றை வெம் படை ஓச்சலும் உக்கிரன் பற்றி நுங்க அப் பங்கயன் தாதை பால் பெற்று இருந்த பெரும் படை ஏவினான். |
67 |
|
|
|
|
|
|
|
5414.
| ஒய் எனச் சென்று உரு கெழு நாரணன் பொய்யில் மாப் படை போந்திட ஆங்கு அதும் கையில் வாங்கிக் கதும் என வாய்க் கொளா வெய்ய உக்கிரன் மேயினன் என்பவே. |
68 |
|
|
|
|
|
|
|
5415.
| ஆன காலை அரிமுகன் காதலன் யான் இனிச் செய் இயற்கை என்னே இவன் தான் அவ் ஈசன் கொல் கண்ணன் கொல் தாமரை மேல் நிலாவிய வேதன் கொலோ என்றான். |
69 |
|
|
|
|
|
|
|
5416.
| மூவர் ஆகிய மூர்த்திகள் அல்லதை ஏவரே மற்று இது செயும் பெற்றியார் ஆவன் ஆவன் அவர்க்குள் இவன் எனாத் தேவர் மாற்றலன் பின்னரும் செப்பினான். |
70 |
|
|
|
|
|
|
|
5417.
| சீற்றம் கொண்ட அவுணர் திரைக் கடல் தோற்றம் கொண்ட அச் சூர் கெழும் உக்கிரன் ஏற்றம் கண்டுழி என் செய்தும் என்றனர் கூற்றம் கொண்ட உயிரில் குலைந்து உளார். |
71 |
|
|
|
|
|
|
|
5418.
|
அண்ணல் வாசவன் ஆதியர் ஆகிய
எண் இல் வானவர் யாவரும் இச்செயல் கண் உறா இகல் கண்டு அருள் நான் முகப் பண்ணவன் முன் பணிந்து இது கூறுவார். |
72 |
|
|
|
|
|
|
|
5419.
| எங்களால் வரும் எண் இல் பெரும் படை செம் கணான் படை தீய நின் மாப் படை அங்கியாவும் அணுக இப் பூதர் கோன் நுங்குமாறு என் நுவலுதி என்னவே. |
73 |
|
|
|
|
|
|
|
5420.
| இந்திரர் ஆதியர் கேண் மின்கள் ஈங்கு இவன் அந்தி வான் சடை அண்ணல் வரத்தினான் கந்தன் எந்தை கழல் இணை போற்றியே வந்துளான் எவ் வலியையும் ஆற்றுவான். |
74 |
|
|
|
|
|
|
|
5421.
|
எம்மை
ஆள் உடை ஈசன் அருள் பெறும்
செம்மை ஆனவன் செம் பொன் சிலம்பு அடி மும்மையும் தொழு முத்தி பெற்றான் இவன் எம்மினும் பெரியான் என்றும் ஈறு இலான். |
75 |
|
|
|
|
|
|
|
5422.
|
மைக் கரும் கடல் வண்ணன் முன் ஏவிய
சக்கரம் நுகரும் தவத்தோனினும் மிக்க ஆற்றலன் வெற்றியின் மேலையான் உக்கிரன் என்று உரைத்திடும் பேரினான். |
76 |
|
|
|
|
|
|
|
5423.
| பண்டு நாம் அருள் பல் படை யாவையும் உண்டதோ வியப்பு ஒல்லையில் எல்லை இல் அண்டமும் சிதைத்து ஆக்குவன் ஈங்கு இவன் கொண்ட தொல் புகழ் கூறத் தொலையுமோ. |
77 |
|
|
|
|
|
|
|
5424.
| என்ன நான் முகன் எண்ணி இயம்பலும் அன்ன கேட்டலும் அண்டர்கள் யாவரும் துன்னு சென்னி துளக்கிப் பெரும் திறல் இன்னும் ஆக இவற்கு என்று இயம்பினார். |
78 |
|
|
|
|
|
|
|
5425.
|
வான மேல் இது நிகழ்ந்துழி மாறு இலா அவுணர்
சேனை காவலன் பூதனை நோக்கி நின் சிதைப்பல் ஊனம் ஆகிய படை என உன்னலை உமை பால் ஞான நாயகன் படைதொடுவேன் என நவின்றான். |
79 |
|
|
|
|
|
|
|
5426.
|
மந்திரம் தனில் பூசனை முதலிய வகுத்துச்
சிந்தை மேல் உறு வெகுளியோடு அரன் படை செலுத்த
அந்தம் இல்லது ஓர் உலகு எலாம் முறுவலால் அடர்க்கும்
எந்தை கொண்டது ஓர் உரு எனத் தோன்றியது இமைப்பில்.
|
80 |
|
|
|
|
|
|
|
5427.
| நஞ்சும் ஆர் அழல் நாகமும் நடுவனது உருவும் விஞ்சு பூதமும் கணங்களும் வேறு பல் படையும் எஞ்சல் இல்லது ஓர் அங்கியும் போற்ற எவ் உலகும் அஞ்சிடும் படி நடந்தது ஆல் அரன் படை அதுவே. |
81 |
|
|
|
|
|
|
|
5428.
| ஈசன் மாப் படை வருதலும் உக்கிரன் என்னும் ஆசு இல் வீரன் தன் அங்கையில் கதையினை அகற்றிப் பாசம் நீக்கும் அஞ்சு எழுத்தினை விதிமுறை பன்னி நேசமோடு கை தொழுதரன் பொன்னடி நினைந்தான். |
82 |
|
|
|
|
|
|
|
5429.
| ஆண்டை உக்கிரன் நிற்றலும் அஞ்சலி புரிவான் மாண்ட தொல் படை இல்லவன் துதி செயும் வாயான் ஈண்டு இவன் தனை அடுகிலன் யான் என எண்ணி மீண்டு சென்றது சிவனருள் படைக்கலம் விரைவில். |
83 |
|
|
|
|
|
|
|
5430.
|
அண்ணல் அம் படை துறந்தவர் மேல் விடின் அவர்பால்
நண் உறாது நம் பக்கல் வந்திடும் என நல்க
விண் உலாம் புகழ் அவுணர் கோன் பெறுதலின் விடையூர்
பண்ணவன் தனை அடைந்தது ஆங்கு அவன் அருள் படையே.
|
84 |
|
|
|
|
|
|
|
5431.
|
ஆன பெற்றி கண்டு இங்கு இவன் சிவன் கொல் என்று அயிர்த்துச்
சேனை காவலன் துளங்கினன் பூதர்கள் சிறந்தார்
வான் உளோர் மலர் மாரிகள் தூர்த்தனர் மாறாம்
ஏனை வீரர்கள் விழிபொழி தாரைகான் றிரிந்தார். |
85 |
|
|
|
|
|
|
|
5432.
|
நீங்குகின்றது
ஓர் தானவர் குழுவினை நீவிர்
ஏங்கு கின்றதை விடுமின்கள் என்று தேர் இழிந்து பாங்கர் உற்றது ஓர் தண்டு கொண்டு அரிமுகன் பாலன் வீங்கு தோளிடை எற்றினன் உக்கிரன் வெகுண்டான். |
86 |
|
|
|
|
|
|
|
5433.
|
எற்று தண்டினை அங்கையால் உக்கிரன் என்போன்
பற்றி வாங்கியே அவன் தனது உரம் பதை பதைப்பத் தெற்றெனப் புடைத்திடுதலும் நிலனிடைச் சேர்ந்தான் மற்று அவன் தனது உயிர்கொடு போயினன் மறலி. |
87 |
|
|
|
|
|
|
|
5434.
| துஞ்சி வீழ் அதி சூரனை நோக்கியே துகடீர் மஞ்சு போலவே வரும் அசுரேந்திரன் மனமும் நஞ்சும் ஆம் எனக் கொதித்தனன் அழல் எழ நகையா விஞ்சு பூதர் தம் குழுவின் மேல் சென்றனன் விரைவின். |
88 |
|
|
|
|
|
|
|
5435.
| கடிது சென்ற சுரேந்திரன் இந்திரன் கரத்தின் நெடிய வில்லினும் ஆயிரத்து இரட்டி மேல் நிமிர்ந்த கொடிய வார் சிலை வாங்கியே குணத்து ஒலி கொளுவப் படியும் வானமும் குலைந்தன உயிர் எலாம் பதைப்ப. |
89 |
|
|
|
|
|
|
|
5436.
|
பூதர் அங்கு அது நோக்கியே தண்டமும் பொருப்பும்
பாதவங்களும் தாரகன் தந்திடு பதகன்
மீது சென்றிட விடுத்தலும் அனையன விலக்கிச்
சோதி வெம் கணை இறுதி நாள் முகில் எனச் சொரிந்தான்.
|
90 |
|
|
|
|
|
|
|
5437.
| வடி கொள்வார் கணை விடுத்தலும் பூதர்கள் வலிதின் விடு பிறங்கலே முதலிய இடை இடை வீட்டி முடியும் கைகளும் ஆகமும் முகத்தொடு மொய்ம்பும் அடியும் சோரி நீர் கான்றிட அழுந்திய அவர் பால். |
91 |
|
|
|
|
|
|
|
5438.
| மற்றும் வெம் கனை உலப்பில தூண்டலும் மண்மேல் அற்ற கைகளும் துணிந்திடு தோள்களும் அடியும் இற்ற கண்டமும் ஆகி வெம் பூதர்கள் இறப்பக் கொற்ற வீரரில் கனகன் என்பவன் எதிர் கொண்டான். |
92 |
|
|
|
|
|
|
|
5439.
| எதிரதாய் வரு கனகன் மேல் தாரகன் ஈந்த அதிரும் வார் கழல் அண்ணல் ஓர் வடிக்கணை அழுத்த உதிர வாரியோடு அன்னவன் தேர் மிசை உற்றான் கதிரின் மேல் வரும் செய்ய கோளாம் எனக் கடிதின். |
93 |
|
|
|
|
|
|
|
5440.
| பாகன் தன் உயிர் உலந்திட உதைத்து வெம் பனைக்கை நாகம் தந்திடு மதலை தன் வரிசிலை நாணைக் காகம் போல வெள் எயிற்றினால் கீறி வெம் கறை சேர் மேகம் தாரணி மிசை இழிந்தால் என மீண்டான். |
94 |
|
|
|
|
|
|
|
5441.
|
இழிந்து மால் வரை ஒன்று கீண் டசுரர் இந்திரனாம்
கழிந்த சீர்த்தியான் மீ மிசை ஓச்சலும் கரத்தின் அழிந்த வில்லினை நீத்து வேறு ஒரு சிலை அதனைக் குழிந்த கண் உடைப் பூதர்கள் வெருக்கொளக் குனித்தான். |
95 |
|
|
|
|
|
|
|
5442.
|
குனித்து நான்கு இரு சுடுசரம் தொடுத்து அறை கூவித்
தனித்து மேல் வரும் கனகன் ஏவிய கிரி சாய்த்துப்
புனிற்று இளம் பிறை செக்கர் வான் நுழைந்து எனப் புயங்கள்
பனித்திடும் படி அழுத்தினன் ஆயிரம் பகழி. |
96 |
|
|
|
|
|
|
|
5443.
|
பகழி
ஆயிரம் படுதலும் ஆடகன் பையுள்
நிகழ நிற்றலும் வேறு ஒரு வலவனை நிறுவிப்
புகழ் இல் தானவன் தேர் கொடு பூதர் மேல் போத
அகழும் மால் வரை ஒன்று எறிந்து உன்மத்தன் ஆர்த்தான்.
|
97 |
|
|
|
|
|
|
|
5444.
|
அவன் எறிந்திடும் பருப்பதம் விரைவில் வந்து அடர்க்கக்
கவன வெம்பரி ஆயின உலந்தன காணாப் பவன வேகத்தின் வேறு ஒரு தேர் மிசைப் பாய்ந்தான் புவனம் உண்ணிய நின்றது ஓர் கடவுளே போல்வான். |
98 |
|
|
|
|
|
|
|
5445.
| முந்து வெம் கணை உலப்பில தூண்டலும் முந்நீர் செம் துகிர்க்கொடி போர்த்து எனக் குருதி நீர் செறிய வந்த முற்றிலன் புவி மிசை இருந்தனன் ஆங்கே மந்தன் என்பவன் தாரகன் புதல்வன் நேர் வந்தான். |
99 |
|
|
|
|
|
|
|
5446.
| வருத லோடும் ஆங்கு அவன் மிசை ஐ இரு வாளி குருதி கால் உற வழங்கலும் எரி எனக் கொதியாப் பரிதி மேவரத் தகுவது ஓர் பருப்பதம் பறித்துக் கருதி ஏவினன் அவுணர் கோன் அங்கு அது கண்டான். |
100 |
|
|
|
|
|
|
|
5447.
|
சென்று மார்பு எதிர் ஏற்றலும் வந்து உழித் தெறித்துக்
குன்று மீண்டும் அற்றவன் புடை போயது கொடியோன் ஒன்று போலிய ஆயிரம் பகழிகள் உய்த்தான் நின்று மந்தன் அங்கு அயர்ந்தனன் சிங்கனும் நேர்ந்தான். |
101 |
|
|
|
|
|
|
|
5448.
|
எடுத்து மால் வரை ஒன்று அவன் உரத்தின் நேர் எறியத்
தடுத்து ஒர் வாளியின் அகற்றினன் அமர் இடைத் தரியார்
விடுத்தது ஓர் கதை எறிதலும் அவன் அது விலக்கித்
தொடுத்து நூறு கோல் அழுத்தினன் சிங்கனும் தொலைந்தான்.
|
102 |
|
|
|
|
|
|
|
5449.
| ஒழிந்த சாரதத் தலைவர்கள் யாவரும் உடன்றே அழிந்து நின்றனர் தாரகன் குமரன் ஆசுகங்கள் பொழிந்து மற்று உள பூதரை முடித்திடும் போதில் கழிந்த துன்பொடும் இலக்கரில் தண்டகன் கண்டான். |
103 |
|
|
|
|
|
|
|
5450.
|
தனது கார் முகம் வாங்கியே தண்டகப் பெயரோன்
முனை இரும் கணை ஆயிரம் கொடியவன் முகத்தின்
நனி புகுந்திட விடுத்தலும் நடலை உற்று இரங்கி
மனம் வெகுண்டு பின் தன் பெரும் சிலையினை வளைத்தான்.
|
104 |
|
|
|
|
|
|
|
5451.
|
வளைத்து நாலு இரண்டு அம்பினைத் தண்டக மறவோன்
குளத்தின் மேல் பட விடுத்தலும் எழுந்தன குருதி
இளைத்து நின்றனன் தேர் மிசை அன்னவற்கு இளையோன்
கிளத்து சோமுகன் தாரகன் மகன் எதிர் கிடைத்தான். |
105 |
|
|
|
|
|
|
|
5452.
|
எதிர் புகுந்தவன் அகல மேல் ஐம்பதிற்று இரட்டி
கதிர் தெறும் கணை அவுணர் கோன் அழுத்தலும் கவலா
அதிர்தரும் தனது ஒண் சிலை வாங்கி ஆயிரம் ஆம்
நுதி கொள் வெம் சரம் தூண்டினன் சோமுகன் நொடிப்பில்.
|
106 |
|
|
|
|
|
|
|
5453.
| பல்லவங்கள் ஆயிரமும் அத் தாரகன் பாலன் சில்லி அம் தனித் தேரினை வலவனைச் சிதைப்ப மெல்ல வேறு ஒரு தேர்மிசைப் பாய்ந்து வேல் ஒன்றை ஒல்லை இங்கு இவன் உயிரினை உண்க என உய்த்தான். |
107 |
|
|
|
|
|
|
|
5454.
|
உய்த்த
வேல் அவன் அகலமேல் படுதலும் முயங்கி
எய்த்து மற்று அவன் தேர் மிசை மயங்கினன் இருப்ப நித்தன் வேர் உறு சோமுகற்கு இளையவன் நெடுமால் ஒத்த வன்மையன் விசயன் என்பவன் கடிது உற்றான். |
108 |
|
|
|
|
|
|
|
5455.
| விசயன் ஆங்கு ஒரு கொடு மரம் வாங்கியே வெகுண்டு நிசித வெம் கணை ஆயிரம் உய்த்து நேர் இல்லா அசுரர் இந்திரன் வலவனைத் தடிந்து மற்று அவன் கை இசையும் வில்லொடு நாரியைத் துணிபட இறுத்தான். |
109 |
|
|
|
|
|
|
|
5456.
|
முற்று நூல் உணர் பாகுயிர் உலத்தலும் முனியா
இற்ற நாண் ஒடு வார் சிலைத் துணியினை ஏந்திக் கொற்றம் ஆர் அசுரேந்திரன் மத்திகை கொண்டு பொற்றை அன்னதன் தேர் விடு வலவனின் பொலிந்தான். |
110 |
|
|
|
|
|
|
|
5457.
| தகுவர் கோன் ஒரு வலவனை நிறுவி ஓர் தண்டம் இகலும் வன்மையால் எடுத்தனன் அவன் மிசை எறியப் புகுதும் எல்லையில் கண்டு எதிர் விசயனாம் புகழோன் மிகவும் எல்லையில் சரங்களைத் தூண்டினன் விடுத்தான். |
111 |
|
|
|
|
|
|
|
5458.
|
தொட்ட தொட்டன கணை எலாம் துகள் படத் தொலைத்து
மட்டு உலாம் தொடை விசயன் மார்பகத்து இடை வந்து
பட்ட காலையில் அவன் தனது இரதம் மேல் பதைத்து
விட்ட வில்லொடு குருதியும் தானுமாய் வீழ்ந்தான். |
112 |
|
|
|
|
|
|
|
5459.
|
விழுந்த காலையில் இலக்கரில் ஏனையோர் வெகுண்டு
பொழிந்த வாளியால் தாரகன் மகனொடு பொருதே அழுந்தி யாவரும் இரிந்தனர் போதலும் அது கண்டு உழந்த துன்பொடு வீர மொய்ம் பினன் விரைந்து உற்றான். |
113 |
|
|
|
|
|
|
|
5460.
| வீர வாகு வேள் இணை அடி போற்றியே வெகுண்டோர் கோர வெம் சிலை வாங்கினன் நாண் ஒலி கொளுவி யாரும் வானவர் வியப்பு உற அவுணர்கள் அயரத் தாரகா சுரன் மதலையை மறைத்தனன் சரத்தால். |
114 |
|
|
|
|
|
|
|
5461.
|
மறைப்ப மெய் எலாம் குருதி கொண்டிடலும் வல் அவுணன்
விறல் கடும் சிலை ஒன்றினை வளைத்தவன் மிசையே
பிறைத் தலைக் கணை ஆயிரம் அழுத்தினன் பெரிதும்
உறைத்த செம்புனல் இருவரும் இளம் கதிர் ஒத்தார். |
115 |
|
|
|
|
|
|
|
5462.
| தாரகத் திறலான் மகன் தூண்டி ஏழ் சரத்தால் சூரர் இத்திறல் அண்ணல் கைச் சிலைதனைத் துணிப்ப வீரன் மற்று ஒரு கார் முகம் வாங்கியே விடம் கால் கூர் அயில் கணை ஆயிரம் விடுத்தனன் குறியால். |
116 |
|
|
|
|
|
|
|
5463.
| ஏகும் வார் கணை தாரகன் மகன் சிலை இறுத்துப் பாகன் ஆவி உண்டு இரதமோடு அயங்களைப் படுப்ப வாகை இன்றியே வேறு ஒரு தேர் மிசை வறியன் போகலோடு மற்று அன்னது கண்டனர் புலவோர். |
117 |
|
|
|
|
|
|
|
5464.
|
வெருவரப் பொரும் தாரகன் மதலையை வீரன்
பொருது வெற்றி கொள்வான் கொலாம் இனி எனப் புகழ்ந்தார்
அரிய அற்புதமோ அவன் வென்றிடல் அவுணன்
கரிதரும் சுதன் சிம்புளின் சுதன் இவன் கழறின். |
118 |
|
|
|
|
|
|
|
5465.
|
மாறு
ஒர் தேர் இடைப் பாய்ந்தவன் ஒரு தனு வளைத்து
நூறு கோல் விடுத்தவன் இரதத்தினை நூறச் சீறி வான் எழீஇ வீரவாகுப் பெயர்த் திறலோன் ஆறு மா முக முதல்வனைப் பரவி நின்று ஆர்த்தான். |
119 |
|
|
|
|
|
|
|
5466.
|
உறை கழித்து வாள் உருவியே உம்பரில் படர்ந்து
சிறை கழித்திடும் வரை புரை அவுணர் கோன் தேர் மேல்
குறை கழித்திடும் பணி கவர் மதி எனக் குப்பு உற்று
இறை கழிக்கும் முன் அவன் தனைக் கையில் ஒன்று எறிந்தான்.
|
120 |
|
|
|
|
|
|
|
5467.
|
எறிந்த காலையில் இற்றது ஓர் கைத்தலம் இறலும்
குறைந்த கை இடைச் சல சல இழிவன குருதி செறிந்த நீல வொண் கிரிதனக்கு ஒரு புடை சென்றே உறைந்தது ஓர் கரும் பணி அழல் மணி உமிழ்ந்தது ஒப்ப. |
121 |
|
|
|
|
|
|
|
5468.
|
கை அறுத்தலும் தாரகன் தன் சுதன் கனன்று
மொய் உடைக் கதை ஒன்று எடுத்து அவன் மிசை மோத
ஒய் எனத் திறல் மொய்ம்பினன் வான் எழுந்து ஒருதன்
செய்ய பொன் பதத்து உதைத்தனன் அங்கு அவன் சிரத்தில்.
|
122 |
|
|
|
|
|
|
|
5469.
| காமர் தாளினால் உதைத்து விண் படர்தலும் கண்டு தூமம் ஆர் விழியான் அசுரேந்திரன் தொடர்ந்து ஓர் சேம வாள் கொடு வான் எழ மேலையோன் சீறி ஏம நாந்தகத்தால் அவன் தலை அற எறிந்தான். |
123 |
|
|
|
|
|
|
|
5470.
| எறிந்த சென்னியும் யாக்கையும் இம்பரின் வீழ்ந்து மறிந்து மற்று அவன் மன் உயிர் போயது வான் மேல் செறிந்த விண்ணவர் ஆர்த்தனர் இன்னது ஓர் செய்கை அறிந்த தானவக் கடல் எலாம் ஓடின அன்றே. |
124 |
|
|
|
|
|
|
|
5471.
|
மக்கள் ஆயினர் இருவரும் இறந்தது மலைந்து
பக்கம் மேயின தானைகள் இரிந்ததும் பாராத் தொக்க பேர் அழல் உலகு அட எழுந்த தோற்றம் போல் மிக்க சீற்றம் மேல் கொண்டனன் அண்டங்கள் வென்றான். |
125 |
|
|
|
|
|
|
|
5472.
|
சீற்றமே தகு காசிபன் மதலை போர் செய்யும்
ஆற்றலார் தமை அடுவன் ஆல் விரைந்து என மதித்துக்
காற்றின் முந்து செல் தேர் இடைக் கடிது வந்து எய்திக்
கூற்றின் வெம் பசி தணிப்பது ஓர் சிலையினைக் குனித்தான்.
|
126 |
|
|
|
|
|
|
|
5473.
| வாணி போற்றிடும் சயமகள் வீரமா மடந்தை நீணிலைப்பட வேறு சோ பானத்தின் நெறிபோல் பூண் அளாவிய பொன்னவாம் சிலை தனில் புணர்த்த நாணின் ஓதையைக் காட்டினன் அணி விரல் நகத்தால். |
127 |
|
|
|
|
|
|
|
5474.
| கரம் கொள் வில் ஒலி கேட்டலும் பாரிடைக் கணங்கள் மரங்கள் சிந்தினர் சிகரிகள் சிந்தினர் மலையும் உரங்கள் சிந்தினர் வீரமும் சிந்தினர் உடலும் சிரங்கள் ஆனவும் பனித்திட ஓடினர் சிதறி. |
128 |
|
|
|
|
|
|
|
5475.
|
யாண்டும் ஆகியே இரிந்தனர் அல்லது இந் நிலத்தில்
வீண்டு உளார் சிலர் பதைத்து நின்றார் சிலர் வீழ்ந்து மாண்டு உளார் சிலர் மயக்கம் உற்றார் சிலர் மற்றும் ஆண்டு பன்னிரண்டு ஒழிந்திலது அவுணன் வில் அரவம். |
129 |
|
|
|
|
|
|
|
5476.
|
வேதன்
அஞ்சினன் மால் முடி துளக்கினன் விண்ணோர்
நாதன் அஞ்சினன் மறலியும் அஞ்சினன் நடுங்கிக் கோது இல் நல் அறம் அஞ்சின ஐவகை கொண்ட பூதம் அஞ்சின உயிர்த் தொகை அஞ்சின பொருமி. |
130 |
|
|
|
|
|
|
|
5477.
| வஞ்சன் வார் சிலை நாண் ஒலி கேட்டலும் மறத்தால் விஞ்சு பூதம் ஈர் ஆயிரம் வெள்ளமும் வெருவி எஞ்சியே அவண் நின்றிடா திரிந்துள என்றால் அஞ்சு பூதங்கள் அஞ்சுவ அற்புதத் தனவோ. |
131 |
|
|
|
|
|
|
|
5478.
| சூரன் வில் பெரும் முழக்கினைக் கேட்டலும் துளங்கிப் பார் இடத் தொகை அழிதர அன்னது பார்த்துப் போர் இயற்படை தலைவர் நூற்று எண்மரும் புகுந்து மாரியில் பொழிந்திட்டனர் வரைகளும் மரமும். |
132 |
|
|
|
|
|
|
|
5479.
|
அன்ன வேலையில் பத்து நூறு ஆயிரம் கோடி
பொன்னின் வெம் கணை அவுணர் கோன் முறை முறை
போக்கித்
தன் உழைப் புகும் வரையொடு தருக்களைத் தடிந்து
துன்னு பாரிடத் தலைவ தம் யாக்கையைத் துளைத்தான். |
133 |
|
|
|
|
|
|
|
5480.
|
முடி துளைத்தனன் முகத்தினைத் துளைத்தனன் மொய்ம்பைத்
தொடையல் மார்பினைத் துளைத்தனன் பாணியைத் துளைத்தான்
கடி துளைத்தனன் குறங்கினைத் துளைத்தனன் கழல்சேர்
அடி துளைத்தனன் பாரிடத் தலைவரும் அயர்ந்தார். |
134 |
|
|
|
|
|
|
|
5481.
|
துளைத்து மெய்யினை வெம் சரம் போதலும் துயர்
கொண்டு
இளைத்து நின்றனன் அதிபலன் வக்கிரன் என்போன்
களைத்து வீழ்ந்தனன் வச்சிரன் இரங்கினன் கபாலி
உளத்தின் வன்மையது அழிந்தனன் உன் மத்தன் உலைந்தான்.
|
135 |
|
|
|
|
|
|
|
5482.
| நீடு குன்றினை ஏந்தியே அச்சுதன் நின்றான் ஓடு கின்றிலன் எதிர்ந்திலன் மாபலன் உளைந்தான் வாடுகின்றனன் மதிசயன் மேகனும் மருண்டான் ஆடுறும் துயர் அறிந்தனன் அண்டவா பரணன். |
136 |
|
|
|
|
|
|
|
5483.
| மேக மாலி உள் நடுங்கினன் சுப்பிரன் மெலிந்தான் காக பாதன் மெய் பதைத்தனன் உதவகன் கவன்றான் ஆகம் வீழ்ந்திடு குருதி உள் அழுந்தினன் அசலன் மாக வந்தன் நொந்து இரங்கினன் அத்திரி மறிந்தான். |
137 |
|
|
|
|
|
|
|
5484.
|
பத்திரன் சிறிது இடைந்தனன் உடைந்தனன் பதுமன்
எய்த்து அசைந்தனன் வியாக்கிரன் தனஞ்சயன் இரிந்தான்
மத்தன் வைது வெய்து உயிர்த்தனன் பினாகி மெய் மறந்தான்
சித்திராங்கனும் கனகனும் துயர்க்கடல் திளைத்தார். |
138 |
|
|
|
|
|
|
|
5485.
| நெஞ்சு அழிந்தனர் மாலியும் நீலனும் நெடும் கண் பஞ்சு அடைந்தனர் கும்பனும் நிகும்பனும் பதைப்பு உற்று அஞ்சி ஏங்கினர் சண்டியும் தண்டியும் ஆவி துஞ்சல் கூடினர் வாமனும் சோமன் என்பவனும். |
139 |
|
|
|
|
|
|
|
5486.
|
வெம் கண் உக்கிரன் எழுவதற்கு உரன் இலன் வெகுண்டான்
சிங்கன் ஓய்ந்தனன் சுவேத சீரிடன் மறம் தீர்ந்தான்
சங்க பாலன் வீழ்ந்து உருண்டனன் நந்தியும் சலித்தான்
பிங்கலன் உயிர்க்கின்றிலன் உரோமசன் பெயர்ந்தான். |
140 |
|
|
|
|
|
|
|
5487.
|
இனைய
தன்மையால் இவர் முதலான நூற்று எண்மர்
அனிக வேந்தர்கள் போர் வலி இன்றியே அழியத் துனைய மற்று அது கண்டு நூறு ஆயிரத் தொகையோர் கனையும் வார் சிலை வாங்கியே தூர்த்தனர் கணைகள். |
141 |
|
|
|
|
|
|
|
5488.
| தூர்த்து மற்றவர் மாறு கொண்டிடு உழிச் சூரன் வேர்த்து வெம்கணை மாரி தூய் அனையன விலக்கி ஆர்த்து வெம் சரம் ஆயிர கோடி தொட்டு அங்கண் மூர்த்தம் ஒன்றினில் அனையவர் சிலைகளை முரித்தான். |
142 |
|
|
|
|
|
|
|
5489.
|
முரித்து மற்றவர் வார்சிலை எடுப்பதன் முன்னம்
திரித்தும் ஆயிர கோடி வெம்கணையினைச் செலுத்திப்
பரித்திறம் பல பூண்டிடும் தேர்களைப் படுத்தி
உரத்தில் அன்னவர்க்கு இலக்கம் ஆயிரம் கணை உய்த்தான்.
|
143 |
|
|
|
|
|
|
|
5490.
| உய்த்த வாளிகள் நெஞ்சு போழ்ந்திடுதலும் உளைந்தே எய்த்து வீழ்ந்தனர் இலக்கரும் அனைய கண்டு இரங்கி வித்தகம் கெழு வீர மார்த்தாண்டனாம் விடலை கைத்தலம் கெழு சிலையொடு நேர்ந்தனன் கடிதின். |
144 |
|
|
|
|
|
|
|
5491.
|
வாங்கு வில்லினன் எறிந்த நாண் ஒலியன் வார் கடல்கள்
ஏங்கும் ஆர்ப்பினன் அவுணன் மேல் கணை எனும் எழிலி தூங்கு வித்தலும் சரங்கள் தூய் அன்னவை தொலைத்துத் தீங்கடும் கணை ஆயிரம் நுதல் இடைச் செறித்தான். |
145 |
|
|
|
|
|
|
|
5492.
|
செறித்த காலையில் வீரருள் வெய்யவன் செயிர்த்து
மறித்தும் வெம் சரம் தூண்டவே ஆயிரம் வாளி குறித்து வீசியே அவன் விடு கணையொடும் குனிவில் அறுத்து உளம் பிளந்து அம்பு பெய் தூணியும் அட்டான். |
146 |
|
|
|
|
|
|
|
5493.
| அட்ட காலையில் வீர மார்த்தாண்டன் உள் அழுங்கிப் பட்டு உளான் என வீழ்ந்தனன் பரிசு அது நோக்கி ஒட்டலான் வலி அடக்குவன் யான் என உருத்து விட்ட தேரொடும் வந்தனன் அரக்கன் ஆம் விறலோன். |
147 |
|
|
|
|
|
|
|
5494.
|
வந்த வீர ராக்கதன் எனும் நாமத்து வலியோன்
கொந்து உலாம் தொடை தூங்குதன் கொடுமரம் குனியா
ஐந்து நூற்று இரண்டு அடு சரம் துரந்திட அதுகால்
உந்தி ஆர்த்தனன் அவுணர் கோன் ஒர் ஆயிரம் கணைகள்.
|
148 |
|
|
|
|
|
|
|
5495.
|
முட்டு வெம் கணை வீர ராக்கதன் எனும் மொய்ம்பன்
தொட்ட வாளியை விலக்கி அங்கு அவன் சிலை துணிக்க நெட்டு இரும் சுடர் வாளம் ஒன்று ஏந்திநீள் விசும்பில் எட்டு மாதிரக் கரிகளும் வெருவ ஆர்த்து எழுந்தான். |
149 |
|
|
|
|
|
|
|
5496.
|
விண் எழுந்தவன் அவுணர் கோன் நின்றிடும் வியன் தேர்க்
கண்ணில் வாவியே ஆங்கு அவன் கொண்டகார் முகத்தைத்
துண் எனச் சுடர் நாந்தகத்து எறிதலும் சூரன்
வண்ணவார் சிலை முடிந்திலது ஒடிந்தது மணிவாள். |
150 |
|
|
|
|
|
|
|
5497.
|
நெடிய வாள் படை இற்றிட விறல் உடை நிருதன்
தொடையல் மார்பகத்து எற்றுவான் முயறலும் சூரன் படை இழந்திடும் வலியிலர் கொல்வது பழி என்று அடியின் மேல் படுத்து எறிந்தனன் அண்ட மேல் செல்ல. |
151 |
|
|
|
|
|
|
|
5498.
|
அரக்கர்
வீரனை அவுணர் கோன் எறிந்திட அலமந்து
இரக்கம் எய்தியே வீழ்ந்தனன் புவிமிசை இது கண்டு உரக்கடும் கணை மாரிகள் ஒன்னலன் தேரும் கரக்க வீசி வந்து ஏற்றனன் மகேந்திரன் கடியோன். |
152 |
|
|
|
|
|
|
|
5499.
| சூரன் அங்கு அது விலக்கியே கணைமழை துரப்ப வீரன் மற்று அது சிந்தினன் பகழிகள் வீசிச் சாரி வட்டம் அதாய் வர அவுணனும் தக்கோன் தேரை வட்டணை வந்தனன் சிலீமுகம் சிதறி. |
153 |
|
|
|
|
|
|
|
5500.
| திரியும் வட்டணை முறையினால் சரமழை சிதறி வருதிறத்தினால் ஐயம் அது ஆவவர் வடிவை ஒரு திறத்தரும் தெளிகிலர் உணர்ந்திட அற்றோ இரு திறத்தரும் வீரமா மகேந்திரர் என்றால். |
154 |
|
|
|
|
|
|
|
5501.
|
ஆள் அரிக்குடன் வந்தவன் அத்துணை அழன்று
கோள் அரிக்குடன் வந்தவன் விடுசரம் குறைத்துத்
தாளின் முப்பது மரும மீது இருபது தடம் பொன்
தோளின் முப்பது கணைவிடுத்து அவன் வலி தொலைத்தான்.
|
155 |
|
|
|
|
|
|
|
5502.
|
வலி தொலைந்தவன் வீழ்தலும் மாக்களின் தொகை மேல்
புலி அடைந்து என அவுணர் கோன் உரப்பினன் புகலும் மெலிவில் ஆற்றலன் வீரதீரன் எனும் வெய்யோன் சிலை குனிந்திடப் பகழி வான் நிமிர்ந்திடச் சென்றான். |
156 |
|
|
|
|
|
|
|
5503.
|
சென்ற வீர தீரன் விடு கணையொடு சிலையை
ஒன்று ஒர் ஆயிரம் வாளியால் வீட்டியே உயர்ந்த
குன்றம் அன்னது ஓர் தேரை ஏழ் கணையினால் குறைப்ப
நன்று நன்று எனாத் தண்டம் ஒன்று எடுத்து மேல் நடந்தான்.
|
157 |
|
|
|
|
|
|
|
5504.
| நடத்தல் ஆகிய எல்லையில் பகழி ஓர் நான்கு தொடுத்து மற்று அவன் ஏந்திய தண்டினைத் துணித்துத் தடத்த மார்பினும் மொய்ம்பினும் ஏழ் இரு சரங்கள் விடுத்து மண் மிசை வீட்டினன் யாரையும் வென்றான். |
158 |
|
|
|
|
|
|
|
5505.
| ஆன காலையில் வீரமா மகேசனாம் அடலோன் கூனல் வில்லினால் அரிதிவன் தன் வலி கோடல் மான மார் திறல் மொய்ம்பற்கும் என மனம் வலியா ஊனும் ஆவியும் கவர்வது ஓர் தெய்வ வேல் உய்த்தான். |
159 |
|
|
|
|
|
|
|
5506.
|
வேல் விடுத்துழிக் கண்டவன் வெம் சிலைக் குனித்துக்
கோல் விடுத்தலும் ஆயிரம் அன்னவை குறைத்துச் சூல் விடுத்திடும் எழிலி பால் மின் வரும் தொடர்பின் மால் விடுத்திடா அவுணன் மார்பு உற்றது அவ் வைவேல். |
160 |
|
|
|
|
|
|
|
5507.
|
உற்றது ஓர் எஃகம் நுண்டுகள் ஆகி விண் உலவிச்
சுற்று மாதிரம் சென்றது சூரன் மேல் வீரன்
மற்று ஒர் தண்டினை விடுத்திட எடுக்குமுன் வல்லோர்
சொற்ற சாபத்தின் முந்தும் ஏழ் கணையினைத் தொடுத்தான்.
|
161 |
|
|
|
|
|
|
|
5508.
| ஏழ் எனப் படு பகழியும் மகேசனாம் ஏந்தல் பாழி மொய்ம்பினைப் பாழியது ஆகவே படுத்த வீழல் உற்றது அங்கு அவன் உடல் உணர்ச்சிகள் வீந்த சூழுகின்றது ஓர் மன் உயிர் அடைந்தது துரியம். |
162 |
|
|
|
|
|
|
|
5509.
|
மகேசன்
என்பவன் மயங்கலும் மற்று அது நோக்கிக்
ககேசன் மேல் வரும் இராகுவின் அவுணனைக் கனன்று நகேசன் மங்கையோடு இகலி வேங்கட கிரி நண்ணும் குகேசன் ஏவல் செய் வீரகேசரி எதிர் கொண்டான். |
163 |
|
|
|
|
|
|
|
5510.
|
எதிர் புகுந்தவன் வணக்கியே நாண் ஒலி எறிந்த
துதி கொள் வார் சிலை தன்னை ஏழ் கணையினால் துணியா
அதி குரல் மணித்தேரை நூறு அம்பினால் அறுத்து
நுதி நெடும் கணை அழுத்தினன் ஆயிர நுதலின். |
164 |
|
|
|
|
|
|
|
5511.
| ஆயிரம் கணை நுதல் இடை அழுத்த அம் புவியில் பாய்தரும் குருதிப் பெரு நதியொடு பாய்ந்து சேய் இரும் குவடு ஒன்றினைச் செம்கையால் பறித்து மாயை தந்திடு மதலை மேல் விடுத்தனன் மன்னோ. |
165 |
|
|
|
|
|
|
|
5512.
|
எறித்த அரும் சுடர்த் தபனனும் சேடனும் இரங்கப்
பறித்து எடுத்து மேல் வீசிய பராரை அம் குன்றம்
வெறித்த அரும் தொடை அவுணர் கோன் விசிகம் ஒன்று அதனால்
அறுத்து மார்பின் ஊறு அயில் கணை அழுத்தினன் அம்மா.
|
166 |
|
|
|
|
|
|
|
5513.
| கரம் புகுந்திடும் குனி சிலை உமிழ்ந்திடும் கணைகள் உரம் புகுந்திட வீரகேசரி மனம் உளைந்து பரம் புகுந்திடும் அவுணர் கோன் தேர்மிசைப் பாயா வரம் புகுந்த குன்று அன்ன மார்பத்து இடை அடித்தான். |
167 |
|
|
|
|
|
|
|
5514.
|
வடித்த வில் படை அவுணர் கோன் மருமத்தின் வலிதாய்
அடித்த காலையில் வீர கேசரி தனது அங்கை வெடித்ததாம் எனக் கீண்டது விண்டது சோரி துடித்து உயிர்ப்பொடு தேர் இடை மறிந்தனன் துயரால். |
168 |
|
|
|
|
|
|
|
5515.
| வீர கோளரி பதைத்து மான் தேர் இடை வீழச் சூரன் மற்று இவன் கொல்வது பழிஎனச் சூழா ஓர் கையால் அவன் தனை எடுத்து அச்சுதன் உறங்கும் வாரிதிக்கு இடை எறிந்தனன் விண்ணவர் மருள. |
169 |
|
|
|
|
|
|
|
5516.
|
பரந்த பாற்கடல் எறிதலும் வீழ்ந்து அவன் பதைப்பு உற்று
அரந்தை எய்தியே எழுந்து விண் நெறியின் மீண்டு அணுகி
முரிந்த தம் இனம் கூடினன் அங்கு அதன் முன்னம்
புரந்தரப் பெயர் வாகையான் ஏற்று எதிர் புகுந்தான். |
170 |
|
|
|
|
|
|
|
5517.
|
ஏற்று எதிர்ந்திடும் வீரமா புரந்தரன் என்பான்
ஆற்றல் வெங்கணை சொரிந்து போர் செய்வனேல் அவற்றை
மாற்றி வென்றிடும் என்னையும் இவன் என மதித்துக்
கூற்றுவன் படைதொட்டனன் அவுணனைக் குறுக. |
171 |
|
|
|
|
|
|
|
5518.
| குறுகும் அப்படை வரத்தினை நோக்கியே கொடியோன் முறுவல் செய்தனன் ஆங்கு அதற்கு எதிர் உற முரணால் உறுவது ஓர் படை தொட்டிலன் இகழ்ந்திட உவன்மேல் மறலி தன் படை பட்டு மாய்ந்திட்டது வரத்தால். |
172 |
|
|
|
|
|
|
|
5519.
| தண்டகன் படை மாய்தலும் சயம் கெழு மகவான் முண்டகன் படை எடுத்தனன் தொடுப்பதன் முன்னம் கண்டகன் சிலை வாங்கி நூறு ஆயிரம் கணையை விண்டகன் பெரு மார்பகம் திறந்திட விடுத்தான். |
173 |
|
|
|
|
|
|
|
5520.
|
நிறந்து
அரும் சுடர்க் கணை புகும் துரத்தினை நெறியாத்
திறந்து போயின வீரமா புரந்தரன் செங்கை உறைந்த நான்முகப் படையொடும் சோரிநீர் உமிழ்ந்து மறிந்து மாய்ந்தனன் வந்தனன் வீரர் தம் மறலி. |
174 |
|
|
|
|
|
|
|
5521.
| தீரர் ஆம் திறல் அவுணர்கள் பூதர் ஆம் சிதைவார் சூரர் ஆம் சிலை வல்லவர் நமர் எலாம் தொலையும் நீரர் ஆம் செருச் செயல் இது நன்று என நிகழ்த்தி வீரர் ஆந்தகன் வந்தனன் அந்தகன் வெருவ. |
175 |
|
|
|
|
|
|
|
5522.
|
சார்ங்கம் அன்னது ஓர் வலியதாய் மாமதன் தனுவாம்
ஈர்ங் கரும்பு என அரி படு சிலை குனித்து ஏற்றுக்
கார்ங் கரும் புயலாம் என நாண் ஒலி காட்டிக்
கூர்ங் கொடும் கணை சிதறி நின்று ஆர்ப்பிசை கொண்டான்.
|
176 |
|
|
|
|
|
|
|
5523.
| ஆர்ப்பு எடுத்தலும் அஞ்சினன் கதிரவன் அங்கம் வேர்ப்பு எடுத்தனர் அமரர்கள் விஞ்சையர் விண்டார் சீர்ப் பெடைக்குலம் அலமரக் கின்னரம் சிந்திப் பார்ப்பு எடுத்து திரிகின்றன கேசரப் பறவை. |
177 |
|
|
|
|
|
|
|
5524.
| ஆன காலையில் வீரர் அந்தகன் விடும் அம்பின் சோனை மாரியைக் கணைகளால் விலக்கியே சூரன் ஊனும் ஆவியும் கவரும் ஆயிரம் கணை உய்ப்பத் தானும் ஆயிரம் பகழி தொட்டு அன்னதைத் தடுத்தான். |
178 |
|
|
|
|
|
|
|
5525.
| தடுத்த காலையில் அவுணர் கோன் சினவி முத்தலை சேர் வடித்த வச்சிரச் சிலீ முகம் ஆயிரம் வல்லே எடுத்து விட்டிட வீரர் அந்தகன் தமக்கு எதிரா விடுத்த பல்லவம் யாவையும் சிந்தியே விரைந்த. |
179 |
|
|
|
|
|
|
|
5526.
| விரைந்து போய் விறல் அந்தகன் தேரினை வீட்டிக் கரந்தனில் சிலை ஒடித்து வீரத்தினைக் கலக்கி உரந்தனில் புகுந்து உணர்வு உண்டு சோரி நீர் உகுத்துப் புரந்தரற்கு உளம் துணுக்கு உறப் போயது புறத்தில். |
180 |
|
|
|
|
|
|
|
5527.
|
விறல் படைத்திடும் அந்தகன் கணை பட வீழ்ந்து
மறல் படைத்திட ஆங்கு அது நோக்கியே மனத்தின்
உறல் படைத்திடு செற்றமும் மானமும் உகைப்பத்
திறல் படைத்திடு மொய்ம்பினான் அவுணன் மேல் சென்றான்.
|
181 |
|
|
|
|
|
|
|
5528.
|
அரிகள் அச்சு உறும் வீரவாகுப் பெயர் அறிஞன்
இரதம் ஊர்ந்து வந்து ஏற்றலும் ஆங்கு அவன் எழில் சேர் உருவ நோக்கு உறா ஒற்றனாம் இவன் என உன்னிப் பெரிது வெஞ்சினம் எய்தியே அவுணர் கோன் பேசும். |
182 |
|
|
|
|
|
|
|
5529.
| எமது வீரமா மகேந்திரம் சாடி எண் இல்லாத் தமரை அட்டனை தானைகள் அளப்பு இல தடிந்தாய் குமரர் தங்களைக் கொன்றனை நின் உயிர் கொண்டே அமரின் ஆற்றலை இன்றொடே முடிக்குவன் அம்மா. |
183 |
|
|
|
|
|
|
|
5530.
|
பற்று பட்டிமை பயிற்றியே அமைச்சரின் பன்னி
ஒற்றன் ஆகியே இன்னும் வந்தாய் எனின் உய்தி மற்றதே கடன் வார்சிலை பிடித்தனை மாண்டாய் இற்றை வைகலோ நின் உயிர்க்கு இழைத்த நாள் என்றான். |
184 |
|
|
|
|
|
|
|
5531.
|
தூதும்
ஆகுவன் அமைச்சனும் ஆகுவன் துன்னார்
மீது வெஞ்சமர் ஆற்றுவன் இன்னமும் வேலோன்
ஓதிடும் பணி யாவையும் செய்குவன் உலகில்
ஏதும் வல்லன் யான் வேண்டும் போர் புரிதியால் என்றான்.
|
185 |
|
|
|
|
|
|
|
5532.
|
என்று வீரன் ஓதிடுதலும் எரிந்தன நயனம்
தின்ற வாள் எயிற்று இதழினை உரோமங்கள் சிலிர்த்த துன்று சீற்றம் உள் எழுந்தது சூரனாம் அவுணன் குன்றம் அன்ன வில் குனித்தனன் நாண் ஒலி கொண்டான். |
186 |
|
|
|
|
|
|
|
5533.
| சிலை பனித்திடக் குனித்திடும் காலையில் செம் பொன் மலை பனித்தன பாரகம் பனித்தன வான் தோய் அலை பனித்தன அண்டமும் பனித்தன அங்கண் தலை பனித்தனன் அரவினுக்கு இறையவன் தானும். |
187 |
|
|
|
|
|
|
|
5534.
|
அம்முறை வேலையில் ஆடல் கொள் மொய்ம்பின்
செம்மல் தனாது செழும் கரம் உற்ற மைம் மலிவார் சிலை வன்மையின் வாங்கிக் கொம் என நாண் ஒலி கொண்டனன் ஆர்த்தான். |
188 |
|
|
|
|
|
|
|
5535.
| ஆர்த்திடும் பேர் ஒலி ஆங்கு அவன் வாங்கும் சீர்த்தனு ஆர்ப்பொடு சென்றிடும் காலை மூர்த்தம் அது ஒன்றினின் முச்சக வைப்பும் பேர்த்து எனவே பெயர்க்கு உற்றன அன்றே. |
189 |
|
|
|
|
|
|
|
5536.
| அங்கு அது காலையில் ஆயிரம் கோடி துங்க நெடும் கணை தூர்த்தனன் ஆர்ப்பப் புங்கவனுக்கு இளையான் புயல் என்ன வெம் கணை வீசி விலக்கினன் நின்றான். |
190 |
|
|
|
|
|
|
|
5537.
| விலக்கிய காலை வெகுண்டு இவன் ஆவி கலக்குவன் என்று கடும் சரம் வெய்யோன் இலக்கம் விடுத்திட ஏந்தல் தடுத்தான் கொலைக் கணை ஆயிர கோடி தொடுத்தே. |
191 |
|
|
|
|
|
|
|
5538.
| வெற்றி கொள்வான் பினும் வெங்கணை கோடி செற்றமொடே செறி வித்திடும் காலை மற்று அவை சிந்தினன் வாளிகள் நூறு நெற்றியில் விட்டனன் நீள் புய வீரன். |
192 |
|
|
|
|
|
|
|
5539.
| அசுத்தன் ஆம் அவுணன் குளம் எய்தி மெய்ச் சரம் நூறும் விளிந்து பின் விண்ட வச்சிரம் ஆகிய மால் வரை ஒன்றின் உச்சியின் உற்ற பொன் ஊசிகள் என்ன. |
193 |
|
|
|
|
|
|
|
5540.
| நூறு அயில் வாளி நுதற்கு இடை சென்று மூறிலன் ஆகி உறும் திறல் நோக்கி ஆறு முகேசன் அயில் படை அல்லால் ஈறு செயாது இவன் யாக்கையை என்றான். |
194 |
|
|
|
|
|
|
|
5541.
| என்றிடும் வீரன் இதன் பின்னும் வாளி துன்று பல் கோடி சொரிந்திட வெய்யோன் வன் திறல் வெம் கணையால் அவை மாற்றி ஒன்றுடன் ஏழ்கணை ஒண் புயம் உய்த்தான். |
195 |
|
|
|
|
|
|
|
5542.
|
அம்பு
இரு நான்கும் அணைந்து உடன் ஆடல்
மொய்ம்பினன் மொய்ம்பு உற மூழ்கி உள் உற்ற செம் புனல் உண்டு செழும் பிடர் போழ்ந்தே உம்பர் வெருக் கொள ஓடிய மாதோ. |
196 |
|
|
|
|
|
|
|
5543.
| ஓடிய வேலை உளைந்திடு நெஞ்சன் ஆடல் கொள் மொய்ம்பினன் அவ் அசுரேசன் பாடு உறு தேர் விடு பாகர் தம் மெய்யில் கோடி பல் கோடி கொடும் கணை விட்டான். |
197 |
|
|
|
|
|
|
|
5544.
| அலகில் நெடும் கணை ஆகம் அழுந்த வலவர்கள் ஆற்ற வருந்தினர் ஆகிப் புலவொடு சோரி புறத்தில் விளங்க இலவம் அலர்ந்து என யாரும் இருந்தார். |
198 |
|
|
|
|
|
|
|
5545.
| அங்கு அது நோக்கி அழன்று அசுரேசன் செம் கணை ஐம்பது தீ என ஓச்சி வெம் கண் விறல் புயன் மேதகு தேரைப் பொங்கு உளை மாவொடு பொள் என அட்டான். |
199 |
|
|
|
|
|
|
|
5546.
|
அட்டிடும் காலை அடல் புயன் ஆங்கு ஓர்
வட்டணை ஆழி கொள் வையம் அது ஏறி நெட்டழல் வாயு நெடும் படை தன்னைத் தொட்டனன் ஆங்கு அது சூரன் அறிந்தான். |
200 |
|
|
|
|
|
|
|
5547.
|
வீறு ஆகிய அசுரர்க்கு இறை மிக மூரல் படைத்து
மாறு ஆக ஒர் படை தொட்டிலன் வரிவில்லொடு நிற்பச் சூறாவளி அழல் மாப் படை சூரன் மிசை தாக்கி ஊறு ஆயின நூறு ஆயிரம் உதிர் ஆயின பிதிராய். |
201 |
|
|
|
|
|
|
|
5548.
| காற்றின் படை கனலின் படை கண்டம் பல ஆகக் கூற்றின் படை கதிரின் படை கூடத் தொடுத்திடலும் சீற்றம் கெழு சூரன் மிசை சென்றே அவை தாமும் ஏற்றம் தனை இழந்தே கடிது இறந்திட்டன அன்றே. |
202 |
|
|
|
|
|
|
|
5549.
|
அருணன் படை மறலிப் படை அழிவு எய்தலும் அம்மை
சரணம் தனில் வரு சத்திகள் தருமைந்தரில் தலைவன்
வருணன் படை நிருதிப்படை மகவான் படை மூன்றும்
முரணம் கொடு கொடியோன் உர மொய்ம்பில் புக விடுத்தான்.
|
203 |
|
|
|
|
|
|
|
5550.
|
ஏய் உற்றவை அவுணர்க்கு இறை இருதோள் உரம் எய்தி
வீயுற்றன அது காலையில் வீரம் கெழு மொய்ம்பன் மாயப்படை அவுணப் படை வல்லே செல விடுப்பப் போய் அப்படையவன் மெய்யிடை புகுந்தே பொடி ஆன. |
204 |
|
|
|
|
|
|
|
5551.
|
விண்ணோர் படை இவை யாவையும் விளிவாதலும் வீரன்
நண்ணான் பெரு விறல் கண்டனன் நனி விம்மிதன் ஆகி
மண்ணோடு உயிர்த் தொகை யாவையும் வகுத்தோன் படை
நளினக்
கண்ணோன் படையொடு கூட்டுபு கடிதில் செல விடுத்தான். |
205 |
|
|
|
|
|
|
|
5552.
|
விடுக்கு உற்றிடும் அயன் மால் படை விரைந்தே சினம் வீங்கி
அடுக்கு உற்றிடும் உருமுப் புகை அழல் கால் பல படைகள்
மடுக்கு உற்றிடும் புணரித் தொகை வகுத்து எவ்வகை உலகும்
நடுக்கு உற்றிட அவுணர்க்கு எதிர் நடந்திட்டன மாதோ. |
206 |
|
|
|
|
|
|
|
5553.
|
ஆண்டே
வரும் அயன் மால் படை அவுணன் தட மார்பம்
கீண்டு ஏகுதும் என்றே அவன் கிளர் தார் அகலத்தின்
மூண்டே சினமொடு தாக்கிய முழு மா மணி வயிரச்
சேண் தோய் கிரி துளைப்பான் முயல் சிறை வண்டினம் எனவே.
|
207 |
|
|
|
|
|
|
|
5554.
|
மாயோன் படை உலகம் தரு மறையோன் படை அவுணத்
தீயோன் உரம் தனில் பாய்ந்து திருத் தொல் வலி சிந்தி மீ ஓங்கிய அசுரேசரும் விண்ணோர்களும் நோக்கி ஏயோ என வசை எய்தி இரிந்திட்டன அன்றே. |
208 |
|
|
|
|
|
|
|
5555.
|
மீள் உற்றவை இரியும் செயல் விழி தீ உற நோக்கி
நீள் உற்றிடு திறல் மொய்ம்பினன் நிமலன் வர முன்னிக்
கோள் உற்றிடு பெரு விம்மிதம் கொண்டு உற்றிட அண்டம்
ஆள் உற்றிடு அவுணர்க்கு இறை நகை செய்து இவை அறைவான்.
|
209 |
|
|
|
|
|
|
|
5556.
|
முத்தேவரின் முதல் ஆகிய மூவா முதல் வரத்தால்
எத்தேவர்கள் படை உய்க்கினும் எனை வெல்கில எந்தப்
புத்தேள் படைவிடினும் எதிர் பொரவே ஒரு படையும்
உய்த்தே தடை வினை செய்கிலன் அவற்றின் வலி உணர்வேன்.
|
210 |
|
|
|
|
|
|
|
5557.
|
ஊன் ஈத்திடு தவ விண்ணவர் உலகம் புகழ் அயன் மால்
தான் ஈத்து உள படை என்னிடை சார்கின்றது ஒர் தன்மை மா நீத்தம் எலாம் உண்டிடும் வடவைத் தழல் அதனைத் தேனீத் தொகை தசை யீது எனச் சேரும் திறன் அன்றே. |
211 |
|
|
|
|
|
|
|
5558.
|
தெரிந்து இட்டனை நீ ஓச்சிய திறல் வெம்படை என்பால்
புரிந்து இட்டது ஒர் வயம் ஒன்று இலை பொள் என்று உரம்
மேவி
முரிந்திட்டன மறிந்திட்டன முடிந்திட்டன பொடிந்தே
எரிந்திட்டன கரிந்திட்டன இடைந்திட்டன அல்லால். |
212 |
|
|
|
|
|
|
|
5559.
|
வில் வன்மை கொள் சரவன்மையும் விண்ணோர் படைக் கலத்தின்
பல்வன்மையும் பிற ஆகிய படை வன்மையும் இயல்பாம்
தொல் வன்மையும் கண்டே உனைத் தொலைவு இல் படை ஒன்றால்
கொல்வன் எனக் காலம் தெரி கூற்றாம் என நின்றேன். |
213 |
|
|
|
|
|
|
|
5560.
|
என்னா அசுரன் செப்பலும் இளையோன் இனி ஒன்றால்
ஒன்னார்களில் தலைவன் வலி உணர்வேன் என உன்னாத்
தொல் நாள் எயில் மூன்று அட்டு அருள் தூயோன் படைக்
கலத்தை
மன்னார் அருள் புரி சிந்தனை வழி பாட்டொடு விடுத்தான்.
|
214 |
|
|
|
|
|
|
|
5561.
|
விடும் காலையின் இறைவன் படை விடம் வெம் கனல் அசனி
கொடும் கால் இருள் கதிர் வெய்யவன் கூற்றம் பல கூளி
தொடும் கார் முகச் சரமாரிகள் சூலம் புடை சுற்ற
அடும் காலம் இது எனவே நெடிது ஆர்த்து உற்றதை அன்றே.
|
215 |
|
|
|
|
|
|
|
5562.
|
உறுகின்றது ஒர் படை நோக்கினன் உரம் உற்று எனக் குடைந்தே
இறுகின்றது ஒர் படை மற்று அல ஈசன் படை ஈது ஆல்
பெறுகின்ற அப்படையால் இது பிழை செய் குவல் என்னாச்
செறுகின்றது ஒர் அவுணர்க்கு இறை சிவன் தொல் படை எடுத்தான்.
|
216 |
|
|
|
|
|
|
|
5563.
| ஊறு ஏற்றிடு தன் சிந்தையின் உறு பூசனை நிரப்பி ஆறு ஏற்றிடு சடிலத்தவன் அடல் மாப் படை தொடுப்ப நீறு ஏற்றிடு மொய்ம்பன் விடு நிமலப் படை எதிர் போய் மாறு ஏற்று அமர் புரிந்திட்டது வையத்தவர் வெருவ. |
217 |
|
|
|
|
|
|
|
5564.
|
காண் தகு நுதல் விழிக் கடவுள் மாப்படை
ஆண்டு அவை இரண்டும் நின்று ஆடல் ஆற்றியே மாண்டிடும் உலகு என வானம் போற்றிட மீண்டன ஒல்லையில் விட்டு உளோர்கள் பால். |
218 |
|
|
|
|
|
|
|
5565.
| அன்னது நோக்கியே அசுரர் மேலையோன் இன்னவை கொல் உனக்கு இயன்ற வன்மைகள் உன் உயிர் இன் இனி ஒழிப்பன் காண்க எனாத் தன் நெடும் சிலை வளை இச் சரங்கள் சிந்தினான். |
219 |
|
|
|
|
|
|
|
5566.
| துன்பு உறு வடிக் கணை சூரன் சிந்தலும் தன் பெரும் சிலையினைத் தானும் வாங்கியே முன்பு உற நெடும் சரம் முகிலின் தூவினான் பொன் புனை அலங்கல் அம் புயத்து வள்ளலே. |
220 |
|
|
|
|
|
|
|
5567.
| அத் தகும் எல்லையில் அவுணர் மன்னவன் முத்தலை நெடும் கணை மூ ஐந்து ஏவியே வித்தக மொய்ம்பு உடை வீர வாகுவின் கைத்தல வில்லினைக் கண்டம் ஆக்கினான். |
221 |
|
|
|
|
|
|
|
5568.
| சிலை அது துணிதலும் சீறி வீரன் ஓர் இலை உடை வேலினை எடுத்து வீசலும் தொலைவு அறு வரம் பெறு சூரன் மார்பு எனும் மலை இடைக் குறுகியே மற்றது இற்றதே. |
222 |
|
|
|
|
|
|
|
5569.
| இற்று உழி அவுணர்கள் இறைவன் மால் அயன் மற்று உள கடவுளர் வலியும் கொள்வது ஓர் கற்றை அம் கதிர் மணிக் கதை ஒன்று ஓச்சினான் வெற்றி கொண்டு உலவிய வீர வாகு மேல். |
223 |
|
|
|
|
|
|
|
5570.
| திண்மை கொள் பல் தலைச் சேடன் பாங்கு உளார் எண்மரொடு ஒன்றியோர் இயற்கைத்து ஆகியே உண்மலி ஆர்ப்புடன் ஒழுகிச் சென்று என வண் மணி கறங்கிட மணித் தண்டு உற்றதே. |
224 |
|
|
|
|
|
|
|
5571.
| வெம் கதை வருதலும் வீர வாகு ஓர் செம் கதை எதிர் உறச் செலுத்தி நிற்றலும் அம் கதை நீறு செய்து அவன் தன் மார்பு இடைத் தும் கதை தன்னொடு துண் என்று எய்திற்றே. |
225 |
|
|
|
|
|
|
|
5572.
| மேக்கு உயர் பெரும் சின வீர வாகுவின் மாக்கிளர் அகலம் மேல் வயிர மாக்கதை தாக்கலும் விண்டது தாரைச் செம் புண் நீர் தேக்கிய நதிகளில் திரைத்துச் சென்றதே. |
226 |
|
|
|
|
|
|
|
5573.
| ஆழ்ந்திடு சோரியன் அவுணன் தண்டினால் போழ்ந்திடு மார்பினன் புகையும் நெஞ்சினன் தாழ்ந்திடும் விறலினன் தளரும் யாக்கையன் வீழ்ந்தனன் அமரர்கள் வெருவி ஓடவே. |
227 |
|
|
|
|
|
|
|
5574.
| ஆற்றல் இன்று ஆகியே அண்ணல் வீழ்தலும் மேல் திகழ் வலவன் ஆம் விசாலி என்பவன் தேற்று உறு பான்மையைச் சிந்தித்து ஓர் புடை காற்று எனத் தேர் கொடு கடிது போயினான். |
228 |
|
|
|
|
|
|
|
5575.
|
போந்திடு
காலையில் புலம்பி வீழ்ந்துளான்
மாய்ந்திடும் சரதம் ஆம் என்று மாறு இலான் ஆய்ந்தனன் சிலை குனித்து அப்பு மாரி தூய்க் காய்ந்தனன் சென்றனன் கணத்தின் தானைமேல். |
229 |
|
|
|
|
|
|
|
5576.
| பொன்றிடா வரத்தினான் பூத சேனை மேல் சென்றனன் கணை மழை சிதறிக் கோறலும் நின்று அவை இரிந்தன நெடிய தீம் கதிர் என்றினை அடைந்திடு பனியின் ஈட்டம் போல். |
230 |
|
|
|
|
|
|
|
5577.
| தாக்கு இகல் வீரரும் சயம் கொள் மொய்ம்பனும் நீக்கம் இல் ஈர் ஆயிர நீத்தத் தானையும் ஊக்கிய வலி அழிந்து உடைந்த தன்மையை நோக்கினன் பன்னிரு நோக்கம் கொண்டு உளான். |
231 |
|
|
|
|
|
|
|
5578.
| ஆண்டு அது வேலையில் ஆறு மாமுகன் பாண்டில் அம் தேர்மிசை பாகை நோக்கு உறா ஏண் தகு சூரன் மேல் இரதம் ஒய் எனத் தூண்டுதி என்றனன் சுரர்கள் போற்றவே. |
232 |
|
|
|
|
|
|
|
5579.
|
இணை அறு முருகன் இவ்வாறு இசைத்தலும் இனையது ஓரா
உணர் உறு பவனன் என்னும் ஒரு தனிப் பாகன் நாகர்
கண மணி செறிந்த பொற்பில் காமரு கடவுள் தேரைத்
துணை அறுசூரன் முன்னர்த் துண் எனத் தூண்டி
உய்த்தான். |
233 |
|
|
|
|
|
|
|
5580.
|
ஆயது காலை தன்னில் அவுணர் கோன் அநந்த கோடி
ஞாயிறு திரண்டு ஒன்றாகி ஞாலமேல் இருளை ஓட்டிச்
சேய் உயர் விசும்பை நீங்கிச் செரு நிலத்து உற்றது என்னத்
தூயது ஓர் குமரன் போரில் தோன்றிய தோற்றம் கண்டான்.
|
234 |
|
|
|
|
|
|
|
5581.
|
முண்டகம் மலர்ந்தது அன்ன மூவிரு முகமும் கண்ணும்
குண்டல நிரையும் செம்பொன் மவுலியும் கோல மார்பும்
எண்டரு கரம் ஈர் ஆறும் இலங்கு எழில் படைகள் யாவும்
தண்டையும் சிலம்பும் ஆர்க்கும் சரணமும் தெரியக் கண்டான்.
|
235 |
|
|
|
|
|
|
|
5582.
|
சூர் எனும் அவுணர் கோமான் தொல்லை நாள் நோற்ற வாறும்
பார் இடை முடிவு இன்று ஆகிப் பல் உகம் இருந்த வாறும்
ஆரணம் அறிதல் தேற்றா ஆறுமா முகத்து எம் ஐயன்
பேர் எழில் உருவம் நோக்கிப் பெரும் பயன் கோடற்கு ஏயே.
|
236 |
|
|
|
|
|
|
|
5583.
|
எஞ்சல் இல் அவுணர் செம்மல் இங்ஙனம் அமர் அது ஆற்றித்
துஞ்சில் என் தொலை உற்றால் என் தூய வால் அறிவின் மிக்கோர்
நெஞ்சினும் அளத்தற்கு ஒண்ணா நிரு மலக் குமர மூர்த்தி
செம்சுடர் வடிவம் கண்டு தீவினை நீங்கி உய்ந்தான். |
237 |
|
|
|
|
|
|
|
5584.
|
பூவுலகு அண்டம் எல்லாம் புரந்திடும் சூரன் தன்னைத்
தீவினை யாளன் என்றே செப்புவர் சிறப்பின் மிக்க
மூ இரு முகத்து வள்ளல் முன்னர் வந்து எய்தப் பெற்றான்
ஆவி இவன் தவத்திற்கு அன்றி அறத்திற்கும் முதல்வன் அன்றோ.
|
238 |
|
|
|
|
|
|
|
5585.
|
இன்னமும் முனிவர் தேவர் யாவரும் இனையன் என்றே
உன்னரும் தலைமைத்து ஆகும் ஒரு தனிக் குமரன் தன்னைக்
தன் இரு விழியால் கண்டான் தானவற்கு இறைவன் என்றால்
அன்னவன் தவத்தின் பேற்றை ஆர் அறிந்து உரைக்கல் பாலார்.
|
239 |
|
|
|
|
|
|
|
5586.
|
பொரு
சமர் விளைப்பான் போலப் பொருக்கு எனப் போந்து
சூரன்
இரு விழி தன்னில் காண்பான் எளிது தன் வடிவம் காட்டி
அருள் அது புரிந்தான் என்னின் ஆதி அம் குமரன் மாயத்
திரு விளையாடல் யார்க்கும் தெரிகில போலும் அன்றே. |
240 |
|
|
|
|
|
|
|
5587.
|
சிந்தையால் அறிதற்கு ஒண்ணாத் திரு உரு விழியால் கண்டு
முந்து தான் நின்ற சூரன் முழுது உலகு அடுவான் நின்றோன்
மைந்தன் ஆம் இவன் என்று உன்னி மனத்தினில் வெகுளி தூண்டக்
கந்த வேள் தன்னை நோக்கி இனையன கழறல் உற்றான். |
241 |
|
|
|
|
|
|
|
5588.
|
சேனையாய் நினைச் சூழ்ந்தவர் செரு வலி அழிந்து
போன போனது ஓர் மாதிரம் தெரிந்தில பூத மான வீரரும் அழிந்தனர் சிலைத் தொழில் வல்ல ஏனையோர்களும் என்னொடு பொருதனர் இறந்தார். |
242 |
|
|
|
|
|
|
|
5589.
|
இற்ற நின் பெரும் படைக்கு எலாம் தலைவனாய் என்பால்
ஒற்று வந்து உள வீரனும் பொருதுயிர் ஒழிந்தான் மற்று நீ ஒரு பாலனோ என்னொடு மலைந்து கொற்றம் எய்துதி நன்று நன்று உன் உளக் குறிப்பு. |
243 |
|
|
|
|
|
|
|
5590.
|
மேலது ஆகிய நின்னுடைத் தாதையும் விண்ணும்
ஞாலமும் புரிந்து உதவிய நான் முகத்து இறையும் மாலும் வெம் சமர் புரி திறம் கருதிலர் மற்று ஓர் பாலன் வல்லை கொல் என்னொடு போர்த்தொழில் பயில. |
244 |
|
|
|
|
|
|
|
5591.
|
முந்தை நாள் வலி இல்லது ஓர் அடுக்கலும் முன்யான்
தந்த செல்வத்தின் மயங்கிய தாரகா சுரனும் புந்தி நீங்கிய அவன் படைத் தலைவரும் போல மைந்த என்னையும் நினைந்தனை போலும் நின் மனத்தில். |
245 |
|
|
|
|
|
|
|
5592.
| தேக்கு சீரினேன் வரத்தியல் உன்னலை சிதையா ஆக்கம் உன்னலை பெரு மிடல் உன்னலை அடலின் வீக்கம் உன்னலை படைத்திறம் உன்னலை வெம்போர் ஊக்கம் உன்னலை சிறுவ நீ பெரும் சமர்க்கு உற்றாய். |
246 |
|
|
|
|
|
|
|
5593.
| கமலம் மேல் உறை பகவனும் மாயனும் ககனத்து அமரர் செம்மலும் மாதிரச் கிழவரும் அழுங்கச் சிமைய மங்கையும் இரங்கு உற என் ஒரு சிலையால் இமை ஒடுங்கு முன் நின் வலி அழிக்குவன் என்றான். |
247 |
|
|
|
|
|
|
|
5594.
|
சூரன் என்று உரைபெற்று உள்ள தொல்லையோன் இனைய தன்மை
வீரமும் திறலும் சீரும் வெகுளியும் கொண்டு செப்ப
ஆர் அருள் உருவாய் நின்ற ஆதி அம் குமரன் கேளா
மூரலும் சிறிது தோன்ற இத்திறம் மொழியல் உற்றான். |
248 |
|
|
|
|
|
|
|
5595.
|
வெற்றியும் உடையம் ஆற்றல் மிகுதியும் உடையம் மேன்மை
பற்றியும் உடையம் எண் இல் படைகளும் உடையம் வீயாப்
பெற்றியும் உடையம் தானைப் பெரும் கடல் உடையம் என்று
மற்று இனி அகந்தை கொள்ளேல் மாற்றதும் வல்லை மன்னோ.
|
249 |
|
|
|
|
|
|
|
5596.
|
வரம் மிகு சிறப்பி னேமை மழ இளங்குமரன் கொல்லோ
பொருது வென்றிடுவான் வல்லன் என்று நின் புந்தி கொண்டாய்
பெரிது நீ மடவை மாதோ பிரான் தனி நெற்றி நாட்டத்து
ஒரு சிறு பொறியே அன்றோ உலகு எலாம் அடுவது அம்மா.
|
250 |
|
|
|
|
|
|
|
5597.
|
அறிவுடை
முதியர் என்றும் ஆண்டு இளையோர்கள் என்றும்
சிறியவர் பெரியர் என்றும் திருத்தகு வளத்தர் என்றும்
வறியவர் என்றும் வீரர் மதிக்கிலர் யாவ ரேனும்
விறல் வலி படைத்து நேரின் வெஞ்சமர் விளைப்பர் அன்றே.
|
251 |
|
|
|
|
|
|
|
5598.
|
நூற்றுடன் எட்டது என்ன நுவல் உறும் உகத்தின் காறும்
பேற்றுடன் இனிது வைகும் பெரிய நின் வலியை இன்னே
தோற்றம் அது உறாத கொள்கைச் சிறிய நம் வன்மை தன்னால்
ஊற்று உடைப் பாலில் புக்க உறை என அடுதும் என்றான்.
|
252 |
|
|
|
|
|
|
|
5599.
|
என்னும் முன் வெகுண்டு அவுணர் கோன் இரு நிலம் தன்னை
முன் அளந்தவன் போல் அண்ட முகடு தோய் உற்ற
கொன் நெடும் சிலை ஒன்றினைக் கரத்தொடு குனிப்ப
அன்ன பான்மையைக் கண்டனன் ஆதி அம் குமரன். |
253 |
|
|
|
|
|
|
|
5600.
| மால் அயன் சுரர் பல்லியம் இயம்பி வாழ்த்து எடுப்ப ஆலம் ஆர் வனத்து எம்பிரான் ஆடிய அந்நாள் மேலை மூதண்ட முகடு உற எடுத்தது ஓர் வியன் தாள் கோலம் என்ன ஓர் நெடும் சிலை எடுத்தனன் குமரன். |
254 |
|
|
|
|
|
|
|
5601.
| அடல் பெரும் திறல் சண்டிதன் பெருமிதம் அடக்கிப் படித் தலம் தனை அருளுவான் ஆடல் செய் பரமன் எடுத்த சேவடி பகிரண்டம் அட்டிடா இயல்பால் தடுத்த செங்கை போல் குனித்தனன் அறுமுகன் தனுவை. |
255 |
|
|
|
|
|
|
|
5602.
|
குனித்த வில் இடைக் குமரவேள் நாண் ஒலி கொண்டான்
அனைத்தும் அண்டங்கள் உடைந்த பேர் ஓதை போல் அவுணன்
சினத்து மாறு தன் குணத்திசை எடுத்தனன் செகத்தில்
பனித் தடம் கடல் யாவும் ஆர்த்துத் துடைந்திடும் பரிசின். |
256 |
|
|
|
|
|
|
|
5603.
|
அள் இலைப் படை அவுணர் கோன் அடுசர மழை தூய்
வள்ளல் தன்னையும் தேரையும் உலகையும் மறைப்பத்
தெள்ளிதின் இங்கு இவன் விஞ்சை என்று எந்தை சிந்தித்துக்
கொள்ளை வெம் கணை துரந்தவை யாவையும் குறைத்தான்.
|
257 |
|
|
|
|
|
|
|
5604.
|
குறைத்த காலையில் சினவியே பின்னரும் கொடு நஞ்சு
உறைத்த பொன்கணை பல தொட வாளிகள் ஓச்சி
அறுத்து மற்று அவை குமர வேள் அவுணர் கோன் தன்னை
மறைத்து விண் நெறி மாற்றினன் பகழி மா மழையால். |
258 |
|
|
|
|
|
|
|
5605.
| ஆன பான்மை சேர் பகழியின் படலிகை அவுணன் சோனை வாளியால் துணித்து இடை வீட்டியே சுரர் தம் சேனை காவலர் கண்டனன் வினைத் தளை சிந்தி ஞான நாயகத் தாணுவைக் காணும் நற் றவர் போல். |
259 |
ஆன பான்மை சேர் பகழியின் படலிகை அவுணன்
சோனை வாளியால் துணித்து இடை வீட்டியே சுரர் தம்
சேனை காவலர் கண்டனன் வினைத் தளை சிந்தி
ஞான நாயகத் தாணுவைக் காணும் நற் றவர் போல்.
259 |
|
|
|
|
|
|
5606.
| கண்டு தீயவன் பத்து நூறு ஆயிரம் கணைகள் அண்ட நாயகன் குமரன் மேல் விடுத்தலும் அவற்றை எண்டரும் சர மாரியால் விலக்கி ஈர் ஏழு புண்டரும் கணை உய்த்தனன் ஆங்கு அவன் புயமேல். |
260 |
|
|
|
|
|
|
|
5607.
|
கயப் பொருப்பினை உரித்த மால் வரை தரு காளை
வயப் பொருப்பினை அடுகணை சூரனாம் வலியோன்
புயப் பொருப்பினை எய்தியே துளைத்தில புரைதீர்
அயப் பொருப்பை உற்று அடல் பெறா அழல் அவன் கதிர்
போல். |
261 |
|
|
|
|
|
|
|
5608.
|
மாயை
தன் மகன் வச்சிர யாக்கையின் வலியை
நாயகன் திரு மதலை கண்டு அழல் எழ நகைத்துத் தீய அன்பினும் விடுவது ஓர் சரம் எலாம் சிந்தி ஆயிரம் கணையால் அவன் சிலையினை அறுத்தான். |
262 |
|
|
|
|
|
|
|
5609.
|
சிலையினைத் துணித்திடுதலும் அவுணர் கோன் செயிர்த்து
மலையினைத் தடிந்தவன் மிசை மலர் அயன் தந்த
இலை அயில் படை ஒன்றினை எறிதலும் ஈர் ஏழ்
கொலை உடைக் கணை தூண்டியே அன்னதைக் குறைத்தான்.
|
263 |
|
|
|
|
|
|
|
5610.
| ஏறு சேவகத்து அவுணர் கோன் அயில் படை இறலும் வேறு ஒர் கார் முகம் வாங்கினன் சரமழை வீசி மாறு மாறவன் தொடும் தொடும் கணை எலாம் மாற்றி ஆறு மாமுகன் புயத்தில் ஏழ் வாளி தொட்டு ஆர்த்தான். |
264 |
|
|
|
|
|
|
|
5611.
| செம்கதிர்ப் பகை தன்னை முன் உதவினான் செலுத்தும் வெம் கணைத் தொகை பரம் சுடர் உருவம் ஆம் விமலன் துங்க மிக்க தோள் புக்கு நுண் தூளியது ஆகிப் பொங்கு கனல் திரள் பட்டது ஓர் பூளை போன்ற வால். |
265 |
|
|
|
|
|
|
|
5612.
| மொய் இரும் கணை பட்டு நீறு ஆதலும் முருகன் வெய்ய சூர் வலி நன்று நன்று ஆல் என வெகுளா ஐ இரண்டு வான் பகழியால் அவன் சிலை அறுத்துச் செய்ய தேரையும் ஆயிரம் கணையினால் சிதைத்தான். |
266 |
|
|
|
|
|
|
|
5613.
| ஆழி பூண்டிடும் இரதமும் அங்கையில் சிலையும் பூழி ஆதலும் அரசனுக்கு ஏமம் ஆய்ப் போந்த ஏழ் இரண்டு நூறு ஆயிரம் தேரையும் இமைப்பின் ஊழி நாயகன் தன் சர மழையினால் ஒழித்தான். |
267 |
|
|
|
|
|
|
|
5614.
| சேமம் ஆகியே நின்றிடும் தேர் எலாம் செவ்வேள் காமர் வாளியால் சிதைத்தலும் அன்னது கண்டான் தூம வெம் கனல் தூண்டிய விழி உடைச் சூரன் ஏமம் ஆகியே கொண்டிடு சூலம் ஒன்று எறிந்தான். |
268 |
|
|
|
|
|
|
|
5615.
|
நண்ணலன் விடு முத்தலைப் படையை நாற் கணையால்
பண்ணவன் திருமா மகன் இருதுணி படுத்துத்
துண் எனக் கணை ஏழினால் அவன் குடை துணியா
அண்ணல் அம் சுடர் முடியை ஓர் கணையினால் அறுத்தான்.
|
269 |
|
|
|
|
|
|
|
5616.
| மணி படுத்திய மவுலியை அறுத்த பின் வலியோன் பணி படுத்திய மெய் எங்கணும் பகழிகள் போக்கி அணி படுத்தியே புனை தரு மதாணிகள் அனைத்தும் துணி படுத்தினன் மறைகளும் துணிந்திடற்கு அரியோன். |
270 |
|
|
|
|
|
|
|
5617.
| ஆன காலையில் சூரபன்மா எனும் அரசன் மான வன்மையில் குறைந்தது நோக்கி மாடு உள்ள சேனை காவலர் நால் படை தன்னொடும் சேர்ந்து சோனையாப் படை வழங்கியே குமரனைச் சூழ்ந்தார். |
271 |
|
|
|
|
|
|
|
5618.
| ஏழு நேமியும் எறிந்து மேருவை வளைந்து என்னக் கேழில் பல் படை வீசியே ஆர்த்து உடன் கிளர்ந்து சூழும் வெய்யவர் தானையைக் கண்டனன் தொல்நாள் பூழி ஆகவே அவுணர் ஊர் அட்டவன் புதல்வன். |
272 |
|
|
|
|
|
|
|
5619.
|
குருதி
வேல் படை கொண்டவன் தன் புடைக் குழுமிப்
பொரு திறல் பெரும் தானையைப் பொள் என அடுவான் கருதி ஆங்கு ஒரு கரத்தினில் இருந்திடு கடவுள் பரிதி அம் படை தொட்டனன் இரவியில் படர. |
273 |
|
|
|
|
|
|
|
5620.
| இலகும் வெய்யவன் நடுவு நாள் யாமத்தின் ஏகி அலகு இல் பேர் இருள் அட்டு என ஆழிபோய் அவுணர் தலையும் ஆகமும் கைகளும் அடிகளும் தடம் தோள் மலையும் வீசிய படைகளும் துணித்தது மன்னோ. |
274 |
|
|
|
|
|
|
|
5621.
| மேனி லாவிய தேர்களைத் துணித்திடும் வெம்கண் மான யானைகள் யாவையும் துணித்திடும் வயமாத் தானை யாவையும் துணித்திடும் சமரினைத் தாங்கும் சேனை காவலர் யாரையும் துணித்திடும் திகிரி. |
275 |
|
|
|
|
|
|
|
5622.
| அரம் துணித்த வாள் அவுணர்கள் அடுசமர் உன்னின் உரம் துணித்திடும் இகழின் நாத் துணித்திடும் உரப்பில் சிரம் துணித்திடும் படை தொடு முயற்சிகள் செய்யில் கரம் துணித்திடும் எதிர்ந்திடில் துணித்திடும் கழல்கள். |
276 |
|
|
|
|
|
|
|
5623.
|
குடை துணித்திடும் கவரிகள் துணித்திடும் கொடியின்
தொடை துணித்திடும் தேர் நிரை பூண்ட மான் தொகையின்
இடை துணித்திடும் அவுணர்தம் கரங்களின் இருந்த
படை துணித்திடும் துணித்திடும் பல்லியத் தொகையும். |
277 |
|
|
|
|
|
|
|
5624.
| கொற்ற மிக்கது ஓர் கோல் கொடு வலி உடைக் குலாலன் சுற்றி விட்டிடு திகிரியின் விரைவொடு சுழன்று பற்று அலார் பெரும் தானையைப் பஃறுணி படுத்தி ஒற்றை நேமி அம் பெரும் படை திரிந்தது ஆல் உலவி. |
278 |
|
|
|
|
|
|
|
5625.
| போர் அழிந்திடும் அவுணர் தம் உடல் குறை புகையாச் சோரி வன்னியாம் அதனிடைத் துணிந்து வீழ் பரியும் தேரும் யானையும் அவிகளா எம்பிரான் திகிரி வீர மாமகம் ஒன்று இயற்றுவது என விளங்கும். |
279 |
|
|
|
|
|
|
|
5626.
| வெம் சமர்த் தொழில் புரிதரும் அவுணரை வீட்டி வஞ்சகத் தொடு மாயம் ஆம் பேர் இருள் மாற்றி எஞ்சல் உற்றிடும் குருதி அம் பெரு நிறம் எய்திச் செம் சுடர்க் கதிர் ஆயதால் அறுமுகன் திகரி. |
280 |
|
|
|
|
|
|
|
5627.
| நச்சு தன் இடத்து அமலையை இருத்திய நம்பன் இச்சு தன் தனி ஆழி சென்று ஆடு உறும் இயல்பை அச்சுதன் கரத்து ஏந்திய நேமிகண்டு அதனை மெச்சு தன்மையில் புகழ்ந்தது விம்மிதம் மேவி. |
281 |
|
|
|
|
|
|
|
5628.
| தீர்த்தன் உய்த்திடு நேமி அம் பெரும் படை செருவில் ஆர்த்த தானை நூறு ஆயிரம் வெள்ளமும் அடைய மூர்த்தம் ஒன்றினில் துணித்தது மூ இரு முகத்தோன் வார்த்தை யால் அவை முழுவதும் மாற்றியவா போல். |
282 |
|
|
|
|
|
|
|
5629.
| ஆடல் உற்ற வேல் பண்ணவன் அலர் கதிர்ப் பரிதி பாடு சுற்றிய அவுணர் கோன் தானையைப் படுத்து மோடு பெற்ற தொல் புகழொடு மீண்டது முளிபுல் காடு முற்றவும் தனி படர்ந்து உண்டது ஓர் கனல் போல். |
283 |
|
|
|
|
|
|
|
5630.
|
கைம்
மலிந்திடும் குடை பல காம்பு இடை துணிந்து
மெய்ம் மலிந்திடு விழு நிணச் சேற்று இடை வீழ்ந்து பொம்மல் கொண்டு நிற்பு உறுவன பூவலர் தடத்தில் செம்மல் கொண்டு அமர் தாமரைக் காடு போல் திகழும். |
284 |
|
|
|
|
|
|
|
5631.
|
அழுங்கல் கொண்டது ஓர் கரி பரி அவுணர் பேர் அனிகம்
வழங்கல் இன்றி வீழ்ந்து அவிந்திடும் களேவரம் மலிதல்
தழங்கு தெண் திரை உலகு உள சயிலங்கள் அனைத்தும்
ஒழுங்கு அது ஆகி வந்து ஆயிடைத் தொக்கவாறு ஒப்ப. |
285 |
|
|
|
|
|
|
|
5632.
| அகல் விசும்பு கார் ஓங்கிய களேவரம் அதன் பால் ஞெகிழி கொண்ட வாய்ப் பேயின நிணன் உண்டு சிரித்து மிகவும் ஆர்ப்பு எடுத்து ஈண்டுவ மின்னியே இடித்து முகில் இரும் கணம் முதுவரைச் சாரல் மொய்த்தது போல். |
286 |
|
|
|
|
|
|
|
5633.
|
மையல் யானையும் அவுணர்தம் யாக்கையும் மற்றும்
ஒய் எனக் கொடு குருதி அம் பேரி ஆறு ஒழுகல்
செய்யது ஓர் பணி கரும் கடல் மறைத்தல் சிந்தித்து
வெய்ய நஞ்சு உமிழ்ந்து இருநிலம் படர்தல் போல் விளங்கும்.
|
287 |
|
|
|
|
|
|
|
5634.
| மாண் இலைப்படு பேய் சில களேவர வரை போய்ச் சோண் இதப் புனல் ஆறு பாய்ந்திட அதன் துவலை சேண் நிலத்து உளார் அரிவையர் புனைகலை தெறிப்ப நாணல் உற்றனர் பூப்பு என நகைப்பர் என்று உன்னி. |
288 |
|
|
|
|
|
|
|
5635.
| சொல் அரும் திறல் அவுணரில் சிலர் தலை துணிந்து வல்லையில் கிளர்ந்து ஆர்த்தலும் வலியினால் தம்மை அல்லல் செய்திடு கோள் இரண்டு அல்லதை அவைபோல் எல்லை இல் அவை வந்த என்று இரியும் ஆல் இரவி. |
289 |
|
|
|
|
|
|
|
5636.
| நீடி விண் படர் கொடி சில நிமிர் கவந்தத்தின் காடு தன் இடைப் புகுந்து தம் தலைமிசைக் காட்டி ஆடல் யானையின் களேவரம் குத்துவ அடுபோர் ஊடு காக்கையின் முகரும் வந்தார் கொல் என்று உரைப்ப. |
290 |
|
|
|
|
|
|
|
5637.
| நீடல் உற்ற சீர் அவுணர் கோன் ஆணையால் நிலமேல் வீடல் உற்றிடும் வயவர்க்குத் தம் உயிர் மீட்டும் கூடல் உற்றிடும் திறன் எனக் கூளிகை கொட்ட ஆடல் உற்றிடும் உடல் குறை அநந்த கோடிகளால். |
291 |
|
|
|
|
|
|
|
5638.
|
இனைய எல்லை இல் எம்பிரான் எரிகதிர்ப் பரிதி
முனையில் வந்து அடல் செய்ததை உணர்ந்திலன் முன் சூழ்
கனை இரும் கடல் படை எலாம் பட்டவா கண்டு
மனம் மருண்டு ஒரு தமியனாய் நின்றனன் வலியோன். |
292 |
|
|
|
|
|
|
|
5639.
| நீண்ட தன் ஒரு வேல் படை உய்த்து நீக்கினனோ பாண்டரங்கம் அது இயற்று வான் படையின் வீட்டினனோ மாண்டு போக என்று ஒரு மொழி தன்னின் மாற்றினனோ ஈண்டு தானையை முடித்தது எவ்வாறு இவன் என்றான். |
293 |
|
|
|
|
|
|
|
5640.
|
தேர் இழந்தனன் சிலையதும் இழந்தனன் திறல்சேர்
பேர் இழந்தனன் தானைகள் இழந்தனன் பெரும் பூண் ஏர் இழந்தனன் மவுலியும் கவிகையும் இழந்தான் பார் இழந்திடு மன்னர் போல் நின்றனன் படிமேல். |
294 |
|
|
|
|
|
|
|
5641.
|
நின்றிடும்
திறல் அவுணர் கோன்நெடும் சினம் நெஞ்சில்
துன்ற மார்பகம் வியர்த்திட முடித்தலை துளக்கி
நன்று நன்று ஒரு பாலகன் வலி என நகையா
வென்றி நான் முகன் படைக்கலம் எடுத்து மேல் விடுத்தான்.
|
295 |
|
|
|
|
|
|
|
5642.
|
சூர்ப் புயல் அன்னது ஒர் சூரன் விடுக்கும்
மால் படு போதன் வயப் படை சென்று பால் படும் எல்லை பரம் சுடர் செம்கை வேல் படை சென்று விழுங்கியது அன்றே. |
296 |
|
|
|
|
|
|
|
5643.
| விழுங்குதல் கண்டனன் வெய்யவன் நெஞ்சம் அழுங்குதல் செய்தனன் அச்சுத மூர்த்தி வழங்கிய தொல்லை வயப்படை ஏந்தி முழங்கு அழல் என்ன முனிந்து உடன் விட்டான். |
297 |
|
|
|
|
|
|
|
5644.
| விட்டிடு மாயவன் வெம்படை ஏகி மட்டறு கண்ணர் தம் மால் உரு ஈன்று கிட்டிய காலை கிளர்ந்திடும் ஒள்வேள் அட்டது தன்னையும் ஆர்ந்தது மன்னோ. |
298 |
|
|