முகப்பு |
மூவாயிரர் வதைப் படலம்
|
|
|
6436.
|
ஆயது ஓர் காலை மூவாயிரத் தொகை
மேயின மைந்தர்கள் வினவி ஈது எலாம் மா இரு விசும்பினை அளாவு மன்னவன் கோயிலை அடைந்தனர் குழுவொடு ஏகினார். |
1 |
|
|
|
|
|
|
|
6437.
| துன் உறு பழி எனும் சூறை எற்றிட இன்னல் அம் தெண் திரை எறிய வைகிய மன் இயல் நோக்கியே வணக்கம் செய்து எழீஇ முன்னர் நின்று இனையன மொழிதல் மேயினார். |
2 |
|
|
|
|
|
|
|
6438.
| உரம் மிகும் இலக்கரும் ஒழிந்த எண்மரும் பெரு விறல் மொய்ம்பனும் பிறரும் உற்றுழி எரி முகன் ஒருவனை ஏவினாய் அவன் செருவினை அவரொடு செய்ய வல்லனோ. |
3 |
|
|
|
|
|
|
|
6439.
| வலியவர் தம்மையும் வரம்பின் மிக்கு உறின் மெலியவர் ஆயினும் வென்று போவர் ஆல் உலகினில் வழக்கம் ஈது உணர்ந்திலாய் கொலோ கலை பயில் கற்பு உடைக் காவல் மன்னனே. |
4 |
|
|
|
|
|
|
|
6440.
| ஒட்டலர் குழுவினுள் ஒரு மகன் தனை விட்டனை மேல் வரும் வினையம் ஓர்ந்திலை அட்டு உறு தாரினாய் அமரில் அங்கு அவன் பட்டனன் என்றிடில் பரிதல் பாலையோ. |
5 |
|
|
|
|
|
|
|
6441.
| தீ முகன் ஒருவனுக்கு இரங்கித் தேம்பலை யாம் உளம் இரணியன் இன்னும் உற்று உளன் தாமரை மகிழ்நனைத் தளை படுத்திய கோமகன் உளன் ஒரு குறை உண்டாகுமோ. |
6 |
|
|
|
|
|
|
|
6442.
| நண்ணலர் ஆயினோர் நலிந்து செற்றிடக் கண் அகல் தேர் பரி களிறு தானவர் எண் இல மாய்ந்த வென்று இறையும் ஆகுலம் பண்ணலை ஐய அப் பரிசு கேட்டி நீ. |
7 |
|
|
|
|
|
|
|
6443.
| ஏழ் எனும் கடல் வறந் திடினும் நின் அடி சூழ் தரு படைக்கு ஒரு தொலைவும் இல்லையால் ஊழியும் அழிகுறா ஒருவ நீ இவண் பீழையின் உறுவதும் பெருமைப் பாலதோ. |
8 |
|
|
|
|
|
|
|
6444.
| நின்று வான் அளவு எலாம் நிவந்த மேருவாம் குன்றினோர் தினைத் துணை குறைந்தது அன்னது ஆல் துன்று நம் தானை உள் துன்னலார் பொர இன்று காறாகவே இறந்த சேனையே. |
9 |
|
|
|
|
|
|
|
6445.
| சிறந்திடும் தலைமையும் திறலும் ஆக்கமும் மறந்தனை ஆகியே வலியன் ஆகு நீ இறந்தவர் தமை நினைந்து இரங்கல் பாலையோ புறம் தருகின்றது ஓர் அமரர் போலவே. |
10 |
|
|
|
|
|
|
|
6446.
| அண்டர் தம் முதல்வனை அயனை மாயனைச் சண்டனைப் பவனனைத் தழலை யாரையும் விண் தொடர் செலவினில் விரைந்து பற்றியே கொண்டு அணை கின்றனம் குறிப்பது ஆகும் மேல். |
11 |
|
|
|
|
|
|
|
6447.
| விண்ணினை அலைக்கவும் மேரு வெற்பு ஒடு மண்ணினை மறிக்கவும் வடவை மாற்றவும் எண்ணினை என்னினும் யாங்கள் எந்தை நின் உண்ணினைவின் படி முடித்தும் ஒல்லையில். |
12 |
|
|
|
|
|
|
|
6448.
| பன்னுவது என் பல பணித்தி யாங்கள் போய் முன் உறு பூதரை முரண் கொள் வீரரைப் பின் உறு கந்தனைப் பிறரை ஈண்டு ஒரு கன்னலின் வென்று நின் கழல்கள் காண்டும் ஆல். |
13 |
|
|
|
|
|
|
|
6449.
| என்று இவை புகறலும் இடுக்கண் நீங்கியே நன்று இது மைந்தர் காள் நடமின் போர்க்கு என வன் திறல் முதல்வனை வணங்கிக் கை தொழா நின்றவர் ஏவரும் நீங்கினார் அரோ. |
14 |
|
|
|
|
|
|
|
6450.
|
வன்னச் சிலை கொண்டனர் வான் கவசம்
துன் உற்றிடு வித்தனர் தூணியினை வென்னில் செறிவித்தனர் வெவ் விரலிற் பொன் உற்றிடும் புட்டில் புனைந்தனர் ஆல். |
15 |
|
|
|
|
|
|
|
6451.
| சீர் புக்கு உறு கைப் படை செங்கைக் கொளாத் தார்புக்கு அமர் தும்பை தனைத் தரியா மார்புக்கு அலமாக் கலன் வர்க்கம் இடாத் தேர் புக்கனர் வந்தன சேனைகளே. |
16 |
|
|
|
|
|
|
|
6452.
| சங்கங்கள் முழங்கின தண்ணுமை கோடு எங்கும் எங்கும் இயம்பின வெண் படகம் துங்கம் கெழு பேர் இது வைத்தனவால் அங்கு அங்கு உரும் உற்றனவாம் எனவே. |
17 |
|
|
|
|
|
|
|
6453.
| அவுணப் படை எண் இல ஆற்றல் மிகும் கவளக் கரி எண்ணில் காமரு சீர் இவுளித் தொகை எண்ணில ஈட்டம் உறா உவண் உற்றிடும் தேரும் உலப்பு இலவே. |
18 |
|
|
|
|
|
|
|
6454.
| முழங்கு உற்றன பல்லியமும் மத மாத் தழங்கு உற்றன தேர் ஒலி தந்தனவால் அழுங்கு உற்றனவாம் பரி ஆங்கு அவைகள் விழுங்கு உற்றன பாரொடு விண்ணினையே. |
19 |
|
|
|
|
|
|
|
6455.
|
நீடு
உற்றிடும் தேர்களின் நீள் துவசம்
ஆடு உற்றன தாரில் அளித் தொகுதி பாடு உற்றன வெங்கொடி பாறு மிசை கூடு உற்றன கூளி குனித்தனவே. |
20 |
|
|
|
|
|
|
|
6456.
| தொகை யானை கடம் ஒடு சூழ் கரியின் தகை ஆயின தானவர் தம் உருவம் சிகையார் அழல் ஆயின சென்னி எழும் புகை ஆனது பொன் எழும் பூழியதே. |
21 |
|
|
|
|
|
|
|
6457.
| இப்பான்மை அது ஆகி எழுந்து படை அப்பால் விரவு உற்றுழி அன்னது கண்டு ஒப்பாரும் இல் சூரன் உகந்து அருள் கூர் மெய்ப் பாலகர் சென்றனர் வெய்து எனவே. |
22 |
|
|
|
|
|
|
|
6458.
| மூ ஆயிரர் தானைகள் முந்து செல ஏவாம் என வெம்மை கொடு ஏகுதலும் தே வானவர் கண்டனர் சிந்தை வெரீஇ யாவா என அஞ்சி அழுங்கினரே. |
23 |
|
|
|
|
|
|
|
6459.
| அக் காலையின் மூ வகை ஆயிரரும் மெய்க் கார் புவி சென்று விரைந்தன போல் தொக்க ஆடல் புரிந்திடு தொல் நில மேல் புக்கார் அது கண்டனர் பூதர்களே. |
24 |
|
|
|
|
|
|
|
6460.
| எதிர்கின்றனர் பூதர்கள் ஏற்றனர் ஆல் முதிர்கின்ற சினம் கெழு மொய் அவுணர் அதிர்கின்றன பேரிகள் அண்டம் எலாம் பிதிர் கின்றன நேமி பிளந்ததுவே. |
25 |
|
|
|
|
|
|
|
6461.
| வாள் கொண்டு எறிகின்றனர் வல் எழுவுத் தோள் கொண்டிடு வெங் கதை தூண்டினரால் தாள் கொண்ட சிலைக் கணைதாம் சொரிவார் நீள் கொண்ட அலை அன்ன நிசாசர் அரே. |
26 |
|
|
|
|
|
|
|
6462.
| சூலப் படை விட்டனர் தொல் பரிதிக் கோலப் படை விட்டனர் குந்தம் உடன் ஆலப் படை விட்டனர் ஆடு குறள் சாலப் படை நின்று தளர்ந்திடவே. |
27 |
|
|
|
|
|
|
|
6463.
| அடு குற்றிடும் சூல மடல் கதைகள் தொடு குற்றனர் நேமிகள் தூண்டிடுவார் விடு குற்றனர் வெற்பினை வெவ் வசுரர் படு குற்றனர் ஆர்த்தனர் பாரிடரே. |
28 |
|
|
|
|
|
|
|
6464.
| வீழ்கின்றன பட்டிடும் வீரர் உடல் தாழ்கின்றன செம் புனல் சாய்ந்தனவால் ஆழ் கின்றனவேலையில் அங்கு அதன்வாய் மூழ்கின்றன பேய் கொடி மொய்த்தனவே. |
29 |
|
|
|
|
|
|
|
6465.
| மறக் குஞ்சரம் ஆயினவாம் பரி தேர் சிறக்கின்றன பட்டன தீ அவுணர் துறக்கின்றனர் ஆவி தொலைந்திடுவார் இறக்கின்ற கணங்களும் எண் இலவே. |
30 |
|
|
|
|
|
|
|
6466.
|
காணாவது
மூவாயிரர் கனல் வெஞ்சினம் திருகிக்
கோண் ஆகமது எனவே அடும் கொடும் பூதரைக் குறுகி
நீண் ஆகமது என விண் தொட நிமிர் வெஞ்சிலை குனியா
வேணார் குணத்து ஒலி கொண்டனர் இது கொல் உரும் எனவே.
|
31 |
|
|
|
|
|
|
|
6467.
|
வாங்கு உற்றிடும் சிலை தன் இடை வில்லே சர மாரி
தூங்கு உற்றிடும் புயல் ஆம் எனச் சொரிந்தார் சொரிந்திடலும்
ஏங்கு உற்றன பூதப்படை இரிகின்றன அது கண்டு
ஆங்கு உற்றிடும் கண வீரர்கள் அவுணர்க்கு எதிர்புகுந்தார்.
|
32 |
|
|
|
|
|
|
|
6468.
|
தண்டத்தவர் தடந்தேரினைத் தகர்ப்பார் சிலர் தருவின்
துண்டத்தவர் பரிமான் தொகை தொலைப்பார் சிலர் பாகன் கண்டத் தலை உருளும்படி உதைப்பார் சிலர் கரத்தால் அண்டத்தினில் அவர் தேர் எடுத்து எறிவர் சிலர் அம்மா. |
33 |
|
|
|
|
|
|
|
6469.
|
எழுக் கொண்டவர் தடமார்பினில் எறிவார் சிலர் எரிவாய்
மழுக் கொண்டவர் சிலை இற்றிட எறிவார் சிலர் வரையின்
குழுக் கொண்டவர் அனிகம் தனைக் கொல்வார் சிலர் வார்
வில்
பழுக் கொண்டிடு கவடாம் எனப் பறிப்பார் சிலர் முறிப்பார்.
|
34 |
|
|
|
|
|
|
|
6470.
|
தாவா துயர் கண வீரர்கள் சமர் இவ்வகை புரிய
மூவாயிரர் எனும் மைந்தர்கள் முனியாச் சிலை குனியா ஓவாது உக முடிவு எல்லையில் உருமுச் செறிவன போல் தீ வாய் உமிழ் கனல் வாளிகள் சொரிகின்றனர் தெரிந்தே. |
35 |
|
|
|
|
|
|
|
6471.
|
நேர்பு உற்று அமர் புரிகின்றவர் நெடும் தீ வடிக் கணைகள்
மார்பு உற்றிடத் தடந்தோள் எனும் வரை உற்றிட முகத்தின்
சார்பு உற்றிடக் கரம் உற்றிடத் தாள் உற்றிடச் செந்நீர்
சோர்பு உற்றிடத் தளர்ந்தே மனம் துயர் உற்றிட நின்றார். |
36 |
|
|
|
|
|
|
|
6472.
|
கலக்கித் தடமலர் சிந்திடும் களிறு ஆம் என அடல் செய்
விலக்கற்கு அரு மூவாயிரர் வில் ஆண்மையும் வல்லார் அலக்கண் படு கணவீரர்கள் அழிகின்றது நோக்கி இலக்கத்தரில் ஓர் ஆயிரர் எரி ஆம் எனச் செயிர்த்தார். |
37 |
|
|
|
|
|
|
|
6473.
|
குன்றே என மிசை போகிய கொற்றப் புயத்தவன் முன்
சென்றே தொழுது இப் போரினைச் சிறியேங்களுக்கு அருண்மோ
என்றே உரைத்தனர் வேண்டலும் இளையோன் அதற்கு இசையா
நன்றே அமர் செய நீவிர்கள் நடமின் என அகன்றார். |
38 |
|
|
|
|
|
|
|
6474.
| விசயன் சயன் இடபன் கரவீரன் அதிகோரன் அசலன் அதிகுணன் வாமனன் அனந்தன் அகளங்கன் வசை இல் புகழ் அனகன் சதவலி மாருதன் வருணன் சசி கண்டகன் முதல் ஆயிரர் சமரின் தலை புகுந்தார். |
39 |
|
|
|
|
|
|
|
6475.
|
முந்து உற்றிடும் அவர் யாவரும் மூவாயிரர் எதிர் போய்க்
கந்தக் கடவுளை அன்பொடு கருத்தில் தொழுது ஏத்தி
மைந்து உற்றிடு தம் கார் முகம் வளையாவடி வாளி
அந்தத்தினின் முகிலாம் என அவர் மேல் சொரிந்து ஆர்த்தார்.
|
40 |
|
|
|
|
|
|
|
6476.
|
ஆர்க்கின்றது ஒர் பொழுதத்தினில் அவர் வில் வலிதன்னை
மூர்க்கன் தரு மறமைந்தர்கள் மூவாயிரர் காணாக்
கூர்க்கின்றது ஒர் நெடுவாளிகள் குணிப்பு இல்லன பூட்டிச்
சூர்க் கொண்டல்கள் தம்மோடு அமர் புரிந்தால் எனச் சொரிந்தார்.
|
41 |
|
|
|
|
|
|
|
6477.
|
மூவாயிரர்
விடும் வாளிகள் முடுகிக் கடிது ஏகித்
தாவா விறலோர் ஆயிரர் தம் வாளியை அடுமால்
மேவார் புகழ் விறல் மைந்தர்கள் வெவ் வாளிகள் அவுணர்
ஏவானவை துணியும் படி எதிர் சிந்திடும் விரைவில். |
42 |
|
|
|
|
|
|
|
6478.
|
இவ்வாறு அமர் புரிகின்று உழி இலக்கத்தவர் தேரைத்
தெவ்வாகிய மூ ஆயிரவர் சிதைவித்தனர் சரத்தால் அவ்வாறு தெரிந்தே எமர் அவுணன் தரு மைந்தர் கைவார் சிலையொடு தேரினை அழித்தார் கணை தூண்டி. |
43 |
|
|
|
|
|
|
|
6479.
|
இலக்கத்தவர் எதிர் கின்றவர் ஏமப்படு தேரைச்
சிலைக் கண் படு நெடு வெங்கணை சிந்திச் சிதைவித்தே
நிலக்கண் பட மூவாயிரர் தொகை தன்னையும் நிறுவி
மலைக்கண் படும் அரிபோல் புடை வரு தேர் இடைப் புகுந்தார்.
|
44 |
|
|
|
|
|
|
|
6480.
|
சிலை போய்க் கடவிச் சென்றிடு தேர் போய் அடல் செய்யும்
கொலை போய் அனிகம் போய் உளம் கொள்ளும் பெருமிதத்தின்
நிலை போய் வெகுள் உற்றே புவி நின்றோர் தமைப் பிணித்த
வலை போகிய மானே என வளைத்தார் வய மைந்தர். |
45 |
|
|
|
|
|
|
|
6481.
|
பொலம் படு தேரொடு பொன்ற வன்மை போய்த்
தலம் படும் அவுணர்கள் தளர்தல் மேயினார் இலம் படை வந்துழி ஈதல் சான்றவர் குலம் படு துயரொடு குறையும் தன்மை போல். |
46 |
|
|
|
|
|
|
|
6482.
| பறித்தனர் வரைகளைப் பழுமரம் பல முறித்தனர் வியர்ப்பு உறு மொய்ம்பர் தம் இசைச் செறித்தனர் அண்டமும் திசையும் ஞாலமும் மறைத்தனர் அமரரும் மருட்கை எய்தினார். |
47 |
|
|
|
|
|
|
|
6483.
| தெவ்வரை ஆகிய சிறார்கள் தொன் மரம் கைவரை வீசலும் கணைகள் தூண்டியே இவ்வரை எனும் கணத்து இறுத்து வீட்டினார் ஐவரை வென்றி கொள் அனிக வீரரே. |
48 |
|
|
|
|
|
|
|
6484.
| அட்டு அடல் கொண்டிடும் அவுணர் இவ்வகை விட்டன கிரி எலாம் கணையின் வீட்டியே நெட்டு அழல் பகழிகள் நிறத்தின் மூழ்குறத் தொட்டனர் உறுப்பு எலாம் துளைத்தல் மேயினார். |
49 |
|
|
|
|
|
|
|
6485.
| துளைத்திடு கின்றுழிச் சோரி சாய்ந்திட விளைத்தனர் ஒரு சிலர் இரிந்திட்டார் சிலர் களைத்தனர் ஒருசிலர் கனன்று நின்று போர் விளைத்தனர் ஒருசிலர் பிறங்கல் வீசுவார். |
50 |
|
|
|
|
|
|
|
6486.
| தேவரை வென்றுளார் சிலவர் மால் வரைக் காவலர் தேரினைக் கரங்களால் எடா மேவரும் புணரி உள் வீசி ஆர்த்தனர் ஓ என அமரர்கள் புலம்பி ஓடவே. |
51 |
|
|
|
|
|
|
|
6487.
| நீசர்கள் ஒரு சிலர் நேமி சென்றிட வீசிய தேரினும் விரைவின் நீங்கு உறாக் காசினிப் பாலர் ஆய்க் கார்முகம் வளைஇ ஆசுக மழை சொரிந்து ஆர்த்துப் பொங்கினார். |
52 |
|
|
|
|
|
|
|
6488.
|
மீண்டிடும்
பொருநர்கள் விசிக மாமழை
தூண்டிட அவுணர்கள் தொகையில் பற்பலர் காண்டலும் வடவையின் கணத்தில் சீறியே ஆண்டு எதிர் புகுந்தனர் அசனி ஆர்ப்பினார். |
53 |
|
|
|
|
|
|
|
6489.
| மறத்தொடு மருத்தின மரம் கொள் கொம்பரை இறுத்திடும் தன்மை போல் எந்தை பின் வரு திறத்தவர் சிலைகளைச் செங்கை வன்மை ஆல் பறித்தனர் முறித்தனர் படியில் வீசினார். |
54 |
|
|
|
|
|
|
|
6490.
| பற்றலர் கொடு மரம் பறித்துச் சிந்து உழிச் செற்றம் ஒடு எம்பிரான் சேனை வீரர்கள் மற்றவரும் பதை பதைப்ப மாண் கையால் எற்றினர் அனையரும் இடியில் தாக்கினார். |
55 |
|
|
|
|
|
|
|
6491.
| பரவிய உவரியும் பாலின் வேலையும் திரைகளை எதிர் எதிர் சிதறி ஆர்த்து எழீஇப் பொரு திறமே எனப் பொருவில் மற்றொழில் இருதிற வயவரும் மிகலி ஆற்றினார். |
56 |
|
|
|
|
|
|
|
6492.
| கொடும் தொழிலாளர் ஒடு கொற்ற வீரர்கள் அடைந்தனர் இவ்வகை ஆண்மைப் போரினைத் தொடர்ந்து நின்று இயற்றியே தொல்லை வன்மை போய் உடைந்தனர் விசயன் அங்கு ஒருவன் அன்றியே. |
57 |
|
|
|
|
|
|
|
6493.
| இசை உறு தமர் எலாம் இரிந்து போதலும் விசயனே எனப்படும் வீரன் சீறியே வசை உறும் அவுணர் கோன் மகாரைக் கூற்றுவன் திசை உறு நகர் இடைச் செலுத்துவேன் என்றான். |
58 |
|
|
|
|
|
|
|
6494.
| வேணியின் மதி உடை விமலன் நல்கிய வேண் உறு வரி சிலை ஈறு இலாதது தூணியின் இடை உறத் துன்னிற்று அன்னதைப் பாணியில் எடுத்தனன் சமரில் பாணியான். |
59 |
|
|
|
|
|
|
|
6495.
| கரதலத்து எடுத்திடும் கார் முகம் தனை விரைவு ஒடு கோட்டியே விசயன் என்பவன் ஒரு தனி மாருதத்து ஓடிச் சூழ் உறாச் சர மழை பொழிந்தனன் அவுணர் தங்கள் மேல். |
60 |
|
|
|
|
|
|
|
6496.
| கரங்களை அறுத்தனன் கழல்கள் ஈர்ந்தனன் உரங்களை அறுத்தனன் உயர்திண் தோளொடு சிரங்களை அறுத்தனன் சிலரைக் கான் இடை மரங்களை அறுத்திடும் வண்ணம் என்னவே. |
61 |
|
|
|
|
|
|
|
6497.
| அற்றன உறுப்பு எலாம் அணுகித் தம்மில் வந்து உற்றன கூடிய வுணர்வும் ஆவியும் மற்றவர் எழுந்தனர் வாகை வீரன் மேல் பொற்றைகள் ஆயின பொழிந்து போர் செய்தார். |
62 |
|
|
|
|
|
|
|
6498.
| தலையொடு கரங்களும் தாளும் தோள்களும் மெலிவொடு துணிந்தவர் மீட்டும் கூடினார் அலர் தரு பங்கயத்து அண்ணல் தன் இடை வலிது அவர் பெற்றிடு வரத்தின் தன்மையால். |
63 |
|
|
|
|
|
|
|
6499.
|
கண்டமும்
மொய்ம்பரும் கழலும் வாளியால்
துண்டம் அது ஆயினர் தொக்கு மேயினார் சண்ட வெங்கால் பொரத் தணந்து சிந்திய தெண் திரை நெடும்புனல் மீட்டும் சேர்தல் போல். |
64 |
|
|
|
|
|
|
|
6500.
| பன்னரும் திறலினான் பகழி பாய் தொறும் மன்னவன் மைந்தர்கள் மாண்டு தோன்றுவார் மின்னது வந்து உழி விளிந்து வெவ்விருள் தொல் நிலை எய்தியே தொடர்ந்து தோன்றல் போல். |
65 |
|
|
|
|
|
|
|
6501.
| கையொடு சென்னியும் கழலும் மார்பமும் கொய்யும் முன் தொன்மை போல் கூட மைந்தர்கள் ஒய் என எழுந்தனர் உலகில் தேர்வுறில் செய்யுறு தவத்தினும் சிறப்பு உண்டாம் கொலோ. |
66 |
|
|
|
|
|
|
|
6502.
| கண்டனன் விசயனாம் காளை ஆவி போய்த் துண்டம் அது ஆகியே துஞ்சினார் எழீஇ மண்டு அமர் புரிவது மனத்தின் விம்மிதம் கொண்டனன் பொருதிறல் குறைந்து நின்றனன். |
67 |
|
|
|
|
|
|
|
6503.
| அகத்து இடை விம்மிதம் அடைந்து நின்று உளான் திகைத்தனன் வரம் கொல் இச்செய்கை என்றனன் புகைத்து என உயிர்த்தனன் பொங்கு கின்றனன் நகைத்தனன் இவர் செயல் நன்று நன்று எனா. |
68 |
|
|
|
|
|
|
|
6504.
| தொட்டிடும் பகழியால் துணிந்து போர் இடைப் பட்டவர் எழுந்தனர் பகழி பின்னரும் விட்டிடின் ஆவது என் மேவலார் தமை அட்டிடல் இன்று எனக்கு அரிது போலும் ஆல். |
69 |
|
|
|
|
|
|
|
6505.
| அன்னவர் தமை அடல் அரியதாம் எனில் ஒன்னலர் படையொடும் ஒன்றிச் சுற்றியே பன் னெடு நாள் அமர் பயின்று நிற்பினும் என் உயிர் கொள்வதும் எளிது அன்றால் அரோ. |
70 |
|
|
|
|
|
|
|
6506.
| வென்றிலன் இவர் தமை வென்றிலேன் எனில் சென்று எதிர் மாற்றலர் செருவில் வன்மை போய்ப் பொன்றுதல் பெற்றிலன் பொதுவன் ஓர் மகன் கொன்றிடும் உலவையின் கொள்கை ஆயினேன். |
71 |
|
|
|
|
|
|
|
6507.
| பற்று அலர் தங்களைப் படுப்பன் யான் எனா வெற்றி கொள்வான் என விளம்பி வந்த யான் செற்றிலன் ஆகியே சிலையும் கையுமாய்க் கொற்றவனோடு போய்க் கூடல் ஆகுமோ. |
72 |
|
|
|
|
|
|
|
6508.
|
மாற்றலர் வரத்தினர் மாயப் பான்மையர்
ஆற்றவும் வலியர் என்று அறைந்து மீள்வனேல் தோற்றனன் என்று எமர் துறப்பர் அன்றியும் போற்றலர் விடுவர் கொல் புறம் தந்து ஏகவும். |
73 |
|
|
|
|
|
|
|
6509.
| பித்தரின் மயங்கிலன் உணர்வும் பெற்று உளேன் எய்த்திலன் வலியொடும் இன்னும் நின்றனன் வைத்து இலன் புகழினை வசை ஒன்று எய்துவேன் செத்திலன் இருந்தனன் செயல் அற்றேன் என்றான். |
74 |
|
|
|
|
|
|
|
6510.
|
விண்டினை
மாறு கொள் விசயன் இவ்வகை
அண்டரும் துன்பு கொண்டு அகத்தில் உன்னுழி உண்டு ஒரு செய்கையான் உய்யும் ஆறு எனக் கண்டனன் துயர்க் கடல் கடக்கும் பெற்றியான். |
75 |
|
|
|
|
|
|
|
6511.
| ஆறு மாமுகப் பிரான் அன்றி இவ்விடை வேறு ஒரு துணை இலை மெய்மை ஈது எனத் தேறினன் அவன் அடி சிந்தை செய்தனன் மாறு இழி அருவி நீர் வழியும் கண்ணினான். |
76 |
|
|
|
|
|
|
|
6512.
| அண்ணல் அம் குமரனை அகத்துள் கொண்டுழி எண்ணிய எண்ணியாங்கு எவர்க்கும் நல்குவோன் விண் இடை ஒல்லையின் விசயன் என்பவன் கண் இடைத் தோன்றியே கழறல் மேயினான். |
77 |
|
|
|
|
|
|
|
6513.
|
கேள் இது விசய ஒன்னார் கிளையினை முடிப்பான் உன்னித்
தாளொடு முடியும் கையும் தடிந்தனை தடிந்தது எல்லாம்
மீளவும் தோன்றிற்று அன்றே மேலவர் பெற்றது ஓராய்
நீள் அமர் வயம் இன்றாகி நின்றனை தளரேல் நெஞ்சம். |
78 |
|
|
|
|
|
|
|
6514.
|
ஏற்ற பல் படைகள் தம்மால் இவர் தமைப் பன்னாள் நின்று
வீற்று வீற்று அடுவை யேனும் விளிகிலர் ஒருங்கு வல்லே
ஆற்றல் சேர் படை ஒன்று உய்க்கின் அனைவரும் முடிவர்
ஈது
நாற்றலை உடையோன் தொல்நாள் நல்கிய வரம் அது என்றான்.
|
79 |
|
|
|
|
|
|
|
6515.
|
என்று இவை உரைத்து வள்ளல் இம்பரை அளித்தோன் சென்னி
ஒன்றினை வாங்கி ஏனோர் உளமயல் அகற்றும் எந்தை
வென்றி கொள் படையை நல்கி விசயனுக்கு அளித்து மேவார்
பொன்றிட இதனை இன்னே விடுக எனப் புகன்று போனான்.
|
80 |
|
|
|
|
|
|
|
6516.
|
தேர்ந்தனன் முருகன் வாய்மை சிறந்தனன் மகிழ்ச்சி உள்ளம்
கூர்ந்தனன் ஞமலி ஊர்தி கொற்ற வெம் படையை வாங்கி
ஆர்ந்த நல் அன்பில் பூசை ஆற்றினன் அதனை எல்லாம்
ஓர்ந்தனன் அவுணர் தம்முள் ஒருவன் உன்மத்தன் என்போன்.
|
81 |
|
|
|
|
|
|
|
6517.
|
ஈண்டு இவன் நமர்கள் எல்லாம் இசைவரப் படையது ஒன்றால்
மாண்டிட அடுவான் போலும் மற்று அதன் முன்னர் மாயம்
பூண்டிடு படையால் இன்னேற்கு இறுதியைப் புரிவன் என்னா
ஆண்டு தன் உளத்தில் உன்னி அவுணன் அப்படையை விட்டான்.
|
82 |
|
|
|
|
|
|
|
6518.
| மாயவள் படையை முன்னம் விடுதலும் வள்ளல் நோக்கித் தீ உமிழ் கின்ற காரி திண் படை செலுத்தச் சென்று பாயிருள் பரந்து நேரும் படையினைத் தடிந்து முப்பால் ஆயிரர் தமையும் சுற்றி அடல் செய்து மீண்டது அன்றே. |
83 |
|
|
|
|
|
|
|
6519.
|
ஒரு கணப் பொழுதின் முன்னர் ஓர் ஆயிர முப்பாலோரும்
செரு நிலத்து அவிந்தார் அன்ன செய்கையை விசயன் காணா
முருகனைப் பரவி நின்றான் முழுமதி தன்னைக் கண்ட
பொரு திரைப் புணரி என்ன ஆர்த்தனர் பூதர் எல்லாம். |
84 |
|
|
|
|
|
|
|
6520.
|
ஏமுறும் அவுணர் தானை இறந்திடாது எஞ்சிற்று எல்லாம்
காமரு திசைகள் முற்றும் கதும் என விரிந்து போன
மா மலர் பொழிந்தார் விண்ணோர் மற்று இவை அனைத்தும்
நாடிக்
கோமகன் முன்பு சென்றார் குரை கழல் அவுணர் தூதர். |
85 |
|
|
|
|
|
|
|
6521.
|
வெய்யவன்
பகைவன் தாதை வியன் கழல் பணிந்து தூதர்
ஐய நின் மைந்தர் முப்பால் ஆயிரர் தம்மை எல்லாம்
ஒய் என இலக்கர் தம்முள் ஒருவனே முடித்தான் ஈது
பொய்யல சரதம் என்னப் பொருக்கெனப் புலம்பி வீழ்ந்தான்.
|
86 |
|
|
|
|
|
|
|
6522.
|
வீழ்ந்தனன் பதைத்துச் சோர்ந்து வெய்து உயிர்த்து அசைந்து
விம்மிப்
போழ்ந்திட நிலத்தைக் கையால் புடைத்தனன் புரண்டு வெற்பில்
தாழ்ந்திடும் அருவி யென்ன இழி புனல் தாரை பொங்கச்
சூழ்ந்தவர் அரற்ற மன்னன் துன்பமேல் துன்பம் வைத்தான்.
|
87 |
|
|
|
|
|
|
|
6523.
|
அன்னது ஓர் எல்லை மைந்தர் அனைவரும் முடிந்தது ஓரா
மன்னவன் இசைமை நீங்கி மாயிரும் தவிசில் தப்பி
இன்னலின் மறிந்தது என்ன இரவியங் கடவுள் மேல் பால்
பொன் நெடும் கிரியின் எய்தி ஒளி இலன் புணரி வீழ்ந்தான்.
|
88 |
|
|
|
|
|
|