முகப்பு |
பானுகோபன் வதைப் படலம்
|
|
|
6604.
|
எள்ளல் செய்து எனைப்பற்றியே சிறை அகத்து இட்ட
கள்வன் இப்பகல் முடிந்திடும் அன்னது காண்பான் பொள் எனப் படர்வேன் எனப் புந்தி கொண்டவன் போல் ஒள் அழல் கதிர் வீசியே இரவி வந்து உதித்தான். |
1 |
|
|
|
|
|
|
|
6605.
| சுருதி நீங்கிய அவுணர் கோன் இத்திறம் துயரம் பெரிதும் எய்தியே இருந்துழிக் கண்டனர் பெயர்ந்து குருதி நோக்கு உடை ஓற்றரில் ஒருசிலர் குறுகிப் பரிதி தன் பகை அடி பணிந்து இனையன பகர்வார். |
2 |
|
|
|
|
|
|
|
6606.
| முன்ன மாயமாப் படைக்கலம் தூண்டியே மெய்ம்பு பன்னிரண்டு உளான் தூதனைப் படையொடும் படுத்துத் தொல் நெடுங்கடல் இட்டனை இட்டதைச் சுரர்கள் அன்ன காலையே விளம்பினர் அறுமுகத் தவற்கே. |
3 |
|
|
|
|
|
|
|
6607.
| வெங்கண் மால் கரிக்கு இளையவன் ஆங்கது வினவிச் செங்கை வேலினை ஆயிடை இருந்தனன் செலுத்த அங்கு அது ஒல்லையின் மூவிரு புணரிகள் அகன்று பொங்கு தூயநீர் அளக்கரின் நடுவு புக்கதுவே. |
4 |
|
|
|
|
|
|
|
6608.
| புக்க வேலையின் மாயமாப் பெரும் படை புறந்தக் தக்கணம் தொலைவு எய்தியது அயர் உயிர்த்து அறிந்து தொக்க பாரிடர் யாவரும் வீரர் தம் தொகையும் மிக்க திண் திறல் வாகுவும் எழுந்து இவண் மீண்டார். |
5 |
|
|
|
|
|
|
|
6609.
|
ஆண்ட அவ்வெல்லை வந்து இறுத்திடும் வேல் படை அருளி
மீண்டு கந்த வேள் இருந்துழிப் போந்தது விரைவால்
ஈண்டு இம் மாநகர் சுற்றியே செறுநர்கள் இகலின்
மூண்டு போர் செய்வான் புரிசையுள் புகுந்தனர் முரணால். |
6 |
|
|
|
|
|
|
|
6610.
| அரண முற்றுளார் இந்நகர் அலைத்தலும் அவற்றைத் தரணி காவலன் வினவியே தன் அயல் நின்ற இரணியன் தனைக் கனல் முகத்து அண்ணலை ஏனை முரணில் மக்களை அமைச்சனை விடுத்தனன் முறையால். |
7 |
|
|
|
|
|
|
|
6611.
| ஆன காலையில் வந்து வந்து அடு சமர் ஆற்றி மான வேல் படைப் பண்ணவன் தூதனால் மற்றை ஏனையோர்களால் முத்திற வீரர்கள் இறந்தார் மீனமாய்க் கடல் புகுந்தனன் இரணியன் வெருவி. |
8 |
|
|
|
|
|
|
|
6612.
| மன்னர் மன்னவன் இவை எலாம் வினவியே மனத்தில் உன் அரும் துயர் வேலை புக்கு ஆற்றலாது உழந்தான் இந் நகர்ப் படை யாவையும் வறந்தன இன்னும் துன்னலார் இவண் நின்றனர் என்று இவை சொற்றார். |
9 |
|
|
|
|
|
|
|
6613.
|
சொற்ற வாசகம் வினவலும் சூரியன் பகைஞன்
இற்றவே கொலாம் நம் பெரும் வாழ்க்கை என்று இரங்கிச் செற்றமோடு துன்பு எதிர் எதிர் மலைந்திடச் செங்கேழ்ப் பொற்றை அன்னதன் இருக்கையை ஒருவினன் போந்தான். |
10 |
|
|
|
|
|
|
|
6614.
| போந்து கோ நகர் அணுகியே துன்பொடு புணர்ந்த வேந்தன் மாமலர் அடிகளை உச்சியின் மிலைச்சி ஆந்தரங்கமாம் அளியொடு முந்து நின்று அவுணர் ஏந்தல் இம்மொழி கேண்மியா நன்கென இசைப்பான். |
11 |
|
|
|
|
|
|
|
6615.
| மாயை தந்த தொல் படையினால் செறுநரை மயக்கித் தூய நீர்க்கடல் இட்டனன் சுரரது புகல ஆய காலையில் வேல் விடுத்தவர் தமைமீட்ட சேயை வெல்வது கனவினும் இல்லையால் தெரியின். |
12 |
|
|
|
|
|
|
|
6616.
|
தெரிந்த மற்று உனக்கு உரைப்பது என் முற்பகல் செவ்வேல்
பொருந்து கைத்தலத்து ஆறுமா முகனொடு பொருது
வருந்தி வன்படை ஆற்றலும் இழந்தனை வறிதாய்
இரிந்து மற்று இவண் வருதலால் உய்ந்தனை எந்தாய். |
13 |
|
|
|
|
|
|
|
6617.
|
ஏற்றது ஓர் சிலை இழந்தனை மானமும் இன்றித்
தோற்று வந்தனை தொல் வரத்து இயற்கையும் தொலைந்தாய்
சீற்றம் உற்றிலன் முருகவேள் அவன் சினம் செய்யின்
ஆற்றுமோ வெலா அண்டமும் புவனங்கள் அனைத்தும். |
14 |
|
|
|
|
|
|
|
6618.
| ஆரணன் தனை உலகொடும் உண்டு முன் அளித்த காரணன் தனி ஆழியைக் களத்திடை அணிந்த தாரகன் தனை நெடிய மால் வரையொடு தடிந்த வீர வீரனை யாவரே வன்மையால் வெல்வார். |
15 |
|
|
|
|
|
|
|
6619.
|
புல்லிது ஆகிய விலங்கினைப் படுப்பவர் புதலுள்
வல்லியம் தனக்கு உண்டியாய் மாய்ந்திடும் கதைபோல் எல்லையில் பகல் அமரரை அலைத்திடும் யாமும் தொல்லை நாள் வலி சிந்தியே குமரனால் தொலைந்தோம். |
16 |
|
|
|
|
|
|
|
6620.
|
கோடலும்
சுனைக் குவளையும் குளவியும் குரவும்
ஏடு அலர்ந்திடு நீபமும் புனைந்திடும் இளையோன் பாடல் அம்திறல் உரைப்பது என் ஆங்கு அவன் பணித்த ஆடல் அம் புயத்து அண்ணலை வெல்வதும் அரிதால். |
17 |
|
|
|
|
|
|
|
6621.
| நெடிது பற்பகல் செல்லினும் நிரம்புவது ஒன்றை இடை விடாமலே முயன்று பெற்றிடுகின்றது இயற்கை உடல் வருந்தியும் தங்களால் முடிவுறா ஒன்றை முடியும் ஈது எனக் கொள்வது கயவர் தம் முறையே. |
18 |
|
|
|
|
|
|
|
6622.
| ஆற்றல் மைந்தரை இழந்தனை நால் வகை அனிகத்து ஏற்றம் அற்றனை என்னுடன் ஒருவன் நீ இருந்தாய் மேல் திகழ்ந்த நின் குலத்தினை வேரொடு வீட்டக் கூற்றம் வந்ததும் உணர்கிலை இகலை மேற்கொண்டாய். |
19 |
|
|
|
|
|
|
|
6623.
| வெஞ்சமம் செய வல்லவர் கிடைத்திடின் மிகவும் நெஞ்சகம் தளிர்ப்பு எய்துவன் நேரலர் சமருக்கு அஞ்சினேன் என்று கருதலை அரச நீ இன்னும் உஞ்சு வைகுதியோ எனும் ஆசையால் உரைத்தேன். |
20 |
|
|
|
|
|
|
|
6624.
| உறுதி ஒன்று இனி மொழிகுவன் பொன் நகர் உள்ளார் சிறை விடுக்குதி நம்மிடைச் செற்றம் அது அகற்றி அறு முகத்தவன் வந்துழி மீண்டிடும் அதன் பின் இறுதியில் பகல் நிலைக்கும் நின் பெருவளம் என்றான். |
21 |
|
|
|
|
|
|
|
6625.
|
வெம்பு தொல் கதிர் வெகுண்டவன் உரைத்த சொல் வினவித்
தும்பை அம் தொடை மிலைச்சிய மணி முடி துளக்கி
மொய்ம்பும் ஆகமும் குலுங்கிட முறுவலித்து உயிர்த்து
நம்பி மந்திரச் சூழ்ச்சி நன்றால் என நவில்வான். |
22 |
|
|
|
|
|
|
|
6626.
|
என் இவை உரைத்தாய் மைந்த இன்று யான் எளியன் ஆகிப்
பொன் உலகு உள்ள தேவர் புலம்பு கொள் சிறையை நீக்கின்
மன்னவர் மன்னன் என்றே யார் எனை மதிக்கற் பாலார்
அன்னதும் அன்றி நீங்கா வசையும் ஒன்று அடையும் மாதோ.
|
23 |
|
|
|
|
|
|
|
6627.
|
கூனொடு வெதிரே பங்கு குருடு பேர் ஊமை ஆனோர்
ஊனம் அது அடைந்த புன்மை யாக்கையோடு ஒழியும் அம்மா
மானம் அது அழிந்து தொல்லை வலி இழந்து உலகில் வைகும்
ஏனையர் வசையின் மாற்றம் எழுமையும் அகல்வது உண்டோ.
|
24 |
|
|
|
|
|
|
|
6628.
|
தேவரும் மலர் மேலோனும் செங்கண் மால் முதலா உள்ள
ஏவரும் ஆணை போற்ற இருந்து அரசியல் உற்றேன்
மூவரின் முதலா முக்கண் மூர்த்தி தன் வரம் கொண்டு உள்ளேன்
மேவலர் சிறையை இன்று விடுவனோ விறல் இலார் போல். |
25 |
|
|
|
|
|
|
|
6629.
|
பேர் எழில் இளமை ஆற்றல் பெறல் அரும் வெறுக்கை வீரம்
நேர் அறு சுற்றம் யாக்கை யாவையும் நிலைய வன்றே
சீர் எனப் பட்டது அன்றோ நிற்பது செறுநர் போரில்
ஆருயிர் விடினும் வானோர் அரும் சிறை விடுவது உண்டோ.
|
26 |
|
|
|
|
|
|
|
6630.
|
இறந்திட வரினும் அல்லால் இடுக்கண் ஒன்று உறினும் தம்பால்
பிறந்திடும் மானம் தன்னை விடுவரோ பெரியர் ஆனோர்
சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும்
துறந்திடேன் பிடித்த கொள்கை சூரன் என்று ஒரு பேர் பெற்றேன்.
|
27 |
|
|
|
|
|
|
|
6631.
|
இன்னும்
ஓர் ஊழி காலம் இருக்கினும் இறப்பது அல்லால்
பின்னும் இங்கு அமர்வது உண்டோ பிறந்தவர் இறக்கை திண்ணம்
மின் எனும் வாழ்க்கை வேண்டி விண்ணவர்க்கு அஞ்சி இந்த
மன் உயிர் சுமக்கிலேன் யான் மாயவன் தனையும் வென்றேன்.
|
28 |
|
|
|
|
|
|
|
6632.
|
அஞ்சினை போலும் மைந்த அளிய நின் இருக்கை போகித்
துஞ்சுதி துஞ்சல் இல்லா வரத்தினேன் தொலைவது இல்லை
நெஞ்சிடை இரங்கி யாதும் நினையலை நேரலார் மேல்
வெஞ்சமர் புரியப் போவேன் என்றனன் வெகுளி மேலான். |
29 |
|
|
|
|
|
|
|
6633.
|
இவ்வகை தாதை கூற இரவி தன் பகைஞன் கேளா
உய்வகை இல்லை போலும் உணர்ந்திலன் உரைத்தது ஒன்று
மெய் வகை விதியை யாரே வென்றவர் வினையிற்கு ஏற்ற
செய்வகை செய்வேன் என்னாச் சிந்தை செய்து இனைய சொல்வான்.
|
30 |
|
|
|
|
|
|
|
6634.
|
அறிவு ஒரு சிறிதும் இல்லேன் அடியனேன் மொழிந்த தீமை
இறையதும் உள்ளம் கொள்ளாது எந்தை நீ பொறுத்தி கண்டாய்
சிறயது ஓர் பருவப் பாலர் தீ மொழி புகன்றாரேனும்
முறுவல் செய்திடுவது அன்றி முனிவரோ மூப்பின் மேலோர்.
|
31 |
|
|
|
|
|
|
|
6635.
|
அத்த நீ வெகுளல் நம் ஊர் அலைத்திடும் கணங்கள் தம்மை
வித்தக வன்மை சான்ற விறல் புயனோடும் அட்டு உன்
சித்தமும் மகிழுமாறு செய்குவன் விடுத்தி என்னாக்
கைத்தலம் முகிழ்த்துத் தீயோன் கழல் இணை பணிதல் செய்தான்.
|
32 |
|
|
|
|
|
|
|
6636.
|
பணிந்திடு கின்ற காலைப் பதுமை தன் கேள்வன் செற்றம்
தணிந்தனன் உவகை பெற்றான் தனய நின் உள்ளம் போர்மேல்
துணிந்தது போலும் நன்றால் துன்னலார் தம்மை வெல்வான்
அணிந்திடு தானை யோடும் அகலுதி ஐய என்றான். |
33 |
|
|
|
|
|
|
|
6637.
|
தொடை அசை காமர் பொன் தோள் சூர் இது புகல மைந்தன்
விடையது பெற்று மீண்டு மேதகு துயரினோடு
கடிது தன் கோயில் புக்குக் கடவுளர் பலரும் தந்த
அடல் நெடும் படைகள் எல்லாம் ஆய்ந்தனன் எடுத்தான் அன்றே.
|
34 |
|
|
|
|
|
|
|
6638.
|
மை உறு தடங்கண் மாதர் வன முலை திளைக்கு மார்பின்
மெய்யுறை ஒன்று வீக்கி விரல் மிசைப் புட்டில் சேர்த்திக் கையுற ஒரு வில் ஏந்தி கைப்புடை கட்டி வாளி பொய்யுறும் ஆவ நாழி பின்னுற வீக்கி யாத்தான். |
35 |
|
|
|
|
|
|
|
6639.
|
சேமமாய் உள்ள எண் இல் படைகளும் தேரும் சுற்றத்
தாம நீள் கவிகை வேந்தன் தனி மகன் கடையில் சென்று
காமர் சூழ் கனக வையம் ஒன்றின் மேல் கடிது புக்கான்
ஏமமால் வரையின் உம்பர் எழிலியேறு அணைந்ததே போல்.
|
36 |
|
|
|
|
|
|
|
6640.
|
மற்றது காலை தன்னில் வாம் பரி நிரையும் தேரும்
கொற்ற வெங் களிறும் வீரர் குழாங்களும் குணிப்பில் வெள்ளம்
சுற்றின இயங்கள் முற்றும் துவைத்தன துவச கோடி
செற்றின இரவி செல்லும் தேயம் அது அடைத்தது அன்றே.
|
37 |
|
|
|
|
|
|
|
6641.
|
தேரிடைப் புகுந்து நின்றோன் இப்பெரும் சேனை வெள்ளம்
பாரிடைக் கொண்டு நின்ற புணரியில் பாங்கர் சூழச்
சூர் இடைக் கொண்ட அன்பும் துயரமும் உளத்தை உண்ணப்
போருடைத் திசையை நோக்கிப் பொள்ளெனப் போதல் உற்றான்.
|
38 |
|
|
|
|
|
|
|
6642.
|
மாவாழ் தெருவு பல கோடிகள் வல்லை நீங்கி
மேவார் பொருத களத்து எல்லை விரைந்து நண்ணி மூவாயிரரும் பிறரும் முடிவான நோக்கி யாவா எனவே இரங்கிக் கலுழ்ந்து அல்லல் செய்வான். |
39 |
|
|
|
|
|
|
|
6643.
| தாளாண்மை மிக்க அசுரன் மகன் தாங்கல் செல்லா நீள் ஆகுலத்தின் அழிகின்ற தன் நெஞ்சு தேற்றிக் கேளார் தொகை மேல் பெரும் சீற்றம் கிளர்ந்து செல்லக் சூளால் இனைய ஒரு வாசகம் சொல்லல் உற்றான். |
40 |
|
|
|
|
|
|
|
6644.
|
மாசாத்தர் அன்ன வயப் பூதரை மாய வாட்டித்
தேசார்க்கும் வேலோற்கு இளையோனைச் செகுத்திடேனேல்
காசால் பொலியும் அகல் அல்குலின் காமம் வெஃகி
வேசாக்கள் பின் செல் வறியானில் விளங்க யானே. |
41 |
|
|
|
|
|
|
|
6645.
| என்னா ஒரு சூள் இசையா அவன் ஏகலோடும் அன்னான் வரவு தனை நோக்கி அவுணர் தங்கள் மன்னாகும் நின்ற மகனாகும் மலைவதற்குப் பின்னார் வருவார் எனப் பூதர்கள் பேசலுற்றார். |
42 |
|
|
|
|
|
|
|
6646.
| பேசுற்ற காலை அவுணப் படை போந்து சென்றாங்கு காசற்ற பூதப் படை தம் எதிர் ஆர்த்து நேரப் பூசல் பறைகள் இயம்பு உற்றன பூமி பொங்கி மாசற்ற வானைத் திசையோடு மறைந்தது அன்றே. |
43 |
|
|
|
|
|
|
|
6647.
| ஆர்த்தார் கிடைத்தார் அடல் பூதர் அடுக்கல் மாரி தூர்த்தார் படைகள் சொரிந்தார் மரம் தூவல் உற்றார் பார்த்தார் அவுணர் எழு நாஞ்சில் பரசு தண்டம் சீர்த்தாகிய வில் உமிழ் வாளி செலுத்தி விட்டார். |
44 |
|
|
|
|
|
|
|
6648.
|
பொங்கு வன்மை கொள் பூதரும்
வெங் கொடும் தொழில் வினையரும் இங்கு இவ்வாறு எதிர் ஏற்றிடா அங்கண் வெஞ்சமர் ஆற்றினார். |
45 |
|
|
|
|
|
|
|
6649.
| அரிய ஒண் பகல் அல்லொடே பொருது பார்மிசை புக்கபோல் இரு திறத்தரும் இகலியே விரவு பூசல் விளைத்தனர். |
46 |
|
|
|
|
|
|
|
6650.
| உரம் கொள் பாரிடர் உய்த்திடு மரங்கள் குன்றுகள் மாண்டிட நெருங்கி நேர்ந்த நிசாசரர் சரங்கள் கொண்டு தடிந்தனர். |
47 |
|
|
|
|
|
|
|
6651.
| வில் கொள் அம்பினை வேலினை, எற் கொள் நாஞ்சில் எழுக்கதை வர்க்கம் ஆனதை வன் கணர், கற்களால் துகள் கண்டனர். |
48 |
|
|
|
|
|
|
|
6652.
| சிவந்த பங்கிகொள் சென்னிகள் நிவந்த மொய்ம்பு நிலத்து உகக் கவிழ்ந்து உருண்டு களத்திடை அவிந்த பூதம் அனந்தமே. |
49 |
|
|
|
|
|
|
|
6653.
| நெஞ்சம் மொய்ம்பும் நெடும்பதம் செஞ் செவித்தலை சிந்தியே எஞ்சு தானவர் எண் இலார், துஞ்சினார் பழி துஞ்சவே. |
50 |
|
|
|
|
|
|
|
6654.
|
பாய்ந்த
வாசிகள் பாரிடம்,
காய்ந்த யானைகள் காசினி ஏய்ந்த தேர்கள் யாவையும், மாய்ந்து பாரின் மறிந்தவே. |
51 |
|
|
|
|
|
|
|
6655.
| சோரி தூங்கிய தொல் பிணம், மேரு விண்ணை விழுங்கின காரி யூர்தி கருங்கொடி, ஓரி கங்கம் உலாயவே. |
52 |
|
|
|
|
|
|
|
6656.
| இந்தவாறு இரு பாலரும், வந்து நேர்ந்து மலைந்திடப் புந்தி நோவறு பூதர் தம், முந்து தூசி முரிந்ததே. |
53 |
|
|
|
|
|
|
|
6657.
| தாழும் ஒன்னலர் தாக்கலால் நீள் கொடிப் படை நெக்கிடக் கூழை நின்றிடு கூளிகள், ஆழி என்ன அடுத்தவே. |
54 |
|
|
|
|
|
|
|
6658.
| புடை நிரம்பிய பூதர்வந், திரைவிடாது எதிர் ஏற்றிடா அடலின் மேதகும் அவுணமாக், கடலை நின்று கலக்கினார். |
55 |
|
|
|
|
|
|
|
6659.
|
ஒடிந்த தேர்கள் உலந்து பார்,
கிடந்த யானை கிளர்ந்த மா மடிந்த தானவர் மாப்படை, தடிந்து உலாயினர் சாரதர். |
56 |
|
|
|
|
|
|
|
6660.
|
அதிரும் கழல் சேர் அவுணப் படைகள்
முதிரும் குறள் எற்ற முடிந்திடலும் எதிரும் சமரத்து இடை எய்தியது ஓர் கதிரின் பகை அங்கு அது கண்டனனே. |
57 |
|
|
|
|
|
|
|
6661.
| சிந்தாய் வரும் இச் சில சாரதரே நம் தானை எலாம் நலிகின்றனரோ அந்தா இனிதென்று அடுதேர் கடவா வந்தான் விரைவால் இமையோர் மறுக. |
58 |
|
|
|
|
|
|
|
6662.
| கடிதாய் வரு காலொடு கார் எழிலி படிமேல் உறவே படர்கின்றது போல் கொடிது ஆகிய வில்குனியா முனியா வடி வாளிகள் தூய் அவுணன் வரலும். |
59 |
|
|
|
|
|
|
|
6663.
| வண்டார் தெரியல் வலியோன் வரவைத் தண்டாது அமர் செய்திடு சாரதர்கள் கண்டார் எதிரே கடிதே நடவா அண்டார் தொகை அச்சுற ஆர்த்தனரே. |
60 |
|
|
|
|
|
|
|
6664.
| தருவும் கதையும் தரு சூலமுமால் வரையும் கொழுவும் மழுவும் எழுவும் சொரிகின்றனர் பல் வளனும் தொலையா எரியின் மிசையே இடும் அந்தணர் போல். |
61 |
|
|
|
|
|
|
|
6665.
| தொடுகின்ற கழல் தொகு சாரதர்கள் விடுகின்ற எலாம் மிசை வந்திடலும் அடுகின்ற சினத்து அவுணன் தழலில் படுகின்ற சரம் பல தூண்டினனே. |
62 |
|
|
|
|
|
|
|
6666.
| பணி பட்ட கனல் படை தூண்டுதலும் திணி பட்ட கணத் திறலோர் வரைகள் அணி பட்ட தருக்குலம் ஆதி எலாம் துணி பட்டனவே துகள் பட்டனவே. |
63 |
|
|
|
|
|
|
|
6667.
| கல்லும் தருவும் கதையும் பிறவும் சொல்லும் திறலும் துகள் பட்டிடலும் வெல்லும் தகுவன் மிகு சாரதர் மேல் செல்லும் படி வெங்கணை சிந்தினனே. |
64 |
|
|
|
|
|
|
|
6668.
| சிந்து உற்றிடு செங்கனல் வெங்கணைகள் பொந்து உற்றிடுகின்ற புயங்கம் என வந்து உற்று உடன் முற்றும் வருத்துதலால் நொந்து உற்றனர் அற்றனர் நோன்மை எலாம். |
65 |
|
|
|
|
|
|
|
6669.
| விடுகின்ற கனல் கணை வெந்திறலோர் உடலம் புழை செய்திட வுற்றனரால் படரும் குறியோன் கதை பஃறுளையா அடு தொல் கிரவுஞ்சம் அதாம் எனவே. |
66 |
|
|
|
|
|
|
|
6670.
| தெரிகுற்ற கனல் கணை சென்று புகப் பொரு கொற்றம் அகற்றிய பூதர் மிசைப் பெருகு உற்றது சோரி பெரும் கருவிண்டு உரு உற்றிடு செம் பொழுகும் படிபோல். |
67 |
|
|
|
|
|
|
|
6671.
| கதிரும் கனல் வெங்கணை சாரதர் மெய் புதைகின்றுழி செம்புனல் வந்து எழுவ உதிரம் பிற உற்றிடு தீ யுறவால் எதிர் வந்தவை தன் இடன் உய்ப்பது போல். |
68 |
|
|
|
|
|
|
|
6672.
| விட மெய்க் கணை மாரிகள் தம் மிசையே பட வெய்த்தனர் சிந்தை பதைத்திடுவார் கடவுள் கதிரைக் கனலும் கொடியோற்கு உடை உற்றனரால் உறு பூதர் எலாம். |
69 |
|
|
|
|
|
|
|
6673.
|
நிலை அழிந்து நெடுங்கடல் பாரிடம்
தொலைய முன்னம் தொலைந்திடு தானவர் வலிதெரிந்து வயம் புனை தானவர் தலைவன் முன் வந்து சார்ந்தனர் என்பவே. |
70 |
|
|
|
|
|
|
|
6674.
| ஆய காலை அழிந்து வெம் பூதர்கள் போய வாறும் புரை அறு சூர்தரு சேயவன் திறல் செய்கையும் நோக்கினான் காயும் வெவ்வெரி கான்றிடு கண்ணினான். |
71 |
|
|
|
|
|
|
|
6675.
| மலைக் குலக் கொடி வாமத்தன் மைந்தராம் இலக்க வீரருள் ஏனைய மைந்தருள் தலைக்கண் நின்ற சயங்கெழு மொய்ம்பினான் விலக்கில் தேரொடும் வெய்து என ஏகினான். |
72 |
|
|
|
|
|
|
|
6676.
| ஆதி தந்த அறுமுகத்து எம்பிரான் பாதம் உன்னிப் பரவிக் கடிதுபோய் மேதகும் கதிர் வெம் பகை தானை ஆம் ஓதம் உட்கக் குனித்தனன் ஓர் சிலை. |
73 |
|
|
|
|
|
|
|
6677.
|
காமர்
மொய்ம்பினன் கைத்தனுக் கோட்டலும்
தாமுனிந்து தகுவர் தம் தானைகள் தோமரம் கதை சூலம் வை வாளிவேல் நேமி ஆதி நெருக்கு உற வீசினார். |
74 |
|
|
|
|
|
|
|
6678.
| வீசு கின்ற வியன் படை மாய்ந்து உகத் தேசு உலாவு திறல் உடை மொய்ம்பினான் ஓசை கொண்ட தன் சாபம் உமிழ்ந்து என ஆசுகங்கள் அளப்பு இல தூண்டினான். |
75 |
|
|
|
|
|
|
|
6679.
| தூண்டும் வாளி துணிபடச் செய்தலும் மாண்டு போயின மற்றவர் வெம்படை ஈண்டு தானவர் யாரும் மறைந்திட மீண்டும் வார்கணை வீசினன் வீரனே. |
76 |
|
|
|
|
|
|
|
6680.
| கற்றை வார் சடைக் கண் நுதலோன் சுதன் கொற்ற வில் உமிழ் கூர்ங்கணை விட்டன பற்றலார் மெய் படுதலும் அன்னவர்க்கு இற்ற தாள் முடி தோள் புயம் யாவுமே. |
77 |
|
|
|
|
|
|
|
6681.
| ஆர் அழிந்தன ஆழி அழிந்தன தேர் அழிந்தன திண்பரி கைமுகக் கார் அழிந்த கடும் தொழில் தானவர் போர் அழிந்த புகுந்தன சோரியே. |
78 |
|
|
|
|
|
|
|
6682.
| மற்ற எல்லை வலிய நம் தானைகள் இற்றவே கொல் இவன் சிலையால் எனாச் செற்ற நீரொடு செங்கதிர் மாற்றலன் ஒற்று தேர் வலவற்கு இவை ஓதுவான். |
79 |
|
|
|
|
|
|
|
6683.
| அடுத்து நம் படை அட்டவன் முன் உற விடுத்தி தேரை வலவனை வெய்து என வடித்த விஞ்சையன் வன்மையின் அன்னதேர் நடத்தி ஆர்த்தனன் நாகர் நடுங்கவே. |
80 |
|
|
|
|
|
|
|
6684.
| மாண்ட கொள்கை அவுணன் வலவன்முன் தூண்டு தேர் மிசைத் துண் என நண்ணியே பூண்ட தன் சிலை கோட்டிப் பொருஞ்சினம் மூண்டு மேலவன் முன் இது கூறுவான். |
81 |
|
|
|
|
|
|
|
6685.
| எஞ்சல் இன்றிய என் பெரும் தானைகள் துஞ்சும் வண்ணம் தொலைத்தன நீ இனி உஞ்சு போகரிது உன் தனை அட்டிட வஞ்சினம் கொடு வந்தனன் யான் என்றான். |
82 |
|
|
|
|
|
|
|
6686.
| என்றலோடும் இருந்திறன் மொய்ம்பினான் பொன்று வோரையும் போர்த்தொழில் செய்துபின் வென்று ளோரையும் விண்ணவர் காண்குவர் நின்று தாழ்க்கலை நேருதி போர்க்கு என்றான். |
83 |
|
|
|
|
|
|
|
6687.
| விளைத்த சீற்றத்து வெந் திறல் சூர் மகன் வளைத்த வில்லிடை வார்கணை ஆயிரம் தளைத்த பூந்தொடை வாகையன் தன்னுரம் துளைத்திடும்படி பூட்டுபு தூண்டினான். |
84 |
|
|
|
|
|
|
|
6688.
|
ஆக
மூழ்கி அடற்கணை போழ்ந்து பின்
ஏக வென்றும் இளையவன் பின்னவன் சோக மோடு தன் தொல் சிலை வாங்கியே நாகர் போற்றிட நாண் ஒலிக் கொண்டனன். |
85 |
|
|
|
|
|
|
|
6689.
| நாண் ஒலிக் கொடு நஞ்சு அழல் கான்று எனத் தூணி உற்ற சுடு சரம் ஆயிரம் வேணு உய்த்து விரைவினில் தூண்டினான் ஏண் உடைக் கொடியோன் புயத்து எய்தவே. |
86 |
|
|
|
|
|
|
|
6690.
| ஆயிரம் கணை அம்புயம் மூழ்கலும் நோய் உழந்து உள நொந்து நொடிப்பினில் தீயவன் மகன் செஞ்சரம் நூற்றினால் தூயவன் வில் துணிபடுத்தான் அரோ. |
87 |
|
|
|
|
|
|
|
6691.
| திண் திறல் புயன் செஞ்சிலை இற்றிட அண்டர் அஞ்சினர் அன்னவன் ஓர் அயில் கொண்டு உருத்துக் கொடும் தொழில் சூர் மகன் முண்ட நெற்றியின் மொய்ம்புடன் வீசினான். |
88 |
|
|
|
|
|
|
|
6692.
| வீசு வெம்படை வெய்யவன் சீறிய நீசன் மாண்தகு நெற்றி உள் சேறலும் மாசு இல் வான்மிசை வந்து எழு செக்கர் போல் ஆசில் செம்புனல் ஆறு எனச் சென்றதே. |
89 |
|
|
|
|
|
|
|
6693.
| சென்ற காலையில் தீயவன் ஓர் இறை நின்று தேரின் நினைவிலன் ஆகியே பின்றை முன் உணர்வு எய்தப் பெருந்தகை ஒன்று ஒர் வெஞ்சிலை ஒல்லையில் வாங்கினான். |
90 |
|
|
|
|
|
|
|
6694.
| வாங்கி வாயுவின் மாப்படை தூண்டலும் ஆங்கு அவ் வெய்யனும் அப்படை ஏவியே தாங்கி வன்மை தணித்தலும் தாவிலோன் தீங்கனல் படை உய்த்தனன் சீறியே. |
91 |
|
|
|
|
|
|
|
6695.
| மாரி அன்ன கை மன்னவர் கோமகன் ஆர் அழல் படை அவ்வழி தூண்டலும் வீரவாகு விடுத்திடும் தீப்படை போர் இயற்றிப் பொருக்கு என மீண்டதே. |
92 |
|
|
|
|
|
|
|
6696.
| சுடு கனல் படை போந்திடச் சூர் மகன் கடிது பின்னும் கதிர்ப் படை தான் எடா அடுதி அன்னவன் ஆவியை நீ எனா விடுதலோடும் விரைந்தது சென்றதே. |
93 |
|
|
|
|
|
|
|
6697.
| விரைந்து சென்றதை வீர மொய்ம்பு உள்ளவன் தெரிந்து சேணிடைச் செங்கதிரோன் படை துரந்து நீக்கலும் சூர் மகன் பங்கயத்து இருந்த வன்படை ஏவினன் என்பவே. |
94 |
|
|
|
|
|
|
|
6698.
| தேன் முகத்துத் திருமலரோன் படை வான் முகத்து வருதலும் ஆங்கு அவன் ஊன் முகப் படை ஒய் எனத் தூண்டினான் நான் முகத்தன் அடல் கண நாயகன். |
95 |
|
|
|
|
|
|
|
6699.
|
தூண்டு
வேதன் படைக்கலம் சூர் மகன்
ஆண்டு தொட்ட படையை அகற்றியே மீண்டு வந்திட வெய்யவன் வீரன் மேல் நீண்டமாயன் நெடும் படை வீசினான். |
96 |
|
|
|
|
|
|
|
6700.
| வீசும் அப்படை தன்னை விலக்கினான் கேசவன் படையால் கிளர் மொய்ம்பு உடை மாசில் கேள்வியன் மற்று அது நோக்கியே நீசன் மா மகன் உள்ளம் நினை குவான். |
97 |
|
|
|
|
|
|
|
6701.
| தொட்ட தொட்ட படைகள் தொலை உற விட்டனன் படை மேலினி யாவையும் அட்டு நல்கும் அரன் படை தூண்டுறின் ஒட்டலன் கரத்து உண்டது கண்டதே. |
98 |
|
|
|
|
|
|
|
6702.
| ஆதலால் யான் அப்படை தூண்டிடில் ஊதியத்தை உடைத்தன்று மாயையால் ஏதிலானை இனி அடல் செய்வதே நீதி என்று நினைந்தனன் நேரலன். |
99 |
|
|
|
|
|
|
|
6703.
| விஞ்சை மாய வியன் முது மந்திரம் நெஞ்ச மீது நெறிப்பட எண்ணியே செஞ்சுடர்க் கதிரைச் சிறை செய்திடு வஞ்ச மைந்தன் மறைந்தனன் தேரொடும். |
100 |
|
|
|
|
|
|
|
6704.
| பாங்கு முன்னரும் பின்னரும் பாய்கதிர் தூங்கு தேரொடு துன்னலன் ஏகுறா வீங்கும் ஆற்றல் விறல் உடை மொய்ம்பன் மேல் வாங்கு வில் கணை மாரி வழங்கினான். |
101 |
|
|
|
|
|
|
|
6705.
| சூறை என்னத் திரிபவன் தூண்டிய மாறு இல் வாளி படப்பட வள்ளல் மெய் ஊறதாகி உலப்பறு செம்புனல் ஆறது என்ன வழிக் கொண்டதால் அரோ. |
102 |
|
|
|
|
|
|
|
6706.
| அண்டர் நோக்கி அழிந்தனர் பாரிடர் தண்டமோடு தளர்ந்தனர் சார்பினோர் விண்டு விண்டு வெருவினர் அச்செயல் கண்டு வீரன் கனல் எனச் சீறினான். |
103 |
|
|
|
|
|
|
|
6707.
|
ஒன்று ஒரு மாயை தன்னால் உய்ந்து முன் வென்று போனான்
இன்று உமது உன்னினானோ இனியது முடிக்க அற்றோ
நன்று இது நன்று இது அம்மா நான் இவன் தன்னை இன்னே
கொன்றிடு கிற்பேன் என்னாக் குறித்தனன் குமரன் பின்னோன்.
|
104 |
|
|
|
|
|
|
|
6708.
|
ஈது தன் புந்தி தேற்றி ஈங்குஇவன் சூழ்ச்சி மாய்ந்து
போதருகின்ற வாறு புரிகுவன் விரைவின் என்னாச் சேதனம் கொண்ட துப்பின் தெய்வதப் படையைப் போற்றி மேதகு வழிபாடு ஆற்றி அவுணனைக் குறித்து விட்டான். |
105 |
|
|
|
|
|
|
|
6709.
|
பொருவரும் திறலோன் விட்ட போதகப் படையே பானாள்
இருளினை இரியல் செய்யும் இரவிபோல் சேறலோடும் விரைவொடு விஞ்சை மாயம் விளிந்தது வேந்தன் மைந்தன் ஒரு பெரும் தேரும் தானும் ஆகியே உம்பர் நின்றான். |
106 |
|
|
|
|
|
|
|
6710.
|
தோன்றியே
விண்ணின் நின்ற சூர் மகன் தொலைவில் ஆற்றல்
சான்றதன் மாயம் போன தன்மையும் தடந்தோள் வீரன்
ஆன்ற நல் வலியும் நோக்கி அயர்ந்தனன் அயர்ந்து முன்னம்
மான்றிடும் அமரர் யாரும் மனம் மகிழ் சிறந்து நின்றார். |
107 |
|
|
|
|
|
|
|
6711.
|
அவ்வழி வீர மொய்ம்பன் அந்தர வழிக்கண் நின்ற
மைவழி சிந்தை மைந்தன் மாண்பினை நோக்கி வஞ்ச வெவ்வழி இனி நீ போதி யான் இவண் அடுவன் என்னாக் கைவழி வரிவில் வாங்கித் தேரொடும் ககனம் சென்றான். |
108 |
|
|
|
|
|
|
|
6712.
|
விண்ணிடைப் புகுந்த வீரன் வெலற்கு அரும் சூரன் மைந்தன்
கண் உற முன்பு நேர்ந்து கணை பல கோடி தூர்த்தான்
நண்ணலன் அவனும் சீறி நவின்றது ஓர் சாபம் வாங்கித்
துண் என விசிக மாரி சொரிந்தனன் சுரர்கள் அஞ்ச. |
109 |
|
|
|
|
|
|
|
6713.
|
நீரொடு கனலும் மாறாய் நெடுஞ்சினம் திருகி நின்று
போரினை இழைப்பது என்ன இருவரும் பொருது நின்றார்
ஓர் இறை அளவை தன்னில் ஓர் ஆயிரம் நூறு கோடி
சாரிகை திரிந்த அம்மா அனையவர் தடம் பொன் தேர்கள்.
|
110 |
|
|
|
|
|
|
|
6714.
|
ஏற்று இகல் புரியும் வீரர் எதிர் எதிர் துரக்கும் வாளி
நால் திசை கொண்ட அண்டப் பித்திகை காறும் நண்ணி
மேல் திகழ் பரிதிப் புத்தேள் வியன் கதிர் வரவு தன்னை
மாற்றி எவ் உலகு உளோர்க்கு மலிதுயர் விளைத்த அன்றே.
|
111 |
|
|
|
|
|
|
|
6715.
|
செற்றமொடு இவர்கள் வீசும் திருநெடுங் கணைகள் யாண்டும்
முற்றிடுகின்ற காலத்து உகுவன கவன மான் தேர்
அற்றன புரவி மாலை அவிந்தன களிற்றின் ஈட்டம்
இற்றன அவுணர் சென்னி இறுவன பூதர் யாக்கை. |
112 |
|
|
|
|
|
|
|
6716.
| கிட்டுவ சேணில் செல்வ கிளருவ கிடைத்துப் பின்னும் முட்டுவ ஒன்றை ஒன்றை இடம் வலம் முறையில் சூழ்ந்து வட்டணை புரிவ வானோர் மதிக்கவும் அரிய வல்லே எட்டு உள திசையும் விண்ணும் திரிவன இருவர் தேரும். |
113 |
|
|
|
|
|
|
|
6717.
|
இகழுவர் முனிவர் வெஞ்சூள் இயம்புவர் வன்மை நோக்கிப்
புகழுவர் உரப்பி வீரம் புகன்று எடுத்து அழைப்பர் பூசல்
மகிழுவர் நகைப்பர் வெற்றி வால் வளை முழக்கம் செய்து
திகழுவர் கணையின் மாரி சிந்துவர் தெழித்துச் செல்வர். |
114 |
|
|
|
|
|
|
|
6718.
|
புரந்தனை அட்ட செல்வன் புதல்வனும் அவுணன் சேயும்
விரைந்து எதிர் மலைந்த காலை முறை முறை வெகுண்டு விட்ட
வரம் தெறு பகழி மாரி அகிலமும் விரவிச் செல்லக்
கரந்தனன் இரவி திங்கள் கலைகளும் குறைந்தது அன்றே. |
115 |
|
|
|
|
|
|
|
6719.
|
கால் ஒப்பன கூற்று ஒப்பன கனல் ஒப்பன கடுவின்
பால் ஒப்பன உரும் ஒப்பன பணியார் புரம் பொடித்த கோல் ஒப்பன கதிர் ஒப்பன குன்றந்தனைக் கொன்ற வேல் ஒப்பன இருவீரரும் விடல் உற்றிடு விசிகம். |
116 |
|
|
|
|
|
|
|
6720.
|
வரை புக்கன புயல் புக்கன வான் புக்கன மறிதெண்
திரை புக்கன கடல்புக்கன திசைபுக்கன திசை சூழ்
தரை புக்கன அண்டத்து உழைதனில் புக்கன பிலத்தின்
நிரை புக்கன இளையோனுடன் அவுணன் விடு நெடுங்கோல்.
|
117 |
|
|
|
|
|
|
|
6721.
|
திரிகின்றன
இருவோர் விடு தீ வாளியும் அவை பட்டு
எரிகின்றன புயலின் குலம் இரு நால் திசைக் கரியும் கரிகின்றன புவி விண்டன கடல் வற்றின உடுமீன் பொரிகின்றன உலகு எங்கணும் புகை விம்மியது அன்றே. |
118 |
|
|
|
|
|
|
|
6722.
|
பொடி ஓங்கிய திறன் மொய்ம்பு உடைப் புலவன் விடு சரத்தை
வடியோங்கிய கணை மாரியின் அருக்கன் பகை மாற்றும்
கொடியோன் மகன் விடு வாளியைக் குதை வெங்கணை மழையால்
நெடியோன் தனித் துணை ஆனவன் அறுத்தே உடன் நீக்கும்.
|
119 |
|
|
|
|
|
|
|
6723.
|
போர் இவ்வகை இரு வீரரும் பொரல் உற்றிடு பொழுதில்
பாரின் தலை நின்றோர்களும் இமையோர்களும் பார்த்தார் ஆர் இங்கு உளர் இவரே என அமர் செய்தவர் அடுபோர் வீரர் தனில் எவரே இவர்க்கு இணை என்று வியந்தார். |
120 |
|
|
|
|
|
|
|
6724.
|
அவ் வேலையின் நூறு ஆயிரம் அடுவெங்கணை அதனால்
மை வேலையில் வருபானுவைத் தளை பூட்டிய மைந்தன்
செவ் வேலவன் திருத் தூதுவன் தேரைப் பொடி படுத்தி
எவ்வேலையும் வெருக் கொண்டிட இடி ஏறு என ஆர்த்தான்.
|
121 |
|
|
|
|
|
|
|
6725.
|
ஆர்க்கின்றுழி விறல் மொய்ம்பு உடை அறிவன் சினந்து இருகிச்
சீர்க்கின்ற விண்மிசை நின்று தன் சிலை கால் உற வாங்கிக்
கூர்க்கும் கணை ஓர் ஆயிரம் கொளுவித் துரந்திட்டுக்
கார்க்கின்ற மெய் அவுணர்க்கு இறை கடுந் தேர் துகள் கண்டான்.
|
122 |
|
|
|
|
|
|
|
6726.
|
வையம் துகளாய் இற்றிட வானத்து இடை நின்ற
வெய்யன் பெருஞ் சினம் செய்து வில் வீரன் தனது உரத்தின்
ஐ அஞ்சு நஞ்சு அயில் வாளி புக்கு அழுந்தும் படி தூண்டிச்
சையந் தனைக் கடந்தேவளர் தடந்தோள் புடைத்து ஆர்த்தான்.
|
123 |
|
|
|
|
|
|
|
6727.
|
உரத்தில் புகு நெடு வாளியின் உள நொந்திடும் உரவோன்
கரத்தில் சிலை தனில் ஏழ் இரு கணை பூட்டினன் செலுத்தி
வரத்தில் தனக்கு இணை இல்லது ஒர் மன்னன் மகன் தனது
சிரத்தில் பொலி மகுடம் தனைச் சிந்தித் துகள் செய்தான். |
124 |
|
|
|
|
|
|
|
6728.
|
மாண் கொண்டிடு முடி சிந்திட வறியான் எனத் திகழும்
ஏண் கொண்டிடு சூரன் மகன் ஏழ் ஏழ் கணை தூண்டித்
தூண் கொண்டிடு திறல் மொய்ம்புடைத் தொல்லோன் உரம்
பிணித்த
நாண் கொண்டிடு கவசம் தனை நடுவே துணித்திட்டான். |
125 |
|
|
|
|
|
|
|
6729.
| ஆகம் படு நெடுஞ்சாலிகை அழிவெய்தலும் அழல் கால் நாகம் படு சடையோன் சுதன் நன்று ஈது என நகையாப் பாகம் படு பிறைபோல் எழு பகுவாய்க் கணை செலுத்தி மேகம் படு மணி மேனியன் வில்லைத் துணி படுத்தான். |
126 |
|
|
|
|
|
|
|
6730.
|
வில் ஒன்று இரு துணி ஆதலும் வெங்கூற்றினும் வெகுளா
அல் ஒன்றிய மனத் தீயவன் அயன் முன் கொடுத்துள்ள
எல் ஒன்றிய தனி வேலினை எடுத்து ஈங்கு இவன் தன்னைக்
கொல் என்று உரைத்து உரவோன் மிசை குறித்துச் செலவிடுத்தான்.
|
127 |
|
|
|
|
|
|
|
6731.
|
விடுத்த காலையின் இத்திறம் தெரிந்திடும் விறலோன்
அடல் பெரும் கணை ஆயிரம் கோடிகள் அதனைத் தடுத்திடும் படி செலுத்தினன் அவை எலாம் தடிந்து வடித்த வேல் படை வான் வழிக் கொண்டு வந்ததுவே. |
128 |
|
|
|
|
|
|
|
6732.
|
வந்த
காலையில் அதன் வலி நோக்கியே வள்ளல்
இந்து சேகரன் உதவிய நாந்தகம் எடுத்துக் கந்த வேள் அடி வழுத்தியே கருதலன் விடுத்த குந்த வெம்படை இருதுணி பட்டிடக் குறைத்தான். |
129 |
|
|
|
|
|
|
|
6733.
| குறைத்த காலையில் அமரர்கள் ஆடினர் கொடியோன் திறத்தர் ஆகிய அவுணர்கள் ஏங்கியே திகைத்தார் அறத்தை ஆற்றிடும் இளையவன் அங்கு அது நோக்கி எறித்தரும் சுடர் வாளினை உறை அகத்து இட்டான். |
130 |
|
|
|
|
|
|
|
6734.
| அள் இலைத் தனி வேல் படை இறுதலும் அதனைக் கள்ள விஞ்சைகள் பயின்றிடு சூர் மகன் காணாத் தெள்ளிது அம்மவோ என்படை வலி எனச் செப்பிப் பொள் எனக் கரவாளம் ஒன்று எடுத்தனன் பொருவான். |
131 |
|
|
|
|
|
|
|
6735.
| கரு முகில் புரை மேனியன் கரத்தில் வாள் பற்றி விரவு மின்னுவின் கொடி என விதிர்த்து முன் வீசி உரும் இடிக்குலத் தாவலங் கொட்டி ஆர்த்து உருத்துச் செரு முயற்சியால் சீர் இளங் கோவின் முன் சென்றான். |
132 |
|
|
|
|
|
|
|
6736.
| சென்ற காலையில் இளையவன் தன் பெருஞ் சிலை கால் ஒன்ற வாங்கியே பகழி பல்லாயிரம் உய்த்து வென்றி வாள் படையான் உரம் கிழித்திட விடர்செய் குன்றில் வீழ்தரும் அருவி போல் வீழ்ந்தது குருதி. |
133 |
|
|
|
|
|
|
|
6737.
| பரிதி மாற்றலன் மிசைவரு பகழியும் பாரான் குருதி வீழ்வதும் உரம் பகிர் உற்றதும் குறியான் ஒரு தன் மானமும் தானுமாய் ஓடினன் குறுகிச் சுருதி அன்னவன் சிலையினை வாளினால் துணித்தான். |
134 |
|
|
|
|
|
|
|
6738.
|
வில் இறுத்திடு விறலினோன் மிசைபடக் கிளர்ந்து
செல் எனத் தெழித்து ஒரு தன் வாள் வீசினன் திரிய அல்லல் உற்றிடும் இமையவர் அங்கு அது நோக்கி இல்லை மற்று இவன் இறந்த பின் அமர் என்பது என்றார். |
135 |
|
|
|
|
|
|
|
6739.
| அங்க வெல்லையில் வீரவாகுப் பெயர் அறிஞன் திங்கள் சூடிய உலகு அடும் தாதையில் சீறித் துங்க மிக்க தன் வாளுரீஇக் கறங்கெனச் சுற்றி எங்கண் ஏகுதி என்று போய் அவுணனை எதிர்த்தான். |
136 |
|
|
|
|
|
|
|
6740.
| ஏற்று எதிர்ந்திடும் எல்லையின் இரவி அம் பகைவன் காற்று எனச் சென்று நேர்ந்தனன் இருவரும் கலந்து சீற்ற நீர்மையால் வாள் அமர் உழந்தனர் செங்கண் கூற்றும் அங்கியும் சமர் புரிகின்ற கோட்பு என்ன. |
137 |
|
|
|
|
|
|
|
6741.
| மாறு மாறு சென்று அடிமுதல் உறுப்பினை வாளால் வேறு செய்திட எறிகுவர் அன்னது விலக்கி ஊறு செய்திற நாடுவர் இடை தெரிந்து உறாமல் சூறையாம் எனச் சுற்றுவர் வட்டணை சூழ்வார். |
138 |
|
|
|
|
|
|
|
6742.
| இன்ன தன்மையில் இருவரும் வாள் அமர் இயற்றி மன்னு காலையில் சூர்மகன் விஞ்சையின் வலியால் தன்னை நேர் இலா இளையவன் தடக்கை வாள் அகற்றி அன்னவன் திருத் தோள்மிசை எறிந்தனன் அன்றே. |
139 |
|
|
|
|
|
|
|
6743.
|
மாற்றலன்
கர வாளினால் எறிதலும் வள்ளல்
ஆற்றல் மொய்ம்பு இடைக் குருதியாறு இழிதர அது கண்டு ஏற்றம் எய்தினன் சூர் மகன் இவன் தனக்கு இளையோன் தோற்றிடும் கொல் என்று இரங்கினர் வானவர் துளங்கி. |
140 |
|
|
|
|
|
|
|
6744.
| அன்ன காலையில் இளையவன் அறுமுகத்து அமலன் பொன்னின் சேவடி புந்தியில் உன்னியே புகழ்ந்து மின்னு வானதன் வாள் படை வீசியே விரைந்து துன்னலன் வலத் தோளினை வலியொடு துணித்தான். |
141 |
|
|
|
|
|
|
|
6745.
|
துணித்த காலையில் வலதுகை தன்னொடு தொடர்ந்த
பணித்தன் இச்சுடர் வாளினை இடக்கையால் பறித்து
மணித் தசும்பு கொள் மொய்ம்புடை அவுணர் கோன் மற்றும்
தணிப்புருஞ் சினம் தன்னொடு முயன்றனன் சமரே. |
142 |
|
|
|
|
|
|
|
6746.
| தீயவன் தனி முயற்சியை நோக்கியே திறலோன் தூய வாள் கொடே அன்னவன் இடக்கையைத் துணிப்ப மாயை தொல் படை விடுத்திடுவேன் என மதித்தான் ஆய காலையில் அறிஞனும் அவன் தலை அறுத்தான். |
143 |
|
|
|
|
|
|
|
6747.
|
வாளில் அங்கு அவன் அடுதலும் சென்னியும் வரை நேர்
தோளும் யாக்கையும் வீழ்ந்தன சூரியன் பகைஞன்
நாள் உலந்தனன் அவன் உயிர் வௌவியே நடுவன்
ஆளி மொய்ம்பனை வழுத்தியே தென் புலத்து அடைந்தான்.
|
144 |
|
|
|
|
|
|
|
6748.
| சூரன் மாமகன் முடிந்தது முனிவரும் சுரரும் ஆரும் நோக்கியே ஆடினர் பாடினர் ஆர்த்தார் வீர வீரன் நீ யாம் என இளவலை வியந்து மாரியாம் என அவன் மிசை பொழிந்தனர் மலர்கள். |
145 |
|
|
|
|
|
|
|
6749.
| நுவல் அரும் திறல் சூர் மகன் பட்டது நோக்கி அவலம் எய்தியே அழிந்திடு பூதர்கள் ஆர்த்துத் தவலரும் திறல் வீரனை வழுத்தினர் தனது கவலை நீங்கியே களித்தனன் செங்கதிர்க் கடவுள். |
146 |
|
|
|
|
|
|
|
6750.
| அன்ன காலையில் வீரவாகுப் பெயர் அறிஞன் தன் உளம் சிறந்து அகல் இரு விசும்பினைத் தணவா இந் நிலத்திடை வந்து தன் துணைவர் தம் இனத்தைத் துன்னி ஆங்கு அவர் புகழ்ந்திட இனையன சொல்வான். |
147 |
|
|
|
|
|
|
|
6751.
| ஆன தொல் பெரு மாயையால் நம்மை முன் அலைத்த பானு கோபனை அட்டனம் பகர்ந்த சூளுறவு தானு முற்றியதால் இனி எம்பிரான் தன் முன் சேனை தன்னொடு மேவுதும் செல்லுதிர் என்றான். |
148 |
|
|
|
|
|
|
|
6752.
| மிக்க வீரன் இத்தன்மையை உரைத்தலும் வினவி முக்கண் நாயகன் குமரவேள் இணை அடி முன்னம் புக்கு நென்னலும் தொழுதில நன்று நீ புகன்றாய் தக்கதே இது என்றனர் துணைவராம் தலைவர். |
149 |
|
|
|
|
|
|
|
6753.
|
ஆங்கு அவ் வெல்லையின் நம்பிதன் இளைஞரும் அடுபோர்
தாங்கு பூதரும் தானையம் தலைவரும் தழுவிப்
பாங்கர் வந்திடப் பொருகளம் ஒருவியே படர்ந்து
பூங் கிடங்கு சூழ் பாசறை இருக்கையுள் புகுந்தான். |
150 |
|
|
|
|
|
|
|
6754.
|
சோதி
நீடிய பாசறை புகுந்திடு தூயோன்
பூதர் தம்மொடும் துணைவர்கள் தம்மொடும் போந்து காதலாகியே அறுமுகத்து ஐயனைக் கண்டு பாத பங்கயம் தன்னிடைப் பன் முறை பணிந்தான். |
151 |
|
|
|
|
|
|
|
6755.
| பரிந்து பன் முறை வணங்கியே எழுதலும் பகவன் தெரிந்து நோக்கி நீ சூர் மகனொடுபோர் செய்து வருந்தி ஆங்கவற் செற்றனை ஆதலின் மகிழந்தாம் விரைந்து கேண் மதி நல்குதும் வேண்டுவது என்றான். |
152 |
|
|
|
|
|
|
|
6756.
|
என்று மூவிரு முகம் உடைப் பண்ணவன் இயம்ப
நின்று போற்றிடும் இளையவன் எம்பிரான் நின்னை
அன்றி யான் செய்த செயல் இலை ஆயினும் அடியேன்
கொன்று மற்று இவண் அருளிய வேண்டும் என்று உரைப்பான்.
|
153 |
|
|
|
|
|
|
|
6757.
| கோல நீடிய நிதிபதி வாழ்க்கையும் குறியேன் மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெஃகேன் மால் அயன் பெறு பதத்தையும் பொருள் என மதியேன் சால நின்பதத்து அன்பையே வேண்டுவன் தமியேன். |
154 |
|
|
|
|
|
|
|
6758.
|
அந்த நல்வரம் முத்தியின் அரியது ஒன்று அதனைச்
சிந்தை செய்திடு தவத்தரும் பெறுகிலர் சிறியேன் உய்ந்திடும் வகை அருள் செய வேண்டும் என்று உரைப்ப எந்தை கந்தவேள் உனக்கு அது புரிந்தனம் என்றான். |
155 |
|
|
|
|
|
|
|
6759.
| உடைய தொல் விறல் வாகுவுக்கு இவ்வரம் உதவிப் புடையினில் தொழு துணைவர்க்கு நல்லருள் புரியா அடைய மற்றவர் இருக்கைகள் வைகுவான் அருளி விடை புரிந்தனன் யாவர்க்கும் மேலதாம் விமலன். |
156 |
|
|
|
|
|
|
|
6760.
| செங்கதிர்ப் பகை அட்டவன் முதலிய திறலோர் புங்கவன் தனைத் தொழுது தம் இருக்கையில் போனார் இங்கு மற்று இது நின்றிட அவுணர் தம் இறைவற்கு அங்கண் உற்றிடு செய்கையை மேல் இனி அறைவாம். |
157 |
|
|
|
|
|
|
|
6761.
|
ஈது இவர் புரிந்ததேல் இறைவன் தன்னையும்
காதுவர் என்பது கருத்துள் கொண்டு எழா வாதுவர் கவனமா வழிக் கொண்டால் எனத் தூதுவர் ஓடினர் துளங்கு நெஞ்சினார். |
158 |
|
|
|
|
|
|
|
6762.
| மதி தொடு கடிமதில் மகேந்திரப் புரத்து அதிர் தரு முரசொலி அவிந்து துன்பினான் முதிர் உறும் அழுகுரல் முழங்கும் வீதி போய்க் கதும் என அரசவைக் களத்துள் ஏகினார். |
159 |
|
|
|
|
|
|
|
6763.
| துன்னிய பெரும் புனல் தூண்டு கண்ணினர் உன்ன அரும் துயரினர் உயிர்க்கு நாசியர் மன்னவன் இணை அடி வணங்கி உன் மகன் முன் உறு தூதனால் முடிவு உற்றான் என்றார். |
160 |
|
|
|
|
|
|
|
6764.
| தாழ்ந்தவர் மொழிந்திடு தன்மை கேட்டலும் சூழ்ந்திடு திருவுடைச் சூரன் என்பவன் ஆழ்ந்திடு துயர்க் கடல் அழுந்தி ஓ எனா வீழ்ந்தனன் புரண்டனன் உயிர்ப்பு வீங்கினான். |
161 |
|
|
|
|
|
|
|
6765.
|
நக்கு
உறு சுடர் என நடுகம் உள்ளுற
மிக்கு எழு குருதி நீர் விழிகள் கான்றிடத் தொக்குடல் வியர்பொடு துளக்கம் கொண்டிட அக்கணம் மயங்கினன் அறிவு சோர்ந்துளான். |
162 |
|
|
|
|
|
|
|
6766.
| தளர்ந்து உடல் வெதும்புறத் தன் கண் சோர்வுற உளந்திரிவு உற உயிர் ஊசல் ஆடிட விளிந்தவராம் என வீழ்ந்து மான்றவன் தெளிந்தனன் இரங்கினன் இனைய செப்பினான். |
163 |
|
|
|
|
|
|
|
6767.
|
மைந்தவோ என்றன் மதகளிறோ வல் வினையேன்
சிந்தையோ சிந்தை தெவிட்டாத தெள் அமுதோ தந்தையோ தந்தைக்குத் தந்தை இலான் கொன்றனனோ எந்தையோ நின்னை இதற்கோ வளர்த்தனனே. |
164 |
|
|
|
|
|
|
|
6768.
|
வன்னச் சிறுவர் பலர் மாய்ந்தார் அவர் மாய்ந்து
முன்னைத் துணை என்று உளம் கொண்டு இருந்தனன் ஆல்
என்னைத் தனியே வைத்து எந்தையுமே குற்றனையேல்
பின்னைத் தமியேன் பிழைக்கும் படி உண்டோ. |
165 |
|
|
|
|
|
|
|
6769.
| ஒன்னார் சிறையைவிடின் உய்வுண்டாம் என்றுமுனஞ் சொன்னாய் அதுவும்இகழ்ந் துன்னைத் தோற்றனனால் என்னாம் இனி அதனை எண்ணுவது இயாவருக்குந் தன்னால் வராத வினை உளதோ தக்கோனே. |
166 |
|
|
|
|
|
|
|
6770.
| நன்று ஈது அல சமர்க்கு நண்ணுவது நண்ணலர் மேல் என்றீர அமாக இசைத்தாயான் ஏகாமல் சென்றீ எனவே செலுத்தி உனைப் போக்கினனால் ஒன்று ஈங்கு உளதோ பிழை உன் மிசை ஐயா. |
167 |
|
|
|
|
|
|
|
6771.
| கைப் போது கொண்டு கடவுளர்கள் எல்லோரும் முப்போதும் வந்து முறையால் வழிபடுவார் ஒப்போதல் இல்லா உனது மேல் உள்ள பகை இப்போது உடன் நீங்கியே முற்று இருந்தாரோ. |
168 |
|
|
|
|
|
|
|
6772.
| உன் ஆணைக்கு அஞ்சி உறங்காது உழன்றிடுமால் இந் நாள் தனில் நீ இறந்தாய் என மகிழ்ந்து பன்னாகப் பாயல் படுத்து இருவர் கால் வருடத் தொல் நாள் எனவே கவலை இன்றித் துஞ்சானோ. |
169 |
|
|
|
|
|
|
|
6773.
| நம் தானவர் குலத்து நாயகமே நண்ணினர்க்கு ஓர் சிந்தா மணியே திருவே என் தெள் அமுதே எந்தாய் தனியே போய் எங்கிருந்தாய் அங்கே யான் வந்தாலும் உன் தன் மதுர மொழி கேட்பேனோ. |
170 |
|
|
|
|
|
|
|
6774.
|
சோராத சூழ்ச்சித் துணைவர் சிறார் எல்லாரும்
சேரார் பொருது அலைப்பச் சென்று ஒழிந்து போயினரால் ஆராய்ந்து எனது துயர் ஆற்றுவதற்கு ஆருமிலை வாராய் புதல்வா கடிது ஓடி வாராயே. |
171 |
|
|
|
|
|
|
|
6775.
| நீடித் திகழ் கதிரால் தீண்டி நினது சிறை வீடிச் சதுர் முகத்தோன் வேண்டிட நீ விட்ட பின்னர் வாடித் தளர்ந்து வசை படைத்த வெய்யவனார் ஓடிக் ககனத்து உள மகிழ்ந்து செல்லாரோ. |
172 |
|
|
|
|
|
|
|
6776.
|
பற்றார்
அடித் தொண்டு பேணிப் பரந்து உழலும்
ஒற்று ஆனவனோ உனைத்தான் அட வல்லான் அற்றார் தமது உடலுக்கு ஆவியாய்ச் சென்றிடவே கற்றாயேல் என்னை மறந்திடவும் கற்றாயோ. |
173 |
|
|
|
|
|
|
|
6777.
|
மா கொற்ற மைந்தன் மடிந்தான் எனக் கேட்டும்
ஏகிற்று இலையால் இருக்கின்றது இன்னும் உயிர் வேகுற்றது உள்ளம் மிகு துயரம் வந்த வழிச் சாகு உற்றதோர் வரமும் சங்கரன் பால் பெற்றிலனே. |
174 |
|
|
|
|
|
|
|
6778.
| வெற்றி உள மதலை வீந்தால் விளியாமல் மற்றும் எனது உயிரும் வைகும் வலிதாகச் செற்றிடலும் ஆகாது என் செய்கேன் அழியாமல் பெற்ற வரமும் பிழையாய் முடிந்ததுவே. |
175 |
|
|
|
|
|
|
|
6779.
| ஆவியே கண்ணே அரசே உனைச் சமருக்கு ஏவியே இவ்வாறு இரங்குதற்கோ இங்கு இருந்தேன் கூவியே கொண்டு செலும் கூற்றுவன் ஒற்றோ அறியேன் பாவியேன் இந்தப் பதி புகுந்த தூதுவனே. |
176 |
|
|
|
|
|
|
|
6780.
| கூற்றோன் நகரில் குறுகினையோ அன்னது அன்றேல் வேற்றோர் இடம் தன்னில் மேவினையோ யான் ஒன்றும் தேற்றேன் தனியே தியங்குகின்றேன் இத்துயரம் ஆற்றேன் அரசே என் ஆருயிரே வாராயோ. |
177 |
|
|
|
|
|
|
|
6781.
|
என்னா இரங்கி இறைவன் வருந்துதலும்
அன்னான் உழையில் அவுணர் சிலர் ஓடித் துன்னார் களத்தில் துணிவுற்ற சீர் மதலை பொன்னார் உடலம் கொடு புலம்பிப் போந்தனரால். |
178 |
|
|
|
|
|
|
|
6782.
| சேந்த குஞ்சித் சிலதர் செஞ் ஞாயிறு பாய்ந்த அண்ணல் படிவ மிசைக் கொளா வேந்தன் முன் உற உய்த்து விரைந்தவன் பூந்தண் சேவடி பூண்டு புலம்பினார். |
179 |
|
|
|
|
|
|
|
6783.
| அண்டர் தம்மை அருஞ்சிறை வீட்டியே தண்டகம் செய் தனிக் குடை மன்னவன் துண்டம் ஆகிய தோன்றல் தன் யாக்கையைக் கண்டு அரற்றிக் கலுழ்ந்து கலங்கினான். |
180 |
|
|
|
|
|
|
|
6784.
| அற்ற மைந்தன் சிரத்தினை யாங்கையால் பற்று நல் எழில் பார்த்திடும் கண்களில் ஒற்றும் முத்தம் உதவும் உரன் இலாப் புற்று அராவில் உயிர்க்கும் புரளுமால். |
181 |
|
|
|
|
|
|
|
6785.
| துஞ்சல் ஆகித் துணிவுற்றும் தெவ்வர் மேல் நெஞ்சு கொண்ட நெடுஞ்சினம் தீர்கிலை விஞ்சு மானமும் வீரமும் வன்மையும் எஞ்சுமே கொல் இனி உன்னொடு என்னுமால். |
182 |
|
|
|
|
|
|
|
6786.
| கையில் ஒன்றைக் கதும் எனப் பற்றிடாச் செய்ய கண்படு செம்புனல் ஆட்டியே வெய்யவன் கொடு விண்ணினும் தந்தகை ஐய ஈது கொலோ என்று அரற்றுமே. |
183 |
|
|
|
|
|
|
|
6787.
|
வாள்
அரம் படு வாளிகள் மூழ்கலில்
சாளரங்கள் எனப் புழை தாங்கிய தோளை மார்பினை நோக்கும் தொலைவு இலா ஆளை நீ அலது ஆர் உளரே எனும். |
184 |
|
|
|
|
|
|
|
6788.
| பாறு உலாய பறந்தலை தன் இடை வேறு வேறு அது நின் மெய்யினைக் கூறு செய்து அவன் ஆவி குடித்தலால் ஆறுமோ என் அகத்துயர் என்றிடும். |
185 |
|
|
|
|
|
|
|
6789.
| மூண்ட போர்த்தொழில் முற்றிய என் மகன் ஈண்டு வந்தது ஒர் தூதுவன் எற்றிட மாண்டு உளான் என்று உரைத்திடின் மற்றியான் ஆண்ட பேர் அரசு ஆற்றல் நன்றே எனும். |
186 |
|
|
|
|
|
|
|
6790.
| சிரத்தை மார்பினைச் செங்கையைத் தொன்மை போல் பொருத்தி நோக்கிப் புரளும் என் புந்தியை வருத்தும் ஆகுலம் மற்று அது கண்டு நீ இருத்தியோ உயிரே இன்னும் என்றிடும். |
187 |
|
|
|
|
|
|
|
6791.
| மருளும் அங்கை மறிக்கும் மதலையை அருளின் நோக்கி அழும் விழும் சோர்வுறும் புரளும் வாயில் புடைக்கும் புவியிடை உருளும் நீட உயிர்க்கும் வியர்க்குமே. |
188 |
|
|
|
|
|
|
|
6792.
| மன்னர் மன்னவன் மற்று இது பான்மையால் இன்னல் எய்தி இரங்கலும் அச்செயல் கன்னி மா நகர்க் காப்பினுள் வைகிய அன்னை கேட்டனள் ஆகும் எய்தினாள். |
189 |
|
|
|
|
|
|
|
6793.
| நிலத்தில் வீழ்ந்து சரிந்து நெடு மயிர் குலைத்த கையள் குருதிபெய் கண்ணினள் அலைத்த உந்தியுள் ஆற்ற அரும் துன்பினள் வலைத் தலைப் படு மஞ்ஞையின் ஏங்கினாள். |
190 |
|
|
|
|
|
|
|
6794.
|
அல்லல் கூர்ந்த அவுணன் தன் காதலி
தொல்லை வைகிய சூழலை நீங்கியே இல்லை ஆகிய என் மகன் காண்பன் என்று ஒல்லை ஆவலித்து ஓடினள் ஏகினாள். |
191 |
|
|
|
|
|
|
|
6795.
| மா வலிக்கு மடங்கல் ஒப்பான் தனிக் காவலிக்குத் துயர் வந்த கன்னிமீர் நாவல் இக்கணம் நண்ணுதிர் என்று கூய் ஆவலித்தனர் ஆயிழைமார் எலாம். |
192 |
|
|
|
|
|
|
|
6796.
| வாங்கு பூ நுதல் மன்னவன் தேவி தன் பாங்கர் மங்கையர் பற்பலரும் குழீஇக் கோங்கம் அன்ன முலை முகம் கொட்டியே ஏங்கியே துயர் எய்தி இரங்கினார். |
193 |
|
|
|
|
|
|
|
6797.
| இந்திரைக்கு நிகர் வரும் ஏந்திழை அந்தம் இல்லது ஒர் ஆயிழை மாரொடு முந்தி யேகி முடிந்து துணிந்திடு மைந்தன் மீமிசை வீழ்ந்து மயங்கினாள். |
194 |
|
|
|
|
|
|
|
6798.
|
மயங்கினாள்
பின் மனம் தெளிவு எய்தினாள்
உயங்கினாள் மிக ஓ என்று அரற்றினாள் தியங்கினாள் உரும் ஏறு திளைத்திடு புயங்கம் என்னப் புரண்டு புலம்பினாள். |
195 |
|
|
|
|
|
|
|
6799.
|
வெய்யோன் என்று ஊழ் தீண்டுதலோடும் விண்ணில் போய்
கையோடு அன்னாற் பற்றினை வந்து என் கண் முன்னம்
மொய்யோடு அன்று வெஞ்சிறை செய்த முருகாவோ
ஐயோ கூற்றுக்கு இன்று இரையாவது அறியேனே. |
196 |
|
|
|
|
|
|
|
6800.
| பண்டே வானம் செந்தழல் மூட்டிப் பகை முற்றும் கொண்டே சென்றாய் அப்பகல் உன்றன் கோலத்தைக் கண்டேன் இன்றே இக்கிடை தானும் காண்பேனோ விண்டேன் அல்லேன் இவ்வுயிர் தன்னை வினையேனே. |
197 |
|
|
|
|
|
|
|
6801.
| செந்தேன் மல்கும் பூமகள் செங்கைக் கிளி ஒன்று முந்தே நின்னை வேண்டிட மொய்ம்பால் அது வாங்கித் தந்தாய் நொந்தேற்கு இன்று ஒரு மாற்றம் தருகில்லாய் அந்தோ அந்தோ செய்வகை ஒன்றும் அறியேனே. |
198 |
|
|
|
|
|
|
|
6802.
| பாபத்தாலோ விண்ணவர் ஆனோர் பலர் கூறும் சாபத்தாலோ யாரினும் மேலாம் தனிமூவர் கோபத்தாலோ எவ்வகையாலோ குறியேன் யான் சோபத் தீயால் வாடினன் நின்னைத் தோற்றேனே. |
199 |
|
|
|
|
|
|
|
6803.
| பொன்போல் மேனிக் கந்தனை இவ்வூர் புகுவித்துக் கொன் போர் மூட்டி மைந்தரை எல்லாம் கொல்வித்துத் துன்போடு இந்நாள் நீயும் இறப்பச் சூழ்ந்தாரே என் போல் ஆக வானவர் மாதர் எல்லோரும். |
200 |
|
|
|
|
|
|
|
6804.
| வான்றா வுற்ற வச்சிர மொய்ம்பன் வடவைத் தீக் கான்று ஆலிக்கும் வன்னி முகத்துக் கழல் வீரன் மூன்றா நூற்றுப் பத்தினர் யார்க்கும் முதல் வந்த தோன்றால் என்றே நின்னை இறைஞ்சிச் சூழ்ந்தாரோ. |
201 |
|
|
|
|
|
|
|
6805.
| துன்றேர் பெற்ற மெய்யொடு புந்தி துணிவாகச் சென்றே வானில் புக்கனை நின் பால் செலும் வண்ணம் ஒன்றே உள்ளம் தான் துணியாதால் உலைவு எய்தும் நன்றே நன்றே சிந்தையும் யானும் நண்பம்மா. |
202 |
|
|
|
|
|
|
|
6806.
|
கருந்தேன் மொய்த்த வண்டு என மின்னார் கட்கெல்லாம்
விருந்தே ஆகும் நின் நடை காணும் விதியற்றேன் மருந்தே அன்னாய் நின்னை இழந்தேன் மற்று இங்ஙன் இருந்தேன் அல்லேன் துஞ்சினன் அன்றோ இனியானே. |
203 |
|
|
|
|
|
|
|
6807.
| நையா நிற்கும் தேவர் தமக்கு நனி துன்பம் செய்யா நிற்றல் நன்று அல என்றேன் அது தேராது ஐயா நின்னைத் தோற்றனன் மன்னன் அவனும் தான் உய்வான் கொல்லோ தன் உயிர் தானும் ஒழியாதே. |
204 |
|
|
|
|
|
|
|
6808.
|
என்று இவை பன்னித் தேவி இரங்கினள் இரங்கலோடு
நின்றிடு துணைவி மாரும் நீடு தொல் கிளைஞர் யாரும்
கன்று ஒழி புனிற்றா என்னக் கதறினர் காமர் மூதூர்
வென்றியை நீங்கி அந்நாள் விழும நோய் மிக்கது அன்றே.
|
205 |
|
|
|
|
|
|
|
6809.
|
அன்னது
காலை தன்னில் அவுணர் கோன் இரக்கம் நீங்கிப்
பன்னரும் சிறப்பின் மிக்க பதுமையே முதலோர் தம்மைத்
தொன்னிலை இருக்கை உய்த்துத் துண் எனச் சீற்றம் கொண்டு
தன்னுழைத் தொழுது நின்ற தானவர்க்கு இதனைச் சொல்வான்.
|
206 |
|
|
|
|
|
|
|
6810.
|
மாற்றலர் தொகையை எல்லாம் வல்லையில் இன்றே செற்றுச்
சீற்றமாய்ச் குருதி வீட்டித் தீமகம் ஒன்றை ஆற்றி
ஈற்றுறு மைந்தன் தன்னை எழுப்புவன் இந்த மெய்யை
வீற்றொரு சாரின் இட்டு விடாது போற்றிடுதிர் என்றான். |
207 |
|
|
|
|
|
|
|
6811.
|
அன்னது பலரும் கேளா அழகிது என்று எடுத்து மைந்தன்
பொன் உடல் ஒரு சார் உய்த்துப் போற்றினர் போற்றலோடும்
மன்னவன் வெகுண்டு நம்தம் மாற்றலர் தொகையை எல்லாம்
என் இளையோனுக்கு ஊணா அளிப்பன் என்று எண்ணம் கொண்டான்.
|
208 |
|
|
|
|
|
|
|
6812.
|
தும்பை அஞ்சுழியல் வேய்ந்த சூர் முதல் இவ்வாறு உன்னிச்
செம்புனல் ஒழுகு பைங்கண் தூதரில் சிலரை நோக்கி
அம்புதி வடாது பாங்கர் ஆசுரத்து அரசு செய்யும்
எம்பியை வல்லை ஓடிக் கொண்ருதிர் ஈண்டை என்றான். |
209 |
|
|
|
|
|
|