சந்திர சாபப் படலம்
 
8407.
இன்ன பல் கிளைகள் மல்க இருந்திடும் தக்கன்
                                   பின்னர்த்
துன்னி ய நாள் மீனத்துள் தொகை பெறும் இருபான்
                                   ஏழு
கன்னியர் தம்மை நல்கிக் கடி மண விதியின் நீரால்
தன் நிகர் இல்லாப் பொற்பின் தண் மதிக் கடவுட்கு                                    ஈந்தான்.
1
   
8408.
ஈந்த பின் மதியை நோக்கி யார்க்கும் ஓர் பெற்றித்து
                                  ஆக
வாய்ந்திடும் ஆர்வம் உய்த்து மருவுதி சிலர் பால்
                                  அன்பில்
தோய்ந்து ஒரு சிலரை எள்ளிச் சுளிகிற்பாய் அல்லை                                   என்னா
ஆய்ந்து இவை புகன்று தேற்றி அனையரோடு ஏகச்                                   செய்தான்.
2
   
8409.
ஏகிய கடவுள் திங்கள் இலங்கு எழில் மானத்து ஏறி
மாக நீள் நெறியில் போந்து மடந்தையர் அவரை
                                 எல்லாம்
ஓகையால் மேவ உன்னி ஓர் பகற்கு ஒருவர் பாலாய்ப்
போகம் ஆர் இன்பம் ஆற்றி வைகலும் புணர்ச்சி                                  செய்தான்.
3
   
8410.
இன்னணம் புணர்ச்சி போற்றி ஏகிய திங்கள் புத்தேள்
பன்னியர் அனையர் தம்மில் பழுது இலா ஆரல் தானும்
பின்னவள் தானும் ஆற்றப் பேர் எழில் உடையர் ஆக
அன்னவர் திறத்து மேல் ஆம் ஆர்வமோடு அணுகல்                                      உற்றான்.
4
   
8411.
ஏனையர் தம்பால் சேரான் இருதுவின் வேலை பூத்த
தேன் இமிர் சொல்லார் மாட்டுச் சேர் உறா கணவரே                                       போல்
வான் இடை மதியப் புத்தேள் மறுத்தனன் திரியும்
                                      வேலை
ஆனது ஓர் பான்மை நோக்கி அவர் எலாம் முனிந்து                                       போனார்.
5
   
8412.
போந்தனர் தக்கன் தன்பால் பொருமியே பொலம் பூண்                                      கொங்கை
ஏந்திழை மாதர் தங்கள் கேள்வனது இயற்கை கூறக்
காந்திய உளத்தன் ஆகிக் கனன்று அவன் கலைகள்                                      எல்லாம்
தேய்ந்து இல ஆக என்று தீமொழிச் சாபம் செய்தான்.
6
   
8413.
செப்ப அரும் திருவில் வைகும் சிறுவிதி என்பான்
                              சொற்ற
இப் பெரும் சாபம் தன்னால் என்றும் எஞ்சாத திங்கள்
ஒப்பு அரும் கலைகள் வைகற்கு ஓர் ஒரு கலையாய்                               அஃகாப்
பொய்ப் பெரும் செல்வம் பெற்றோன் புகழ் எனக்                               குறைந்த அன்றே.
7
   
8414.
மூன்று உறழ் ஐந்து வைகல் முடிந்து உழி மதியம்                                   என்போன்
ஆன்ற தண் கலையின் மூ ஐந்து அழிதலும் அவனே                                   என்னச்
சான்று உரை செய்தல் போல் ஓர் தண்கலை இருத்த                                   லோடும்
மான்றனன் மெலிந்து வெள்கி வானவர் கோனை
                                  உற்றான்.
8
   
8415.
தக்கன் என்பவன் சாபத்தால் தண் கலை அனைத்தும்                                      போகி
இக்கலை ஒன்று நின்றது ஈதும் இன்று இறக்கும் என்னில்
மிக்க என் இயல்பும் குன்றும் வியன் பெயர் தொலையும்                                      யாண்டும்
புக்க தொல் புகழும் போகும் புகல் வசை ஆகும்
                                     அன்றே.
9
   
8416.
ஈங்கு இனிச் செய்வது என்னோ உணர்கிலேன் எற்கு ஓர்                                          புந்தி
தீங்கு அற உரைத்தி என்னச் செப்பினன் இரங்கி ஏங்கித்
தாங்க அரும் பையுள் வேலை சார்தலும் தழுவி எற்கு ஓர்
பாங்கனை அஞ்சல் என்னா இவை சில பகர்தல் உற்றான்.
10
   
8417.
எந்தை வாழ் கயிலை தன்னில் இப முகன் முதிரை யாவும்
தந்த பேர் அகடும் அம் கைச் சகுலியும் நோக்கி நக்காய்
அந்த நாள் அனையான் சீறி ஆரும் நின் காணார் ஆகி
நிந்தை செய்து அகலவே நீ சரின் திகழ்தி என்றான்.
11
   
8418.
என்ற அச் சாபம் தன்னால் இயாவரும் இறப்ப எள்ளி
அன்று தொட்டு உனை நோக்காராய் அகல நீ வெள்கி                                   விண்மேல்
சென்றிலை ஒடுங்கல் நாடித் திசைமுகன் முதலோர்                                   வெள்ளிக்
குன்று இடை ஏகி முன்னோன் குரைகழல் பணிந்து                                   சொல்வார்.
12
   
8419.
காண் தகு நினது மேன்மை கருதிடான் இகழ்ந்து மாசு
பூண்டனன் அதனால் திங்கள் பொருமல் உற்று ஒடுங்கும்                                       அன்னான்
வேண்டும் இவ் உலகிற்கு எந்தை விதித்திடும் சாபத்                                       தன்மை
ஆண்டு ஒரு வைகல் போற்ற அருள் புரிந்து அளித்தி                                       என்றார்.
13
   
8420.
ஐங்கரன் அதனைக் கேளா அவ்வகை அருள வெய்யோன்
திங்களின் முதலாம் பாலில் செல் உறு நாலாம் வைகல்
மங்குல் சூழ் உலகம் நோக்கா மரபினால் வதிந்தாய் மற்று                                            அப்
புங்கவற்கு அந் நாள் மிக்க பூசனை புரிய மேலோர்.
14
   
8421.
இது பழி ஒன்று நிற்க இன்று நீ தக்கன் தன்னால்
புதியது ஓர் குறையும் பெற்றாய் பொலிவொடு திருவும்                                      தீர்ந்தாய்
மதியினை மதியது அற்றாய் மற்று இனி வல்லை சென்று
விதியொடு பகர்தி சேயை வேண்டி ஈது அகற்றும்                                      என்றான்.
15
   
8422.
வச்சிரம் எடுத்த செம்மல் மற்று இவை புகலும் எல்லை
இச்செயல் இனிது வல்லே ஏகுவல் அவ்வாறு என்னா
அச்சென எழுந்து திங்கள் அவன் பணி தலைக் கொண்டு                                            ஏகி
முச்சகம் தன்னின் மேலாம் முளரியான் உலகம் புக்கான்.
16
   
8423.
தாமரை என்னும் தண் பூம் தவிசு இடைத் திகழ்ந்த                                    அண்ணல்
மா மலர் அடியின் வீழா மாதுலன் வெகுண்டு சொற்ற
தீ மொழி உணர்த்தி உன்றன் சேயினைத் தெருட்டித்                                    தீயேன்
தோமுறும் கவலை மாற்றித் துடைத்தி இச் சாபம்
                                   என்றான்.
17
   
8424.
அன்னது மொழிந்த திங்கட்கு அம்புயன் மொழிவான்                                    ஈண்டுத்
தன்னுள நெறிப்பால் அன்றிச் சார்கிலன் தக்கன் என்பான்
என் உரை இறையும் கொள்ளான் யான் அவன் மாட்டும்                                    செல்லேன்
முன் உளன் அல்லன் யார்க்கும் முதல்வனே ஆகி                                    நின்றான்.
18
   
8425.
சொல்லுவ பிறஎன் வேறு தொல்லை நாள் யானே கூற
அல் உறழ் கண்டத்து எந்தை அரும் பெரும்                                தன்மையாவும்
ஒல்லையின் உணர்ந்து பல்நாள் உழந்தது ஓர் தவத்தால்                                இந்த
எல்லை இல் திருவின் வைகி இறையும் அங்கு அவனை                                எண்ணான்.
19
   
8426.
செக்கரில் படர் சடைத் தீயின் தோற்றம் ஆம்
முக் கண் நாயகன் எதிர் மொழிந்து வேண்டல் ஆம்
எக் குறை ஆயினும் எவரும் ஈண்டையில்
தக்கன் முன் ஓர் உரை சாற்றல் ஆகுமோ.
20
   
8427.
அண்ணல் அம் திரு இடை அழுந்தி யாரையும்
எண்ணலன் செம் நெறி இயற்ற ஓர்கிலன்
கணிலன் மதி இலன் களிப்பின் ஓர் மகன்
மண் இடை விரைவொடும் வழிக் கொண்டால் என.
21
   
8428.
களி உறு பெற்றியான் கறுவு சிந்தையன்
அளி அறு முகத்தினன் அருள் இல் வாய்மையன்
தெளிதரும் உணர்வு இலன் சிதைந்து மேல் இவன்
விளிஉறு பொருட்டின் இம் மேன்மை பெற்று உளான்.
22
   
8429.
ஈண்டு இவன் விளிதலும் இன்றி எம்மனோர்
பூண்ட நல் நிலைகளும் போக்கல் சிந்தியான்
நீண்ட செம் சடைமுடி நிமலன் அன்னவன்
வேண்டிய வரம் எலாம் விரைவில் நல்கினான்.
23
   
8430.
அன்னது நிற்க யாம் அவனை வேண்டுவம்
என்னினும் முனிவு உறா இகழும் எம்மையும்
நின்னுறு சாபமும் நீக்கலான் இனிப்
பின் ஒரு நெறி உள பேசக் கேண்மியா.
24
   
8431.
செய்யனைக் கண்ணுதல் சிவனை எம்மனோர்க்
கையனை அடிகளை அமலன் ஆகிய
மெய்யனை அடைந்து நின் மேனி மாசினை
ஒய் என அகற்றிலை உணர்வு இலாய் கொலோ.
25
   
8432.
ஈது அவன் முன்பு சென்று இசைக்க நீக்கு நின்
பேது உற அனையது பேசல் வேண்டுமோ
மேதகும் இருளினால் விளங்கிடாத அவை
ஆதவன் காட்டுதற்கு ஐயம் செய்வரோ.
26
   
8433.
சிறார் என நமைஎலாம் சிறப்பின் நல்கிய
இறால் புரை சடைமுடி எந்தைக்கு அன்பர் ஆய்
உறாதவர் தம்மையும் உற்ற பான்மையர்
பெறாதோர் பொருளையும் பேச வல்லமோ.
27
   
8434.
தொருள் ஒடு தன் அடி சேரும் தொண்டினோர்
பருவரல் ஒழித்திடும் பான்மைக்கு அல்லவோ
விரிசுடர் கெழுவிய வெள்ளி ஓங்கலின்
அருள் உருவு எய்திய அமலன் மேயதே.
28
   
8435.
இடுக்கண் அங்கு ஒருவர் மாட்டு எய்தின் எந்தை தன்
அடித்துணை அரணம் என்று அடைவரே எனில்
துடைத்தவர் வினைகளும் தொலைக்கும் இப்பொருள்
பிடித்து இலை ஆற்றவும் பேதை நீரை நீ.
29
   
8436.
அந்தி அம் சடை முடி அண்ணல் தன் அடி
சிந்தை செய்து அடைந்திடு சிறுவன் மேல் வரு
வெம் திறல் நடுவனை விலக்கி அன்று முன்
வந்து அருள் புரிந்தது மறத்தி போலும் ஆல்.
30
   
8437.
விஞ்சிய திரை கெழு வேலை தன் வயின்
நஞ்சம் அன்று எழுதலும் நடுங்கி நாம் அவன்
தஞ்சு என அடி இணை சாரத் தான் மிசைந்து
அஞ்சல் என்று அருளியது அயர்க்கல் ஆகுமோ.
31
   
8438.
வார்த்தன உமையவள் மலர்க்கைத் தோன்றியே
ஆர்த்து எழு கங்கை இவ் அகிலம் எங்கணும்
போர்த்திட வெருவியாம் போற்றச் சென்னியில்
சேர்த்தி அன்று அளித்ததும் தேற்றிலாய் கொலோ.
32
   
8439.
அளப்பு அரும் குணத்தின் எம் அண்ணல் அன்பர் ஆல்
கொளப்படும் பேர் அருள் கூற்றின் பாலதோ
கிளத்திட அரியதேல் கேடுஇல் பல் பகல்
உளப்பட உன்னினும் உலவிற்று ஆகுமோ.
33
   
8440.
ஆதலின் ஈண்டு நின்று ஆதி நாயகன்
காதலின் மேய அக் கயிலை உற்றவன்
பாதம் இங்கு அரண் எனப் பற்றி வல்லைநின்
பேது உறல் ஒழி மதி பெரும்தண் மா மதி.
34
   
8441.
என்றலும் அயன் பதத்து இறைஞ்சி எம்பிரான்
நன்று இவை புகன்றனை ஞானமூர்த்தி பால்
சென்று அடைவேன் எனச் செப்பி வெள்ளிஅம்
குன்றினை அணைந்து பொன்கோயில் மேயினான்.
35
   
8442.
தன் உறு பருவரல் சாற்றக் காவலோன்
மன் அருள் நிலை ஒடு மரபின் உய்த்திடப்
பொன் அவிர் செம் சடைப் புனித நாயகன்
முன் உற வணங்கினன் முடிவுஇல் அன்பினால்.
36
   
8443.
மேல்திகழ் உபநிட வேத வாய்மையால்
போற்றலும் வந்தது என் புகல்தி ஆல் எனச்
சாற்றினன் உயிர் தொறும் தங்கித் தொல்வினை
தேற்றுபு வினைமுறை செலுத்தும் தொன்மையோன்.
37
   
8444.
நங்களை அலைத்திடு நண்ணலன் தனை
இங்கு இவண் அடுதும் என்று இருட்கள் சூழ்ந்து என
மங்குலின் நிறம் கொடு வடிவம் வேறது ஆம்
திங்கள் நின்று எம் பிராற்கு இனைய செப்புவான்.
38
   
8445.
வன்திறல் தக்கன் முன் வழங்கு தீச் சொலால்
துன்திரும் கலைஎலாம் தொலைந்து போந்திட
ஒன்றி இவண் இருந்ததால் உதுவும் தேய்ந்திடும்
இன்று இனி வினையினேன் யாது செய்வதே.
39
   
8446.
எஞ்சிய இக்கலை இருக்கத் தேய்தரு
விஞ்சிய கலை எலாம் மேவ நல்குதி
தஞ்ச நின் அலது இலை என்னத் தண்மதி
அஞ்சலை என்றனன் அருளின் ஆழியான்.
40
   
8447.
தீர்ந்தன அன்றியே திங்கள் தன்னிடை
ஆர்ந்திடு கலையினை அம் கையால் கொளா
வார்ந்திடு சதைமிசை வயங்கச் சேர்த்தினான்
சார்ந்திலது அவ்வழித் தக்கன் சாபமே.
41
   
8448.
மேக்கு உயர் தலைவர் ஆம் விண் உளோர்கள் பால்
தாக்கு உறு வினையையும் சாபம் யாவையும்
நீக்கிய தலைவன் இந் நிலவின் சாபத்தைப்
போக்கினன் என்பது புகழின் பாலதோ.
42
   
8449.
நெற்றி அம் கண் உடை நிமலத்து எம்பிரான்
உற்றவர்க்கு அருள் புரிகின்ற உண்மையைத்
தெற்றென உணர்த்தல் போல் திங்களின் கலை
கற்றை அம் சடை மிசைக் கவின்று பூத்ததே.
43
   
8450.
எந்தை அவ்வழி மதியினை நோக்கி நீ யாதும்
சிந்தை செய்திடேல் எம் முடிச் சேர்த்திய சிறப்பால்
அந்தம் இல்லை இக் கலை இவண் இருந்திடும் அதனால்
வந்து தோன்றும் நின் கலை எலாம் நாள் தொறும்                                    மரபால்.
44
   
8451.
நின்ன தொல் கலை ஐந்து முப் பகல் இடை நிரம்பிப்
பின்னர் அவ்வழி தேய்ந்து வந்து ஓர் கலை பிரியா
இன்ன பான்மையே நிகழும் எக் காலமும் என்றான்
முன்னை ஆவிதோறு இருந்து எலாம் இயற்றிய
                               முதல்வன்.
45
   
8452.
தல்வன் இவ்வகை அருள் புரிந்திடுதலும் முளரிப்
பத உகங்களில் வணங்கினன் விடை கொடு படரா
மதிய வானவன் தன் உலகு அடைந்து தொல் மரபில்
கதி கொள் செய்வினை புரிந்தனன் வளர்ந்தன கலையே.
46
   
8453.
ஒன்று வைகலுக்கு ஓர் கலையாய் நிறைந்து ஓங்கி
நின்ற தொல் நிலை நிரம்பியே பின் உற நெறியே
சென்று தேய்ந்து வந்து ஒரு கலை சிதைவு உறாது ஆகி
என்றும் ஆவதும் அழிவதும் போன்றனன் இரவோன்.
47
   
8454.
செம் கணான் முதல் அனைவரும் அம்மதித் திறத்தை
அம் கண் நாடியே தக்கனால் இவன் கலை அனைத்தும்
மங்கு மாறுமேல் வளர்வதும் இயற்கையாய் வகுத்தான்
எங்கள் நாயகன் செய்கை யார் அறிந்தனர் என்றார்.
48
   
8455.
செக்கர் வானமேல் கிளர்ந்து எழு திங்களின் செயலை
ஒக்க நாடியே சிந்தை ஆம் தூதினால் உணர்ந்து
தக்கன் என்பவன் கனன்றி யான் உரைத்த சாபத்தை
நக்கனே கொலாம் தடுக்க வல்லான் என நகைத்தான்.
49
   
8456.
எந்தை தன் தந்தை யாவரும் மருகனுக்கு யான் முன்
தந்த வாய்மையை விலக்கிலர் விலக்க என்றன் முன்
வந்தும் வேண்டிலர் அச்சம் உற்று இருந்தனர் மற்று அத்
தந்தை தாய் இலா ஒருவன் ஆம் என் உரை தடுப்பான்.
50
   
8457.
நன்று நன்று யாம் பரம்பொருள் நான்முகன் முதல் ஆம்
துன்று தொல் உயிர் யாவையும் அழித்தும் ஐந் தொழிலும்
நின்று நாம் புரிகின்றனம் எங்கணும் நீங்காம்
என்று தன் மனத்து அகந்தை உற்றான் கொலோ ஈசன்.
51
   
8458.
அன்னது அன்றியே இன்னம் ஒன்று உண்டு பார்                                 அகத்தில்
தன்னையே நிகர் தக்கனும் நோற்றிடு தவத்தான்
என்ன இத்திரு உதவினம் என்பதை நினைந்தோ
என்னது ஆணையை இகழ்ந்தனன் இத்திறம் இழைத்தான்.
52
   
8459.
செய்ய தோர் பரம் பொருள் யாம் என்பது தெளிந்தும்
வையம் மீதில் இத் திரு எலாம் பெற்று நம் மலர்த்தாள்
கையினால் தொழான் என்று கொல் முன்னியான் கழறும்
வெய்ய வாய்மையை விலக்கினன் சிவன் என                               வெகுண்டான்.
53
   
8460.
தகவும் ஈரமும் நீக்கிய புரை நெறித் தக்கன்
புகலும் வாய்மையைத் தேர்ந்துழிப் புலகன் என்று                                உரைப்போன்
நிகர் இல் கண் நுதல் கடவுளை எள்ளலை நின்னை
இகழ்வார் யாவரும் எஞ்சும் உன் வெறுக்கையும்
                               என்றான்.
54
   
8461.
என்றவன் முக நோக்கியே தவத்தினால் என்கண்
நின்ற இத்திரு நீங்குமோ நெடிய மால் முதலோர்
என்றும் என் பணி மறுத்து இலர் எள்ளுவது உண்டோ
நன்று நன்று நின் உணர்வு எனச் சிறுவிதி நக்கான்.
55
   
8462.
முறுவலித்திடு தக்கனைக் கண்ணுறீஇ முனிவன்
பிறர் இழிப்பு உரை கூடுறாது என்னினும் பெரும்சீர்
குறைவு பெற்றிடாது என்னினும் நினக்கு அருள் கொடுத்த
இறைவனைப் பழித்திடுவது தகுவதோ என்றான்.
56
   
8463.
புலகன் என்றிடு முனிவரன் இனையன புகல
விலகு தீ நெறி ஆற்றிய சிறு விதி வினவி
அலகு இலாத தன் ஆற்றலும் பெரும் திரு அனைத்தும்
உலகில் நீங்குவான் பெருமிதம் கொண்டு இவை                                   உரைப்பான்.
57
   
8464.
நோற்று முன்னியான் பெற்ற இத்திரு நுகர்ந்திடு முன்
மாற்றுவான் அலன் செய்வினை முறை அலால் வலிதின்
ஏற்றம் ஆக ஒன்று இழைக்கலன் ஆதலால் என்பால்
ஆற்றலால் அரன் செய்கின்றது என் என அறைந்தான்.
58
   
8465.
அறைதலோடும் அப் புலகன் என்று உரைப்பவன்                               அனைத்தே
உறுதி யாயினும் ஈசனை இகழ்ந்தவர் உய்யார்
மறை எலாம் அவை சொற்றது மற்று அவன் தன்னை
இறையும் எள்ளலை மனம் கொடு பராவுதி இனி நீ.
59
   
8466.
தன் அடைந்தவர் ஆகும் ஆற்றியே தகவால்
என்னது ஓர் பொருள் வெஃகினும் ஈகின்றது இயற்கை
அன்னவற்கு அது மதி தெரிந்து அடைதலும் அவன்பால்
நின்னின் உற்ற சாபத்தினை நீக்கினன் நெறியால்.
60
   
8467.
கற்றை வான் கலை நிறைந்த பின் முன்ன நீ கனன்று
சொற்ற வாய்மையும் நிறுவினன் நாள்தொறும் சுருங்கச்
செற்றம் என் இனித் திங்கள் நின் மருகன் அச் சிவனாம்
பெற்றம் ஊர்தியும் அம்முறை ஆவன் ஆல் பின் நாள்.
61
   
8468.
என்ன இத்திறம் மொழிதலும் சினமகன் இமையோர்
அன்னம் ஊர்தியோன் இயாவரும் புகழ்தர அனையான்
பல் நெடும் பகல் அரசின் வீற்று இருந்தனன் பரை ஆம்
கன்னி மற்று அவன் மகண்மை ஆய் வருதல் கட்டு                                  உரைப்பாம்.
62