முகப்பு |
ததீசி யுத்தரப் படலம்
|
|
|
8798.
|
இந்த வண்ணம் அத் ததீசி மா முனிவரன் இயம்பக்
கந்த மா மலர்க் கடவுள் சேய் நகை செய்து கானில் சிந்து என் பொடு சிரத் தொகை அணியுமோ தேவர் வெந்த சாம்பரும் பூசுமோ பரன் எனும் மேலோன். |
1 |
|
|
|
|
|
|
|
8799.
| கழிந்த தீ உடல் ஏந்தியே திரியுமோ கானில் இழிந்த தேசமும் தரிக்குமோ ஏனத்தின் எயிறு மொழிந்த கூருமத்தோடு மேல் கொள்ளுமோ உலகம் அழிந்திடும் படி உயிர்களை முடிக்குமோ அமலன். |
2 |
|
|
|
|
|
|
|
8800.
| புலியின் ஈர் உரி உடுக்குமோ தந்தியின் புன்தோல் வலிய தன்புயம் போர்க்குமோ செம் தழல் மழுமான் இலை கொள் முத்தலை வேல் படை ஏந்துமோ எங்கும் பலியும் ஏற்குமோ நிருத்தமும் செய்யுமோ பகவன். |
3 |
|
|
|
|
|
|
|
8801.
| மிக்க சாரதர் படை எனத் திரியுமோ விடமே கக்கும் வெம் பணி பூணுமோ வெண் தலை கலமாச் செக்கர் மாமுடி தரிக்குமோ அம்பரம் திசையா நக்கன் ஆகுமோ வேற்று உருக் கொள்ளுமோ நாதன். |
4 |
|
|
|
|
|
|
|
8802.
| விடையும் ஏறுமோ ஆலமும் கொள்ளுமோ வீந்தோர் சுடலை தன்னினும் ஆடுமோ ஒருத்தியைச் சுமந்து ஓர் மட மகட்கு இடம் கொடுக்குமோ மகவையும் பெறுமோ கடியது ஓர் குணம் படைக்குமோ பரம் எனும் கடவுள். |
5 |
|
|
|
|
|
|
|
8803.
|
ஆதலால் உங்கள் ஈசன் ஓர் குணம் இலன் அவனுக்கு
ஈதல் இன்றி யாம் புரிகின்ற மகத்து அவி எனலும்
நாதனைக் கொலோ பழிக்குவன் இவன் என நகையாக்
கோது இல் மா தவ முனிவரன் அழல் எனக் கொதித்தான்.
|
6 |
|
|
|
|
|
|
|
8804.
|
தீர்த்தன் உண்மையை உணர்கிலன் இவனொடு சிறிதும்
வார்த்தை கூறுதல் தகாது மால் அயன் முதல் வானோர் ஆர்த்த சங்கத்தில் இழந்து அவற்கு எதிர் மொழி அறைய ஈர்த்து என் உளம் உணர்த்துவன் சிலஎன இசைந்தான். |
7 |
|
|
|
|
|
|
|
8805.
| இந்தவாறு இசைந்து எம் பெருமான் தனக்கு இவண் நீ நிந்தை போல் சில கூறினை நிமலனுக்கு அவைதாம் வந்த வண்ணம் ஓர் சிறுவதும் உணர்ந்திலை மருண்டாய் புந்தி இல்லது ஓர் கயவ நீ கேள் எனப் புகல்வான். |
8 |
|
|
|
|
|
|
|
8806.
|
நிலவுகின்ற தன் அருள் உருக் கொண்டிடும் நிமலன்
தலைமை பெற்றிடு புங்கவர் தம்மை முன் தந்தே
உலகம் யாவையும் அளித்து அருள் செய்திட உதவி
அலகு இலா உயிர் யாவையும் அயன் கண் நின்று அளிப்பான்.
|
9 |
|
|
|
|
|
|
|
8807.
|
மாயவன் கண் நின்று அவை எலாம் போற்றி மற்று அவைக்குத்
தூய துப்புர வருத்தியே மேல் வினை தொலைச்சி
ஆய வற்றில் ஓர் பல பல வீடு உற அருளி
மேய ஆர் உயிர் உலகு எலாம் பின்னரே வீட்டும். |
10 |
|
|
|
|
|
|
|
8808.
|
அன்ன வேலையில் அவை எலாம் அழித்த பின் அளிப்போர்
என்ன நின்ற அவர் தம்மையும் ஒடுக்குறும் இதன் பின்
முன்னர் உள்ளது ஓர் ஏகமாய் உறையும் எம் மூர்த்தி
பின்னும் இம் முறை புரிந்திடும் என்றும் இப் பெற்றி. |
11 |
|
|
|
|
|
|
|
8809.
|
பரமன் இவ்வகை அடும் தொறும் அடும் தொறும்
பலவாம்
பிரமன் ஆதியோர் என்பினைத் தரிக்கும் அப்
பெரியோர்
சிரம் எலாம் தொடுத்த அணி அலால் அணிந்திடும் சிகைதன்
உரம் உலாவும் முந் நூல் எனவே அணிந்து உறையும். |
12 |
|
|
|
|
|
|
|
8810.
|
அல்லது அங்கு அவர் தங்களை முத்தலை அயிலால்
மெல்லவே எடுத்து ஏந்திடும் அவர்தமை விழியால் தொல்லை நாளின் நீறு ஆக்கியும் புனைந்திடும் தூயோன் மல்லல் மா தவம் அனையவர் இயற்றிய வகையால். |
13 |
|
|
|
|
|
|
|
8811.
| ஆதலால் தனை வியப்பதற்கு அன்று அவை அணிதல் ஈதலால் ஒரு திறம் உளது யாவரும் எவர்க்கும் நாதனே இவன் என்று தன் பாங்கரே நண்ணித் தீது எலாம் ஒரீஇ முத்தி பெற்று உய்ந்திடும் செயலே. |
14 |
|
|
|
|
|
|
|
8812.
|
என்பு நீறொடு கழி உடல் சிகை முடி எனைத்தும்
முன்பு அணிந்திடும் இயல்பினை முழுதும் உயிர்த் தொகைக்கும்
அன்பு செய்திடும் செயல் இதுவாம் என அறிநீ
பின்பு உள்ளதும் கேண்மதி அகந்தையால் பெரியோய். |
15 |
|
|
|
|
|
|
|
8813.
|
விண் உளோர்க்கு எலாம் அல்லலே வைகலும் விளைத்து
நண்ணும் ஆடகக் கண்ணினன் முன்னம் ஓர் நாளில் மண்ணகம் தனை வௌவியே வயிற்றிடை வைத்துத் துண் எனப் பிலம் புக்கனன் உயிர் எலாம் துளங்க. |
16 |
|
|
|
|
|
|
|
8814.
|
கண்டு வானவர் யாவரும் அஞ்சினர் கரிய
கொண்டல் நல் மேனி அம் பண்ணவன் கோ கனகத்தோன்
துண்டம் ஆகிய இடத்தில் ஓர் ஏனமாய்த் தோன்றி
அண்டம் மீது போய் வடவரை என வளர்ந்து
ஆர்த்தான்.
|
17 |
|
|
|
|
|
|
|
8815.
|
ஓர்
இமைக்கும் முன் பாதலம் தன்னில் மால் உற்றுக்
கூர் எயிற்றினால் பாய்ந்து பொன் கண்ணனைக் கொன்று பாரினைக் கொடு மீண்டு முன் போல்வே பதித்து வீரம் உற்றனன் தன்னையே மதித்தனன் மிகவும். |
18 |
|
|
|
|
|
|
|
8816.
|
மாலும் அப்பகல் அகந்தையாய் உணர்வு இன்றி மருப்பால்
ஞாலம் யாவையும் அழிதர இடந்தவை நனி சூழ் வேலை தன்னையும் உடைத்தனன் அன்னது ஓர் வேலை ஆலம் ஆர்களத்து அண்ணல் கண் எய்தினான் அம் கண். |
19 |
|
|
|
|
|
|
|
8817.
| கண்டு கண்நுதல் அவன் மருப்பு ஒன்றினைக் கரத்தால் கொண்டு வல்லையில் பறித்தலும் உணர்வு முன் குறுக விண்டு மற்றதும் பறிப்பன் இங்கு இவன் என வெருவிப் பண்டுபோல நின்று ஏத்தலும் போயினன் பரமன். |
20 |
|
|
|
|
|
|
|
8818.
|
அன்று கொண்டது ஓர் மருப்பினைச் சின்னமா அணிந்தான்
இன்றும் அங்கு அவன் மார்பிடைப் பிறை என இலங்கும்
ஒன்று மற்று இது கேட்டனை நின்றதும் உரைப்பாம்
நன்று தேர்ந்து உணர் மறைகளும் இத்திறம் நவிலும். |
21 |
|
|
|
|
|
|
|
8819.
|
அடலின் மே தகு தேவரும் அவுணரும் அந் நாள்
கடல் கடைந்திடும் எல்லையின் மந்தரம் கவிழ
நெடிய மால் அது நிறுவியே பொருக்கென நீத்தம்
தடவி உள் அணைந்து ஆமையாய் வெரி நிடைத் தரித்தான்.
|
22 |
|
|
|
|
|
|
|
8820.
|
தரித்த வேலை அவ்வேலையை மதித்திடத் தன்கண்
அருத்தி மிக்கு உறும் அமிர்தினைத் தருதலும் அதனை தெரித்து மற்று இது நமது என நமது எனச் செப்பி மருத்தின் நன்மையால் அமரரும் அவுணரும் மலைந்தார். |
23 |
|
|
|
|
|
|
|
8821.
| மலைந்த போரினை நீக்கலன் மாயன் இவ் வரையை அலைந்த வேலையின் நிறுவியே வெரிநிடை ஆற்றி உலைந்திடா வகை காத்தும் மால் எனப் பெரிது உன்னக் கலந்ததால் அவன் உளத்தினில் அகந்தை அம் கடலே. |
24 |
|
|
|
|
|
|
|
8822.
|
அகந்தை எய்தியே யாவையும் தேற்றலான் அலைபோய்த்
திகந்தம் உற்றிட வேலைகள் உழக்கினன் திரியச்
சகம் தனக்கு அழிவு எய்தலும் தனது அருள் தன்மை
இகந்தனன் கொல் ஆம் கண்ணன் என்று உன்னினன் எம்கோன்.
|
25 |
|
|
|
|
|
|
|
8823.
|
அற்றை நாள் அவண் வல்லையில் ஏகியே அரிதன்
முற்றலா ஆமையின் உருவினை நோக்கியே முனிந்து கற்றை வார் சடைக் கண்நுதல் யாப்பு உறக் கரத்தால் பற்றி ஆங்கு அவன் அகந்தையும் வன்மையும் பறித்தான். |
26 |
|
|
|
|
|
|
|
8824.
|
நினைந்து தொல் உருக் கொண்டனன் புகழ்தலும் நிலவைப்
புனைந்த செம் சடை நின்மலன் அவுணரைப் போக்கி இனைந்த தேவருக்கு அமிர்தினை ஈக என ஏக வனைந்த மேனிமான் மாயையால் அவுணரை மாய்த்தான். |
27 |
|
|
|
|
|
|
|
8825.
|
மாய்த்து வானவர்க்கு அமுதினை நல்கினன் வையம்
காத்த கண்ணன் என்று உரைப்பர் ஆல் அவன் உறு கமடம்
மீத் தயங்கிய காப்பினை வாங்கியே விமலன்
சாத்தினான் முனம் அணிந்திடும் மருப்புடன் சார. |
28 |
|
|
|
|
|
|
|
8826.
|
வாரி
சூழ் புவி அகழ்தரு கேழலின் மருப்பும்
மூரி ஆமையின் ஓடும் மேல் கொண்டது மொழிந்தாம் தாருகா வனத்து எம்பிரான் பலிக்குறு தகவும் சேரவே அவண் நிகழ்ந்தவும் கூறுதும் தெளி நீ. |
29 |
|
|
|
|
|
|
|
8827.
|
முன்பு தாருக வனத்தின் முனிவரர் யாரும் ஈசற்கு
அன்பு இலர் ஆகி வேள்வி அளப்பு இல புரிந்து தாமே இன்பு உறு முத்தி தன்னை எய்துவான் உன்னி அங்கம் துன்பு உற வாளா நோற்றுத் துணிவினால் ஒழுகல் உற்றார். |
30 |
|
|
|
|
|
|
|
8828.
|
ஒழுகிய வேலை தன்னில் உயிர்க்கு உயிராகி உற்றோன்
பழுதினை அகற்றித் தன்னோர் பாங்கரில் உமையாள் மேவ
விழுமிய கயிலை நாப்பண் வீற்று இருந்து அருள்வோன் அம்கண்
இழுதையர் புரியும் நீர்மை யாவையும் உணர்ந்தான் அன்றே.
|
31 |
|
|
|
|
|
|
|
8829.
|
முன்னவன் இதனை நாடி முழுது உணர் முகுந்தன் தன்னை
உன்னினன் அன்ன பான்மை ஒய் என உணர்ந்து மாலோன்
என்னையும் முதல்வன் தன்பால் எய்துவான் பணித்தான் என்னாப்
பன்னக அமளி நீத்துப் பணியினால் கயிலை உற்றான். |
32 |
|
|
|
|
|
|
|
8830.
|
உற்றனன் நகர்முன் எய்தி உணர்த்திய நந்தி உய்ப்பப்
பற்று அலர் புரம் மூன்று அட்ட பரன் அடி பணிந்து
முன் போய்
நிற்றலும் குறிப்பால் அம் கண் நினைத்தன உணர்த்தி மாயன்
பொன் தடம் செம்கைப் பற்றிப் புனிதன் ஆண்டு
எழுந்து போந்தான். |
33 |
|
|
|
|
|
|
|
8831.
|
கயிலை அம் கிரியை நீங்கிக் கண்ணனை நோக்கித்
தொல் நாள்
இயல் உறு நினது பெண்மை எய்துதி இவண் நீ என்னப்
புயல் உறழ் மேனி மாயோன் பொருக்கு என அளப்புஇல் காமர்
மயல் உறு பான்மை அங்கு ஓர் மடந்தையாய் மருங்கு வந்தான்.
|
34 |
|
|
|
|
|
|
|
8832.
|
வந்திடுகின்ற காலை மாயை சேர் பொருண்மை முற்றும்
தந்திடும் உமையும் காணில் தளர்ந்து வீழ் பான்மை
தானும்
அந்தம் இல் யாணர் மேல் கொண்டு ஆயிடைப் பெயர்ந்தான்
முக்கண்
எந்தைதன் வடிவின் நீர்மை யார் விரித்து உரைக்கற் பாலார்.
|
35 |
|
|
|
|
|
|
|
8833.
|
முன்பனது உருவை எல்லாம் முகன் உறு விழியால் மாந்தித்
துன்பு உறு மால் மீக் கொள்ளத் துண் என அரியும் சோர்ந்தும்
அன்பு உடை அருளால் வந்தான் மற்று அவன் தனக்கு மாலோன்
என்பது ஓர் பெயரும் அஞ்ஞான்று எய்திய போலும் அன்றே.
|
36 |
|
|
|
|
|
|
|
8834.
| நராரியின் உரிவை நீத்து நக்கனே ஆகி முக் கண் பராபரன் சூலத்தோடு பலிக்கலன் அம் கை கொண்டு முராரிதன் பாங்கர் செல்ல முனிவருக்கு இருக்கை ஆகத் தராதலம் மதிக்க நின்ற தாருகா வனத்தில் புக்கான். |
37 |
|
|
|
|
|
|
|
8835.
|
புக்கனன் மாலை நோக்கிப் போந்து நீ நமை எண்ணாது
தொக்கு உறு முனிவர் வைகும் சூழல்கள் தோறும் நண்ணி மிக்க மால் பூட்டி அன்னோர் விரதங்கள் மாற்றி நம்தம் பக்கம் நீ வருதி என்னப் பகர்ந்தனன் விடுத்துச் சென்றான். |
38 |
|
|
|
|
|
|
|
8836.
|
விடுத்தலும் முராரி ஏகி வேள்வியும் தவமும் தாமே
கொடுத்திடும் முத்தி என்னும் கொள்கை சேர் முனிவர் யாரும்
அடுத்திடும் அவைக் கண் எய்தி அளவையில் அநங்கர் வல்லே
தொடுத்திடும் சரங்களே போல் துணைவிழி பரப்பி நின்றான்.
|
39 |
|
|
|
|
|
|
|
8837.
|
கண்டனர்
முனிவர் அம்மா கதும் எனக் காம வேட்கை
கொண்டனர் விரத நோன்மை குலைந்தனர் மகத்தின் செய்கை
விண்டனர் மத நீர் பாய மெலிந்தனர் வெதும்பி வேழம்
உண்டிடும் கனி ஆம் என்ன உணர்வு போய் உருகா நின்றார்.
|
40 |
|
|
|
|
|
|
|
8838.
|
ஆலம் ஆர் கண்டத்து எந்தை அருளினால் மாயோன் கொண்ட
கோலம் ஆர் வடிவம் எல்லாம் குறிப்புடன் நோக்கி நோக்கிச்
சீலம் ஆம் அனைத்தும் வீட்டிச் செழும் சுடர் மலர்ச்சி கண்ட
ஓலம் ஆர் விட்டில் என்ன ஒல் என வந்து சூழ்ந்தார். |
41 |
|
|
|
|
|
|
|
8839.
|
பார் கொலோ விசும்பு கொல்லோ பங்கயன் பதியோ காமன்
ஊர் கொலோ முகுந்தன் வைகும் உலகமோ உறையுள் அன்றேல்
நீர் கொலோ அமரர்க்கு ஆக நிருதரைத் தொலைத்தீர் உம்மை
ஆர் கொலோ உணருகிற்பார் அடியருக்கு அருளும் என்றார்.
|
42 |
|
|
|
|
|
|
|
8840.
|
என்று இவை பலவும் பன்னி இடர் உழந்து எரியில் பட்ட
மென் தளிர் அலங்கல் என்ன வெதும்பியே விரகத்
தீயால்
பொன்றினர் போன்று நின்றார் பொருவரு முனிவர்
பொன் ஆர்
கொன்றை அம் சடையோன் செய்த செயலினைக் கூறல் உற்றேன்.
|
43 |
|
|
|
|
|
|
|
8841.
|
கண்ணனை விடுத்துத் தான் ஓர் கலனொடு சூலம் ஏந்தி
எண் அரும் முனிவர் வைகும் இருக்கையின் மறுகு
சென்று
பண் இசை மறைகள் பாடி ஐய மேல் படர்வார்
போன்றான்
உள் நிகழ் உணர்வாய் என்றும் உயிரினுக்கு உயிராய் நின்றான்.
|
44 |
|
|
|
|
|
|
|
8842.
|
பாட்டு இயல் இசையை அம் கண் முனிவர் தம் பன்னிமார்கள்
கேட்டலும் எவர்கொல் அம்மா கிடைத்தனர் அவரைக் காண்பான்
வேட்டன விழிகள் இன்னே விரைவினில் சேறும் என்னா
ஈட்டமொடு எழுந்து வீதி எய்தி அங்கு இறைவர்
கண்டார்.
|
45 |
|
|
|
|
|
|
|
8843.
|
கண் உறு மாதர் யாரும் காமன் ஐம் கணையின் மூழ்கி
உள் நிகழ் உணர்வு மாழ்க உயிர் பதை பதைத்துச் சோர
அண்ணல் தன் காதல் என்னும் ஆழ் திரைப் பட்டார் அன்னார்
பண்ணிய செய்கை தன்னில் சிறிது யான் பகர்தல் உற்றேன்.
|
46 |
|
|
|
|
|
|
|
8844.
| காயம் மேல் அணி கண்டிலம் இத்தவர் தூய பாடலைத் துண் எனக் கேட்டலும் மேய காமத்தின் வீழ்ந்தனம் ஆகையால் மாயமே இவ்வடிவம் என்பார் சிலர். |
47 |
|
|
|
|
|
|
|
8845.
| ஐயர் செய்கை அறிந்தனம் இவ் இடைப் பைய வந்து பலிதனைக் கேட்பது மெய்யது அன்று இது மெல்லியலார் தமை மையல் செய்திட வந்தது என்பார் சிலர். |
48 |
|
|
|
|
|
|
|
8846.
| நன்று நன்று இந்த நல் தவர்க்கு ஆம் துகில் ஒன்று நல்கி உணவு அளித்து ஓவிலா மன்றல் இன்புற மங்கையர் ஏவரும் இன்று கொல் என்று இரங்கு கின்றார் சிலர். |
49 |
|
|
|
|
|
|
|
8847.
| மாறு இலா இவ் வனத்து இடை வந்தனன் வேறு ஒரு ஊரிடை மேவிலன் போலும் ஆல் தேறில் யாம் முனம் செய்திடும் செய் தவப் பேறு இதாம் எனப் பேசுகின்றார் சிலர். |
50 |
|
|
|
|
|
|
|
8848.
|
ஈண்டு
வந்த இரும் தவன் யாரையும்
வேண்டலன் இது மெய்மை அவன்பதம் பூண்டு காதலில் போற்றுநர் போல மெய் தீண்டுதும் எனச் செப்புகின்றார் சிலர். |
51 |
|
|
|
|
|
|
|
8849.
| பூண் இலங்கிய பொன் தொடி சங்கு இனம் மாண் உறும் துகில் மற்று இவை சோர்தலும் காணுகின்றனர் கை நெரித்து அஞ்சியே நாணி வீதி நடுவு இருந்தார் சிலர். |
52 |
|
|
|
|
|
|
|
8850.
| ஏமம் பாய மெய் எங்கணும் காமவேள் தூமம் பாய வை சூழ்ந்து உயிர் வாட்டிட வாமம் பாய் புனல் போல் மயிர்க் கால் தொறும் காமம் பாயக் கலுழ் கின்றார் சிலர். |
53 |
|
|
|
|
|
|
|
8851.
| பாசம் நீங்கிப் பரபதம் ஈது என ஆசையோடு கண்டு அன்பு செய்வார் என வாசம் நீங்கி வளை உகுத்து ஐயர்தம் கோசம் நோக்கினர் கும்பிடுவார் சிலர். |
54 |
|
|
|
|
|
|
|
8852.
| இளையினோடு உறும் எந்தை தன் வேட்கையால் களையினோடு கதும் எனச் சென்று பால் அளையினோடு உறும் ஓதனம் அங்கை வீழ் வளையினோடு வழங்குகின்றார் சிலர். |
55 |
|
|
|
|
|
|
|
8853.
| பாவைமார் முன் பலிக்கு உறும் தன்மை ஆல் நீவி இன்றி இந் நெற்றி அம் கண் நுதல் மேவும் நம் துகில் வீழ்கினும் வீழுக ஏவமோ எமக்கு என்று உரைப்பார் சிலர். |
56 |
|
|
|
|
|
|
|
8854.
| போய நாணம் புகுந்தது மால் உளம் தீயுமால் நிறை சிந்தியது ஆர் உயிர் வீயும் மெய்யும் விளிந்திடும் எம் உயிர் ஈயும் எங்களுக்கு என்று உரைப்பார் சிலர். |
57 |
|
|
|
|
|
|
|
8855.
| தண்டுலம் கொல் தவத்தர் இரப்பு எனக் கொண்டு சென்று குறுகினர் காமம் ஆம் மண்டு தீச் சுட வண்பொடி ஆதலும் அண்டர் நாயகன் போல் அணிந்தார் சிலர். |
58 |
|
|
|
|
|
|
|
8856.
| வடிவினால் எமை மால் உறுத்து ஆளும் என்று அடியில் வீழினும் ஆர் அருள் செய்கிலர் கடிது போவது போலும் கருத்து இவர்க்கு இருகிலீர் ஐயம் என்று உரைப்பார் சிலர். |
59 |
|
|
|
|
|
|
|
8857.
| ஆரம் அற்றனர் ஆரமும் வீழ மெய் ஈரம் அற்றனர் ஈரம் அதன் படை தீரம் அற்றனர் தீரவும் ஏகலா பாரம் அற்றனர் பாரம் அற்றார் சிலர். |
60 |
|
|
|
|
|
|
|
8858.
| சூலம் உண்டு சுடர்விழி மேல்நிமிர் பாலம் உண்டு படர் சடை உண்டு செம் கோலம் உண்டு குறைமதி உண்டு இவர் ஆலம் உண்டவர் ஆகும் என்பார் சிலர். |
61 |
|
|
|
|
|
|
|
8859.
|
எந்தையார்
தம் இரும் குறியின் கணே
சிந்துகின்ற திவலை ஒன்று அல்லவோ உந்தி மேல் வந்து உலகு அனைத்தும் தரும் அந்த நான் முகன் ஆனது என்பார் சிலர். |
62 |
|
|
|
|
|
|
|
8860.
| சங்கும் ஆழியும் தாங்குதல் இன்றியே பொங்கு காமரம் பொன்னம் துகில் ஒரீஇ இத் துங்க மாதவர் துண் என மால்கொள அம் கண் மேவும் அரியை ஒத்தார் சிலர். |
63 |
|
|
|
|
|
|
|
8861.
| கட்டு செம் சடைக் கண்ணியின் உள் அகப் பட்ட மான் எனப் பார்த்த கண் வாங்கலர் சட்டுவம் தனில் தாங்கிய ஓதனம் இட்டு வெள்ளிடை ஏமருவார் சிலர். |
64 |
|
|
|
|
|
|
|
8862.
| கிளியின்மேல் செலும் கேழ் கிளர் ஓதிமம் களி மயக்கு உறு காள கண்டத்து இறை வெளியின் மேனியும் மெய்ப்படு கோலமும் தெளிகிலாது தெரு மருவார் சிலர். |
65 |
|
|
|
|
|
|
|
8863.
| அளியின் அட்ட அடிசில் கொண்டு ஆயிடைக் களிமயக்கம் கருத்து உற ஏகியே ஒளியினுக்கு ஒளி ஆகி உள்ளார் உரு வெளியினுக்கு விரைந்து அளிப்பார் சிலர். |
66 |
|
|
|
|
|
|
|
8864.
|
அண்ணல் மேனி கண்டார் ஆர்வம் உற்று ஆடை போய்ப்
பெண்ணின் நீர்மைப் பெரும் குறி மூடியும்
கண்ணை மூடியும் கைக்கு அடங்கா மையால்
விண்ணை மூடினர் போல் வெள்கினார் சிலர். |
67 |
|
|
|
|
|
|
|
8865.
| விருத்தராய் இவண் மேவினர் விண்ணவர் மருந்து போல்வது ஓர் வண்பதம் உண்டு அவை அருந்தியே நல் அருள் புரிந்தோர் இறை இருந்து போம் என்று இசைத்திடுவார் சிலர். |
68 |
|
|
|
|
|
|
|
8866.
| கையில் ஏந்து கலனொடு சூலமும் வையும் நம்மனை வந்திடும் பாலொடு நெய்யும் உண்டியும் நிற்றலும் உண்டியாம் உய்ய நீர் இங்கு உறையும் என்பார் சிலர். |
69 |
|
|
|
|
|
|
|
8867.
| பார்க்கும் மாதர்க்கும் பல்குழு ஆடவர் ஆர்க்கும் மையல் அளிக்கும் வடிவுளீர் சீர்க்கும் ஓடுஒன்று செம்கை கொண்டு எங்கணும் ஏற்கும் ஓவிது என்று உரைப்பார் சிலர். |
70 |
|
|
|
|
|
|
|
8868.
| இன்று உமைக் கண்டு யாங்களும் ஆடைபோய் ஒன்று காதல் உற்று ஓய்ந்தனம் இங்கு இது நன்று கூடுதிர் நங்களை நீர் என நின்று கூறி நெடிது உயிர்த்தார் சிலர். |
71 |
|
|
|
|
|
|
|
8869.
| நந்தும் இவ்வனம் நண்ணிய மாதவர் இந்த வேலையில் ஏகலர் யாவதும் சிந்தை கொள்ளலிர் சேக்கை உண்டோர் இறை வந்து போம் என வாய் மலர்ந்தார் சிலர். |
72 |
|
|
|
|
|
|
|
8870.
|
எம்மை
ஆரிட மாதர் என்று எண்ணியோ
வெம்மை பேசினும் மேவுகிலீர் பவம் உம்மை மேவும் கொலோ ஒழிந்தார்கள் போல் அம்ம வந்து எமை ஆளும் என்பார் சிலர். |
73 |
|
|
|
|
|
|
|
8871.
| ஆடை தாரும் அது அன்று எனில் கொண்டது ஓர் வேடை தீரும் விளம்புகிலீர் எனில் கூட வாரும் குறிப்பு உமக்கு என் எனப் பாடு சேர்ந்து பகர்ந்திடுவார் சிலர். |
74 |
|
|
|
|
|
|
|
8872.
| ஒல்லுகின்றது உமக்கு இவ் வடிவினால் செல்லுகின்ற தெரிவையர் யாரையும் கொல்லு கின்றதுவோ பலி கொள்வதோ சொல்லும் என்று தொடர்ந்திடுவார் சிலர். |
75 |
|
|
|
|
|
|
|
8873.
| போற்றி இங்கு எமைப் புல்லும் என்றாலும் மால் ஆற்றி இன்பத்து அணைகிலீர் யாவரும் சாற்று கின்றனர் சங்கரர் என்று உமை ஏற்றதோ அதற்கு என்று உரைப்பார் சிலர். |
76 |
|
|
|
|
|
|
|
8874.
| அணங்கின் நல்லவர் அண்ணல் தன் கோச மேல் நுணங்கு மால் ஒடு நோக்கி அதற்கு முன் வணங்கு மாறு என மற்றவர் நாணுபு கணங்களோடு கவிந்து சென்றார் சிலர். |
77 |
|
|
|
|
|
|
|
8875.
|
இன்னவர் பலரும் சூழா ஈண்டுபு கலையும் சங்கும்
துன்னிய கலனும் நாணும் துறப்ப அரும் கற்பும் சிந்தி
மன் உயிர் ஒன்றும் தாங்கி மால் கொடு தொடர எம்கோன்
பொன் அடிக் கமலம் சேப்பப் புனிதமா மறுகில் .போனான்.
|
78 |
|
|
|
|
|
|
|
8876.
|
சில்லிடை வீணை நாதம் செய்திடும் அஃதே அன்றிச்
சில்லிடை மறைகள் பாடும் சில்லிடைச் சிவநூல் ஓதும்
சில்லிடைத் தன் மெய் காட்டும் சில்லிடை ஐயம் கேட்கும்
சில்லிடை அன்பர் போல்தன் சீர்த்தியைப் புகழ்ந்து செல்லும்.
|
79 |
|
|
|
|
|
|
|
8877.
|
தேமலர்க் கமலை அன்ன தெரிவையர் தொழுங்கால் ஈசன்
மாமலர்த் தாள் மேல் இட்ட மலர்களும் அன்னார் சிந்தும்
தூமலர்த் தொடையும் சங்கும் துலங்கு பொன் கலனும் காமன்
பூமலர்த் தெடையும் ஈண்டப் பொலிந்த அப் புனித வீதி. |
80 |
|
|
|
|
|
|
|
8878.
|
ஊன் உலாம் உயிர்கட்கு எல்லாம் உணர்வுடன் உயிராய் நின்றோன்
வான் உலாம் பலிக்கு வந்த வடிவினை நினைக்கின் மாயோன்
தானு மால் ஆகி இன்னும் தளர்வுறும் என்றால் அம்மா
ஏனையோர் செய்கை தன்னை இனைத்து என இயம்பல் ஆமோ.
|
81 |
|
|
|
|
|
|
|
8879.
|
செம் திரு அனைய மேனிச் சீர் அடிக் கரும் கண் செவ்வாய்ப்
பைந்தொடி மகளிர் கற்பாம் பரவைகள் மதிக்கும் எண்ணில்
மந்தரம் போன்றான் எம் கோன் மற்று அவர்க்கு
எல்லாம்
வெவ்வேறு
இந்திர ஞாலம் என்ன எல்லையில் உருக் கொண்டு
எய்தி.
|
82 |
|
|
|
|
|
|
|
8880.
|
நீண்ட அந் நிகமம் புக்க நிமலன் மேல் ஆர்வம் வைத்துக்
காண்தகு மாதர் யாரும் கருஉறு நிலையர் ஆகி மாண்தகு வயாவும் மற்று ஓர் வருத்தமும் இன்றி ஆங்கே ஆண்தகை மகார்களாக வாறு எண்ணாயிரரைப் பெற்றார். |
83 |
|
|
|
|
|
|
|
8881.
|
எந்தை
பால் விழைவு செய்தாங்கு இமைப்பின் மடவார் ஈன்ற
மைந்தர்கள் யாரும் ஐயன் மலர் அடி முன்னர் தாழ்ந்து
புந்திகொள் அன்பின் நின்று போற்றிட அனையன் நீவிர்
நம்தமை உன்னி ஈண்டு நல் தவத்து இருத்திர் என்றான். |
84 |
|
|
|
|
|
|
|
8882.
|
நெட்டு இரும் சடில மீது நிலவினை முடித்த அண்ணல்
கட்டுரை செய்தல் கேளாக் கைதொழூஉ விடைபெற்று ஏகி
உள் தெளிவு எய்தி நோற்று ஆங்கு ஒருசிறை இருந்தார் நாற்பான்
எட்டு உள பத்து நூற்றின் எண் தொகை முனிவர் யாரும். |
85 |
|
|
|
|
|
|
|
8883.
|
சேய் என வந்தோர் நோற்பச் சென்றுழித் தெரிவை
மாராம்
மா இரும் பரவை நீத்தம் மால் கொடு தொடர்ந்து
செல்லப்
போயினன் என்ப மன்னோ பு இகந்து அரிமுன் ஈந்த
ஆயிரம் கமலம் கொண்டு ஓர் ஆழியை அளிக்க வல்லோன்.
|
86 |
|
|
|
|
|
|
|
8884.
|
போதலும் அதனை நோக்கிப் பொன்தொடி ஆகி நின்ற
சீதரன் அமலன் தன்பால் சேறலும் தொடர்ந்து பின்னர்
மாதவர் யாரும் போந்தார் மற்று அதன் இயல்பு நோக்கி
ஏதம் இல் கங்கை பாலாம் யமுனையைக் கடுத்தது அன்றே.
|
87 |
|
|
|
|
|
|
|
8885.
|
மெல் இயல் வடிவம் ஆகி மேயினோன் தன்பால் வீழ்ந்து
செல்லுறு முனிவர் ஆற்றத் தீவினை புரிந்த நீரால்
அல் உறழ் மிடற்றுப் புத்தேள் அவர்க்கு எலாம் தனதாய் உள்ள
தொல் உரு மறைத்து வேறு ஓர் வடிவொடு தோன்றி நின்றான்.
|
88 |
|
|
|
|
|
|
|
8886.
|
மடந்தையாய் வந்த மாலோன் மணிமிடற்று இறைவன் தன்பால்
அடைந்திட முனிவர் தம் தம் அரிவையர் தம்மை நோக்கித்
தொடர்ந்தனர் இவரும் நம்போல் தோற்றனர் கலையும் நாணும்
கடந்தனர் இவனைக் கண்டு காதலித்தார் கொல் என்றார். |
89 |
|
|
|
|
|
|
|
8887.
|
மோனமா நெறியின் நோற்கும் முனிவரர் முகுந்தன் தன்பால்
ஆன மால் சிறிது நீங்கி அரும் குலப் பன்னிமார்கள்
ஈனம் ஆ நிலையை நோக்கி இன்னல் உற்று இரங்கி ஏங்கி
மான மேல் கொண்டு வீடா மன் உயிரோடு நின்றார். |
90 |
|
|
|
|
|
|
|
8888.
|
பொன் உலாம் அல்குலாள் இப் பொன் தொடி ஒருத்தி எம்பால்
மன்னிய தவத்தைச் சிந்தி மால் செய்தாள் ஒருவன் வந்து
பன்னிமார் கற்பை வீட்டிப் படுத்தினன் மோகம் அந்தோ
என்ன மாயம் கொல் ஈது என்று எண்ணினர் யாரும் ஈண்டி.
|
91 |
|
|
|
|
|
|
|
8889.
|
எண்ணிய முனிவர் தேறி இயம்புவார் கயிலை வைகும்
கண்நுதல் ஆகும் இன்னோர் கற்பினை உடைத்தான்
யாம் முன்
பண்ணிய தவத்தை வீட்டப் பைந்தொடி ஆகி வந்தோன்
மண் உலகு அனைத்தும் உண்ட மாயவன் போலும் அன்றே.
|
92 |
|
|
|
|
|
|
|
8890.
|
நந்த வந்து தன்னை வீட்ட நாரணன் தானே நம்பால்
வந்தனன் அன்றால் ஈசன் பணியினால் மாயை செய்தான்
இந்திரை கேள்வன் செய்தது என்கொலோ எமது நோன்பு
சிந்தினும் நன்றால் இன்னும் தீர்வு நேர்ந்து இயற்று கின்றோம்.
|
93 |
|
|
|
|
|
|
|
8891.
|
அம் கையில் கபால் ஒன்று ஏந்தி ஐயம் ஏற்றிடுவான் போலச்
சங்கரன் வந்து மற்று இத் தாருகா வனத்தின் மேவு
மங்கையர் கற்புச் சிந்தும் வசை உரைக்கு ஒழிவும் உண்டோ
செம்கதிர் மதியம் செல்லும் திசைஎலாம் பரவும் அன்றே. |
94 |
|
|
|
|
|
|
|
8892.
|
தான்
ஒரு வேடம் கொண்டும் தண் துளவ அலங்கல் சென்னி
வானவன் தன்னை விட்டு மற்று இவை அனைத்தும் செய்தோன்
கான் உறு கடுக்கை வேய்ந்த கண் நுதலே கொல் என்றே
மான வெம் கனலும் சீற்ற வன்னியும் கிளர நின்றார். |
95 |
|
|
|
|
|
|
|
8893.
|
நின்றிடும் முனிவர் யாரும் நெருப்பு எழ விழித்து செம்பொன்
குன்று உறழ் முலையினார் தம் குழுவினைக் கூவியார்
பின்
சென்றிடு கின்றீர் கற்பின் செய்கை அது இகந்தீர்
இங்ஙன்
பொன்றுதல் அழகு இது அன்றேல் போமின் நும்புரியின் என்றார்.
|
96 |
|
|
|
|
|
|
|
8894.
|
இத்திற மாதர் கேளா ஈங்கு இவர் தம்மைக் கண்டோர்
முத்தராய் உறுவது அன்றி முடிவரோ முனிவர் தாமும்
பித்தர் கொல் என்றே அன்னான் பிறங்கு உரு வினையுள் கொண்டு
நித்தனது அருளால் மீண்டு நீள் நகர் இருக்கை புக்கார். |
97 |
|
|
|
|
|
|
|
8895.
|
நீள் நகர் புகுந்த பின்னர் நேர் இழை மகடூஉ ஆகித்
தாணுவின் அயலின் நின்ற தண் துளவ அலங்கல்
புத்தேள்
ஆணுவின் உருவு கொண்டான் அருளினால் அனைய தன்மை
காணிய விரிஞ்சன் ஆதிக் கடவுளர் யாரும் வந்தார். |
98 |
|
|
|
|
|
|
|
8896.
|
கடவுளர் யாரும் வந்த காலையில் அங்கண் நின்ற
முடிவு அறு முதல்வன் தன்னை முனிவொடு நோக்கி ஈண்டுக்
கொடியது ஓர் வேள்வி ஆற்றிக் கொல்லுதும் இவனை என்னா
மடமை கொள் முனிவர் சூழ்ந்து மற்று ஒர் தீ மகத்தைச் செய்தார்.
|
99 |
|
|
|
|
|
|
|
8897.
|
எள்ளுதற்கு உரிய வேள்வி எரி அதன் இடையே யாரும்
உள்ளுதற்கு அரிய தோற்றத்து உரும் இடிக் குரல பேழ்வாய்த்
தள்ளுதற்கு அரிய சீற்றத்து அழல் விழித் தறுகண் செம்கால்
வள் உகிர்ப் புலி ஒன்று அம்மா வல்லையின் எழுந்தது அன்றே.
|
100 |
|
|
|
|
|
|
|
8898.
|
எழுதரு புலியை நோக்கி ஈசனை முடித்தி என்றே
தொழுதனர் விடுப்ப ஆங்கே துண் என வருதலோடும்
அழல் விழிப் பரமன் நேர்போய் அம் கையால் உரித்து மற்றுஅவ்
உழுவை அத் தோலை முன்னம் உடுத்தனன் தானை
ஒப்ப.
|
101 |
|
|
|
|
|
|
|
8899.
| இங்கு இது போய பின்றை இறுதி செய் கணிச்சி ஒன்று செம் கன விடையில் தோன்றித் தீயவர் விடுப்ப ஏகிச் சங்கரன் தனது முன்னம் சார்தலும் அதனைப் பற்றி அம் கையில் ஏந்தி நீ நம் அடுபடை ஆதி என்றான். |
102 |
|
|
|
|
|
|
|
8900.
|
பின்னுற ஒருமான் அங்கட் பிறந்தது முனிவர் எல்லாம்
அன்னதை அரன்பால் உய்ப்ப அந்தரத்து எழுந்து
பாய்ந்து
தன் நெடும் குரலால் வல்லே சராசரம் வீட்டிச் செல்ல
முன்னவன் உயிர்கள் அற்றால் முடிவு உறா அருள் கண் வைத்தான்.
|
103 |
|
|
|
|
|
|
|
8901.
|
மற்று அதன் பிற்றை எந்தை மான் பிணை அதனை நோக்கித்
தெற்று என விளித்து நந்தம் செவியினுக்கு அணித்தாய் மேவி
நிற்றலும் கூவுக என்றே நீடு அருள் செய்து வாமப்
பொன்தடம் கையில் பற்றிப் பொருக்கு என ஏந்தி நின்றான்.
|
104 |
|
|
|
|
|
|
|
8902.
|
ஏந்திய பின்னர் வேள்வி எரிஅழற்கு இடையே எண்ணில்
பாந்தளம் கொழுந்து தீயோர் பணியினால் சீற்றத்தோடும்
போந்தன அவற்றை மாயோன் புள்ளினுக்கு அஞ்சித் தன்பால்
சேர்ந்திடும் பணிகளோடும் செவ்விதில் புனைந்தான் எம் கோன்.
|
105 |
|
|
|
|
|
|
|
8903.
|
பணிஎலாம்
பணியது ஆகிப் பரன் இடைத் திகழப் பின்னர்
அணி கெழு கனலின் நாப் பண் அசனிகள் எழுந்தால் அன்னக்
கணிதம் இல் பூத வெள்ளம் கதும் என எழலும் நீவிர்
மணிகிளர் மிடற்றோன் வன்மை மாற்றுதிர் என்றே உய்த்தார்.
|
106 |
|
|
|
|
|
|
|
8904.
| ஆரிடர் ஏவல் போற்றி அண்டமும் துளங்க ஆர்த்துச் சாரதர் வருதலோடும் சங்கரன் அவரை நோக்கி நீர் எமை அகன்றிடாது நிற்றலும் தானை ஆகிச் சேருதிர் என்றான் உற்றோர் தீவினை தீர்க்கவல்லான். |
107 |
|
|
|
|
|
|
|
8905.
|
ஆற்றல் சேர்பூதர் யாரும் ஆதி ஈது உரைப்ப அன்னான்
போற்றியே தானை ஆகிப் புடை உற நிற்றலோடும்
சீற்றமா முனிவர் வேள்வித் தீயில் வெண்தலை தான் ஒன்று
தோற்றியே உலகம் யாவும் தொலைய நக்கு எழுந்தது அன்றே.
|
108 |
|
|
|
|
|
|
|
8906.
|
நக்கு எழு சிரத்தை அன்னோர் நாதன் மேல் விடுத்தலோடும்
அக்கணம் அணுக அவற்றால் அகிலம் அது இறவா வண்ணம்
முக் கணன் அருள் செய்து அந்த முண்ட முண்டகக் கைப்பற்றிச்
செக்கர் அம் சடைமேல் கொண்டு உன் செயலினைப் புரிதி
என்றான். |
109 |
|
|
|
|
|
|
|
8907.
|
அறுகுறை முடிமேல் கொண்ட அமலனை நோக்கி நோக்கி
மறுகிய முனிவர் தம் தம் வாய்மை மந்திரங்கள் ஏவி இறுதி செய்திடுதிர் என்ன இனையவை துடி ஒன்று ஆகிச் செறி தரு புவனம் யாவும் செவிடு உற ஒலித்தது அன்றே. |
110 |
|
|
|
|
|
|
|
8908.
|
பொருவரும் துடியின் ஓதை பொம் எனக் கேட்டலோடும்
தரணியின் வானில் உள்ள சரா சரம் யாவும் ஈசன் அருளினால் வீடிற்று இல்லை அசனியின் ஆர்ப்புக் கேட்ட உரகர் தம் குலங்கள் என்ன ஓய் என மயங்கிற்று அன்றே. |
111 |
|
|
|
|
|
|
|
8909.
|
அத்துடி ஆர்த்துச் செவ்வே அமலன் முன் அணுக மற்றைக்
கைத்தலம் அதனில் பற்றிக் கறங்குதி கன்னத்து என்று
வித்தக மரபில் யாரும் வியப்பு உற ஏந்தி நின்றான்
இத் திறம் யாரே செய்வார் என்றனர் முனிவர் எல்லாம். |
112 |
|
|
|
|
|
|
|
8910.
|
இனையது கண்டு பின்னும் இறுதி செய் இறைவற்கு இன்றால்
அனையது என்று அறிதல் தேற்றார் அடு சினம் கடவத் தொல்
ஊழ்
வினையது விளைவால் பின்னும் வேள்வியை இயற்றல் உற்றார்
முனிவரர் கனல் கணே ஓர் முயலகன் எழுந்தது அன்றே. |
113 |
|
|
|
|
|
|
|
8911.
|
முயலகன் தன்னை நோக்கி முகமனும் சொற்றுத் தங்கள்
செயல் அகன்று இருந்த வேள்வித் தீயையும் விளித்து
நம் தம்
இயல் அகன்றிடவே செய்த ஈசனை முடித்திர் என்றே
மயல் அகன்றிலாதார் உய்ப்ப வல் விரைந்து அணைந்த அம்மா.
|
114 |
|
|
|
|
|
|
|
8912.
|
வன்னி அம் தேவும் உட்க வந்திடு கனலை யார்க்கும்
முன்னவன் ஒரு கை ஏந்தி முயலகன் தன்னை மெல்லத்
தன் அடி அதனால் வீழத்தள்ளி அக் கமலத் தாளை
வென்னிடை அருளால் ஊன்றி விண்ணவர் போற்ற நின்றான்.
|
115 |
|
|
|
|
|
|
|
8913.
|
நிற்றலும் அதனைத் தீயோர் நெருப்பு எழ விழியா
இன்னும்
உற்றனன் பரமன் அந்தோ உஞற்றி யாம் உய்த்த
எல்லாம்
இற்றன கொல்லோ என்றே இரங்கியே எண் இல் சாபம்
சொற்றனர் உலகம் எல்லாம் தொலைப்பவன் தொலைய என்றே.
|
116 |
|
|
|
|
|
|
|
8914.
|
சங்கை
இல் முனிவர் யாரும் சாற்றிய சாபம் யாவும்
எங்கள் தம் பெருமான் முன்னும் எய்தியது இல்லை அன்னோர்
அங்கவன் தன்பால் உய்க்கும் அளவையில் இறுதி
நாளில்
பொங்கு எரி அதன் மேல் செல்லும் பூளை போல்
மாய்ந்த அன்றே. |
117 |
|
|
|
|
|
|
|
8915.
|
சாபமும் பயன் இன்றாகத் தவத்தர்கள் யாரும் கொண்ட
கோபமும் நீங்கி ஆற்றல் குறைந்தொரு செயலும் இன்றிச் சோபமும் நாணும் கொண்டு துளங்கியே தொலைவு இலாத பாபமும் பழியும் பூண்டு படிக்கு ஒரு பொறையாய் நின்றார். |
118 |
|
|
|
|
|
|
|
8916.
|
ஏற்றம் இல் முனிவர் தங்கள் ஏழைமை தனை என் என்று
சாற்றுதும் இறுதி இல்லாத் தாணுவை முடிப்பான் வேள்வி ஆற்றினர் பலவும் உய்த்தார் அறைந்தனர் சாபம் அற்றால் மாற்றிட அற்றோ தங்கள் வன்மையும் இழந்தார் மாதோ. |
119 |
|
|
|
|
|
|
|
8917.
|
கடுக்கையும் நதியும் பாம்பும் கலைமதி கொழுந்தும்
சென்னி
முடித்தவன் பதத்தில் ஊன்று முயலகன் மெல்ல மெல்ல
எடுத்து எடுத்து அசைத்த லோடும் ஏது அங்கு அதனை நோக்கி
நடித்தனன் என்றும் நீங்கா நடம்புரி நின்றதே போல். |
120 |
|
|
|
|
|
|
|
8918.
|
ஆண்டவண் இமையா முக்கண் ஆதி நாயகன் அஞ்ஞான்று
தாண்டவம் புரிதலோடும் சகம் எலாம் துளங்கிற்று அம் கண்
ஈண்டிய உயிர்கள் அச்சுற்று இரங்கிய நடுக்கம் எய்தி
வீண்டனர் வேள்வி செய்து வினையினை ஈட்டும் வெய்யோர்.
|
121 |
|
|
|
|
|
|
|
8919.
|
நஞ்சு அணி கண்டத்து எந்தை நடம் நவில் செய்கை தன்னைக்
கஞ்சனும் ஆழியானும் கண்டு களித்துப் போற்றி
நெஞ்சகம் மகிழ்ந்து பாங்கர் நின்றனர் மகவான்
தன்னோடு
எஞ்சிய அமரர் யாரும் இறைஞ்சுவார் போல வீழ்ந்தார். |
122 |
|
|
|
|
|
|
|
8920.
|
அருளொடு நிருத்தம் செய்யும் அண்ணல் இப் புவனம் யாவும்
வெரு உறு செயலும் வீழும் விண்ணவர் அயர்வு
நோக்கித்
திருநடம் ஒழிந்து நிற்பத் தேவரும் தேவர் கோனும்
பருவுடன் எழுந்து நின்று கை தொழூஉப் பாங்கர்
உற்றார்.
|
123 |
|
|
|
|
|
|
|
8921.
|
மாது ஒர் பாகத்தோன் தன்னை மதித்திடா முனிவர்க்கு எல்லாம்
போதமே அருளலோடும் பொருக்கு என எழுந்து
பொல்லா
ஏதமே இயற்றுகின்ற எம் பெரும் பிழைகள் யாவும்
நாத நீ பொறுத்தி என்று நடம் நவில் கழல் முன் வீழ்ந்தார்.
|
124 |
|
|
|
|
|
|
|
8922.
|
பொறுத்தி எம் பிழையை என்றே போற்றி செய் முனிவர் தங்கள்
திறத்தினை நோக்கி நம் தம் செல்நெறி ஒழுகித் தீய
மறத்தினை அகற்றி மேலை மாதவம் புரிதிர் என்று
நிறுத்தினன் அடையாதார்க்கும் நீடு அருள் புரியும் நித்தன்.
|
125 |
|
|
|
|
|
|
|
8923.
|
முனிவரை நிறுவி அம் கண் முக்கணன் மீண்டும் வெள்ளிப்
பனிவரை ஏகி மாலும் பங்கயத்தவனும் வானோர்
அனைவரும் தத்தம் பாலில் அடைந்திட அருளி அம் பொன்
புனை இழை உமையினோடும் பொருந்தி வீற்று இருந்தான் அன்றே.
|
126 |
|
|
|
|
|
|
|
8924.
|
உரித்திடும் உழுவை வன் தோல் உரிமுதல் உள்ள எல்லாம்
தரித்ததும் எங்கள் நாதன் தாருகா வனத்தில் அன்று
நிருத்தம் அது இயற்றி நின்ற நீர்மையும் பிறவும் எல்லாம்
விரித்து இவண் உரைத்தாம் கேட்டி மேல் அதும் இயம்புகின்றாம்.
|
127 |
|
|
|
|
|
|
|
8925.
|
துங்க
மால் கரி யாக்கையின் உலகு எலாம் தொலைக்கும்
வெம் கயாசுரன் என்பவன் மேருவின் மிசை போய்ப்
பங்கய ஆசனர் போற்றி செய்து அரும் தவம் பயில
அம் கண் நாடியே தோன்றினன் உலகுஎலாம் அளித்தோன்.
|
128 |
|
|
|
|
|
|
|
8926.
| வேண்டுகின்றது என் மொழிக என் நான்முகன் விளம்ப ஆண்டு நோற்றிடும் கயாசுரன் என் தனக்கு அடிகேள் மாண்டிடாத பேர் ஆயுளும் ஆற்றலும் வயமும் ஈண்டு நல்குதி என்றலும் நகைத்து இவை இசைப்பான். |
129 |
|
|
|
|
|
|
|
8927.
| இந்த வண்ணம் நீ வேண்டியது அளித்தனம் இகலில் அந்தி வண்ணன் நேர் சென்றிடல் சேறியேல் அந்நாள் சிந்தும் இவ்வரம் கடைப் பிடி ஈது எனச் செப்பி உந்தி வந்தவன் போயினன் தனது பேர் உலகில். |
130 |
|
|
|
|
|
|
|
8928.
| அன்ன காலையில் கயாசுரன் என்பவன் அயன்சொல் உன்னி ஈசன்மேல் போகலம் ஒழிந்தவர் தம் பால் துன்னி வெம் சமர் ஆற்றி எவ் உலகமும் தொலைத்தே இன்னலே புரிந்து இருத்தும் என்று உன்னியே எழுந்தான். |
131 |
|
|
|
|
|
|
|
8929.
|
எழுதல் கொண்டிடும் அவுணர் கோன் அமரர்கள் யாரும்
குழுமியே அமர்வான் பதம் தொறும் தொறும் குறுகி வழுவியே அவர் முரிந்திடப் பொருது மற்று அவர் ஊர் முழுதும் அட்டு மா சுவர்க்கம் மேல் ஏகினன் முனிவால். |
132 |
|
|
|
|
|
|
|
8930.
| போகியோடு அமர் ஆற்றியே அன்னவன் புறந்தந்து ஏகவே துரந்து உயர்த்திடு நாள் மருப்பியானைத் தோகை வான் உதி பற்றியே பல் முறை சுலவி மா கயாசுரன் ஓச்சினன் மகபதி மயங்க. |
133 |
|
|
|
|
|
|
|
8931.
|
பின்னர் அன்னது ஓர் பொன் நகர் அழித்தனன் பெயர்ந்து
துன்னும் எண் திசைக் காவலர் தமை எலாம் துரந்து தன் இனங்கள் ஆம் அவுணர்கள் தம்மையும் சாடி வன்னி அம் சிகை அரக்கர் தம் குழுவையும் மாய்த்தான். |
134 |
|
|
|
|
|
|
|
8932.
| மஞ்சு நேர் தரு கயாசுரன் புவிமிசை வைகி வெம் சினம் கொடே மக்கள் தம் தொகை எலாம் வீட்டி நஞ்சமாம் எனத் திரிதலும் நாடி நல் தவர்கள் அஞ்சி ஓடியே அரன் அமர் காசியை அடைந்தார். |
135 |
|
|
|
|
|
|
|
8933.
| அரும் தவத்தர்கள் அடைதலும் கயாசுரன் அவரைத் துரந்து காசியில் சென்றிட அனையவர் துளங்கித் திருந்தும் அந்நகர் வாணர் தம் கிளையொடும் செறிந்து விரைந்து போய் மணி கன்னிகை புகுந்தனர் வெருவி. |
136 |
|
|
|
|
|
|
|
8934.
| இனிது வித்திய தம் பயன் ஈவதே என்னத் தனது மந்திரம் முடிபவர் செவி இடைச் சாற்றிப் புனிதம் ஆய தன் உருத்திர வடிவு அருள் புரியும் அனக நாயகன் பணிந்து இன்னவாறு அறைவார். |
137 |
|
|
|
|
|
|
|
8935.
|
வெய்ய தந்தியாய் வந்து ஒரு தானவன் விரைவில்
வையத்தை அட்டு எம்மையும் கொல்லிய வருவான் ஐய நின்ன தாள் அரணம் என்று அடைந்தனம் அடியேம் உய்யவே அருள் புரி எனப் போற்றியே உறலும். |
138 |
|
|
|
|
|
|
|
8936.
|
அகில
நாயகன் மந்திரத்து அப் பரி சனர்கள்
தொகையினோடு போய் அரணம் என்று அடைதரு தொடர்பை
முகிலை நேர் உருக் கயாசுரன் காண் உறா முனியா
இகலியே மணி கன்னிகை வாயில் வந்து இறுத்தான். |
139 |
|
|
|
|
|
|
|
8937.
|
வாயில் வந்து இறுத்து உரும் எனத் தெழித்தலும் மதித்துக்
கோயில் எய்திய சனம் எலாம் உளம் குலை குலையா ஆய கண் நுதல் நிமலனைத் தழீஇ மயக்கு அடையத் தீயன் அன்னது நாடியும் அடும் வகை செறுத்தான். |
140 |
|
|
|
|
|
|
|
8938.
|
செறுத்து மற்று அவன் செல்லுழித் தேவர்கள் உய்யக்
கறுத்த அந்தரத்து அண்ணல் ஆம் அத் திறம் கண்டு
குறித்து எலாம் அடும் உக்கிர வடிவினைக் கொண்டு
நிறுத்தும் அண்டம் மேல் உச்சியின் முடி தொட நிமிர்ந்தான்.
|
141 |
|
|
|
|
|
|
|
8939.
| விண் உலாவிய அமரரும் முனிவரும் விழித்துக் கண்ணின் நாட அரிது என விழிபொத்தினர் கவல அண்ணல் ஆயிரம் கோடி ஆதவர் திரண்டது போல் எண் இலாத பேர் ஒளியொடு தோன்றினன் எம்கோன். |
142 |
|
|
|
|
|
|
|
8940.
| உக்கிரப் பெரு வடிவு கொண்டு எம்பிரான் ஒருகால் நக்கு மெல் என உரப்பலும் நடுங்கின அகிலம் அக் கொடும் தொனி ஒழிந்திலது உகம்பல அயனும் மிக்க தேவரும் அவ் ஒலி கேட்டலும் வெருண்டார். |
143 |
|
|
|
|
|
|
|
8941.
| சொற்ற இத்திறம் உக்கிர வடிவொடும் தோன்றிக் கொற்ற மால்கரி அவுணன் முன் எம்பிரான் குறுக மற்று இவன் சிவனாம் எனத் தேறியும் மலைவான் உற்று நின்றனன் அயர்த்தனன் மலர் அயன் உரையே. |
144 |
|
|
|
|
|
|
|
8942.
| மதித்து வேழம் ஆம் தானவன் எதிர்தலும் வடவை உதித்த வன்னியும் அச்சு உற எரிவிழித்து ஒருதன் கதித்த தாள் கொடு தள்ளவே கயாசுரன் கவிழ்ந்து பதைத்து வீழ்தலும் மிதித்தனன் சிரத்தை ஓர் பதத்தால். |
145 |
|
|
|
|
|
|
|
8943.
| ஒரு பதத்தினைக் கவான் உறுத்து இரு கரத்து உகிரால் வெரி நிடைப் பிளந்து ஈர் இருதாள் புடைமேவக் குருதி கக்கியே ஒல் இட அவுணர் தம் குலத்துக் கரி உரித்தனன் கண்டு நின் தம்மையும் கலங்க. |
146 |
|
|
|
|
|
|
|
8944.
|
கார்த்த சிந்துரத்து அவுணர் கோன் விளிந்திடக் கரத்தால்
ஈர்த்த தோலினை ஈர்த்தலும் உலகு உயிர் யாவும் தீர்த்தன் மேனி கொள் பேர் ஒளி நோக்கியே தியங்கிப் பார்த்த கண் எலாம் கதிர் இழந்து அலமரப் பதைத்த. |
147 |
|
|
|
|
|
|
|
8945.
|
ஆளும் நாயகன் அஃது அறிந்து உயிர்த் தொகை அனைத்தும்
வாள் இலாது கண் அயர்வது மாற்றுதல் மதித்து
நீள் இரும் கரி உரித்திடும் அதளினை நிமலன்
தோளின் மேல் கொடு போர்த்தனன் அருள் புரி தொடர்பால்.
|
148 |
|
|
|
|
|
|
|
8946.
|
ஐயன் மிக்க தன் கதிரினைக் குருதி நீர் அறாத
மையல் யானை வன் தோலை மேல் கொண்டனன் மறைத்தான்
செய்ய கோளொடு கரிய கோள் இருவரும் செறிந்து
வெய்ய பானுவின் நடுஉறக் கவர்ந்து மேவிய போல். |
149 |
|
|
|
|
|
|
|
8947.
|
மிகவும்
எம்பிரான் தன் சுடர் மாற்றி மெய் தளரும்
அகிலம் மேல் அவர் விழிக்கு எலாம் தொல் கதிர் அருளித்
தகவு இல் அச்சமும் அகற்றியே காத்தனன் தனக்கு
நிகரும் மேலும் இன்றாகியே அமர் தரு நிமலன். |
150 |
|
|
|
|
|
|
|
8948.
|
அந்த வேலையில் அமரர் போற்றி இசைத்தனர் அது கேட்டு
எந்தை மா மணி கன்னிகை ஆலயத்து ஏக
முந்து தந்தி மால் அவுணற்கு வெருவி மொய்ம்பு இழந்து
சிந்தை மான்று வீழ் பரிசனர் யாவரும் தெளிந்தார். |
151 |
|
|
|
|
|
|
|
8949.
| செறிவு போகிய சனத்தினோர் எழுந்த அருள் திறத்தால் கறை கொள் காலினான் குருதி என்பொடு தசை காணா இறைவனே அவன் தன்னை அட்டான் என எண்ணி அறையும் நேமி போல் ஆடினர் பாடினர் ஆர்த்தார். |
152 |
|
|
|
|
|
|
|
8950.
| காசி வாணரும் முனிவரும் பணிந்தனர் கழல்கள் பூசை ஆற்றவும் புரிவித்து வழுத்தியே போனார் ஈசன் வேழவன் தோல் புனை பேர் அருள் இது காண் பேசுவாம் இனி அயன் சிரம் ஏந்திய பெற்றி. |
153 |
|
|
|
|
|
|
|
8951.
|
முன்னம் ஓர் வைகல் மாலும் முண்டகத்து அயனும்
ஆகப்
பொன்னின் மால் வரையின் உச்சிப் பொலங் குவடு ஒன்றின்
உம்பர்
மன் உழி முனிவர் தேவர் வரம்பிலோர் வந்த
அன்னாரைச்
சென்னியால் வணக்கம் செய்து செம் கரம் குவித்துச் சொல்வார்.
|
154 |
|
|
|
|
|
|
|
8952.
| மூவரின் முதலா னோரும் முதல் இடை முடிவும் இல்லாத் தேவரும் எவையும் நல்கும் செல்வரும் பரம் மேல் ஆகி ஓவரும் புவனத்து உள்ள உயிர்க்கு உயிராய் நின்றோரும் ஏவர் எங்களுக்கு வல்லே இருவரும் இசைத்திர் என்றார். |
155 |
|
|
|
|
|
|
|
8953.
|
என்று உரைத்திடலும் வேதா எம்பிரான் பிணித்த மாயை
தன் தலைப் படலால் யான் அத் தலைமை ஆம் பிரமம் ஆகும்
நன்று இதைத் தெளிதிர் என்ன நாரணன் தானும் அற்றாய்
உன் தனைத் தந்த யானே உயர் தரும் பிரமம் என்றான். |
156 |
|
|
|
|
|
|
|
8954.
|
இருவரும் இனைய பேசி எண் இலா வைகல் யாரும்
வெரு வரு நிலையது ஆக வெய்து உயிர்த்து அழன்று மாறாய்ப்
பொரு வரு தருக்கம் செய்யப் போயினர் முனிவர் தேவர்
ஒருவரும் இன்றி நம்மால் உற்றது இப் பெற்றி என்றே. |
157 |
|
|
|
|
|
|
|
8955.
|
போதலும் அனையர் பின்னும் பூசல் செய்திட்ட காலை
வேதமும் குடிலை தானும் வேறு வேறு உருக்கொண்டு எய்தி
வாத மதியற்றல் என்று மன் உயிர்க்கு உயிராய் ஆர்க்கும்
தாதை ஆம் சிவனே வாய்மைத் தற்பரன் என்ற அன்றே. |
158 |
|
|
|
|
|
|
|
8956.
|
பண்டு அவர் உணர்ந்த வேதப் பனுவலும் குடிலை வாக்கும்
கொண்டு இலர் விலக்கிப் பின்னும் கொடிய வெம் பூசல் செய்யக்
கண்டு மற்று அதனை அன்னோர் கடுமுரண் தொலைக்குமாறு
கொண்டனன் கருணையார்க்கும் குறித்து அருள் கூரும் பெம்மான்.
|
159 |
|
|
|
|
|
|
|
8957.
|
அடிமுடி இலாத வள்ளல் அமலம் ஆம் ஒளியாய் விண்ணின்
நடுவுற வந்து தோன்ற நாரணன் தானும் வேதக்
கடவுளும் சிவன் ஆம் என்று கருதிலர் யாதோ இந்தச்
சுடர் என மருண்டார் மாயச் சூழ்ச்சியின் நீங்கலாதார். |
160 |
|
|
|
|
|
|
|
8958.
|
இயல்
அது தெரிந்து சோதி இடையது ஆய் எம்மை ஆளக்
கயிலையில் உமையாளோடு கலந்து வீற்றிருக்கும் கோலச்
செயல் கொடு பரமன் நண்ணச் சிவன் எனச் சிந்தை தேற்றிப்
புயல் உறழ் மேனிப் புத்தேள் பொருக்கு என எழுந்து தாழ்ந்தான்.
|
161 |
|
|
|
|
|
|
|
8959.
|
மாயை ஓர் சிறிதும் தீரா மலர் அயன் நமது தந்தை
ஆயவன் போந்தான் என்னா அச்சுத மூர்த்தியே போல் கேயமோடு எழுந்து தாழான் நெடியதன் உச்சிக் சென்னித் தீயது ஓர் வாயால் மேலாம் சிவனையும் இகழ்தலுற்றான். |
162 |
|
|
|
|
|
|
|
8960.
|
முண்டகம் இருந்த ஐந்து முகத்தவன் முதல்வன் தோற்றம்
கண்டனன் இகழ அந்தக் கருணை அம் கடலும் சீற்றம்
கொண்டிலன் சிறிதும் அற்றே கொண்டனன் என்னின் எல்லா
அண்டமும் உயிரும் பின்னும் அழிவு உறாது இருக்குமோ தான்.
|
163 |
|
|
|
|
|
|
|
8961.
|
எகினம் அது உயர்த்த அண்ணல் இரும் பவம் தொலைப்ப ஏனைப்
பகவர் தம் அகந்தை மாற்றப் பண்ணவர் மதர்ப்புச் சிந்த
மிகப் பெரும் கருணை தன்னால் வேத நாயகன் உள்ளத்து
மகிழ் வொடு புரிந்தான் என்ப வயிரவக் கடவுள் தன்னை. |
164 |
|
|
|
|
|
|
|
8962.
|
நீல் உறு சுடரின் மெய்யும் எஞகிழிகள் அகற்றும் தாளும்
ஆலம் அது உயிர்க்கும் செம் கேழ் அரவ வெற்றையும் சென்னி
மாலைகள் அநந்தகோடி வயின் வயின் பெயரும் மார்பும்
சூலமும் பரசும் நாணும் துடியும் ஏந்திய பொன் தோளும். |
165 |
|
|
|
|
|
|
|
8963.
|
முக் கணும் திங்களே போல் முளைத்த வாள் எயிறும் வன்னிச்
செக்கரம் சடையின் சீரும் செயிர் கெழு நகையும் ஆக
உக்கிர வடிவு கொண்டு ஆங்கு உதித்திடும் வடுகன் தன்னை
மைக் கிளர் கண்டத்து எந்தை நோக்கியே வகுத்துச் சொல்வான்.
|
166 |
|
|
|
|
|
|
|
8964.
|
திகழ்ந்த நம் சிறுவன் ஆகும் செம் கமலத்தோன் சென்னி
இகழ்ந்தது நம்மை உச்சி இருந்ததே அதனை வல்லே
அகழ்ந்தனை கரத்தில் ஏந்தி அவன் உயிர் நல்கித் தம்மைப்
புகழ்ந்திடு முனிவர் தேவர் புரந் தொறும் போதி அன்றே. |
167 |
|
|
|
|
|
|
|
8965.
|
போந்தனை அனையர் தங்கள் புலவுடற் சோரி தானே
வாய்ந்தது ஓர் ஐயம் ஆக வாங்குதி வாங்கும் வேலை
வீந்தவர் தமக்கு மீட்டும் வியன் உயிர் உதவி அன்னோர்
ஆய்ந்திடும் அகந்தை மாற்றி அண்டம் மேல் அடைதி அம்மா.
|
168 |
|
|
|
|
|
|
|
8966.
|
முன்பு உடைத்தாகும் அண்ட முகடுதோய் பதத்தின்
மன்னி
மன்பதைக் குலங்கள் யாவும் வானவர் தொகையும் யாண்டும்
துன்பு அறக் காத்தி என்று தூய நல் அருளை நல்கி
அன்பு உடைக் கடலாம் எம் கோன் அமலம் ஆம் சோதிபுக்கான்.
|
169 |
|
|
|
|
|
|
|
8967.
|
ஆதி அம் கடவுள் அம்கண் அடைதலும் அமலம்
ஆகும்
சோதியும் அனையர் காணாத் தோற்றம் அது ஆக மாயோன்
ஈது எலாம் தெரிந்து நிற்றல் இயற்கை அன்று என்னா முக்கண்
நாதனை இறைஞ்சி வல்லே நடந்து தன் பதியில் புக்கான். |
170 |
|
|
|
|
|
|
|
8968.
|
அளந்து மண் கொண்ட மாயன் அகன் நகர் அடைதலோடும்
கிளர்ந்து எழு காரி வேதாக் கேழ்கிளர் உச்சிச் சென்னி
களைந்து தன் நகத்தால் ஏந்தக் கால் உறு குருதி நீத்தம்
வளைந்தது புவியைத் துஞ்சி மலரவன் தானும் வீழ்ந்தான். |
171 |
|
|
|
|
|
|
|
8969.
|
சோரி
நீர் நீத்தம் ஆகித் துண் என உலகம் கொண்டு
மேரு மால் வரையைச் சூழ வெய்ய தன் நுதல் கண் தீயால்
சேரவே வறப்பித்து அந்த செம் கமலத் தினானுக்கு
ஆர் உயிர் நல்கலோடும் அவன் உணர்ந்து எழுந்தான் அன்றே.
|
172 |
|
|
|
|
|
|
|
8970.
| துயில் உணர்ந்தவர் ஆம் எனத் தொல்லையில் பயிலும் நல் உணர்வு எய்தலும் பங்கயன் வயிரவன் தன் மலரடி மீ மிசை இயலும் அன்பொடு இறைஞ்சி உரை செய்வான். |
173 |
|
|
|
|
|
|
|
8971.
| நெற்றி அம் கண் நிமலற்கு யான் செயும் குற்றம் உண்டு குணிப்பு இல அன்னதால் பெற்று உளேன் இப் பெரும் பழி ஈங்குஇனிச் செற்றம் ஏதும் திரு உளம் கொள்ளலை. |
174 |
|
|
|
|
|
|
|
8972.
| இன்மை ஆக இமைப்பின் உலகு அடும் வன்மை கொண்ட வடுக நின் ஆர் அருள் நன்மையால் தொல்லை நல் உணர்வு எய்தினன் புன்மை யாவும் பொறுத்திடல் வேண்டும் ஆல். |
175 |
|
|
|
|
|
|
|
8973.
| தீயது ஆன சிறிய இச் சென்னியும் தூயது ஆகத் தொழும்பினன் கண்டுழி மாலை தீர மலர்க் கையில் கோடி நீ மேய சூல வியன் படை என்னவே. |
176 |
|
|
|
|
|
|
|
8974.
| என்ன இத் தகை பன்னி இறைஞ்சலும் சென்னி நான்கு உடைத் தேவனை நோக்கியே அன்னது ஆக என்று ஐயன் அருளியே பொன்னின் மால் வரை நீங்கினன் போயினான். |
177 |
|
|
|
|
|
|
|
8975.
| காலவேகன் கனல் முகன் சோமகன் ஆல காலன் அதிபலன் ஆதியாச் சால நீடிய சாரதர் தானையை நீல மேனி நிமலன் உதவினான். |
178 |
|
|
|
|
|
|
|
8976.
| எண் இலா அக் கணங்களொடு எம்பிரான் நண்ணி ஒல்லை நவையுறு மாதவர் மண்ணின் மேய வனம் தொறும் வானவர் விண்ணின் எல்லை தொறும் விரைந்து ஏகினான். |
179 |
|
|
|
|
|
|
|
8977.
| மெய்யின் ஊறும் வியன் குருதிப் புனல் ஐயமாக் கொண்ட அனையர் தம் ஆவிகள் உய்யவே பின் உதவி உளம் எலாம் துய்ய வாக்கினன் தொல் அருள் ஆழியான். |
180 |
|
|
|
|
|
|
|
8978.
| வடுக அண்ணல் அவ் வானவர் ஊர் எலாம் கடிதின் நீங்கிக் கருவத்தை நீங்கு உறா நெடிய மால் உறை நீள் புரம் போயினான் முடுகி ஏகினர் முன் கண நாதரே. |
181 |
|
|
|
|
|
|
|
8979.
| அந்தமில் கணம் ஆனவர் யாவரும் முந்தி ஏக முதல் பெரு வாயிலோன் தந்திரத் தலைவன் தடுத்தான் அரோ நந்தும் ஆழியும் நாரணன் போலுளான். |
182 |
|
|
|
|
|
|
|
8980.
|
கால
வேகனை ஆதிக் கணத்தவர்
ஆலம் என்ன அவனொடு போர்செய மேலையோன் அங்கு மேவி அவன் உடல் சூலம் மேல் கொந்தித் துண் என ஏகினான். |
183 |
|
|
|
|
|
|
|
8981.
| நிலமகள் ஒருபுடை நிறம் கொள் பங்கய மலர் மகள் ஒருபுடை மருவப் பல் தலை குலவிய பணியின் மேல் கொண்டல் மேனியான் தலைமையொடு உறை தரு தானம் நண்ணினான். |
184 |
|
|
|
|
|
|
|
8982.
| நிணம் கிளர் முத்தலை நெடிய வேல் இறை கணங்களின் நிரையொடு கடிது செல்லமால் அணங்கின ரோடு எழா ஐயன் தாள் மிசை வணங்கி நின்று எந்தை நீ வந்தது என் என்றான். |
185 |
|
|
|
|
|
|
|
8983.
| என்றலும் கண் நுதல் இறைவன் யாம் இவண் சென்றது பலிக்கு நின்று இருந்து சென்னியில் ஒன்றிய குருதியே உதவுவாய் என நன்று என நாரணன் நவின்று போற்றியே. |
186 |
|
|
|
|
|
|
|
8984.
| தன் நுதல் அதன் இடைத் தனாது செம் கையின் நல் நகத்தால் ஒரு நாடி வாங்கியே அன்னது ஒர் பொழுதினில் அரி உய்த்தான் அரோ துன்னிய குருதி நீர் சூலி ஏற்பவே. |
187 |
|
|
|
|
|
|
|
8985.
| வீண்டிடு சோரியின் வெள்ளம் வெம் பணி பூண்டது ஒர் கண் நுதல் பொலம் கைச் சென்னிமேல் ஆண்டு ஒரு நூறு நூற் அவதி உய்த்தலும் மாண்டது வேறு ஒரு மயக்கம் வந்ததே. |
188 |
|
|
|
|
|
|
|
8986.
| பாதியும் நிறைந்ததும் இல்லை பாணியின் மீது உறு பலிக்கலன் மிக்க வன்மை போய்ச் சீதரன் சோர்தலும் திருவும் ஞாலமும் காதலன் நிலைமையைக் கண்டு இரங்கினர். |
189 |
|
|
|
|
|
|
|
8987.
| செம் சரண் அடைந்து அயர் தெரிவைமார் தமை அஞ்சல் என்று அருளி எம் அண்ணல் அச்சுதன் நெஞ்சு உறு மயலினை நீக்கி ஆங்கு அவன் உஞ்சு எழுமாறு செய்து உறையுள் நீங்கினான். |
190 |
|
|
|
|
|
|
|
8988.
| நீங்கினன் பின்வரும் நெடிய மாயனை ஈங்கு இனிது இருத்தி என்று இயம்ப அன்னவன் ஓங்கு நின் சூலம் மேல் உற்று உளான் தனைப் பாங்கு உற அருள்க எனப் பகர்ந்து வேண்டவே. |
191 |
|
|
|
|
|
|
|
8989.
| கைத்தலை அயன் தலைக் கபால் கொண்டு உற்றவன் முத்தலை வேலினும் முடிந்த சேனையின் மெய்த்தலைவன் தனை விடுத்துத் தொல் உயிர் அத்தலை நல்கியே அருள் செய்தான் அரோ. |
192 |
|
|
|
|
|
|
|
8990.
| மால் உலகு ஒருவியே வடுகன் அன்னது ஓர் கோலமோடே கணம் குழுமிச் சூழ்தர மேல் உள புவனம் மேல் மேவி வைகலும் பாலனம் செய்தனன் பல அண்டங்களும். |
193 |
|
|
|
|
|
|
|
8991.
|
அடுவது
ஒர் இறுதியில் கமலன் ஆணையால்
கடவுளர் சென்னியும் கமலன் ஆதியோர் முடிகளும் அட்டு உயிர் முற்றும் மாற்றி நுண் பொடிபட இயற்றும் ஆல் புவனம் யாவையும். |
194 |
|
|
|
|
|
|
|
8992.
| பொறியுறும் உயிர்களும் புவனம் யாவையும் இறுதியாய் அழிவுறும் ஈமத்து எல்லையின் மறை எனும் ஞாளியை உயர்த்து மற்றவன் உறுவது ஓர் மகிழ்ச்சியால் உலவும் என்பவே. |
195 |
|
|
|
|
|
|
|
8993.
| கண்டகம் கொள் கபால் கொடு காசினி விண்டகம் தொறும் வெம் பலிக்கு உற்றதும் முண்டகன் முதலோர் தமை எம்பிரான் தண்டகம் செய் தலை அளி ஆகும் ஆல். |
196 |
|
|
|
|
|
|
|
8994.
| ஆற்றின் மல்கும் அவிர்சடை அண்ணல் பால் தோற்று கின்றது ஒர் தூயவன் சோரிநீர் ஏற்ற தன்மை இயம்பினம் ஈங்குஇனி வேற்று உருக் கொண்ட தன்மை விளம்புவாம். |
197 |
|
|
|
|
|
|
|
8995.
| முந்து ஒரு ஞான்று மூவுலகும் போற்றிடும் இந்திரன் இமையவர் இனத்தொடு ஏகியே அந்தம் இல் கயிலையில் அரனைப் போற்றுவான் வந்தனன் அகந்தையும் மனத்தில் தாங்கியே. |
198 |
|
|
|
|
|
|
|
8996.
| பொன் கெழு கடிமதில் பொன்னம் கோயில் முன் மின்கெழு வச்சிர வேந்தன் சேர்தலும் கொன் கெழு பாரிடக் கோலம் தாங்கியே முன்கடை நின்றனன் முடிவின் முன்னையோன். |
199 |
|
|
|
|
|
|
|
8997.
| நின்றிடும் ஒருவனை நெடிது நோக்கியே இன்று உனைக் கண்டனன் யாரை ஐய நீ மன்றவும் விருந்தினை வள்ளலைத் தொழச் சென்றனன் வேலை என் செப்புக என்னவே. |
200 |
|
|
|
|
|
|
|
8998.
| மற்று அது காலையின் மகேசன் யாவதும் சொற்றிலன் ஆகிய சூர்த்த நோக்குடன் உற்றிட மேல் வரும் ஊற்றம் உன்னலன் செற்றம் அது ஆயினன் தேவர் செம்மலே. |
201 |
|
|
|
|
|
|
|
8999.
| அண்டரும் அகந்தையன் ஆற்றவும் திறல் கொண்டனன் என்று தன் குலிச மாப்படை கண்டகன் எறிதலும் கடவுள் மேல் படா நுண் துகள் ஆகியே நொய்தின் மாய்ந்ததே. |
202 |
|
|
|
|
|
|
|
9000.
| மருத்துவன் வச்சிரம் மாய்ந்து போதலும் புரத்தினை அட்டு அருள் புனிதன் அவ்வழிக்கு இருத்தி மரு உருவினை நீங்கிக் கேழ்கிளர் உருத்திர வடிவினை ஒல்லை தாங்கினான். |
203 |
|
|
|
|
|
|
|
9001.
|
உயிர்ப்பு
உறு சடில நின்று ஊறு தண் புனல்
அயர்ப்பு உறு மகபதி அகந்தை கண்டு அட மயிர்ப் புறம் எங்கணும் வந்து தோன்றலின் வியர்ப்பு வந்து அடைந்தன மேனி முற்றுமே. |
204 |
|
|
|
|
|
|
|
9002.
|
எள்ளுதல்
செய்திடும் இவன் தன் ஆருயிர்
கொள்ளுதும் எனச் சினம் கொண்ட தீ யொடும் உள் உறு கால் எழீஇ ஒருங்கு சென்று எனப் பொள் என உயிர்ப்பு அழல் புகையொடு உற்றதே. |
205 |
|
|
|
|
|
|
|
9003.
| குறுகி நின்று ஆற்றலால் குலிச மாப்படை எறிதரு கொடியனை எய்த வேள் எனச் செறுகனல் விழி எனச் செப்பச் சேறல் போல் நெறி தரு புருவமும் நெற்றி சேர்ந்தவே. |
206 |
|
|
|
|
|
|
|
9004.
| பற்றலர் புரங்களோ உலகின் பன்மையோ முற்று உயிர் ஈட்டமோ முடிக்கப் பேதையைச் செற்றிடல் வசை அவன் செயலைக் காண்டும் என்று உற்றனன் முறுவலும் உதித்தது ஒல்லையில். |
207 |
|
|
|
|
|
|
|
9005.
| துடித்தன துவர் இதழ் உரப்பித் தூயவாய் இடித்தன சேந்தன இரண்டு கண்களும் விடத்தினை நுகர்ந்தவன் வெகுளித் தீயினுக்கு அடுத்திடு துணைவர்தம் அமைதி போலவே. |
208 |
|
|
|
|
|
|
|
9006.
| அக்கணம் இவ்வகை யார்க்கும் ஆதிஆம் முக்கணன் நான்முகன் முதல தேவரும் மிக்கு உள உயிர்களும் வெருவ வெய்யது ஓர் உக்கிர வடிவு கொண்டு உருத்து நின்றனன். |
209 |
|
|
|
|
|
|
|
9007.
|
நிற்கின்ற எம்பெருமான் பெரும் சீற்றம் தனை நோக்கி நெஞ்சம்
ஆகும்
கல்குன்றம் நடு நடுங்கப் பதைபதையா அஞ்சி அவன் கழலின்
வீழ்ந்தே
எல் குன்றன் மாயம் எலாம் தெரிந்திடுமோ மால்
அயனும்
இன்னும் தேறார்
பொன் குன்றச் சிலையானே வினையேன் செய் பிழை அதனை
பொறுத்தி என்றான். |
210 |
|
|
|
|
|
|
|
9008.
|
போற்றிப் பன்முறை தாழும் புரந்தரனை அஞ்சேல்
என்று புரிந்து நோக்கி
மேல் திக்கில் வீழ்கின்ற செம் கதிரோ இது என்ன
வேலை மேல்தன்
சீற்றத் தீ யினை வீசி ஆங்கு அவற்கு விடை
கொடுத்துச் செல்க என்று
ஏவி
ஏற்றில் செய் அரி அரியணைமேல் உறையுள் புகுந்து உமை
யொடும் வீற்று இருந்தான் எம்கோன். |
211 |
|
|
|
|
|
|
|
9009.
| கூற்றுவன் தனிக் கூற்றன் மந்திரம் வீற்று இருந்திடும் வேலை வாய் தனில் ஆற்றல் சேர் புனற்கு அரசன்பால் விடு சீற்றம் ஆனது ஓர் சிறுவன் ஆனதே. |
212 |
|
|
|
|
|
|
|
9010.
| ஆன பாலனை அம்புராசி தன் கான் உலாம் திரைக் கரங்களால் தழீஇத் தான வேசன் என் தனயன் ஆயினான் நானல் ஆதியார் நல் தவம் செய்தார். |
213 |
|
|
|
|
|
|
|
9011.
| ஊழி பேரினும் உலகம் பேரினும் வாழி வாழி என்மைந்த நீ எனாக் கேழில் ஆசிகள் கிளத்திப் போற்றினான் ஆழி மால் கடற்கு அரசன் என்பவே. |
214 |
|
|
|
|
|
|
|
9012.
| நசை குலாவிய நரலை காத்திட வசைவு இலான் சிறிது அழுத வேலையில் வசை இலாது உயர்வானும் மண்ணும் எண் திசையும் யாவையும் செவிடு பட்டவே. |
215 |
|
|
|
|
|
|
|
9013.
| நூன் முகத்தின் ஓர் நுனித்துக் காணுறு நான் முகத்தினோன் நாடி இவ் ஒலி வான்முகத்து இடைவரும் இதே எனா மீன் முகத்து உலாம் வேலை மேவினான். |
216 |
|
|
|
|
|
|
|
9014.
| வேலை சேர அவ் வேலை வேலையும் சால அன்பினால் தவி சொன்று இட்டு நீ ஏலம் மேவுக என்று இருத்தி யான்பெறும் பாலன் ஈங்கு இவன் பார்த்தி ஆல் எனா. |
217 |
|
|
|
|
|
|
|
9015.
| கையில் நீட்டலும் கடிது வாங்கியே ஐயன் தன் மடி அதனில் சேர்த்திடத் துய்ய புல் அணம் தொடர்ந்து பற்றினான் மையல் மைந்தனும் தனது வன்மை ஆல். |
218 |
|
|
|
|
|
|
|
9016.
| நார்த் தொடுத்து எனும் நான்கு தாடியும் ஈர்த்துத் தூங்கலும் இணை இல் வேதனும் ஆர்த்தி எய்தினான் அவன் கண் ஏயவன் சீர்த்தி கான்று எனச் சிந்திற்று ஒண் புனல். |
219 |
|
|
|
|
|
|
|
9017.
| காறொடு அடர்ந்து இழி கலங்கு கண் புனல் ஆறு போலிய அகலம் தன் வழிச் சேறல் மேயது செறி உற்று ஈண்டியே வேறு ஒர் வேலை போல் வேலை புக்கதே. |
220 |
|
|
|
|
|
|
|
9018.
| முக் கண் நாயகன் முனிவு தன் இடைப் புக்க காலையில் புனல் வறந்திடும் மைக் கரும் கடல் வறுமை நீங்கிற்று ஆல் மிக்க நான் முகன் விழியின் நீரினால். |
221 |
|
|
|
|
|
|
|
9019.
| பதுமன் அவ்வழிப் படர் மயிர்த் தொகை மதலை கையினும் மரபின் நீக்கியே கதும் எனப் பலகரங்களால் எடுத்து உததி தன் கையில் உயிர்த்து நீட்டினான். |
222 |
|
|
|
|
|
|
|
9020.
| நீட்டி ஓர் இறை நினைந்து நீ இது கேட்டி ஒன்று இசை ஆம் கிளத்துவோம் இவன் ஏட்டு உலாயது என் இதழி சென்னியில் சூட்டும் எம்பிரான் முனிவு இல் தோன்றினான். |
223 |
|
|
|
|
|
|
|
9021.
| கருதிடான் ஒரு கடவுள் தன்னையும் வரமும் வேண்டலன் ஏது மற்று இவன் ஒருவராலும் ஈறு உற்றிடான் அரோ பரமன் சீற்றமே ஆன பான்மையால். |
224 |
|
|
|
|
|
|
|
9022.
| தேவர் தேவர் கோன் திசையின் ஓர் வெரீ இப் போவரே எனில் பொருகிற்பார் எவர் நீவிர் ஏனும் முன் நிற்றல் அஞ்சுவீர் ஏவரே இவன் எதிர் நிற்பார் களே. |
225 |
|
|
|
|
|
|
|
9023.
| ஆயும் தொல் நெறி அமரர் யாவரும் ஈயும் சாபம் வந்து இவனை நேருமோ காயும் திண் திறல் கடவுள் தன்மைசேர் தீயும் தீயும் நின் சிறுவன் வெம்மை ஆல். |
226 |
|
|
|
|
|
|
|
9024.
|
நானும்
அஞ்சுவன் நாளினை காவலன்
தானும் அஞ்சுவன் தவறு இல் வேள்வி செய் கோனும் அஞ்சும் வெம் கூற்றும் அஞ்சும் அவ் வானும் அஞ்சும் இம் மண்ணும் அஞ்சுமே. |
227 |
|
|
|
|
|
|
|
9025.
| பாசனங்களே பரவ ஞாலமேல் தேசு இல் வெய்ய கோல் செலுத்தி ஆங்கு அவர் ஆசி செய்ய நீடு அரசு செய்வனால் ஈசன் அன்றி யார் இவனை வீட்டுவார். |
228 |
|
|
|
|
|
|
|
9026.
| என்னும் மாத்திரத்து இவன் தனக்கு நீ நல் நலம் திகழ் நாமம் ஒன்றினைப் பன்னுக என்ன நீ பரித்தலால் இவன் தன்ன தொல் பெயர் சலந்தரன் எனா. |
229 |
|
|
|
|
|
|
|
9027.
| பேரிட்டு ஒல்லையில் பிரமன் தான் உறை ஊரில் போயினான் உததி பல் பகல் சீரில் போற்றலும் சிறுவன் காளையாய்ப் பாரில் சேர்ந்தனன் அவுணர் பால்பட. |
230 |
|
|
|
|
|
|
|
9028.
| சென்று பார் இடைத் திசைகள் யாவையும் வென்று வாசவன் விண் உளோர் நிதிக் குன்று சேர் தரக் கொடுமை செய்தனன் துன்று கின்ற தொல் அவுணர் சூழவே. |
231 |
|
|
|
|
|
|
|
9029.
| பொன் நெடும் கிரிதனில் புத்தேளிர் இரு மன்னும் வைகலும் வான நாடு எலாம் தன்னை நேரிலான் தானவர்க்கு எலாம் நல் நயப்பொடு நல்கினான் அரோ. |
232 |
|
|
|
|
|
|
|
9030.
| வச்சிரப் படை மன்னன் பொன் நகர் நச்சும் வண்ணம் ஓர் நகரம் செய்க என அச் சலந்தரன் அருளத் தானவர் தச்சன் அவ்வழி சமைத்து நல்கினான். |
233 |
|
|
|
|
|
|
|
9031.
| பாந்தள் மீ மிசை பரிக்கும் நேமிசால் அந்தரம் என அறைய நின்றது ஓர் ஏந்தல் மா நகர் இடையில் தானவர் வேந்தர் போற்றிட அரசில் மேயினான். |
234 |
|
|
|
|
|
|
|
9032.
| கால நேமி ஆம் அவுணன் கன்னிகை வேலை நேர் விழி விருந்தை என்பவள் கோல நாடியே குரவன் கூறிட ஏலவே மணந்து இன்பம் எய்தினான். |
235 |
|
|
|
|
|
|
|
9033.
| பாரில் அவ்வழிப் பல் நெடும் பகல் சீரின் வைகினான் தேவர் யாவரும் மேரு உற்றனர் அவரை மேவியாம் போர் செய்வோம் எனப் புகன்று போயினான். |
236 |
|
|
|
|
|
|
|
9034.
| துங்க வீரர்கள் தொழு சலந்தரன் அங்கண் மேவலும் அமரர் வெய்யவன் இங்கும் வந்தனன் என் செய்வோம் எனாச் சிங்கம் கண்டது ஓர் கரியின் தேம்பினார். |
237 |
|
|
|
|
|
|
|
9035.
|
தேம்பு
கின்றவர் செய்வது ஓர்கிலார்
பாம்பு அணைத் துயில்பவனை உன்னியே
ஓம்புக என்றலும் உவணம் மீ மிசை
ஏம்பலோடும் வந்து இமைப்பில் எய்தினான். |
238
|
|
|
|
|
|
|
|
9036.
| வரு சலந்தரன் மாறு கொண்டு எழ இருபது ஆயிரம் ஆண்டு பல் படை உரிய மாயை கொண்டு உருத்து எழுந்து மால் பொருதும் வென்றிலன் புகழ்ந்து போயினான். |
239 |
|
|
|
|
|
|
|
9037.
| கொண்டல் மேனியன் கொடியன் தன்னொடு மாண்டு போர் இடை மலையும் வேலையில் அண்டர் வாசவன் அஞ்சி ஆலம் ஆர் கண்டன் மேவிய கயிலை எய்தினார். |
240 |
|
|
|
|
|
|
|
9038.
|
அற்றா கின்ற வேலையின் வேலை அருள் மைந்தன்
பற்றார் தம்மை நாடினன் யாண்டும் பார்க்கின்றான்
கற்றார் ஏத்தும் கண் நுதல் மேய கயிலாயித்து
உற்றார் கொல் என்று உன்னி வெகுண்டான் ஊர் போந்தான்.
|
241 |
|
|
|
|
|
|
|
9039.
|
தூண்டா ஒற்றால் பெற்றிடு சேனைத் தொகையோடு
மீண்டா நிற்பான் தென் கயிலைக்கு என்று எழும் வேலை வேண்டாம் வேண்டாம் நித்தனுடன் வெம் சமர் செய்யின் மாண்டாய் என்றாள் இல் என வாழும் மதி வல்லி. |
242 |
|
|
|
|
|
|
|
9040.
|
குலம் தனில் வந்தாள் கூறிய மாற்றம் குறிக் கொள்ளான்
நலம் தருகின்ற செய்வினை ஓரான் நவை பாரான் புலம் தரு செற்றம் மீக்கொள யாதும் பொறை இன்றிச் சலந்தரன் ஆம் பேர் உண்மை அது என்னச் சாதித்தான். |
243 |
|
|
|
|
|
|
|
9041.
|
சோனா மேகம் போற்புடை மாரி சொரிகின்ற
சேனா யூகம் சூழ்தர வாழித் திருமைந்தன் போனான் எம்கோன் தென் கயிலைக்கு ஓர் புடையாக வான் நாடுள்ளோன் ஆங்கு அது காணா மறுகு உற்றான். |
244 |
|
|
|
|
|
|
|
9042.
|
தாண்டும் பாய் மாத் தேர் கரி வீரர் தன் சூழ
ஈண்டும் வந்தான் தீயவன் ஆவி இறும் வண்ணம் காண்டும் என்னா வாசவன் வானோர் கணமோடும் வேண்டும் வெள்ளிக் குன்று உறு கோயில் மேவு உற்றான். |
245 |
|
|
|
|
|
|
|
9043.
| முந்திய வாயிலின் முறை புரிந்திடும் நந்தியை வணங்கி உள் நடுக்கம் செப்பலும் அந்தம் இல் பண்ணவன் அருளை நாடியே உந்திட இந்திரன் உறையுள் போயினான். |
246 |
|
|
|
|
|
|
|
9044.
| குணங்களின் மேல் படு குழகன் மால்வரை அணங்கொடு வீற்றிருந்து ஆளும் எல்லை போய் வணங்கினன் தொழுதனன் வலிய துன்பினால் உணங்கு தன் மனக் குறை உரைத்தல் மேயினான். |
247 |
|
|
|
|
|
|
|
9045.
| நிலம் தனை வளைந்த முந்நீரில் வந்தவன் கலந்தரன் எனும் பெயர்த் தறுகண் தானவன் மலைந்து எமை வென்றிட மாசு உற்று ஓடினேன் நலம் தருகின்ற பொன்னாடு நீத்தனன். |
248 |
|
|
|
|
|
|
|
9046.
|
வெம்
துயர் எய்தியே மேருவின் புடை
உய்ந்தனன் யான் என ஒளித்து மேவினன் அந்த வண்ணத்தையும் அறிகுற்று ஆங்கு அவன் வந்தனன் அவ் வழி மாலை உன்னினேன். |
249 |
|
|
|
|
|
|
|
9047.
| மாலும் வந்து அணுகியே மலைந்து தோற்றிடா மேலும் அங்கு அவன் தனை வியந்து போயினான் நீல கண்டத்தனே நினது மால் வரை ஏல வந்து உற்றனன் இதுவும் கேட்டனன். |
250 |
|
|
|
|
|
|
|
9048.
| ஈங்கு வந்து உற்றனன் இனி ஆவது உன்னியோ ஆங்கு அது தெரிகிலேன் அளியன் துன்பமும் தீங்கு உறு கலந்தரன் திறலும் வாழ்க்கையும் நீங்குதல் உன்னுதி நிமல நீ என்றான். |
251 |
|
|
|
|
|
|
|
9049.
| வரை எறி படையினன் மாற்றம் கேட்டு நின் பருவரல் ஒழிக எனப் பகர்ந்து போக்கியே கருணையின் நீர்மையால் கணிச்சி வானவன் ஒரு தனி ஆடலை உள்ளத்து உன்னினான். |
252 |
|
|
|
|
|
|
|
9050.
| நான்ற குண்டிகையினன் நரை கொள் யாக்கையின் ஊன்றிய கோலினன் ஓலைக் கையினன் மூன்ற நல் வளர்ப்பு உறு முனிவரே எனத் தோன்றினன் தனக்கு தோற்றம் வேறு இலான். |
253 |
|
|
|
|
|
|
|
9051.
| விம்மலை உற்றிடு விரதர்க்கு ஆக முன் கைம் மலை உரித்தவன் கயிலை என்றிடும் அம்மலை ஒரு புடை அணுகும் தானவர் செம்மலை எதிர்கொடு செம்மல் மேயினான். |
254 |
|
|
|
|
|
|
|
9052.
| இந்திரன் இமையவர் இனத்தொடு ஈண்டியே வந்தனை செய்தனன் மறைந்து பின்வர அந்தணர் வடிவு கொண்டு அவுணர் காவலன் முந்து உற எய்தியே முதல்வன் கூறுவான். |
255 |
|
|
|
|
|
|
|
9053.
| எங்கு உளை யாரை நீ எவரை நாடியே இங்கு உறுகின்றனை இயம்புவாய் என அம் கணன் மொழிதலும் அம் தண் வேதிய சங்கையது இல் வகை சாற்றக் கேள் என்றான். |
256 |
|
|
|
|
|
|
|
9054.
| நிலம் தனில் உற்று உளேன் நேமி காதலன் சலந்தரன் என்பவன் தமியன் வானவர் உலைந்திட நுதல் விழி ஒருவன் தன் உடன் மலைந்திட வந்தனன் வல்லை ஈண்டு என்றான். |
257 |
|
|
|
|
|
|
|
9055.
| அவ் உரை வினவியே அண்ணல் எண்ணமும் செவ்விது செவ்விது தீது உண்டோ எனா எவ்வம் இல் புகழ்ச்சி போல் இகழ்ந்து காட்டிடா நவ்வி அம் கைத்தலன் நகைத்துச் செப்புவான். |
258 |
|
|
|
|
|
|
|
9056.
| கயிலை அம் கிரி உறை கண் நுதல் தம்பிரான் அயல் உற இருப்பன் யான் அவனோடே அமர் முயல் உறு கிற்றியேல் முடிதி உய்ந்திடும் செயலினை நினைத்தி ஏல் செல்க மீண்டு என்றான். |
259 |
|
|
|
|
|
|
|
9057.
|
பண்ணவன்
இனையன பகர்தல் கேட்டலும்
எண்ணம் இல் சலந்தரன் எரியில் சீறியே கண் அழல் கதுவுறக் காயம் வேர்வு எழத் துண் என உயர்த்தி இவை சொற்றல் மேயினான். |
260 |
|
|
|
|
|
|
|
9058.
| சிறியவன் போல் எனைச் சிந்தித்து ஈரியான் பெறுவது ஓர் சயம் எலாம் பேசி ஆவது என் இறைவரை ஈண்டு நின்று எனது வன்மையை அறிகுதிர் அறிகுதிர் அந்தணீர் என்றான். |
261 |
|
|
|
|
|
|
|
9059.
| என்று இவை சலந்தரன் இசைப்ப யாமும் உன் வன் திறல் காணிய வந்தனம் எனாத் தன் திருவடியினால் தரணியின் மிசை ஒன்று ஒரு திகிரியை ஒல்லை கீறினான். |
262 |
|
|
|
|
|
|
|
9060.
| ஆங்கு அது திகிரி ஒன்று ஆக அந்தணன் ஈங்கு இது சென்னியில் ஏற்றி வன்மை ஆல் தாங்குதல் வல்லையோ என்று சாற்றலும் தீங்கு உறு சலந்தரன் இனைய செப்புவான். |
263 |
|
|
|
|
|
|
|
9061.
| புங்கவர் யாரையும் புறம் கண்டேன் வரு கங்கையை அடைத்தனன் கார்கொள் வேலையில் அங்கியை அவித்தனன் அரியை வென்றனன் இங்கு இது தாங்குவது அரியதோ எனா. |
264 |
|
|
|
|
|
|
|
9062.
| புரத்து அழல் கொளுவியோன் பொறித்த நேமியைக் கரத்து இடை எடுத்தனன் கனம் கொண்டு எய்தலின் உரத்து இடைப் புயத்து இடை உயிர்த்துத் தாங்கியே சிரத்து இடை வைத்தனன் தேவர் ஆர்க்கவே. |
265 |
|
|
|
|
|
|
|
9063.
| செழும் சுடர்ப் பரிதியைச் சென்னி கோடல் ஆல் ஒழிந்திடும் சலந்தரன் உச்சியே முதல் கிழிந்தது முழுது உடல் கிளர்ந்து சோரிநீர் இழிந்தது புவிதனில் இழும் என் ஓசையால். |
266 |
|
|
|
|
|
|
|
9064.
| பரிதி அம் கடவுள் அப் பதகன் தன் உடல் இரு பிளவு ஆக்கியே இறைவன் தன் இடை உருவு கொண்டு உற்றது இவ் உலகம் யாவையும் குருதி அம் பெரும் கடல் வளைந்து கொண்டதே. |
267 |
|
|
|
|
|
|
|
9065.
| பாதல நிரயம் ஆம் பாழி ஊடு நீ போது என எருவை நீர் போந்தது ஆயிடை ஆதி அம் கடவுள் அவ் அவுணன் சேனையைக் காதினன் விழி பொழி கனலின் தானையால். |
268 |
|
|
|
|
|
|
|
9066.
| பரந்திடும் அவுணர் தம் பகுதி வீட்டியே கரந்த தொல் வடிவினைக் காட்டி நிற்றலும் புரந்தரன் முதலினோர் வணங்கிப் போற்றிஎம் அரந்தையை அகற்றினை ஐய நீ என்றார். |
269 |
|
|
|
|
|
|
|
9067.
| முன்பு உறு புரந்தரன் முதலினோர்க்கு எலாம் இன்பு உறு தொல் அரசு இயற்ற நல்கியே அன்புடன் விடை கொடுத்து அமல நாயகன் தென் பெரும் கயிலை மேல் சேர்ந்து வைகினான். |
270 |
|
|
|
|
|
|
|
9068.
|
ஆவியை
இழந்திடும் அவுணர் காவலன்
தேவியை விரும்பியே திருவின் நாயகன் மாவிரதியர் என மற்று அவன் மனைக் காவினுள் இருந்தனன் கை தவத்தினான். |
271 |
|
|
|
|
|
|
|
9069.
| இருந்திடும் எல்லையில் ஏமக் கற்புடை விருந்தை என்றிடும் அவள் வேந்தன் செய்கையைத் தெரிந்திலள் ஆற்றவும் சிந்தை நொந்து மெய் வருந்தினள் உய்ந்திடும் வண்ணம் காண்கிலாள். |
272 |
|
|
|
|
|
|
|
9070.
| பரிதல் உற்று இரங்கினள் பதைத்துச் சோர்ந்தனள் ஒரு தனித்து இருக்கிலள் உரையும் ஆடலள் திரிதல் உற்று உலவினள் செய்வது ஓர்கிலள் இருதலைக் கொள்ளியின் எறும்பு போன்றுவாள். |
273 |
|
|
|
|
|
|
|
9071.
| கல் வரை ஏந்தியே காளையைப் புணர் தொல் வரை ஊழினால் துன்பம் நீங்கலா மெல் வரை அன்னதோள் விருந்தை மேவினாள் இல் வரை இகந்திடா ஏமக் காவினுள். |
274 |
|
|
|
|
|
|
|
9072.
| மடவரல் வருதலும் வைகுந்தம் தனில் கடை முறை போற்றிடும் இருவர் காவலர் அடல் அரி ஆகியே ஆர்த்து முன்னுற இடி உறும் அரவு போல் ஏங்கி ஓடினாள். |
275 |
|
|
|
|
|
|
|
9073.
| மடந்தை அங்கு இரிதலும் மடங்கல் ஆனவர் தொடர்ந்தனர் பின்வரத் துளங்கிச் சோலையின் இடந்தனில் முனி என இருந்த வெய்யனை அடைந்தனள் அடைதலும் அஞ்சல் நீ என்றான். |
276 |
|
|
|
|
|
|
|
9074.
| என்று அருள் புரிதலும் இகல் வெம் சீயமாய்ப் பின் தொடர் காவலர் பெயர் உற்று ஓடினார் நின்றவள் இருந்தவன் நிலைமை நோக்கியே நன்று இவன் இயல்பு என நவில்வது ஆயினாள். |
277 |
|
|
|
|
|
|
|
9075.
| எந்தை எம் பெரும கேள் எனது காதலன் அந்தம் இல் ஈசன்மேல் அமருக்கே ஏகினான் வந்திலன் இன்னமும் மாய் உற்றான் கொலோ உய்து உளனே கொலோ உரைத்தி நீ என்றாள். |
278 |
|
|
|
|
|
|
|
9076.
| இரங்கினள் இவ்வகை இசைப்ப மாதவன் வரம் கெழு தானையின் மன்னர் மாயையால் குரங்கு என ஈருருக் கொண்டு கொம் என உரம் கிளர் சலந்தரன் உடல் கொண்டு எய்தினார். |
279 |
|
|
|
|
|
|
|
9077
|
இரு
பிளவு ஆம் அவன் யாக்கை கொண்டு சென்று
அரிவை முன் இட்டனர் அதனைக் காண்டலும் வெருவினள் பதைத்தனள் வீழ்ந்து அரற்றினாள் ஒருவினள் உயிர் என உணர்வு நீங்கினாள். |
280 |
|
|
|
|
|
|
|
9078.
| வருந்தலை வருந்தலை மங்கை நீ எனாக் கரந்தனை ஓச்சியே காதல் நீர்மையால் இருந்தவன் எழுப்பலும் எழுந்து தேறியே விருந்தை கை தொழுது இவை விளம்பல் மேயினாள். |
281 |
|
|
|
|
|
|
|
9079.
|
நின்
நிகர் மாதவர் நிலத்தின் இல்லை ஆல்
என் உயிர் காத்தியேல் எனது நாயகன் பொன் உடலம் தனைப் பொருத்தி அவ் உயிர் தன்னையும் அமைத்தனை தருதி நீ என்றாள். |
282 |
|
|
|
|
|
|
|
9080.
| ஆயது காலையில் அவுணன் யாக்கையை ஏ என ஒன்று மாறி இயற்றி மாதவன் மாயம் அது ஆகியே மறைந்து மற்று அவன் காயம் அது இடைதனில் கலந்து வைகினான். |
283 |
|
|
|
|
|
|
|
9081.
| புல்லிய குரங்கு எனப் புகுந்த கள்வரும் ஒல்லையின் மறைந்தனர் உயர் சலந்தரன் தொல் உடல் புகுந்து அரிது துண் என்றே எழ மெல் இயல் கண்டனள் வியந்து துள்ளினாள். |
284 |
|
|
|
|
|
|
|
9082.
| உய்ந்தனன் கணவன் என்று உளத்தில் உன்னியே வெம் துயர் அகன்றனள் விருந்தை என்பவள் வந்தனை போலும் என் மகிண நீ எனா அந்தம் இல் உவகையால் அவனைப் புல்லினாள். |
285 |
|
|
|
|
|
|
|
9083.
| புல்லிய விருந்தையைப் புணர்ந்து மாயவன் எல்லியும் பகலும் ஓர் இறையும் நீங்கலான் அல்லி அம் தேன் நுகர் அளியைப் போல் அவண் மெல் இதழ் அமுதமே மிசைந்து மேவினான். |
286 |
|
|
|
|
|
|
|
9084.
| காய் கதிர் நுழை உறாக் கடி மென் காவினுள் மேயினன் பல பகல் வேளின் நூல் வழி ஆயது ஓர் வைகலின் அரனது ஆணையால் மாயம் அது அயர்த்தனன் மலர்க் கண் துஞ்சினான். |
287 |
|
|
|
|
|
|
|
9085.
| துஞ்சிய வேலையில் துணைவி ஆகிய பஞ்சினின் மெல் அடிப் பாவை பார்த்து இவன் வஞ்சகன் வஞ்சகன் மாயனே எனா அஞ்சினள் நெஞ்சகம் அழன்று நீங்கினாள். |
288 |
|
|
|
|
|
|
|
9086.
| அருந்ததி அன்ன கற்பு அழிந்த தன்மை ஆல் வருந்தினள் உயிர்த்தனள் மாயம் யாவையும் பொருந்திய தன் உயிர்ப் போத நீர்மையால் தெரிந்தனள் சீதரற்கு இதனைச் செப்புவாள். |
289 |
|
|
|
|
|
|
|
9087.
| மா வலி உடையது ஓர் மடங்கல் ஆயினோர் காவலர் இருவர் அக் காவலாளர் உன் ஏவலராய் உற வேந்தன் ஆகி நீ ஓவலை குரங் கொடு திரிதி ஒண் புவி. |
290 |
|
|
|
|
|
|
|
9088.
| பொற்பு உறு கணவனைப் போல வந்து எனைப் பல் பகல் புணர்ந்தனை பகைவர் மாயை ஆல் கற்பு உடை மனைவியைக் கவர்ந்து போக நீ சொல் படு பழியினைச் சுமத்தி ஆல் என்றாள். |
291 |
|
|
|
|
|
|
|
9089.
| இக் கொடு மொழி புகன்று எரியை மூட்டியே புக்கு உயிர் துறந்தனள் புலம்பி ஆங்கு அவள் அக்கு உறு சுடலை நீறு ஆடி வாடினான் மைக் கடல் மேனியன் மாலின் மூழ்கியே. |
292 |
|
|
|
|
|
|
|
9090.
|
அத்துணை
தன்னின் வானோர் அம்புயன் கயிலை ஏகி
நித்தனை இறைஞ்சி மாயோன் நிலைமையை உணர்த்தும் போழ்தில்
சத்தி அங்கு அதனைத் தேர்ந்து தலை அளி செய்து
தான் ஓர்
வித்தினை உதவி ஈது விண்டு முன் இடுகதிர் என்றாள். |
293 |
|
|
|
|
|
|
|
9091.
|
ஈதலும் அதனை வேதா இருகையால் ஏந்திச் சென்னி
மீது உறக் கொண்டு போந்து விருந்தைதன் ஈமம் தன்னில்
தாது உறு பலியின் வித்தித் தடம் கடல் அமுதம் பெய்ய
மாதவன் முன்னம் ஆங்கு ஓர் துளவம் ஆய் மலிந்தது அன்றே.
|
294 |
|
|
|
|
|
|
|
9092.
|
தண்துளவானது ஆங்கு ஓர் தையல் ஆய் நின்ற காலைக்
கண்டனன் தருவின் கேள்வன் கனல் இடைப் புகுந்தாள் மீது
கொண்டிடும் காதல் நீங்கி அவள் வயில் கூட்டம் வெஃக
அண்டரும் அயனும் மாலுக்கு அரும் கடி இயற்றி ஈந்தார். |
295 |
|
|
|
|
|
|
|
9093.
|
கடி உறு துளவம் என்னும் கன்னியைக் கொண்டு கஞ்சக்
கொடி உறு தகைமைத்து ஆன கோ நகர் குறுகி வேறு ஓர்
படி உறு பெற்றித்து அல்லாப் பல் பெரும் போகம்
ஆற்றி
முடி உறு சூட்டும் ஆக முடித்தனன் முளரிக் கண்ணன். |
296 |
|
|
|
|
|
|
|
9094.
|
அவன் சலந்தரனை வீட்டும் ஆழியை வாங்கப் பல் நாள்
சிவன் கழல் வழிபட்டு ஓர் நாள் செம் கணே மலராச் சாத்த
உவந்தனன் விடைமேல் தோன்றி அப்படை உதவப் பெற்று
நிவந்தனன் அதனால் வையம் நேமியான் என்ப மாதோ. |
297 |
|
|
|
|
|
|
|
9095.
| போற்றலார் தம் புரம் அடு புங்கவன் வேற்று உருக் கொள் வியன் அருள் தன்மையைச் சாற்றினாம் இனித் தன் நிகர் இல்லது ஓர் ஏற்றின் மேல் வரும் தன்மை இயம்புவாம். |
298 |
|
|
|
|
|
|
|
9096.
| இன்ன நான்கு உகத்து எல்லை ஈர் ஆயிரம் மன்னு கின்றது ஒர் வைகல் அவ் வைகல் தான் துன்னு முப்பது தொக்க ஒர் திங்களாம் அன்னது ஆறு இரண்டால் வரும் ஆண்டு அரோ. |
299 |
|
|
|
|
|
|
|
9097.
| ஆண்டு நூறு சென்றால் அயற்கு ஆயுவும் மாண்டு போம் அது மாலுக்கு ஒரு வைகலாம் ஈண்டு நூல்கள் எலாம் இவை கூறும் ஆல் காண்டியால் இவை கற்று உணர் பேதை நீ. |
300 |
|
|
|
|
|
|
|
9098.
| ஆய தன்மையில் அச்சுதற்கு ஆய் உவும் மாயும் எல்லையின் மன் உயிர் யாவையும் தேயும் அண்டம் சிதைந்திடும் எங்கணும் பாயிரும் கனலே பரந்து உண்ணுமால். |
301 |
|
|
|
|
|
|
|
9099.
| ஆனகாலை அகிலமும் ஈமம் ஆய்த் தூ நலம் கொடு தோன்றும் அச் சூழலில் தான் உலாவித் தனி நடம் செய்திடும் ஞான நாயகன் ஆகி காணவே. |
302 |
|
|
|
|
|
|
|
9100.
| பெருகு தேயுப் பிரளயம் அன்னதில் தருமம் யாவினுக்கும் தனித் தெய்வதம் வெருவி யாம் இவண் வீடுதும் மேலினிப் புரிவது ஏது எனப் புந்தியில் சூழ்ந்ததே. |
303 |
|
|
|
|
|
|
|
9101.
|
ஆறு
உலாம் சடை அண்ணலைச் சேர்வனேல்
ஈறு இலாது என்றும் உற்றிடுவேன் எனாத் தேறியே அறத் தெய்வதம் செம் கணான் ஏறதாய் ஒர் எழில் உருக் கொண்டதே. |
304 |
|
|
|
|
|
|
|
9102.
| ஏற்றின் மேனி கொண்டு ஈசன் முன் ஏகியே போற்றி யான் இன்று பொன்றிடும் தன்மையை மாற்றி ஆற்றல் வழங்கி நிற்கு ஊர்தி ஆம் பேற்றை எற்குப் பிரான் அருள் என்னவே. |
305 |
|
|
|
|
|
|
|
9103.
| இறத்தலை இன்மையும் யான மாய்த்தனைப் பொறுத்திடும் தன்மையும் பொருவில் வன்மையும் உறைத்திடும் அன்பும் வால் உணர்வும் நல்கியே அறத் தனிக் கடவுளுக்கு அண்ணல் கூறுவான். |
306 |
|
|
|
|
|
|
|
9104.
| முதல் அயல் இடை கடை மொழிய நின்றிடும் சதுர் வித உகந்தனில் தருமத்தின் திறம் இது என நான்கு மூன்று இரண்டு ஒன்று ஆகிய பத முறை ஊன்றியே படியில் சேறி மேல். |
307 |
|
|
|
|
|
|
|
9105.
| ஈங்கு உனது இடம் தனில் யாம் எக்காலமும் நீங்கலம் இருந்தனம் நீயும் வந்து நம் பாங்கரின் அடைந்தனை பரிவொடு ஊர்தியாய்த் தாங்குதி யாரினும் தலைமை பெற்று உளாய். |
308 |
|
|
|
|
|
|
|
9106.
| எண்ணு நம் தொண்டர்கள் இயற்று பாவமும் புண்ணியமா நமைப் புறக் கணித்து உளார் பண்ணிய அறம் எலாம் பாவம் ஆகும் ஆல் திண்ணம் ஈது அருமறை தானும் செப்புமே. |
309 |
|
|
|
|
|
|
|
9107.
| மைதவிர் அடியர் செய் பவமும் மற்று உளார் செய்திடும் தருமமும் திரிபது ஆகியே எய்திடு கின்றது யாம் உன் தன்னிடை மெய் திகழ் உயிர் என மேவும் பான்மை ஆல். |
310 |
|
|
|
|
|
|
|
9108.
| நின் இடை யாம் உளோம் நீயும் ஊர்தியாய் மன்னுதி எமது பால் மற்று இது அல்லதை இன்னும் ஓர் வடிவு கொண்டு எம்மைப் போற்றுதி அன்னதும் உணர்க என அருளிச் செய்தார் அரோ. |
311 |
|
|
|
|
|
|
|
9109.
| கூர்ந்த சூலக் கொடும் படை வானவன் சார்ந்து போற்றும் தருமக் கடவுளை ஊர்ந்திடும் தனி ஊர்தியது ஆகியே சேர்ந்திடும் படி சீர் அருள் செய்தனன். |
312 |
|
|
|
|
|
|
|
9110.
| அந்த நாள் முதல் ஆதிப்பிரான் தனைச் சிந்தை மேல் கொண்ட சீர் உடை அன்பர் முன் நந்தி ஆகும் நலம் பெறும் ஊர்திமேல் வந்து தோன்றும் வரம் புரி பான்மை ஆல். |
313 |
|
|
|
|
|
|
|
9111.
| சாற்றும் அவ்விடைக்கே தனைத் தாங்கு பேர் ஆற்றல் ஈந்த செயல் அறிந்து அல்லவோ மாற்றலார் புரம் செற்றுழி மாயவன் ஏற்றின் மேனி கொண்டு எந்தையைத் தாங்கினான். |
314 |
|
|
|
|
|
|
|
9112.
|
ஆதலால்
அரன் அவ்விடை ஊர்ந்திடல்
ஏதமோ அன்றி இது நிற்க தெண் திரை மீது தோன்றும் விடத்தை உண்டான் என ஓதினாய் அதன் உண்மையைக் கேட்டி நீ. |
315 |
|
|
|
|
|
|
|
9113.
| நிருதர் தம்முடன் அவுணரும் அமரரும் நேர்ந்து திருகு வெம் சினத்து ஒருபகல் முந்து போர் செய்ய இரு திறத்தினும் பல் பலர் வல்லையில் இறப்ப வெருவி அன்னது கண்டனர் அமரினை விடுத்தார். |
316 |
|
|
|
|
|
|
|
9114.
| மேலை வானவர் அவுணர் தம் கோவொடு விரவிக் காலம் எண் இல இருந்து போர் செய்வது கருதி நாலு மா முகத்து இறையவன் பதத்தினை நணுகிச் சீலமோடு அவன் தாள் மலர் பணிந்து உரை செய்வார். |
317 |
|
|
|
|
|
|
|
9115.
| ஒல்கும் ஆயுளை உடையரேம் பல் பகல் உஞற்று மல்கு பேர் அமர் இயற்றுவான் பால் கடல் மதியா அல்கல் இன்றிய அமிர்தினை வாங்கியே அடிகேள் நல்குவாய் எமக்கு என்றலும் அயன் இவை நவில் வான். |
318 |
|
|
|
|
|
|
|
9116.
|
ஆதி மாயவற்கு இச் செயல் மொழிகுவம் அவனே
ஓத வேலையைக் கடைந்து அமுது அளித்திடும் உண்டால் சாதல் வல்லையில் வந்திடாது என்று அயன் சாற்றிப் போதும் நாம் என அவரொடும் பால் கடல் புகுந்தான். |
319 |
|
|
|
|
|
|
|
9117.
|
நனம் தலைப்படு பயம் கெழு தெண் திரை நடுவண்
அனந்தன் மீமிசைத் துயில் உறும் மூர்த்தியை அணுகி மனம் தவாத பேர் அன்பொடு நான்முகன் வழுத்த நினைந்து கண்விழித்து ஒய் என எழுந்தனன் நெடியோன். |
320 |
|
|
|
|
|
|
|
9118.
|
நீவிர் இவ்விடை வந்தவாறு என் என நெடியோன்
பூவின் மேல் வரு பண்ணவன் அவுணர்கள் பொருவில்
தேவர் வேந்தர்கள் வேண்டிய குறையினைச் செப்ப
ஆவது என்று அதற்கு இயைந்தனன் அளித்திடும் அருளால்.
|
321 |
|
|
|
|
|
|
|
9119.
| அருள் புரிந்து எழு மாயவன் மந்தரம் அதனை உருள் புரிந்திடு மத்து என நிறுவியே உடலாம் பொருள் புரிந்திடும் மதியினை மதலையாப் புரியா இருள் புரிந்த வாசுகி தனை நாண் என யாத்தான். |
322 |
|
|
|
|
|
|
|
9120.
| ஒரு புறத்தினில் அமரர்கள் ஒரு புறத்து அவுணர் இரு புறத்தினும் ஈர்த்திட நல்கி இப் புவி சூழ் தரு புறக்கிரி அனைய மத்து அடி முடி தன்மெய் வரு புறத்தினும் கரத்தினும் பரித்தனன் மாலோன். |
323 |
|
|
|
|
|
|
|
9121.
| ஆன தன்மையின் மாயவன் பரித்துழி அமரர் கோனும் வானவர் யாவரும் அவுணரும் கோமான் தானும் வாசுகி பற்றியே வலியுறும் தகவால் வான் நிலா உமிழ் பால் கடல் மறுகிட மதித்தார். |
324 |
|
|
|
|
|
|
|
9122.
|
மதித்த வேலை அவ் வேலையின் உடைந்து என வாய்விட்டு
அதிர்த்த தேவரும் உலைந்தனர் குலைந்தன அகிலம்
கதித்த மேருவும் சலித்தன ஒலித்தன கரிகள்
பதைத்து வெய்து உயிர்த்து ஒடுங்கின நடுங்கின பணியே. |
325 |
|
|
|
|
|
|
|
9123.
|
உடைந்து
போவது கொல் என அமரர்கள் ஒருங்கே
தொடர்ந்த தம் பெரு வலி கொடே மந்தரம் சுழலக் கடைந்து வேலையைக் கலக்குழி ஈர்த்திடும் கயிறாய் அடைந்த வாசுகி பொறுக்கலாது அயர்ந்ததை அன்றே. |
326 |
|
|
|
|
|
|
|
9124.
|
ஊன்று பேது உற எய்தியே ஆற்ற வெய்து உயிர்த்துத்
தோன்று வெம் சினம் கொண்டு மெய் பதைத்து நாத் துடிப்ப
ஆன்ற ஆயிரம் வாய் தொறும் ஆல காலத்தைக்
கான்றது அத்துணை அளக்கரும் உமிழ்ந்தது கடுவே. |
327 |
|
|
|
|
|
|
|
9125.
|
ஈற்றுக் கோடியின் எழு முகல் கோடியின் இருண்டு
கூற்றுக் கோடியின் மறம் கொடு திசை தொறும் குலவும் காற்றுக் கோடியின் விரைவினால் வடவையும் கடும் தீ நூற்றுக் கோடியில் பரந்தது அவ் விடம் எலாம் நொய்தின். |
328 |
|
|
|
|
|
|
|
9126.
| ஓடல் உற்று எழுந்து அவ் விடம் சூழ்தலும் உலையா ஓடல் உற்றனர் தானவர் உம்பராய் உள்ளோர் ஓடல் உற்றனர் முனிவரர் ஓடல் உற்றனர் ஆல் ஓடல் உற்றனர் உலகு எலாம் படைத்திடும் உரவோர். |
329 |
|
|
|
|
|
|
|
9127.
|
தண் துழாய் முடிப் பண்ணவன் இனையது ஓர் தன்மை
கண்டு மந்தரம் காப்பு விட்டு உள்ள மேல் கவற்சி
கொண்டு நாம் இன்று போற்றுதும் ஈது எனக் குறியா
அண்டர் ஆதியர் மேல் செலும் விடத்தின் முன் அடுத்தான்.
|
330 |
|
|
|
|
|
|
|
9128.
| மேல் வரும் கொடு விடத்தின் முன் உறுதலும் வெகுண்டு சால அங்கு அது தாமரைக் கண்ணன் மேல் தாக்கி மூலம் உள்ளது ஓர் வச்சிர மணி நிறம் உருக்கி நீல வண்ணமே ஆக்கியது அவனும் நின்றிலன் ஆல். |
331 |
|
|
|
|
|
|
|
9129.
| கோல காலமாய் உலகு எலாம் அடும் தொழில் கொண்ட ஆல காலமுன் நிற்கலார் அரி முதலா னோர் மூல காலமும் இறுதியும் இன்றியே மூவாக் கால காலன் வாழ் கயிலையை அடைந்தனர் கடிதில். |
332 |
|
|
|
|
|
|
|
9130.
| முந்து வெவ்விடம் சுடுதலால் இரிந்தவர் முக்கண் எந்தை எம் பெருமாட்டி வாழ் கயிலையில் எவரும் வந்தது அற்புத நீரதோ வெருவினால் மைந்தர் தந்தை தாய் இடத்து அன்றியே யாங்கனம் சார்வார். |
333 |
|
|
|
|
|
|
|
9131.
| ஆயவர் கயிலையில் அமலற்கு ஆகிய கோயிலின் முதல் பெரும் கோபுரத்து இடை நாயக நந்தி அம் தேவை நண்ணியே போயது எம் துயர் எனப் புகன்று போற்றினார். |
334 |
|
|
|
|
|
|
|
9132.
| போறிய பின் உறப் புகுந்த வாறு எலாம் சாற்றினர் கேட்டலும் தகுவர் தேவர்கள் வீற்று உற அவண் நிறீஇ வேதன் மாறிசைக் கோல் தொழிலார் தமைக் கொண்டு போயினான். |
335 |
|
|
|
|
|
|
|
9133.
| நடை நெறி அருள் புரி நந்தி எம்பிரான் கடை நிலை ஐந்த ஆம் காப்பில் எண்திசை அடை தரு மன்னரை அருளின் நோக்கி இவ் விடைதனில் உறுதிர் என்று இயம்பி ஏகியே. |
336 |
|
|
|
|
|
|
|
9134.
|
அருள்
முறை நாடி மால் அயன் என்று உள்ளது ஓர்
இருவரை அமலன் முன் எய்த உய்த்தலும் கருணை அம் கடல் தனைக் கண்டு போற்றினார் பரவசம் ஆயினார் பணிந்து பல் முறை. |
337 |
|
|
|
|
|
|
|
9135.
| போற்றினர் நிற்றலும் புரத்தை முன் அடும் ஆற்றலின் உம்பரான் அரி நின் மேனிதான் வேற்று உருவாய் இவண் மேவிற்று என்று எனச் சாற்றினன் யாவையும் உணரும் தன்மையான். |
338 |
|
|
|
|
|
|
|
9136.
| மெய் வழி பாடு செய் மேலை யோர்க் கெலாம் உய்வழி புரிபவன் இனைய ஓதலும் மை வழி மேனியன் மானம் உள் உற அவ் வழி இனையன அறைதல் மேயினான். |
339 |
|
|
|
|
|
|
|
9137.
| வஞ்சின அவுணர்கள் வான மேலவர் வெம் சின அமரினில் விளிந்த வேலையில் எஞ்சல் இல் ஆயு உற்று இகல் செய்வாம் எனப் புஞ்சமொடு அயனொடு புகறல் மேயினார். |
340 |
|
|
|
|
|
|
|
9138.
| அன்ன மென் கொடியினன் அனைய ரோடு போந்து என்னொடு கூறினன் யான் எழுந்தரோ உன் அருள் பெற்றிலன் உணர்ந்திடாமலே மன்னிய அமிழ்து இவண் வருதல் வேண்டினேன். |
341 |
|
|
|
|
|
|
|
9139.
| தானவர் அமரர்கள் சதுர் முகத்தவன் ஏனையர் தம்முடன் யானின்று எய்தியே பால் நிறை கடல் கடை பொழுதில் பாய் எரி ஆனது மருள் உற ஆலம் போந்ததே. |
342 |
|
|
|
|
|
|
|
9140.
| உன் தனது அருள் பெறா உண்மை நாடியே இன்று உலகு உயிர் எலாம் இறக்க அவ்விடம் சென்றதி யாவரும் தெருமந்து ஓடினார் நின்ற என் மெய்யை இந் நிறம் ஆக்கிற்றே. |
343 |
|
|
|
|
|
|
|
9141.
| வேற்று உரு ஆக்கி என் மெய்யில் தாக்கலும் ஆற்றலன் அகன்றனன் அனையர் தம்மொடே ஏற்றம் அது ஆன வெம் இடர்கள் யாவையும் ஆற்றுநர் யார் உளர் மற்று நீ அலால். |
344 |
|
|
|
|
|
|
|
9142.
| உன் அருள் பெறாமல் அவ் உதவி சேர்தலால் இன்னது ஒர் இன்னல் வந்து எய்திற்று ஆதலால் நின் அடி அடைந்தனம் நீடு தீ எனத் துன்னிய கொடு விடம் தொலைக்கச் செல்லும் ஆல். |
345 |
|
|
|
|
|
|
|
9143.
| ஆரணம் யாவையும் அறிந்து நாட ஒணாப் பூரண உமையொடு பொருந்தி இன்னது ஆம் ஏரண உருவு கொண்டு இருக்கை எம்மை ஆள் காரணம் அன்றியே கருமம் ஆவதோ. |
346 |
|
|
|
|
|
|
|
9144.
| தீ என எழுதரு சீற்ற வெவ்விடம் ஆயதை மாற்றியே அளியர் தங்களை நீ அருள் புரிக என நீல் நிறம் திகழ் மாயவன் உரைத்தனன் வழுத்தி நிற்கவே. |
347 |
|
|
|
|
|
|
|
9145.
|
மாதிர
இறைவரும் வான் உளோர்களும்
நீதி இல் அவுணரும் நின்ற எல்லையில் நாதனை வழுத்தலும் நம்பன் கேட்டரோ ஏது இவை அரவம் என்று இயம்பலோடுமே. |
348 |
|
|
|
|
|
|
|
9146.
| வானவர் அவுணர்கள் மாதிரத்தவர் ஏனையர் வல் விடத்து இன்னல் உற்று உளார் கோ நகர்க் கடை தொறும் குழுமி ஏத்தினார் ஆனது இவ் ஒலி என அயன் விளம்பவே. |
349 |
|
|
|
|
|
|
|
9147.
| கறுத்திடும் மிடறு உடைக் கடவுள் நந்தியைக் குறிப்பொடு நோக்கியே கொணர்தி ஆல் எனப் புறத்தில் அம் மேலவன் போந்து மற்று அவர் திறத்துடன் உறையுளில் செல்ல உய்ப்பவே. |
350 |
|
|
|
|
|
|
|
9148.
| வந்தவர் யாவரும் வணங்கி ஈசனைப் புந்தியில் அன்பொடு போற்றி ஆற்றவும் நொந்தனம் விடத்தினால் நொய்தில் அன்னதைச் சிந்தினை எமக்கு அருள் செய்தி என்னவே. |
351 |
|
|
|
|
|
|
|
9149.
|
ஈது எலாம் கேட்ட மேலோன் இறைவியை நோக்கி இன்னோர்
ஓதலா மாற்றம் உன் தன் உளத்தினுக்கு இயைவது
ஆமோ
மாது நீ புகறி என்ன வந்து நின் அடைந்தார் வானோர்
ஆதலால் அவர்க்கு வல்லே அருள் புரிந்திடுதி என்றாள். |
352 |
|
|
|
|
|
|
|
9150.
|
வண்டு அமர் குழல் எம் அன்னை மற்று இவை இசைத்த லோடும்
அண்டரும் மகிழ்ச்சி எய்தி ஆதி அம் கடவுள் தன்பால்
தொண்டு செய்து ஒழுகு கின்ற சுந்தரன் தன்னை
நோக்கிக்
கொண்டு இவண் வருதி ஆல் அக் கொடு விடம்
தன்னை என்றான். |
353 |
|
|
|
|
|
|
|
9151.
|
என்றலும் இனிதே என்னா இறைஞ்சினன் ஏகி யாண்டும்
துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடுவந்து உய்ப்ப
ஒன்று ஒரு திவலை யே போல் ஒடுங்கு உற மலர்க்கை வாங்கி
நின்றிடும் அமரர் தம்மை நோக்கியே நிமலன் சொல்வான். |
354 |
|
|
|
|
|
|
|
9152.
|
காளக உருவு கொண்ட கடுவினை உண் கோ அன்றேல்
நீள் இடை அதனில் செல்ல நெறிப்பட எறிகோ என்னா
வாள் உறு மதி தோய் சென்னி வானவன் அருள அன்னான்
தாள் உற வணங்கி நின்று சதுர் முகன் முதலோர் சொல்வார்.
|
355 |
|
|
|
|
|
|
|
9153.
|
ஐய நீ யார் இவ் அனல் விடம் ஆற்று நீரார்
செய்ய கைக் கொண்ட ஆற்றால் சிறிது எனக் காட்டிற்று அன்றே
வெய்யது ஓர் இதனை இன்னே விட்டனை என்னில் பின்னை
உய்வரோ யாரும் இன்னே ஒருங்கு உடன் முடிந்திடாரோ. |
356 |
|
|
|
|
|
|
|
9154.
|
முடிவு இலா உனக்கே அன்றோ முன் உறு பாகம் எல்லாம்
விடம் அதே எனினும் ஆக வேண்டுதும் இதனை வல்லே
அடியர் ஏம் உய்யும் ஆற்றால் அருந்தினை அருள் மோ என்னக்
கடி கமழ் இதழி வேய்ந்தோன் கலங்கலீர் இனி நீர் என்றான்.
|
357 |
|
|
|
|
|
|
|
9155.
|
என்றனன் விரைவில் தன் கை ஏந்திய விடம் உட் கொள்ளச்
சென்றது மிடற்றில் அன்ன திறத்தினை யாரும் நோக்கி
இன்று எமது உயிர் நீ காத்தற்கு இங்கு இது சான்றாய் அங்கண்
நின்றிட வருடி என்றே நிமலனைப் போற்றல் உற்றார். |
358 |
|
|
|
|
|
|
|
9156.
|
போற்றலும்
மிடற்றில் எம் கோன் பொலன் மணி
அணியது
என்ன
மாற்ற அரும் தகைமத்து ஆன வல்விடம் நிறுவி அன்னார்க்கு
ஏற்ற நல் அருளைச் செய்ய யாவரும் இறந்தே இன்று
தோற்றினர் ஆகும் என்னச் சொல்ல அரும் மகிழ்ச்சி கொண்டார்.
|
359 |
|
|
|
|
|
|
|
9157.
|
மா மகிழ் சிறந்து நிற்கும் மால் அயன் முதலோர் தம்மைத்
தூ மதி மிலைச்சும் சென்னித் தொல்லையோன் அருளால் நோக்கிக்
காமரு கடலை இன்னும் கடைதிர் ஆல் அமுது உண்டாகும்
போமின் நீர் இன்னே என்னப் போற்றினர் வணங்கிப் போனார்.
|
360 |
|
|
|
|
|
|
|
9158.
|
போனவர் தொன்மை போலப் புணரியைக் கடைந்த
காலை
மேல் நிகழ் அமிர்தம் ஏனை வியன் பொருள் பலவும் வந்த
வானவர் தாமே பெற்றார் மற்று அவை தம்மை ஆலம்
ஆனதை அமலன் உண்டது அவர் உயிர் அளித்தது அன்றே.
|
361 |
|
|
|
|
|
|
|
9159.
|
கடல் விடம் நுகர்ந்த தொல்லைக் கடவுள் பின்
அழிக்கும் காலை
உடல் உயிர் அகிலம் யாவும் ஒடுங்கிய விடம் அது அன்றோ
சுடலை அது ஆகும் அந்தச் சுடலைக் காண் அனைய சோதி
நடம் நவில்கின்ற எல்லை நாடரும் தகைமைத்து அஃதே. |
362 |
|
|
|
|
|
|
|
9160.
|
அங்கு அதும் அன்றி எந்தை அகிலமும் முடித்த ஞான்றின்
எங்கும் வெள்ளிடையது ஆகி ஈமம் ஆம் அவ் ஈமத்து
மங்கையும் தானும் மேவும் மற்று இது தவறோ அன்னான்
கங்கையை முடிமேல் கொண்ட காதை மேல் உரைத்தும் அன்றே.
|
363 |
|
|
|
|
|
|
|
9161.
|
ஈசனை ஒரு ஞான்று அம்மை எழில் பெறு கயிலைக் காவில்
பேசலள் ஆடல் உன்னிப் பின் வரா விழி இரண்டும்
தேசு உறு கரத்தால் பொத்தச் செறிதரு புவனம் யாவும்
மாசு இருள் பரந்தது எல்லா உயிர்களும் வருத்தம் கொள்ள.
|
364 |
|
|
|
|
|
|
|
9162.
|
திங்களின் கதிரும் ஏனைத் தினகரன் வெயிலும் தீயின்
பொங்கு செம் சுடரும் ஏனைப் புலவர் தம் கதிரும்
மற்றும்
எங்கு உள ஒளியும் மாய்வு உற்று இருள் நிறம் படைத்த மாதோ
சங்கரன் விழியால் எல்லாச் சோதியும் தழைத்த நீரால். |
365 |
|
|
|
|
|
|
|
9163.
|
தன் நிகர் பிறர் இலாத தற்பரன் விழி இரண்டும்
கன்னிகை கமலக் கையால் புதைப்ப அக் கணம் அது ஒன்றின்
மன் உயிர்த் தொகை கட்கு எல்லாம் வரம்பு இலா
ஊழி ஆக
அன்னது ஓர் பான்மை நோக்கி அருளுவான்
நினைந்தான் அன்றே. |
366 |
|
|
|
|
|
|
|
9164.
|
ஓங்கு தன் நுதலின் நாப்பண் ஒரு தனி நாட்டம் நல்கி
ஆங்கு அது கொண்டு நாதன் அருள் கொடு நோக்கி யாண்டும்
நீங்கரு நிலைமத்து ஆகி நின்ற பேர் இருளை மாற்றித்
தீம் கதிர் முதல் ஆனோர்க்குச் சிறந்த பேர் ஒளியை ஈந்தான்.
|
367 |
|
|
|
|
|
|
|
9165.
|
மண் உறு புவனத்து உள்ள மா இருள் முழுதும் நீங்க
உள் நிகழ் உவகை மேல் கொண்டு உயிர்த் தொகை சிறத்தலோடும்
கண் நுதல் இறைவன் செய்கை கவுரி கண்டு அச்சம் எய்தித்
துண் என விழிகள் மூடும் துணைக் கரம் வாங்கினாள் ஆல்.
|
368 |
|
|
|
|
|
|
|
9166.
|
சங்கரன் விழிகள் மூடும் தனாது கை திறக்கும் எல்லை
அங்குலி அவை ஈர் ஐந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
மங்கை அத் தகைமை காணூஉ மற்று அவை விதிர்ப்பப் போந்து
கங்கை ஓர் பத்தாய் யாண்டும் கடல்களில் செறிந்த அன்றே.
|
369 |
|
|
|
|
|
|
|
9167.
|
ஆயிரம்
நூறு கோடி அணிமுகம் படைத்து யாண்டும்
பாயிரு நீத்தம் ஆகிப் பரவலும் அது கண்டு அஞ்சி
மாயனும் அயனும் வானோர் மன்னனும் பிறரும் போற்றி
மீய் உயர் கயிலை நண்ணி விமலனை அடைந்து தாழ்ந்தார்.
|
370 |
|
|
|
|
|
|
|
9168.
|
அடி மலர் தொழுதே எந்தாய் அறிகிலோம் இது ஓர் நீத்தம்
கடல்களும் அன்றால் யாண்டும் கல் என விரைத்தி
யாரும்
முடிவுறு திறத்தால் அண்டம் முழுவதும் கவர்ந்த முன்னாள்
விடம் எனப் பரித்தே ஈது விமல நீ காத்தி என்றார். |
371 |
|
|
|
|
|
|
|
9169.
|
என்றலும் நதிகள் தோற்றம் இயம்பி எவ் உலகும் சூழ் போய்
நின்ற அந் நீத்தம் தன்னை நினைத்து அவண் அழைத்து நாதன்
ஒன்று தன் வேணிமேல் ஓர் உரோமத்தின் உம்பர்
உய்ப்ப
மன்றல் அம் கமலத் தோனும் மாலும் இந்திரனும் சொல்வார்.
|
372 |
|
|
|
|
|
|
|
9170.
|
மேதினி அண்டம் முற்றும் விழுங்கிய கங்கை உன் தன்
பாதியாள் கரத்தில் தோன்றும் பான்மையால் உனது சென்னி
மீதினில் செறிக்கும் பண்பால் விமலம் ஆம் அதனில்
எம் கண்
மூது எயில் நகரம் வைகச் சிறிது அருள் முதல்வ
என்றார்.
|
373 |
|
|
|
|
|
|
|
9171.
|
இறையவன் வேணி உள் புக்கு இருந்ததோர் கங்கை தன்னில்
சிறுவதை வாங்கி மூவர் செம் கையும் செறிய நல்க
நிறைதரும் அன்பால் தாழ்ந்து நிகழ் விடை பெற்றுத் தம்தம்
உறை நகர் எய்தி அங்கண் உய்த்தனர் அனைய நீத்தம். |
374 |
|
|
|
|
|
|
|
9172.
|
அந்நதி மூன்று தன்னில் அயன் நகர் புகுந்த கங்கை
பன்ன அரும் திறலின் மிக்க பகீரதன் தவத்தால் மீளப்
பின்னரும் இமையா முக் கண் பெரும் தகை முடிமேல் தாங்கி
இந் நில வரைப்பில் செல்ல இறை அதில் விடுத்தல் செய்தான்.
|
375 |
|
|
|
|
|
|
|
9173.
|
நால் நில மிசையே உய்த்த நல் நதி சகரர் எல்லாம்
வான் உயர் கதி பெற்று உய்ய மற்று அவர் என்பில் பாய்ந்து
மீன் எறி தரங்க வேலை மேவியது இஃது ஒன்று
அல்லால்
ஏனைய நதிகள் தொல்லை இடம் தனில் இருந்த
அன்றே.
|
376 |
|
|
|
|
|
|
|
9174.
|
தொல்லை இல் இறைவி அம் கைத் தோன்றிய கங்கை நீத்தம்
ஒல்லையில் உலகம் கொள்ளாது அடக்கிய உண்மை அன்றோ
அல் இருள் அனைய கண்டத்து ஆதி அம் கடவுள் முன்னோர்
மெல் இயல் தன்னை வேணி மிசைக் கொண்டான்
என்னும்
மாறே. |
377 |
|
|
|
|
|
|
|
9175.
|
மாது உமை வசத்தன் ஆகி மருவுவான் என்றி அந் நாள்
நாதனது அருளே எல்லாம் நண்ணுவித்து அருளும் வண்ணம்
பேதகம் ஆகித் தான் ஓர் பெண் உருக் கொண்டு
மேவும்
ஆதலின் அவள் வந்து உற்ற தன்மையை அறைவன் கேட்டி.
|
378 |
|
|
|
|
|
|
|
9176.
|
தொல்லை ஓர் கமலத்து அண்ணல் தோன்றியே இருந்த காலைப்
பல் உயிர்த் தொகுதி தன்னைப் படைப்பது கருதி முன்னர்
வல்லையில் சனகன் ஆதி மைந்தர் நால்வரையும் நல்க
நல் உணர்வு எய்தி அன்னோர் நல் தவர் ஆகி உற்றார். |
379 |
|
|
|
|
|
|
|
9177.
|
அன்னதற் பின்னர் வேதன் அளிப்பதும் அல்காது ஆக
இன்னல் உற்று இரக்கம் எய்தி யாது இனிச் செய்வது என்னா
முன் உறு குமரரோடு முகுந்தன் இடத்தில் எய்திப்
பொன் அடி வணக்கம் செய்து தன் குறை புகன்று நின்றான்.
|
380 |
|
|
|
|
|
|
|
9178.
|
நின்றிடுகின்ற
காலை நேமி அம் கரத்து வள்ளல்
இன்று இது நம்மால் முற்றாது ஈசனால் அன்றி என்னா நன்று உணர் முனிவரோடு நான்முகனோடும் வெள்ளிக் குன்றினில் ஏகி நாதன் குரைகழல் பணிந்து சொல்வான். |
381 |
|
|
|
|
|
|
|
9179.
|
அண்டர்கள் முதல்வ கேண்மோ அம்புயன் படைப்பின் உள்ளம்
கொண்டனன் அது மல் காதால் குறை இது நீக்குக
என்ன
வண் துளவத்தினானை மைந்தரை அயனை நோக்கி
நுண் துகள் படவே ஈசன் நொய்து என வீறு செய்தான். |
382 |
|
|
|
|
|
|
|
9180.
|
ஏகனை ஆகி வைகும் எந்தை தன் இடப்பால் ஆன
வாகுவை நோக்கும் எல்லை மற்று அவண் உமையாள் தோன்றப்
பாகம் அது இருத்தி அன்னாள் பரிவொடு கலந்து மேவிக்
கோ கனதக் கண்ணானைக் குமரரை அயனைத் தந்தான். |
383 |
|
|
|
|
|
|
|
9181.
|
தந்துழி ஈசன் தன்னைத் தனயரும் அயனும் மாலும்
வந்தனை செய்து போற்ற மாயவன் வதனம் நோக்கி
நத் தமது அருளது ஆகும் நங்கையோடு இனிது சேர்ந்தாம்
முந்தையின் வேதாச் செய்கை முற்றிடும் போதி என்றான். |
384 |
|
|
|
|
|
|
|
9182.
|
என்னலும் உவகை எய்தி யாம் இனி உய்ந்தோம் என்னா
அன்னையொடு அத்தன் தன்னை அளியொடு வலம் செய்து
ஏத்திப்
பின்னரும் வணக்கம் செய்து பெயர்ந்தனர் பின்பு வேதா
மன் உயிர்த் தொகுதி எல்லாம் வரன்முறை படைக்கல் உற்றான்.
|
385 |
|
|
|
|
|
|
|
9183.
|
மாற்றலர் புரம் மூன்று அட்ட வானவன் உமையா
ளோடும்
வீற்று இருந்து அருளலாலே விழைவுடன் ஆண் பெண் மேவி
ஆற்றவும் இன்பம் எய்தி ஆவிகள் பெரிது மல்க
நால்திசை முகத்தன் நன்று உற நடந்தது அன்றே. |
386 |
|
|
|
|
|
|
|
9184.
|
தேன் அமர் கமலத்து அண்ணல் செய் தொழில் முற்றும் ஆற்றால்
ஆன தன் அருளை ஆங்கு ஓர் ஆயிழை ஆக நல்கி
மேல் நிகழ் கருணை தன்னால் மேவுவது உணராய் ஏனை
வானவர் போல் எம் கோனை மதித்தனை மதி இலாதாய். |
387 |
|
|
|
|
|
|
|
9185.
|
காமரு வடிவாய் எங்கும் காண்பது சத்தி அம் கண்
மா மயம் ஆகி நின்றான் மன்னிய சிவன் ஆம் ஈது
தூ மறை முதலா உள்ள தொல்லை நூல் புகலும்
அன்னார்
தாம் ஒரு புதல்வன் தன்னைத் தந்தவாறு சாற்றுகின்றாம். |
388 |
|
|
|
|
|
|