முகப்பு |
வேள்விப் படலம்
|
|
|
9535.
|
இகந்த சீர் பெறும் இப் பெரும் சாலையில்
அகந்தை மிக்க அயன் பெரும் காதலன் மகம் புரிந்தது மற்று அது சிந்திடப் புகுந்த வாறும் பொருக்கு எனக் கூறுகேன். |
1 |
|
|
|
|
|
|
|
9536.
| மருத் துழாய் முடி மால் அயன் பாங்கு உற மகத்தின் கருத்தன் ஆகிய தீயவன் முன்னமே கருதி வரித்த மேலவர் தங்களை நோக்கியே மரபின் இருந்து முத் தழல் என்றலும் நன்று என இசைந்தார். |
2 |
|
|
|
|
|
|
|
9537.
| முற்றும் நாடிய இருத்தினோர் அரணியின் முறையால் உற்ற அங்கியை வேதிகைப் பறப்பை மேல் உய்த்துச் சொற்ற மந்திர மரபினால் பரிதிகள் சூழ்ந்து மற்றும் உள்ளது ஓர் விதிஎலாம் இயற்றினர் மன்னோ. |
3 |
|
|
|
|
|
|
|
9538.
| ஆங்கு முத்தழல் விதிமுறை செய்தலும் அயன் சேய் பாங்கர் உற்றிடும் இருத்தினர் யாரையும் பாரா நீங்கள் உங்களுக்கு ஆகிய செய்கையை நினைந்து தூங்கல் இன்றியே புரிமின் ஓ கடிது எனச் சொன்னான். |
4 |
|
|
|
|
|
|
|
9539.
|
சொன்ன வாசகம் கேட்டலும் இருத்தின் ஓர் தொகையின்
முன்னம் ஆகிய அம் மகம் தனக்கு அவி முழுதும் வன்னி ஆதி ஆம் சமிதையும் தருப்பையும் மற்றும் இன்ன போல்வதும் கொடு வழங்கினர்களால் இருவர். |
5 |
|
|
|
|
|
|
|
9540.
|
அந்த வேள்வி செய்வித்தனர் ஒருவரால் அவிகள்
எந்தை அல்லவர் கொள்ளவே அவர் அவர்க்கு இசைத்த மந்திரம் தனைப் புகன்றனர் ஒருவர் அவ்வானோர் தந்தமைக் குறித்து அழைத்தனர் ஒருவர் பேர் சாற்றி. |
6 |
|
|
|
|
|
|
|
9541.
|
மற்று அவர்க்கு எலாம் அமைந்திடும் அவிகளை மலர்க்கை
பற்றி அங்கி வாய் அளித்தனர் ஒருவர் அப் பரிசின்
அற்றம் நோக்கியே இருந்தனர் ஒருவர் அங்கு அதற்கு
முற்றும் நல் அருள் புரிந்தனர் ஒருவர் அம் முதல்
போல்.
|
7 |
|
|
|
|
|
|
|
9542.
| இருத்தினோர்களும் பிறரும் ஈது இயற்றுழி ஆக கருத்தன் ஆகிய தக்கன் அத் தேவரைக் கருதிப் பரித்து நுங்குதிர் என்று அவி புரிதொறும் பகர்ந்தே அருத்தி உற்றனன் கடவுளர் தமக்கு எலாம் அமுதின். |
8 |
|
|
|
|
|
|
|
9543.
| திருந்துகின்ற நல் சுவையினால் தூய்மை ஆல் திகழும் மருந்து போன்றன என்னினும் உயிர் தொறும் மனத்தும் இருந்த எம்பிரான் அன்றியே மிசைதலின் இமையோர்க்கு அருந்தும் நீர் எலாம் நஞ்சு எனல் ஆகிய அவிகள். |
9 |
|
|
|
|
|
|