10அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்
      கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும்
      உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று
      நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப்
      பல்லாண்டு கூறுவனே             (10)