1001 | இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று இரந்தவர்க்கு இல்லையே என்று நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால் படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்- நைமிசாரணியத்துள் எந்தாய் (5) |
|