முகப்பு
தொடக்கம்
1017
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம்
ஒசித்த கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடங் கடல் துயில்
கொண்ட தாமரைக் கண்ணினன்
பொங்கு புள்ளினை வாய் பிளந்த
புராணர்-தம் இடம்-பொங்கு நீர்
செங் கயல் திளைக்கும் சுனைத் திரு-
வேங்கடம் அடை நெஞ்சமே (1)