முகப்பு
தொடக்கம்
1018
பள்ளி ஆவது பாற்கடல் அரங்
கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை
பிரான்-அவன் பெருகும் இடம்-
வெள்ளியான் கரியான் மணி நிற
வண்ணன் என்று எண்ணி நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (2)