1019நின்ற மா மருது இற்று வீழ
      நடந்த நின்மலன் நேமியான்
என்றும் வானவர் கைதொழும் இணைத்
      தாமரை அடி எம் பிரான்
கன்றி மாரி பொழிந்திட கடிது
      ஆ-நிரைக்கு இடர் நீக்குவான்
சென்று குன்றம் எடுத்தவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே             (3)