முகப்பு
தொடக்கம்
1021
வண் கையான் அவுணர்க்கு நாயகன்
வேள்வியில் சென்று மாணியாய்
மண் கையால் இரந்தான் மராமரம்
ஏழும் எய்த வலத்தினான்
எண் கையான் இமயத்து உள்ளான்
இருஞ்சோலை மேவிய எம் பிரான்
திண் கை மா துயர் தீர்த்தவன் திரு
வேங்கடம் அடை நெஞ்சமே (5)