1022எண் திசைகளும் ஏழ் உலகமும்
      வாங்கி பொன் வயிற்றில் பெய்து
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்
      பால் மதிக்கு இடர் தீர்த்தவன்
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர்
      வைத்தவன் ஒள் எயிற்றொடு
திண் திறல் அரியாயவன் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே             (6)