1023பாரும் நீர் எரி காற்றினோடு
      ஆகாசமும் இவை ஆயினான்
பேரும் ஆயிரம் பேச நின்ற
      பிறப்பிலி பெருகும் இடம்-
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்
      சோரும் மா முகில் தோய்தர
சேரும் வார் பொழில் சூழ் எழில் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே            (7)