1024அம்பரம் அனல் கால் நிலம் சலம்
      ஆகி நின்ற அமரர்-கோன்
வம்பு உலாம் மலர்மேல் மலி மட
      மங்கை-தன் கொழுநன்-அவன்
கொம்பின் அன்ன இடை மடக் குற
      மாதர் நீள் இதணம்தொறும்
செம் புனம்-அவை காவல் கொள் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே 8