1025பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்
      சொலி நின்று பின்னரும்
பேசுவார்-தமை உய்ய வாங்கி
      பிறப்பு அறுக்கும் பிரான் இடம்-
வாச மா மலர் நாறு வார் பொழில்
      சூழ் தரும் உலகுக்கு எலாம்
தேசமாய்த் திகழும் மலைத் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே             (9)