1026செங் கயல் திளைக்கும் சுனைத் திரு
      வேங்கடத்து உறை செல்வனை
மங்கையர் தலைவன் கலிகன்றி
      வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்
      லார்கள் தஞ்சமதாகவே
வங்க மா கடல் வையம் காவலர்
      ஆகி வான்-உலகு ஆள்வரே             (10)