1071 | இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும் இன்பன் நல் புவி-தனக்கு இறைவன் தன் துணை ஆயர் பாவை நப்பின்னை -தனக்கு இறை மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை பஞ்ச பாண்டவர்க்கு ஆகி வாய் உரை தூது சென்று இயங்கும் என் துணை எந்தை தந்தை தம்மானை- திருவல்லிக்கேணிக் கண்டேனே (5) |
|