108கிண்கிணி கட்டிக் கிறி கட்டிக் கையினிற்
கங்கணம் இட்டுக் கழுத்திற் தொடர் கட்டித்
தன் கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்
      எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்            (2)