1089 | உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய் உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனை கன்று மேய்த்து விளையாட வல்லானை வரைமீ கானில் தடம் பருகு கரு முகிலை தஞ்சைக் கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்- கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (3) |
|