1092கிடந்தானை தடங் கடலுள் பணங்கள் மேவி
      கிளர் பொறிய மறி திரிய அதனின்பின்னே
படர்ந்தானை படு மதத்த களிற்றின் கொம்பு
      பறித்தானை பார் இடத்தை எயிறு கீற
இடந்தானை வளை மருப்பின் ஏனம் ஆகி
      இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை எம்மானைக் கண்டுகொண்டேன்-
      கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே            (6)