1093 | பேணாத வலி அரக்கர் மெலிய அன்று பெரு வரைத் தோள் இற நெரித்து அன்று அவுணர்-கோனைப் பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லோனை பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான்-தன்னை உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானைக் காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்- கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே (7) |
|