1107 | திவளும் வெண் மதிபோல் திரு முகத்து அரிவை செழுங் கடல் அமுதினில் பிறந்த அவளும் நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் குவளை அம் கண்ணி கொல்லி அம் பாவை -சொல்லு நின் தாள் நயந்திருந்த இவளை உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்? -இடவெந்தை எந்தை பிரானே (1) |
|