1111ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஓதாள்
      உருகும் நின் திரு உரு நினைந்து
காதன்மை பெரிது கையறவு உடையள்
      கயல் நெடுங் கண் துயில் மறந்தாள்
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது
      தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்?-
      இடவெந்தை எந்தை பிரானே             (5)