1116அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
      ஆய எம் மாயனே அருளாய்
என்னும் இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும்
      இடவெந்தை எந்தை பிரானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன்
      மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
      பழவினை பற்று அறுப்பாரே             (10)