1138கொந்து அலர்ந்த நறுந் துழாய் சாந்தம் தூபம்
      தீபம் கொண்டு அமரர் தொழ பணம் கொள் பாம்பில்
சந்து அணி மென் முலை மலராள் தரணி-மங்கை
      தாம் இருவர் அடி வருடும் தன்மையானை-
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து
      வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்
சிந்தனை செய்து இருபொழுதும் ஒன்றும் செல்வத்
      திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே             (2)